Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - இந்திய பிரச்சினைகளை தீர்க்க மீண்டும் பேச்சு

03 MAR, 2024 | 10:42 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்ளை பயன்படுத்தியும், இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தும் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இதனால் இலங்கையின் வட பகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக வடக்கு மீனவர்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.

இவ்வாறனதொரு நிலையில் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் 170 பேர் உள்நாட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த மீனவர்களுக்கு எதிராக உள்ளக நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்த்து இந்திய மீனவர்கள் போராட்டத்திலும் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தைகள் ஊடாக இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்ட போதிலும், தொடர்ந்தும் அத்துமீறிய மீன்பிடிப்புகள் இடம்பெறுகின்றமையினால் இருதரப்பு மீனவர்களின் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்தே வருகின்றன. எனவே நீண்டகால நிலையான தீர்வை நோக்கி பயணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதனடிப்படையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையிலான பேச்சு வார்த்தையின் போது நீண்டகால தீர்வு திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க இருதரப்புகளுக்கும் இடையில் இதன் போது இணக்கப்பாடு எட்டப்பட்டன.

https://www.virakesari.lk/article/177777

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.