Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   17 FEB, 2024 | 09:53 AM

image

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை தொடக்கம், கொக்கிளாய் வரையான கடற்கரையோரத்தில் இல்மனைட் அழகழ்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதி கோரப்பட்ட நிலையில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கடுமையான எதிர்ப்பையடுத்து குறித்த அனுமதியை அபிவிருத்திக்குழு நிராகரிப்பதாகத் தீர்மானித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (16)இடம்பெற்றபோதே குறித்த இல்மனைட் அகழ்விற்கான அனுமதி கோரப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த அனுமதி இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரையில் இல்மனைட் அகழ்ந்தால்  அருகே உள்ள வயல் நிலங்களும் பாதிக்கப்படுமெனவும், செம்மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உவர்நீர்த் தடுப்பணையும் சேதப்படுத்தப்படுமெனவும், பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் இதன்போது சாள்ஸ் நிர்மலநாதனால் சுட்டிக்காட்டப்பட்டது.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு அனுமதி வழங்காத விடயத்தை, மத்திய அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாதெனவும், செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரை இல்மனைட் அகழ்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனவும் சாள்ஸ் நிர்மலநாதன் இதன்போது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.

இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு இந்த அனுமதிக் கோரிக்கையை நிராகரிப்பதாக முடிவெடுத்ததுடன், இல்மனைட் அகழ்வால் ஏற்படும் பாதிப்பு நிலையைச் சுட்டிக்காட்டி உரியவர்களுக்கு அறிக்கை அனுப்புவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/176590

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஏதாவது நடந்திருக்கிறதா?  அரசாங்கம் எதையாவது விற்று காசு பார்க்க நினைக்குமென்றால் அதை செய்தே தீரும். சிங்களவன் செய்யாத  ஆர்ப்படடமா? எனவே இது எல்லாம் வேற்று வேட்டுக்கள்.

அது சரி, இவர் பின் கதவால் போய் ரணிலுடன் சம்பாஷித்துக்கொண்டு இருக்கும்போது சொல்லி ஏதாவது செய்யலாமே. தங்கள் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Cruso said:

இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஏதாவது நடந்திருக்கிறதா?  அரசாங்கம் எதையாவது விற்று காசு பார்க்க நினைக்குமென்றால் அதை செய்தே தீரும். சிங்களவன் செய்யாத  ஆர்ப்படடமா? எனவே இது எல்லாம் வேற்று வேட்டுக்கள்.

அது சரி, இவர் பின் கதவால் போய் ரணிலுடன் சம்பாஷித்துக்கொண்டு இருக்கும்போது சொல்லி ஏதாவது செய்யலாமே. தங்கள் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். 

இதில் சுமந்திரனும் அடங்குவாரா? ஒரு சின்ன சந்தேகம் தான்.🙃

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

இதில் சுமந்திரனும் அடங்குவாரா? ஒரு சின்ன சந்தேகம் தான்.🙃

இல்லை.சுமந்திரன் இப்போது ரணில் எதிர்ப்பு அரசியல் செய்கிறார். ஸ்ரீதரன் அடங்குகிறாரா என்று தெரியவில்லை. 😜

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.