Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் : பொதுத்தேர்தலுக்கான நிதி 2025 வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Published By: DIGITAL DESK 3    13 FEB, 2024 | 01:01 PM

image
 

ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கான நிதி, 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும். தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் இணைந்து  செயற்படும் என ஜனாதிபத ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/176273

  • கருத்துக்கள உறவுகள்

அரச தலைவர் தேர்தல் 2024இல் நடந்தே தீரும்

1335284643.jpg

ஆதவன் 

பொதுத்தேர்தல் அடுத்த வருடமே அரச தலைவரின் ஊடகப்பிரிவு உறுதி

 இந்த வருடத்தில் உரிய காலப்பகுதியில்  அரச தலைவர் தேர்தல் இடம்பெறும். அடுத்தவருடம் பொதுத்தேர்தல் இடம்பெறும் என்று  அரச தலைவர்  ஊடகப்பிரிவு நேற்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
.
அரச தலைவர்  தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஏற்று அங்கம் இகழ்பெறுவதாகவும், இதன் ஓர் அங்கமாகவே நிறைவேற்று அதிகார  அரச தலைவர் முறைமையை நீக்குவது பற்றி தற்போது பேசப்படுகின்றது எனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி வந்த நிலையிலேயே  அரச தலைவர் ஊடகப்பிரிவு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அத்துடன், அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான நிதி, 2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும். தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசு இணைந்து செயற்படும் எனவும் அரச தலைவர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இலங்கையின் அரசமைப்பின் பிரகாரம் அரச தலைவருக்குரிய பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும். எனவே, இவ்வருடம் செப்ரெம்பர் மாதம் 18ஆம் திகதிக்கும் ஒக்ரோபர் மாதம் 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள்  அரச தலைவர்  தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. (எ )

https://newuthayan.com/article/அரச_தலைவர்__தேர்தல்_2024இல்_நடந்தே_தீரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிடவேண்டிய தேவை கிடையாது - டலஸ்

15 FEB, 2024 | 05:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிட வேண்டிய தேவை கிடையாது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு அமைதியாக இருப்பது அதிருப்திக்குரியது என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவடையும். ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய ஜனாதிபதி ஒக்டோபர் மாதம் பதவி பிரமாணம் செய்ய வேண்டும். ஜனாதிபதி தேர்தல் குறித்து நாட்டின் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியமைப்பின் ஊடாக நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் திறமையானவர். மாகாண சபைகள் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பனவற்றை இல்லாதொழித்ததை போன்று ஜனாதிபதி தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்க முடியாது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிர்வரும் மாதங்களில் பொறுப்பாக்கப்படும். அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிடவேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதி தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் விடயம் தற்போது பேசுபொருளாக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது தொடர்பில் 1994ஆம் ஆண்டு முதல் பேசப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ,மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் நிறைவேற்று அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தவில்லை. இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி, ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். ஆகவே நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதாக தற்போது குறிப்பிடப்படுவதில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது என்றார்.

https://www.virakesari.lk/article/176439

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பழைய படி.. ஆளாளுக்கு பதவிக்கு வந்ததும் சனாதிபதி பதவியை ஒழிப்பென்று என்று கிழப்பிட்டாங்கள்.

சந்திரிக்கா இதனை ஆரம்பிச்சா.. கடைசியில் ரணிலாரும் கூவினார். ஆனால் எல்லாரும் பதவிக்கு வந்ததும்.. அந்தப் பதவியை ஒழிக்க மனசு வைக்கினமே இல்லை.

இப்ப சஜித்தும் தொடங்கிட்டார். வேடிக்கை என்னவென்றால்.. பதவிக்கு வந்து.. 100 நாளைக்குள் சனாதிபதி பதவியை ஒழிப்பன் என்ற மைத்திரி.. மீண்டும்.. சனாதிபதியானால்.. ஒழிப்பாராம். 

சனத்தை முழு மடையர் என்று நினைக்கிறாங்கள்.. சொறீலங்கா அரசியல் வியாதிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

ஆனால் எல்லாரும் பதவிக்கு வந்ததும்.. அந்தப் பதவியை ஒழிக்க மனசு வைக்கினமே இல்லை.

இனப்பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கிற மாதிரி தான் ...வரும் ஆனால் வராது
....ஜனாதிபதி பதவியை ஒழிப்போம் ஆனால் ஒழிக்க மாட்டோம்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.