Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
(குறுங்கதை - அறிவியல் புனைவு)
 
சிவப்புக்கல்
--------------------
'அம்மா.....'
 
'என்ன பிள்ளை.... போக வேணுமா?'
 
அம்மா கண்களை முழிக்காமலேயே கேட்டார். அது அமாவாசையை அண்மித்த நாள், ஆதலால் கும்மென்ற இருட்டு சுற்றி வரவும். பெரிய காணியில் அவர்களின் வீடு காணியின் முன் பக்கமும், கழிவறை காணியின் அடிப்பக்கமும் இருந்தன. அமாவாசை நாளாக இல்லாமல் பூரண சந்திரன் தான் மேலே நடு வானத்தில் நின்றாலும், ஊர் உறங்கும் இரவில், தனித்து கழிவறைக்கு போகும் துணிவு அவனுக்கு அறவே கிடையாது. 
 
'ம்ம்.......' என்று இழுத்தான் அவன்.
 
வீட்டிற்கு ஒரே பிள்ளை அவன். போன மாதம் அவனுக்கு பத்து வயதுகள் ஆகியிருந்தது. அன்றைய இரவும் அவன் படுக்கையை ஈரமாக்கியிருந்தான். இதுவரை அவனின் அம்மா எதற்கும் சிறிதளவும் முகம் சுழித்தது இல்லை. ஒரே பிள்ளை, நீண்ட நாட்கள் காத்திருந்து கிடைத்தவன் என்று தங்கள் பிள்ளையை ஒரு தாம்பாளத்தில் தாங்கிக் கொண்டிருந்தார்கள் அவனின் அம்மாவும், அப்பாவும்.
 
அவனின் படுக்கையை ஈரமாக்கும் பழக்கம் பற்றி அம்மாவோ அல்லது அப்பாவோ உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ எதுவும் சொல்லவில்லை. அவனுக்கு எட்டு வயது இருக்கும் போது வேறொரு ஊரில் இருக்கும் ஒரு வைத்தியரிடம் அவனைக் கூட்டிச் சென்றனர். அந்த வைத்தியர் இது ஒன்றும் பெரிய பிரச்சனையே இல்லை, இந்தப் பழக்கம் இன்னும் ஓரிரு வருடங்களில் அதுவாகவே நின்று விடும் என்று சொன்னார். இரவு நித்திரைக்கு போகும் முன் ஒரு தடவை கழிவறைக்கு போய் வருவது, இரவில் நேரம் பிந்தி எதையும் குடிப்பதை தவிர்ப்பது என்று சில ஆலோசனைகளையும் அம்மாவிடமும், அப்பாவிடமும் சொன்னார் அந்த மருத்துவர். மருந்துகளோ அல்லது வேறு சிகிச்சைகளோ வேண்டவே வேண்டாம் என்று சொல்லியும் விட்டார்.
 
முக்கியமாக இந்த விடயம் அவன் மனதில் ஒரு குற்றமாக பதிந்து, அதனால் எதிர்காலத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மையோ அல்லது வேறு எதுவும் உளச் சிக்கல்களோ வருவது போல நடந்து கொள்ளக் கூடாது என்ற ஆலோசனையையும் சொல்லியிருந்தார். அம்மாவும், அப்பாவும் வேறு எவருடனும் இதைப் பற்றி கதைக்காமல் இருந்ததற்கு அயலூர் வைத்தியரின் இந்த அறிவுரையும் ஒரு காரணம்.
 
ஊரில் பலருக்கும், கிட்டத்தட்ட எல்லோருக்கும், ஏதோ ஒரு பட்டபெயர் இருந்தது. ஒருவர் இல்லாத நேரத்தில் அந்த நபரைப் பற்றிய கதை ஏதும் வந்தால், அவரின் பட்டப் பெயரை சொல்லிக் கதைப்பதே இங்குள்ளவர்களின் வழக்கம். பல பட்டப் பெயர்கள் அந்தந்த ஆட்களின் உடலில் இருக்கும் குறைபாடுகளை குறிப்பன. இது பிழையென்று கருதும் அளவிற்கு இதை ஒரு பெரிய விடயமாக அவர்கள் பார்க்க ஆரம்பித்திருக்கவில்லை. வேறு சில பட்டப் பெயர்கள், அதன் பின்னால் இருக்கும் காரணத்தை அறிந்தவுடன், சிரிப்பை உண்டாக்கும். ஒருவரின் பட்டப் பெயர் - 11 மணி. அந்த நபர் இரவு 11 மணிக்கு இன்னும் ஒரு வீட்டின் கதவை அடிக்கடி தட்டினாராம், அதனால் அவரை '11 மணி' என்றே எல்லோரும் சொல்லிக் கொள்வார்கள். அவனின் பெற்றோர்கள் இப்படியான ஒரு பட்டப் பெயர் தங்களின் ஒரே மகனுக்கு வந்து விடக் கூடாது என்ற இன்னொரு காரணத்திற்காகவும் இந்த விடயம் பற்றி எவருடனும் கதைப்பதில்லை.      
 
ஆனாலும்  அந்த வைத்தியர் சொன்னதிற்கு அடுத்த வருடமும், அவனின் ஒன்பது வயதில், அவனிடமிருந்து அந்தப் பழக்கம் போய் விடவில்லை. இன்னொரு ஊரில் ஒரு கோவில் இருக்கிறது என்றும், அங்கே போய் ஒரு நேர்த்திக் கடன் வைத்தால் நினைப்பது கிட்டும் என்றும் யாரோ வேறு ஏதோ ஒரு விடயத்தில் சொன்னதைக் கேட்டு, அவனின் அம்மாவும், அப்பாவும் அவனை அங்கு கூட்டிச் சென்றனர். 
 
அந்தக் கோவில் ஒரு பெரும் ஆலமரத்தின் உள்ளே இருந்தது. ஓங்கி அடர்ந்து செழித்து வளர்ந்திருந்த அந்த மரத்தின் சில கிளைகள் பூமியை தொட்டும் தொடாமலும் நீண்டு வளர்ந்திருந்தன. அவற்றின் இடையே இருக்கும் இடைவெளிகளே கோவிலுக்குள் செல்லும் வாசல்கள்.
 
கோவில் என்பது தகரத்தால் கூரை போடப்பட்ட ஒரு சிறு மேடை மட்டுமே. மேடையின் நடுவில் கடும் சிவப்பு நிறத்திலான சிலை ஒன்று இருந்தது. அந்த சிலையின் தலை ஒரு பாம்பின் தலை போன்றும், உடல் பல கைகள் உடைய ஒரு மனித உடல் போன்றும் இருந்தது. அதை ஒரு பாம்பு தெய்வம் என்றே அங்கே உள்ளவர்கள் சொன்னார்கள். அவர்கள் மூவரும் கும்பிட்டு, சில தடவைகள் அந்தச் சிறு மேடையை சுற்றி வந்த பின், அங்கு பூசாரி போன்று இருந்த ஒருவர் அவனின் அம்மாவிடமும், அப்பாவிடமும் ஒரு சிவப்பு நிற துணித் துண்டைக் கொடுத்தார். அதை அவர்கள் ஆல மரத்தின் ஒரு சிறு கிளையில் சுற்றி, இறுக்கமான ஒரு முடிச்சு போட்டனர்.
 
பாம்புக் கோவிலில் நேர்த்தி வைத்து இப்பொழுது ஒரு வருடம் ஆகிவிட்டது. சில நாட்களில் நடு இரவில் முழித்து எழுந்து அம்மாவை கூட்டிச் செல்லும் அவன், வேறு பல நாட்களில், இன்னும் அவனை அறியாமல், பழைய பழக்கத்தையே தொடர்ந்து கொண்டிருந்தான்.  சில காலை வேளைகளில் அடுத்து என்ன செய்வது என்ற கவலை அம்மாவின் முகத்தில் வந்து போவதை அவன் பார்த்தான். தன்னாலும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கவலை அவனுக்குள்ளும் இருந்தது. 
 
பின்னர், திடீரென சில நாட்களாக அவன் நடு இரவில் எழும்புவது இல்லை, அவனின் பழக்கமும் முற்றாக நின்று போனது.
 
'பிள்ளை, நீ இப்ப இரவில் எழும்புவதில்லை...' என்றார் அம்மா ஒரு நாள் காலையில்.
 
'நீங்கள் அன்று கொடுத்த கல்லை நான் என்னுடனேயே வைச்சிருக்கிறன், அம்மா.'
 
முகத்தில் திகைப்புடன், 'நான் எப்ப உனக்கு கல்லு கொடுத்தேன்...?' என்று அவனையே கூர்ந்து பார்த்தார் அவனின் அம்மா.
 
'அது தான், சரியாக இரண்டு கிழமைக்கு முன், இரவு நீங்கள் என்னை கூட்டிக் கொண்டு போனீர்கள். அன்று இரவு ஒரே வெளிச்சமாக இருந்தது. சந்திரன் எங்கட வீட்டிற்கு கொஞ்சம் கிட்ட வந்து பெரிதாக இருந்தது.'
 
இரண்டு கிழமைக்கு முன் முழு அமாவாசை நாளே என்று அவனின் அம்மா திடுக்கிட்டார். 
 
'அன்று கல்லை கொடுத்து நான் என்ன சொன்னேன், பிள்ளை?'
 
'இந்தக் கல்லை என்னுடன் வைத்திருக்கச் சொன்னீர்கள். இது என்னோட இருந்தால் என் பயமும், பழக்கமும் போயிடும் என்றும் சொன்னீர்கள்.'
 
அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக அவனின் அம்மாவிற்கு நினைவில் இல்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்து இருக்கவும் முடியாது என்றவர், 'எங்க, அந்தக் கல்லை எடு பார்ப்பம்...' என்றார்.
 
அவனுடைய காற்சாட்டைப் பையிலிருந்து அவன் ஒரு கல்லை எடுத்தான்.
 
அழுத்தமான, உருண்டையான அந்தக் கல் கடும் சிவப்பு நிறத்தில் இருந்தது.
  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கல் எப்படி வந்ததோ தெரியாது ஆனால் அதை வைத்திருந்ததும் மனசுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது......கையில் நூல், தாயத்து மாதிரி.......!  😁

நல்லாயிருக்கு கதை.......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

அந்தக் கல் எப்படி வந்ததோ தெரியாது ஆனால் அதை வைத்திருந்ததும் மனசுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது......கையில் நூல், தாயத்து மாதிரி.......!  😁

நல்லாயிருக்கு கதை.......!

👍...

இந்த வகை புனைவுகளில் சில விடயங்கள் சொல்லப்படாமல் அப்படியே விடப்பட்டிருக்கும். அப்படியே நானும் முயன்றேன்.....😀

'கடவுள்கள்' என்று கருதப்படும் சில ஒரு காலத்தில் பூமிக்கு வந்து போன சில ஏலியன்கள்/வேற்றுக் கிரகவாசிகள் என்ற ஒரு கருதுகோளும் உண்டு....

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.