Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டு மின்பாவனையின் ஆரம்ப கட்டணம் 33 சதவீதத்தால் குறைப்பு - முழுமையான விபரம் இதோ!

04 MAR, 2024 | 07:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்கட்டணத்தை இன்று திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை  முன்வைத்த யோசனை மற்றும் செலவுகளுக்கு அமைய 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்சாரத்துறை சட்டத்தின் 30 ஆவது பிரிவு மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மானியங்களுக்கு அமைவாக கண்காணிப்பு மற்றும் மீள்பரிசீலனைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி மாதம் நூற்றுக்கு 3.34 சதவீதத்தாலும் பின்னர் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பித்த மின்கட்டண திருத்த யோசனையின் பிரகாரம் நூற்றுக்கு 14 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட செலவினங்கள் தொடர்பான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வு மற்றும் பொதுமக்களின் கருத்துக்கோரலின் போது கிடைக்கப்பெற்ற யோசனைகளை கருத்திற் கொண்டு மொத்த மின்கட்டணத்தை 21.9 சதவீதத்தினால் குறைப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டிருக்கும் இத்திருத்தம் சகல மின்நுகர்வு கட்டங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

வீட்டு பாவனையில் 30 அலகுக்கு குறைவான மின்னலகை பாவிக்கும் மின்பாவனையாளர்களின் மின்னலகுக்கான கட்டணம் நூற்றுக்கு 33 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

31 முதல் 60 அலகுகளுக்கான மின்கட்டணம் 28 சதவீதத்தால் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளது.61-90 வரையான அலகுக்கான கட்டணம் 30 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 90 அலகுக்கு மேற்பட்டதும் 180 இற்கும் குறைந்ததுமான மின்னலகுக்கான கட்டணம் 24 சதவீதத்தாலும் 180 அலகுகளுக்கு மேற்பட்ட பாவனைகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது.

மத தலங்களுக்கான மின்கட்டணம் 33 சதவீதத்தாலும் பொது பாவனைகளுக்கான மின்கட்டணம் 23 சதவீதத்தாலும், அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 22 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஹோட்டல் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தாலும், வீதி மின்விளக்குகளுக்கான கட்டணம் 20 சதவீததத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண திருத்தத்துக்கு அமைய 30 அலகுகளுக்கு குறைவான மின்னலகை பாவிக்கும் நுகர்வோருக்கான மாதாந்த மின்கட்டணம் 180 ரூபாவில் இருந்து 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு அலகுக்கு அவர்கள் செலுத்தும் கட்டணம் 12 ரூபாவில் இருந்து 08 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

31 - 60 அலகுகளுக்காக அறவிடப்பட்ட 360 ரூபா மின்கட்டணம் 300 ரூபாவாகவும் ஒரு அலகுக்கான கட்டணம் 30 ரூபாவில் இருந்து 20 ரூபாவாகவும் குறைக்கப்பட்டதுள்ளது.

https://www.virakesari.lk/article/177909

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின் கட்டணம் குறைப்பு! (முழு விபரம்)

electricity-300x200.jpg

நேற்று(04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மின் கட்டணம் 21.9 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.

நேற்று(04) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இதனை அறிவித்தார்.

சமய வழிபாட்டு தலங்களுக்கான கட்டணம் 33 சதவீதத்தினாலும், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 22 சதவீதத்தினாலும், பொதுவான கட்டணம் 23 சதவீத்தினாலும் குறைக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

30க்கும் குறைந்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் 33 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணம் 28 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன், 61 முதல் 90 வரையான அலகுகளுக்கான கட்டணம் 30 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

91 முதல் 180 வரையான அலகுகளுக்கு 24 சதவீதமும், 180க்கு மேற்பட்ட அலகுகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த கட்டணத் திருத்தம் போதுமானது இல்லை என இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/294324

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின் இணைப்பை மீளப் பெறுவதற்கான கட்டணம் குறைப்பு!

மின் இணைப்பை மீளப் பெறுவதற்கான கட்டணத்தை 3000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க நேற்று (05) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், மின் இணைப்பு மீளமைக்கப்படும் போது வாடிக்கையாளர்கள் செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் குறைக்கப்பட்டதால், தற்போது 30 யூனிட் பயன்படுத்தும் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய தொகை 540 ரூபாயிலிருந்து 390 ரூபாயாக குறைந்துள்ளது. 60 யூனிட்களை பயன்படுத்தும் ஒருவர் செலுத்த வேண்டிய தொகை ஒருவர் 1,620 ரூபாயிலிருந்து 1,140 ரூபாயாக குறைந்துள்ளது. 90 யூனிட்களை பயன்படுத்தும் ஒருவர் செலுத்த வேண்டிய தொகை, 3,990 ரூபாயிலிருந்து 2,800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 120 யூனிட் பயன்படுத்தியவருக்கு கட்டணம் 6,460 ரூபாயில் இருந்து, 4,900 ரூபாயாக குறையும் என தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/294549

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சார கட்டணம் 35 சதவீதத்தால் குறைக்கப்படுவதே நியாயமானது - ஜனக ரத்நாயக்க

Published By: DIGITAL DESK 3   06 MAR, 2024 | 11:27 AM

image

(அ.நிவேதா)

கடந்த 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் பொதுமக்கள் நலன்கருதி என்னால் முன்வைக்கப்பட்ட மின்கட்டணம் தொடர்பான பரிந்துரை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அமுல்படுத்தப்படுவதென்பது என்னுடைய தியாகத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கின்றேன். எனினும் இலங்கை மின்சாரசபை பெற்றுக்கொண்டுள்ள இலாபத்தை பொதுமக்களுக்கு உரியவாறு பகிர்ந்தளிக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்துவதாயின் மின் கட்டணம் 35 வீதத்தால் குறைக்கப்படுவதே ஆரோக்கியமானது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.  

நேற்றுமுன்தினம் (4) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீத மின்கட்டண குறைப்புக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் நேற்று கொழும்பிலுள்ள அவரது பிரத்தியேக அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்களின் நலன்கருதி 21.9 சதவீதத்தால் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. இருந்தபோதிலும் கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட மின்சார கட்டண உயர்வால் இலங்கை மின்சார சபை பெற்றுக்கொண்ட இலாபத்தை அதன் பங்காளர்களான பாவனையாளர்களுக்கு உரியவாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது கட்டாயம். அது தொடர்பான தெளிவு பொதுமக்களுக்கு இருக்க வேண்டும்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்திரம் இலங்கை மின்சார சபை வருமானமானது 62 பில்லியன்களாக பதிவாகியுள்ளது. அதேவேளை இவ்வாண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி காலப்பகுதிகளில் கிட்டத்தட்ட 35 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. அப்படியாயின் இலங்கை மின்சாரபை பெற்றுக்கொண்டுள்ள சுமார் 95 சதவீத இலாபத்தை பாவனையாளர்களுக்கு வழங்க வேண்டும். அதனை நேரடியாக மின்கட்டண குறைப்பின் ஊடாகவே வழங்க முடியும். அப்படியாயின் 22 வீதமென்ற மின்கட்டண குறைப்பை 35 வீதமாக குறைப்பதற்கு அரசாங்ம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே நியாயமும் கூட.

கடந்த 2023ஆம் ஆண்டு மின்சார சபையின் ஐந்தொகையில் 60 பில்லியன் ரூபா வட்டித் தொகையானது இலங்கை மத்தியவங்கிக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் இலங்கை மத்திய வங்கியின் வருமான பட்டியலானது 40 பில்லியனாக பதிவாகியுள்ளது. அப்படியாயின் கடந்த ஆண்டு இலங்கை மத்தியவங்கியின் பிரதான வருமானமானது இலங்கை மின்சார சபையிடமிருந்து அறவிடப்பட்டுள்ளமை தெட்டத்தெளிவாக தெரிகிறது. இந்த பெருந்தொகை கட்டணத்துக்கு இலங்கை மின்சார சபையின் ஊழல் மற்றும் முறையற்ற திட்டமிடல்களே மிகப்பிரதான காரணங்களாகும்.

இந்தியா - இலங்கை மின்னணு வர்த்தக உடன்படிக்கை

இந்தியா - இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான எல்லை தாண்டிய மின்னணு வர்த்தக உடன்படிக்கை வரவேற்கத்தக்கது. உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இதுபோன்ற எல்லை தாண்டிய வர்த்தக உடன்படிக்கைகள் வெற்றிகரமான ஒரு உபாயமாகவே பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் இந்தியாவுடனான மின்னணு வர்த்தக உடன்படிக்கை வரவேற்கத்தக்கது. இதுபோன்ற ஒப்பந்தங்கள் கடந்த காலங்களிலேயே செய்யப்பட்டிருக்க வேண்டும். என்றாலும்கூட இவ்விரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உடன்படிக்கையானது அரசியல் தலையீடுகளற்ற வர்த்தக நோக்கத்தை மாத்திரம் முன்னிலை ப்படுத்துவதாக அமையுமென்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். யாரையும் பாதிக்காத வகையில் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாக இந்த திட்டம் அமையுமானால் அது இலங்கைக்கு ஆரோக்கியமானதாக அமையும் என்றார்.

https://www.virakesari.lk/article/178046

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.