Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: PRIYATHARSHAN   02 APR, 2024 | 06:08 PM

image

வீ.பிரியதர்சன் 

இலங்கையின் பொருளாதாரம் மீண்டெழும் பாதையில் பயணித்தாலும் ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களின் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுத்திய தாக்கத்தினை தணிப்பதற்கான உறுதியான முயற்சிகள் முக்கியமானவை இதனுடன் காத்திரமான நம்பகமான கட்டமைப்புசார் நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென மாலைதீவு, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட்ட ரெஸோஸ் தெரிவித்தார்.

இதேவேளை, இது இரு விதமான உபாயமுறைகளைக் கொண்டுள்ளதாகவும் முதலாவதாக  பேரினப் பொருளியல் உறுதித் தன்மைக்கு பங்களிப்புச் செய்கின்ற மறுசீரமைப்புக்களை  பேணுதல். இரண்டாவது, தனியார் முதலீடுகளை தூண்டக்கூடிய மற்றும் முலீட்டு உள் வருகையை தூண்டக்கூடிய மறுசீரமைப்புக்களை துரிதப்படுத்தல், இவை பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமையை குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பிரான்சிஸ்கா ஓன்சார்ஜ் கூறுகையில், 

இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருவதாகவும் புதிய அரசிறைகொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்புலத்தில் அதிக வருமானங்கள் காணப்படுவதாகவும் சுமார் 5 தசாப்த காலப்பகுதியில் முதன்முதலாக நடைமுறைக் கணக்கில் மிகை ஏற்பட்டுள்ளதாகவும் பண அனுப்புதல்கள் அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 2.2 வீதமான வளர்ச்சியை காணும் என எதிர்வுகூறப்பட்டது. உறுதியாக நிகழ்வதற்கான அறிகுறிகளைக் காட்டியது. 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் இது ஏற்பட்டது. இருப்பினும், உயர்வான வறுமை மட்டங்கள், வருமான சமத்துவமின்மை, தொழில் சந்தை அக்கறைகள், ஆகிய பிரச்சினைகளை நாடு முகங்கொடுத்து வருவதாக உலக வங்கியின் அண்மைய அரையாண்டு அறிக்கை இற்றைப்படுத்தல் தெரிவிக்கின்றது.

இருப்பினும் தொடர்ந்து நான்கு வருடங்களாக வறுமை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 25.9 வீதமான இலங்கையர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்படை பங்குபற்றுதலிலும் வீழ்ச்சி காணப்பட்டது. குறிப்பாக பெண்கள் மற்றும் நகர் பிரதேசங்களில் இது காணப்பட்டது.

நுண், சிறிய, மத்திய அளவிலான நிறுவனங்கள் மூடப்பட்டதனால் இந்த பிரச்சினை அதிகமானது. அதிக விலையேற்றம், வருமான இழப்புக்கள், போதிய வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றின் காரணமாக உணவுத் தேவைப்பாடுகள் மற்றும்  சுகாதாரம், கல்வி சார்ந்த செலவுகளை சமாளிப்பதற்காக கடனை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை குடும்பங்களுக்கு ஏற்பட்டது.

பண வீக்கத்தின் படிப்படியான அதிகரிப்புக்கள் மற்றும் சிறிய நடைமுறைக் கணக்கு மிகைகள் ஆகியவற்றினால் 2025 ஆம் ஆண்டில் 2.5 வீத மத்திம வளர்ச்சியை அறிக்கை எதிர்வு கூறுகின்றது.

எவ்வாறாயினும் அதிக கடன்சேவை கடப்பாடுகள் அரசிறை மிகுதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2026 வரை வறுமை விகிதங்கள் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்கால வாய்ப்புகள் மறுசீரமைப்புக்களை மாற்றுதல், நிதித் துறை பாதிப்புறும் தன்மைகள், நெருக்கடியினால் ஏற்பட்ட தாக்கத்தை தாங்கிக்கொள்ளல் ஆகியன காணப்படும் தொடர்ச்சியான பேரண்ட அரசிறை நிதி ஸ்திரத்தன்மை, பாரியளவிலான தனியார் துறை முதலீடுகள், அரசிற்கு சொந்தமான நிறுவனங்களுடன் தொடர்புடைய இடர்கள் தொடர்பில் செயற்படல் ஆகியவற்றின் மூலம் மீண்டெழும் பொருளாதாரத்தை பேணுவதற்கு உறுதியான மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தல்கள் அடிப்படையானது என அறிக்கை வலியுறுத்துகின்றது. 

இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தலானது தென் ஆசிய அபிவிருத்தி இற்றைப்படுத்தலின் தோழமை ஆவணமாகும். இது உலக வங்கியின் அரையாண்டு அறிக்கையாகும். இவ்வறிக்கை தென் ஆசிய பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் எதிர்கால வாய்ப்புக்கள் ஆகியவற்றை ஆராய்கின்றது.

அத்தோடு நாடுகள் எதிர்கொள்கின்ற கொள்கை ரீதியான சவால்களையும் பகுப்பாய்வு செய்து வருகின்றது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் பதிப்பில் மீண்டெழலுக்கான தொழில்கள் என்பதில் உலகில் துரிதமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் தென் ஆசியா காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் 6.0 வீத வளர்ச்சி எதிர்வு கூறப்பட்டுள்ளது.  இந்தியாவில் ஏற்பட்ட காத்திரமான வளர்ச்சி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் அறவீடுகள் பிரதான காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த உறுதியான எதிர்கால வாய்ப்புக்கள் ஏமாற்றக்கூடியவைகள் என அறிக்கை கூறுகின்றது. பெரும்பாலான நாடுகளில் வளர்ச்சியானது தொடர்ந்தும் பெருந்தொற்றுக்கு முன்னரான நிலையில் காணப்படுகின்றது. அரச செலவுகளிலேயே தங்கியுள்ளன.

அதேவேளை தென்னாசிய நாடுகளில் தனியார் முதலீட்டு வளர்ச்சிகள் வீழ்ச்சி கண்டுள்ளன. மற்றும் துரிதமாக அதிகரித்துவரும் வேலைசெய்யக்கூடிய வயதுடைய மக்களுக்கு ஏற்ற விதத்தில் தொழில்கள் இப்பிராந்தியங்களில் உருவாக்கப்படவில்லை.

உறுதியான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்களை அதிகரித்தல், வளர்ச்சியை அதிகரித்தல், உற்பத்தியை மேம்படுத்தல், காலநிலைக்கு சாதகமான விதத்தில் அரச முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான கோரிக்கைகளை அறிக்கை விதந்துரைக்கின்றது. 

உலக வங்கியினால் இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தல் மீண்டெழுதலுக்கான பாலம் என்ற தலைப்பின் கீழ் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (2) வன் கோல்பேஸில் அமைந்துள்ள உலக வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

world.png

https://www.virakesari.lk/article/180270

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

உறுதியான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்களை அதிகரித்தல், வளர்ச்சியை அதிகரித்தல், உற்பத்தியை மேம்படுத்தல், காலநிலைக்கு சாதகமான விதத்தில் அரச முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான கோரிக்கைகளை அறிக்கை விதந்துரைக்கின்றது. 

உலக வங்கி இதை தொடர்ந்து இன்னும் 50 வருடம் சொல்லி கொண்டே இருக்கும்...காரணம் சிறிலங்காவில் பொருளாதார அபிவிருத்தியை விட இனவாத ,மதவாத அபிவிருத்திற்கு முன்னுரிமை வழங்குவதால்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அதிக பணவீக்கம், மக்களின் வருமானம் அதிகரிப்பு, வேலை இழப்பு மற்றும் வருமானம் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இவர்கள் வறுமையில் வாடுவதாக உலக வங்கி குறிப்பிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த நடுத்தர வருமானம் ஒரு நாளைக்கு 3.65 டொலர் என்ற வரம்பை கணக்கில் எடுத்துக்கொண்டு உலக வங்கி நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
இதேவேளை, வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு இலட்சத்தாலும், அடுத்த ஆண்டு மூன்று இலட்சத்தாலும் குறையும் என்று வங்கி கணித்துள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/298397

 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2024 at 17:29, ஏராளன் said:

Published By: PRIYATHARSHAN   02 APR, 2024 | 06:08 PM

image

வீ.பிரியதர்சன் 

இலங்கையின் பொருளாதாரம் மீண்டெழும் பாதையில் பயணித்தாலும் ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களின் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுத்திய தாக்கத்தினை தணிப்பதற்கான உறுதியான முயற்சிகள் முக்கியமானவை இதனுடன் காத்திரமான நம்பகமான கட்டமைப்புசார் நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென மாலைதீவு, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட்ட ரெஸோஸ் தெரிவித்தார்.

இதேவேளை, இது இரு விதமான உபாயமுறைகளைக் கொண்டுள்ளதாகவும் முதலாவதாக  பேரினப் பொருளியல் உறுதித் தன்மைக்கு பங்களிப்புச் செய்கின்ற மறுசீரமைப்புக்களை  பேணுதல். இரண்டாவது, தனியார் முதலீடுகளை தூண்டக்கூடிய மற்றும் முலீட்டு உள் வருகையை தூண்டக்கூடிய மறுசீரமைப்புக்களை துரிதப்படுத்தல், இவை பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமையை குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பிரான்சிஸ்கா ஓன்சார்ஜ் கூறுகையில், 

இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருவதாகவும் புதிய அரசிறைகொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்புலத்தில் அதிக வருமானங்கள் காணப்படுவதாகவும் சுமார் 5 தசாப்த காலப்பகுதியில் முதன்முதலாக நடைமுறைக் கணக்கில் மிகை ஏற்பட்டுள்ளதாகவும் பண அனுப்புதல்கள் அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 2.2 வீதமான வளர்ச்சியை காணும் என எதிர்வுகூறப்பட்டது. உறுதியாக நிகழ்வதற்கான அறிகுறிகளைக் காட்டியது. 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் இது ஏற்பட்டது. இருப்பினும், உயர்வான வறுமை மட்டங்கள், வருமான சமத்துவமின்மை, தொழில் சந்தை அக்கறைகள், ஆகிய பிரச்சினைகளை நாடு முகங்கொடுத்து வருவதாக உலக வங்கியின் அண்மைய அரையாண்டு அறிக்கை இற்றைப்படுத்தல் தெரிவிக்கின்றது.

இருப்பினும் தொடர்ந்து நான்கு வருடங்களாக வறுமை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 25.9 வீதமான இலங்கையர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்படை பங்குபற்றுதலிலும் வீழ்ச்சி காணப்பட்டது. குறிப்பாக பெண்கள் மற்றும் நகர் பிரதேசங்களில் இது காணப்பட்டது.

நுண், சிறிய, மத்திய அளவிலான நிறுவனங்கள் மூடப்பட்டதனால் இந்த பிரச்சினை அதிகமானது. அதிக விலையேற்றம், வருமான இழப்புக்கள், போதிய வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றின் காரணமாக உணவுத் தேவைப்பாடுகள் மற்றும்  சுகாதாரம், கல்வி சார்ந்த செலவுகளை சமாளிப்பதற்காக கடனை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை குடும்பங்களுக்கு ஏற்பட்டது.

பண வீக்கத்தின் படிப்படியான அதிகரிப்புக்கள் மற்றும் சிறிய நடைமுறைக் கணக்கு மிகைகள் ஆகியவற்றினால் 2025 ஆம் ஆண்டில் 2.5 வீத மத்திம வளர்ச்சியை அறிக்கை எதிர்வு கூறுகின்றது.

எவ்வாறாயினும் அதிக கடன்சேவை கடப்பாடுகள் அரசிறை மிகுதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2026 வரை வறுமை விகிதங்கள் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்கால வாய்ப்புகள் மறுசீரமைப்புக்களை மாற்றுதல், நிதித் துறை பாதிப்புறும் தன்மைகள், நெருக்கடியினால் ஏற்பட்ட தாக்கத்தை தாங்கிக்கொள்ளல் ஆகியன காணப்படும் தொடர்ச்சியான பேரண்ட அரசிறை நிதி ஸ்திரத்தன்மை, பாரியளவிலான தனியார் துறை முதலீடுகள், அரசிற்கு சொந்தமான நிறுவனங்களுடன் தொடர்புடைய இடர்கள் தொடர்பில் செயற்படல் ஆகியவற்றின் மூலம் மீண்டெழும் பொருளாதாரத்தை பேணுவதற்கு உறுதியான மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தல்கள் அடிப்படையானது என அறிக்கை வலியுறுத்துகின்றது. 

இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தலானது தென் ஆசிய அபிவிருத்தி இற்றைப்படுத்தலின் தோழமை ஆவணமாகும். இது உலக வங்கியின் அரையாண்டு அறிக்கையாகும். இவ்வறிக்கை தென் ஆசிய பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் எதிர்கால வாய்ப்புக்கள் ஆகியவற்றை ஆராய்கின்றது.

அத்தோடு நாடுகள் எதிர்கொள்கின்ற கொள்கை ரீதியான சவால்களையும் பகுப்பாய்வு செய்து வருகின்றது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் பதிப்பில் மீண்டெழலுக்கான தொழில்கள் என்பதில் உலகில் துரிதமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் தென் ஆசியா காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் 6.0 வீத வளர்ச்சி எதிர்வு கூறப்பட்டுள்ளது.  இந்தியாவில் ஏற்பட்ட காத்திரமான வளர்ச்சி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் அறவீடுகள் பிரதான காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த உறுதியான எதிர்கால வாய்ப்புக்கள் ஏமாற்றக்கூடியவைகள் என அறிக்கை கூறுகின்றது. பெரும்பாலான நாடுகளில் வளர்ச்சியானது தொடர்ந்தும் பெருந்தொற்றுக்கு முன்னரான நிலையில் காணப்படுகின்றது. அரச செலவுகளிலேயே தங்கியுள்ளன.

அதேவேளை தென்னாசிய நாடுகளில் தனியார் முதலீட்டு வளர்ச்சிகள் வீழ்ச்சி கண்டுள்ளன. மற்றும் துரிதமாக அதிகரித்துவரும் வேலைசெய்யக்கூடிய வயதுடைய மக்களுக்கு ஏற்ற விதத்தில் தொழில்கள் இப்பிராந்தியங்களில் உருவாக்கப்படவில்லை.

உறுதியான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்களை அதிகரித்தல், வளர்ச்சியை அதிகரித்தல், உற்பத்தியை மேம்படுத்தல், காலநிலைக்கு சாதகமான விதத்தில் அரச முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான கோரிக்கைகளை அறிக்கை விதந்துரைக்கின்றது. 

உலக வங்கியினால் இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தல் மீண்டெழுதலுக்கான பாலம் என்ற தலைப்பின் கீழ் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (2) வன் கோல்பேஸில் அமைந்துள்ள உலக வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

world.png

https://www.virakesari.lk/article/180270

உலக வங்கியின் வறுமை குறித்த அறிக்கை திரியில், அதை அரைமுறையாய் விளங்கி கருத்தெழுதிய சொர்காபுரி மன்னர்கள் இந்த திரியில் கப்சிப்🤣.

On 2/4/2024 at 17:29, ஏராளன் said:

2024 ஆம் ஆண்டில் 6.0 வீத வளர்ச்சி எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த green shoots of growth ஐ கண்டு வந்து சொன்னதுக்குதான், சிங்கள அபிமானி பட்டம் கிடைத்தது🤣.

செல்லா குட்டீஸ், 2024 யூகே, பிரான்சின் எதிர்வு கூறப்படும் வளர்சி வீதம் என்ன? 0.5?, 1?, மைனஸ்?

 

On 2/4/2024 at 17:29, ஏராளன் said:

இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருவதாகவும் புதிய அரசிறைகொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்புலத்தில் அதிக வருமானங்கள் காணப்படுவதாகவும் சுமார் 5 தசாப்த காலப்பகுதியில் முதன்முதலாக நடைமுறைக் கணக்கில் மிகை ஏற்பட்டுள்ளதாகவும் பண அனுப்புதல்கள் அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

அன்ரிக்கு ஒரு சிங்கள பின் பக்கம்

கழுவி பட்டம் பார்சல்!

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.