Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
news-01-23.jpg

முல்லைத்தீவு முள்ளியவளையில் வீட்டு காணி ஒன்றில் பைப்லைன் மூலமாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தர் நேற்று பொலிஸாரால் கைது செய்யட்டுள்ளார்.

குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதாக முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர், அவரது காணிக்குள் நீர் பொருத்தும் பைப்லைன் செய்வது போல், கசிப்பு உற்பத்தி செய்து சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போது இரு பரல் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்த முள்ளியவளை பொலிஸார், மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் சந்தேக நபரையும் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

குறித்த நபர் ஏற்கனவே வீட்டிற்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு காச்சிய நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

https://thinakkural.lk/article/297642

அறிவியல் வளர்ச்சி?!!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த செல்லத்தை பிடித்து லண்டன் அனுப்பி விடுங்கையா 😀

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:
news-01-23.jpg

முல்லைத்தீவு முள்ளியவளையில் வீட்டு காணி ஒன்றில் பைப்லைன் மூலமாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தர் நேற்று பொலிஸாரால் கைது செய்யட்டுள்ளார்.

குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதாக முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர், அவரது காணிக்குள் நீர் பொருத்தும் பைப்லைன் செய்வது போல், கசிப்பு உற்பத்தி செய்து சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போது இரு பரல் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்த முள்ளியவளை பொலிஸார், மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் சந்தேக நபரையும் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

குறித்த நபர் ஏற்கனவே வீட்டிற்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு காச்சிய நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

https://thinakkural.lk/article/297642

அறிவியல் வளர்ச்சி?!!

🤣......

முதலில் வீட்டிற்குள்ளேயே சுரங்கம் வெட்டினார். பின்னர் குழாய் மூலம் அனுப்பினார். அடுத்தது என்னவென்று அறிய ஆவலாக இருக்கின்றது.........😀

கிரியேட்டிவிட்டி, கிரியேட்டிவிட்டி என்று வேலை இடத்தில் அடிக்கடி சொல்வார்கள். அதாவது எங்களுக்கு கிரியேட்டிவிட்டி வேணுமாம். இந்த நபருக்கு அது கொஞ்சம் அதிகமாகவே இருக்குது...😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:

🤣......

முதலில் வீட்டிற்குள்ளேயே சுரங்கம் வெட்டினார். பின்னர் குழாய் மூலம் அனுப்பினார். அடுத்தது என்னவென்று அறிய ஆவலாக இருக்கின்றது.........😀

கிரியேட்டிவிட்டி, கிரியேட்டிவிட்டி என்று வேலை இடத்தில் அடிக்கடி சொல்வார்கள். அதாவது எங்களுக்கு கிரியேட்டிவிட்டி வேணுமாம். இந்த நபருக்கு அது கொஞ்சம் அதிகமாகவே இருக்குது...😀

சிந்தனைச் சிற்பியா?! என இனி நீதித்துறை தான் முடிவெடுக்கவேணும்! 

  • கருத்துக்கள உறவுகள்

6Ec.gif

விலேஜ் விஞ்ஞானி. 😂
இவர் காய்ச்சுற கசிப்பும்... தரமானதாக இருக்கும் என நினைக்கின்றேன்.  😋

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது!

Published By: DIGITAL DESK 7   31 MAR, 2024 | 02:09 PM

image

முல்லைத்தீவு, முள்ளியவளையில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரினால் அவரது வீட்டில் நேற்று சனிக்கிழமை  மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்தோடு சட்டவிரோத மதுபானம் 85 லீற்றர் மற்றும் 9 கோடா  பீப்பாய்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் அரச அனுமதியுடன்  பசளை தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும்,  இதற்காக குழாய் நீர் விநியோகம் முறை மூலம் நீர் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

குறித்த நபர் குழாய் அமைப்புக்கு  நடுவில் உபகரணங்களை புதைத்து வைத்து மதுபான தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். பொலிஸார் நீர் குழாயின் பாகங்களை அகற்றி அவதானித்தபோதே சந்தேக நபர் சூட்சுமான முறையில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/180057

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.