Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாசகாரப் பேச்சு! நடு நிலை தவறும் தேர்தல் ஆணையம்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாசகாரப் பேச்சு! நடு நிலை தவறும் தேர்தல் ஆணையம்..!

-ஹரி பரந்தாமன்

 

1156336.jpg

அக்கிரமமான பேச்சுக்கள்! பொய், வெறுப்பு, பித்தலாட்டம் செய்யும் பிரதமர்! தொடர்ந்து நடுநிலை தவறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம். குஜராத்தின் சூரத்திலோ எதிர்த்து போட்டியிட்ட எல்லோரையும் விலைபேசி, தேர்தலுக்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி..? என்ன தான் நடக்கிறது நாட்டில்..? – ஹரி பரந்தாமன்.

ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசிய வன்ம பேச்சு விவாத பொருளாக ஆகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாடாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய  பிரதமர் மோடி, நிதானமின்றி, தன் உள்ளத்தின் அடி ஆழத்தில் உறைந்திருக்கும் வெறுப்பு அரசியலை  வெளிப்படுத்தி உள்ளார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்த நாட்டின் சொத்துகளில் முதன்மை உரிமை முஸ்லிம்களுக்குத்தான் உள்ளது என்று சொன்னாராம்! இப்படி கதைவிட்டுள்ள மோடி, இதற்கு விளக்க உரையும் நல்கியுள்ளார்!

”இதற்கு அர்த்தம் என்ன? காங்கிரஸ் யாருக்கு சொத்துகளை பிரித்துக் கொடுப்பார்கள்?

யார் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்களோ, யார் இந்த நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமித்தார்களோ அவர்களுக்கு சொத்துகளை பிரித்துக் கொடுப்பார்கள்;

நீங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தையெல்லாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தருவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா?

இந்த நகர்ப்புற நக்சல்கள், நமது தாய்மார்களின், சகோதரிகளின் தாலிக் கொடிகளில் உள்ள தங்கத்தைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவற்றையும் பறித்து முஸ்லிம்களுக்கு தந்து விடுவார்கள்…”

என்றெல்லாம் மிகவும் கொந்தளிப்பாக பேசியிருக்கிறார்.

2006 ஆம் ஆண்டில் தேசிய வளர்ச்சி குழுவில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் உண்மையில் பேசியது இது தான்;

“நமது கூட்டு முன்னுரிமைகள் மிகத் தெளிவாக உள்ளன. விவசாயம், நீர்வளங்கள், கல்வி, கிராமப்புற முதலீடுகள்.. ஆகியவற்றுடன் தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளின் நலன்களே நமது முன்னுரிமை. வளர்ச்சியின் பலன்கள் சிறுபான்மை மக்களுக்கும் சேரும் வகையில் பொருத்தமான முறையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். இவர்கள் நமது வளங்களில் முன்னுரிமை பெறுகின்றனர்”  என்று தான் பேசி இருக்கிறார்.

அன்று  மன்மோகன் சிங் பேசியதைத் தான் தற்போது இப்படி திரித்துக்கூறியுள்ளார் மோடி.  நாட்டின் வளர்ச்சியின் பயன்கள் அனைத்து பிரிவினருக்கும் சேர வேண்டும். இந்தியாவின் வளங்களில் இந்த எளியோருக்கே முன்னுரிமை உண்டு என்று தான் மன்மோகன் சிங் பேசி இருக்கிறார்.

manmokansing-1.jpg
 

ஆனால், இந்தியாவின் அனைத்து வளங்களிலும் இஸ்லாமியருக்கே முன்னுரிமை இருக்கும் என்று மன்மோகன் சிங் பேசியதாக  அவரது பேச்சை திரித்து முழு பொய்யை பேசியுள்ளார் மோடி.

இப்படி தொடர்ந்து அவர் மதத்தை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தாலும் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களும் இந்த அக்கிரம பேச்சை கண்டிக்கவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமரின் இச் செயல் சட்ட விரோதமானது. மக்கள்  பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமானது. இந்திய தண்டனைச் சட்டத்தின் படி அவரது பேச்சு – இரு மதப் பிரிவினர் இடையே பகைமையை உண்டாக்கும் அவரது பேச்சு – குற்றச் செயலாகும். இதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தண்டிக்க முடியும்.

இதனால் தான் பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது. ”பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்தும் இது வரை நடவடிக்கை இல்லை. அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. புகார் அளித்த பின்  அந்த குழுவில் இருந்த அபிஷேக் சிங்வி  ஊடகங்களிடம் பேசினார். ”இந்த புகாரின் மீது தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தே தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா என்பதை தீர்மானிக்க இயலும்” என்றார்.

spacer.png

காங்கிரஸின் அகில இந்திய தலைவர் மல்லிகாஜுன கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களின் ஒருவரான வேணுகோபால் ஆகியோர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லாததை எல்லாம் எவ்வாறு பொய்யாக மோடி பேசி உள்ளார்  என்பதை விவரமாக ஊடகங்களிடம்  கூறியுள்ளனர். மேலும் 2006 இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதை திரித்து ,மதவாத அரசியலை -குறிப்பாக வெறுப்பு அரசியலை -மோடி பேசி உள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் சீதாராம் எச்சூரி அவர்களும் தேர்தல் ஆணையத்துக்கு புகார் செய்துள்ளார் .மேலும், அக்கட்சியின்  பொலிட்பீரோ உறுப்பினர்  பிருந்தா காரத் டெல்லியில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மற்ற அரசியல் கட்சிகளும் மோடியின் மதவாத வெறுப்பு அரசியல் பேச்சை கண்டனம் செய்துள்ளன.

பிரதமர் மோடியிடமும், பாஜக விடவும் வெறுப்பு அரசியலை தவிர்த்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வியை பொருளாதார நிபுணர் பரகால பிரபாகர் எழுப்பியுள்ளார்? அவர் சமீபத்தில் சென்னையில் பேசிய ஒரு கூட்டத்தில், ”மோடியின் அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை. மேலும், பாஜக ஆட்சி செய்யும் குஜராத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இஸ்லாமியர் எவரும் இல்லை. இந்த மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமியர் எவரும் பாஜகவின் சார்பில் வேட்பாளராகவே கூட நிறுத்தப்படவில்லை” என்பதை எல்லாம் சுட்டிக்காட்டினார்.

மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் மக்கள் தொகையில் 1%  பேர்  22 % தேசிய வருமானத்தை பெறுவதும், மக்கள் தொகையில் 1%  பேர்   இந்திய சொத்து  மதிப்பில் 44% சொத்து மதிப்பை வைத்துள்ள நிலையும் இருப்பதாக சுட்டிக்காட்டினார் பரகலப்பிரபாக்கர். எனவே, பட்டியலினத்தவரும் பழங்குடியினரும், பிற்படுத்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரும், பெண்களும் குழந்தைகளும் நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு  வகிக்க வேண்டும் என்ற மன்மோகன் சிங்கின் பேச்சை திரித்துப் பேசாமல் எப்படி இருப்பார் மோடி.?

மேலும், பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் தரப்பில் மட்டுமின்றி பல தரப்பில் இருந்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படும் என்ற எண்ணம் பொதுவாக இல்லை.

தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பேசியதை பகிர்ந்து, “தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்” என்று சூசகமாக பதிவிட்டுள்ளார்.

பொதுவாக கிராம பஞ்சாயத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின்  வார்டுகளுக்கான தேர்தலில் கூட எவரும் போட்டியின்றி வெற்றி பெறுவது அரிதிலும் அரிது. ஆனால், குஜராத் மாநிலத்தில் சூரத் பாராளுமன்ற தொகுதியில் எந்த போட்டியும் இன்றி பாஜக வின் வேட்பாளர்  முகேஷ் தலால் வெற்றி பெற்றதாக  சான்றிதழை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியும் அவருக்கு வழங்கியுள்ளனர்.

9488.jpg
 

அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் குர்பானியின் வேட்பு மனுவும் ,அவருக்கு டம்மியாக காங்கிரஸ் தரப்பிலானவரின் வேட்பு  மனுவும் நிராகரிக்கப்பட்டதாலேயே பாஜக வேட்பாளரின் வெற்றி  சாத்தியமானது. அந்த வேட்பு மனுக்களை முன்மொழிந்தவர்கள், அவர்களின் கையொப்பங்களை  போடவில்லை என்று தேர்தல் அதிகாரியின் முன் அபிடவிட் தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அதுமட்டுமின்றி , பகுஜன் சமாஜ் கட்சி உட்பட நான்கு கட்சிகளின் வேட்பாளர்களும் அவர்களின் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர்!.  சுயேச்சைகள் 4 பேரும் கூட வேட்டுமனுக்களை திரும்ப பெற்றனர்!.

எதிர்க்கட்சியின் சட்டசபை உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் விலை கொடுத்து வாங்குவது பாஜகவின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் சர்வ சாதாரணமான நிகழ்வாக இருந்தது.

சூரத்தில் தேர்தலுக்கு முன்னரே  குதிரை பேரம் நடந்திருக்கலாம் என்பது பொதுவான கருத்து. இல்லையென்றால் போட்டியிலிருந்து எட்டு நபர்கள் விலகுவார்களா என்பதை சிந்தித்தாலே உண்மை விளங்கும். காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை முன்மொழிந்தவர்கள் அடித்த அந்தர்பல்டிக்கு பின்னால் என்ன நடந்தது என்பதை எவரும் யூகித்து அறியலாம்.

அதாவது, ‘அறமற்ற வழியில் தேர்தலில் வெற்றி பெற பாஜக தயங்காது’ என்பதற்கான சான்றாகவே சூரத் நிகழ்வை பார்க்கலாம்.

தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். பாஜக அணியில் போட்டியிட்ட பாமகவிற்கு  மாம்பழம் சின்னம் , டிடிவி தினகரனின்  அ.ம.முகவிற்கு குக்கர் சின்னம், வாசனின் தமாகா விற்கு சைக்கிள் சின்னம் என்று சின்னங்களை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், திமுக தலைமையிலான எதிர் அணியில் இருந்த மதிமுக விற்கு பம்பரம் சின்னத்தையும்  விசிக-வினருக்கு பானை சின்னத்தையும் ஒதுக்கவில்லை. தனித்துப் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் விவசாயி சின்னத்தை ஒதுக்கவில்லை தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையம் பானை சின்னம் அளிக்க மறுத்தாலும், விசிக – வின் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரத்தில் வேறு எந்த வேட்பாளரும் பானை சின்னத்தை கேட்காததால் அவருக்கு பானை சின்னம் கிடைத்தது. அதேபோல, விசிக சார்பில் விழுப்புரத்தில்  ரவி குமாருக்கும் பானை சின்னம் கிடைத்தது. மதிமுகவும், விசிக-வும் நீதிமன்றம் சென்றும் அவர்களுக்கான சின்னத்தை தேர்தல் ஆணையம் மூலம் பெற இயலவில்லை.

தேர்தல் ஆணையம் நடுநிலைமையுடன் செயல்படுகிறதா? என்பதற்கு மேற் சொன்ன நிகழ்வு உரிய பதிலாக அமையும்.

வெறுப்பு அரசியலை தொடர்ந்து பிரதமர் மோடி பாஜகவின் தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசி வந்தாலும் அவர் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்க தேர்தல் ஆணையம் முன் வரவில்லை. எனவே, அவர் வெறுப்பரசியலை தொடர்ந்து பேசி வருகிறார்.

தமிழ்நாட்டில் சேலம் நகரில் 18.3.2024 அன்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, காங்கிரசும் திமுகவும்  இந்துமதத்தை அவமரியாதை செய்வதாகவும், ஆனால் மற்ற மதங்கள் விவகாரங்களில் வாய்மூடி இருப்பதாகவும் வெறுப்ப ரசியலைப் பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, ”முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை” என்று பேசினார் மோடி.

”பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் அயோத்தி ராமருக்கும் எதிராக இருப்பது ஏன்?’’ என்று மதவாத வெறுப்பரசியலை தொடர்ந்து பேசினார் மோடி அவர்கள் .அதாவது பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டி அரசியல் செய்த பாஜகவின் செயலுக்கு காங்கிரஸ் ஆதரவு தராததையே ராமருக்கு  எதிரானவர்களாக காங்கிரசை சித்தரித்து மதத்தை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் பிரதமர் மோடி.

நாடாளுமன்றத்துக்கான ஏழு கட்ட தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் மாடல் கோட் ஆப் கான்டக்ட்  (model code of conduct) அமுலுக்கு வந்தது. அதன்படி அனைத்து  மாநிலங்களின் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட அனைத்து மாநில அரசு இயந்திரங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தேர்தல் ஆணையம் பல அதிகாரிகளை -மாவட்ட ஆட்சியர்களையும் காவல்துறைய அதிகாரிகளையும்- மாற்றல் செய்து உத்தரவிட்டது.

ஆனால் ஒன்றிய அரசின் அமைப்புகளான வருமான வரித்துறை அமலாக்கத்துறை சிபிஐ ஆகிய அமைப்புகளை கட்டுக்குள் வைக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது . இந்த அமைப்புகள் எதிர்க்கட்சியினரை  தேர்தல் நேரத்திலும் வேட்டையாடுகிறது என்பதும் குறிப்பாக  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் இதை தெளிவாக்கும் தேர்தல் ஆணையம் -மோடி அரசால் நியமிக்கப்பட்ட மூன்று தேர்தல் ஆணையர்கள் -நடுநிலையுடன் செயல்பட்டு ஜனநாயகத்தின் மீது இந்திய மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் நடப்பார்களா..? என்பது கேள்விக் குறியே!

கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன்

ஓய்வு பெற்ற நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றம்
 

https://aramonline.in/17612/discrimination-of-e-c/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிரதமர் மோடி பேச்சுக்கு எதிரான புகார் மீதான ஆய்வை தொடங்கியது தேர்தல் ஆணையம்

25 Apr, 2024 | 10:26 AM

image

இந்தியபிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகரிக்கும் அழுத்தத்துக்கு இடையே தேர்தல் ஆணையம் ஆய்வைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் பேச்சு குறித்து காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனித்தனியே தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி அளித்த புகாரில் பிரதமரின் பேச்சு பிரிவினையை தூண்டுவதாக தவறானதாக. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிவைப்பதாக இருப்பதாகக் கூறியிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போதுஇ “தேர்தல் ஆணையம் எங்களின் புகாரை ஆராய்ந்து உடனடியாக மோடிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவர் சார்ந்த பாஜகவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத துவேஷங்களை ஏற்படுத்துதல் வெறுப்பை விதைத்தல் போன்ற குற்றங்களுக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையி பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மவுனம் காப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்தச் சூழலில் அதிகரிக்கும் அழுத்தங்களுக்கு இடையே தேர்தல் ஆணையம் புகார்களை ஆய்வு செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோடி என்ன பேசினார்? - முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பேசிய பிரதமர் மோடி “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதே அதற்கு சாட்சி.

காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்? என நினைவுகூர்வோம். “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்று மன்மோகன் சிங் கூறியிருந்தார். அப்படியென்றால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பார்கள்?! சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை. ஒரு பெண்ணின் தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது” என்று மோடி பேசியிருந்தார். இதுவே இந்திய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது

 

https://www.virakesari.lk/article/181905

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்றைய நாளில் மிகவும் தேவையான நல்ல செய்தி. வாழ்த்துக்கள். 
    • Published By: RAJEEBAN   18 MAY, 2024 | 08:35 AM   ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தினை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் மற்றும் ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என அங்கீகரிக்கவேண்டும் என கோரும் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அதனை வரவேற்றுள்ளனர். தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு உரைகள் ஆற்றப்பட்ட பின்னர் அமெரிக்க காங்கிரஸ்; உறுப்பினர்கள் காங்கிரஸ் நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டனர் . இந்த நிகழ்வில் அமெரிக்காவை சேர்ந்த 100க்கும் அதிகமான தமிழர்களும் கலந்துகொண்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 வருடத்தினை நினைவேந்துவதற்கு உலகம்எங்கிலும் உள்ள ஈழத்தமிழர்கள் தயாராகிவந்த நிலையிலேயே இந்த தீர்மானம்  அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த தீர்மானம் இழப்பை நினைகூருகின்றது ஆனால் தமிழர்களை எதிர்கால வன்முறைகள் பாரபட்சங்களில் இருந்து பாதுகாக்க முயல்கின்றது என தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பித்த சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர் வில்லே நிக்கல் தெரிவித்தார். எனது தீர்மானம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அங்கீகரிக்கின்றது, ஜனநாயக வழிமுறைகள் மூலம் சுயநிர்ணய உரிமைக்கான தமிழர்களின் உரிமையை வலியுறுத்துகின்றது என தெரிவித்த அவர் இலங்கையில் தொடரும் பதற்றங்களிற்கு அமைதியான ஜனநாயக தீர்வுகள் அவசியம் என்பதை தீர்மானம் வலியுறுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார். இந்த தீர்மானம் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பை முன்வைக்கின்றது. இவ்வாறான அணுகுமுறை உலகின் பல பகுதிகளில் பின்பற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இலங்கையின் வரலாற்றின் இருள்படிந்த அத்தியாயங்களின் முடிவை நாங்கள் நினைவுகூரும் அதேவேளை நாங்கள் எதிர்காலத்தை நோக்கியும் சிந்திக்கவேண்டும் என குறிப்பிட்ட வில்லியம் நிக்கெல் இந்த எதிர்காலம் அனைத்து மக்களினதும் உரிமைகளும் கௌரவமும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக காணப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். எங்களால் இதனை செய்ய முடியும் நாங்கள் இணைந்து நிற்போம் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிப்பதற்கு தமிழர்களிற்கு உள்ள உரிமையை மதிக்கும் ஜனநாயக அமைதி தீர்விற்காக பரப்புரை செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கான ஆதரவு மெதுவாக ஆனால் நிச்சயமாக அதிகரிப்பதை நாங்கள் காணமுடிகின்றது. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்  ஈழத்தமிழர்கள் விவகாரத்திற்கு அமெரிக்க காங்கிரஸின் இரு கட்சிகளினதும் ஆதரவு உள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்த முக்கியமான தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உள்ள எனது சகாக்களை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்த அவர் இது முன்னுதாரணத்தின் மூலம் தலைமை வகிப்பதற்கான சிறந்த உதாரணம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளிற்காக குரல்கொடுப்பதற்கான தமிழ்மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எனவும் குறிப்பிட்டார். இலங்கை தமிழர்களின் கதை போராட்டங்களின் கதைகளில் ஒன்று என தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் டொம் டேவிஸ் எங்கு அநீதி நிலவினாலும் அது நீதிக்கு அச்சுறுத்தலே என மார்ட்டின் லூதர் கிங் தெரிவித்ததை நினைவுபடுத்துகின்றேன் எனவும் தெரிவித்தார். தமிழர்களிற்கு எதிரான அநீதி உலகில் நீதிக்கான அச்சுறுத்தல் என குறிப்பிட்ட அவர் 2009 இனப்படுகொலைக்கு இட்டுச்சென்ற துயரமான சம்பவங்கள் பாராபட்சத்தின் கொடுமைகளை நினைவுபடுத்துகின்றன எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/183839
    • புனைகதைக்கான கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளா் May 18, 2024     அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண் எழுத்தாளரான வி.வி.சுகி கணேசானந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைகதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர் (இலங்கை நாணயத்தின் பெறுமதி 4 கோடியே 51 இலட்சத்து 5,064 ரூபா) பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டியலிடப்பட்ட ஏனைய 4 எழுத்தாளர்களுக்கும் 12,500 டொலர் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் வன்முறையில் சிக்கித் தவிக்கும் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவும் முகமாக கதை அமையப்பெற்றுள்ளது. இதேவேளை இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வாரத்தில் தமக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தாம் விரும்பாதவர்களின் கைகளில் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளதாக சுகி கணேசானந்தன் தனது நாவலில் தெரிவித்துள்ளார். 1980 ஆம் ஆண்டு பிறந்த சுகி கணேசானந்தன், ஒரு அமெரிக்க புனைகதை எழுத்தாளரும் கட்டுரையாளரும் ஊடகவியலாளரும் ஆவார். கிராண்டா, தி அட்லாண்டிக் மந்த்லி மற்றும் த வோசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.ilakku.org/புனைகதைக்கான-கரோல்-ஷீல்ட/
    • முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி! May 18, 2024 “உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ” – லூக்கா இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாட்களின் கொடூரங்களை உலகுக்கு சொல்லும் வரலாறாக ‘அவர்கள்’ வழங்கிய உப்புக் கஞ்சி நிலைத்திருக்கும் இனப்படுகொலை என்ற சொல்லைக் கேட்டாலே ஆயுதங்கள், மரணங்கள், நில ஆக்கிரமிப்புகள், ஓலங்கள், ராணுவ அத்துமீறல்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் என மானுடத்தின் வதைகள் நமது நினைவுக்கு வந்து செல்லும். அதுவும், தமிழர்களுக்கு அது குறித்து நினைத்த மாத்திரத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு கண்களுக்கு முன்னால் வந்து நிற்கும். அத்தகைய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஆறாத வடுக்களோடு வலிகளைத் தாங்கி நிற்கிற தமிழினத்திற்கு கூடுதலாக இன்னுமொரு வார்த்தை நினைவில் வந்துபோகும் அதுதான் பசிப்பட்டினி. 2006 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என சிங்களப்பேரினவாதம் முன்னெடுத்த திட்டமிட்ட இன அழிப்பு 2009 ஆம் ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே மாதம் 18 ஆம் தேதியன்று 1,50,000 மக்களின் படுகொலையோடு நிறைவடைந்தது. ரசாயனக் குண்டுகள், விஷவாயு குண்டுகள், கொத்துக்குண்டுகள், ஷெல் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் எறிகணைகள், ஆட்லெறி குண்டுகள் என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களைக் கொண்டும் நடத்தப்பட்ட இந்த இன அழிப்புப் போரை சர்வதேச சமூகம் கைகட்டி, வாய்மூடி மெளனமாய் வேடிக்கை பார்த்த அந்த மே 18 ஆம் நாளை ஆண்டுதோறும் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், மனித உரிமையாளர்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ‘தமிழினப்படுகொலை நாளாக’நினைவுகூர்ந்து வருகின்றனர். விளக்கேற்றி, மெழுகுவர்த்திகள் ஏந்தி, மலர் வணக்கம் செய்து நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் இந்தாண்டு‘முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி’என்ற ஊழியின் உணவு வழங்கப்பட்டது.முன்னமே, சொன்னது போல, முள்ளிவாய்க்கால் என்றால் தமிழினத்திற்கு கூடுதலாக நினைவில் வந்துபோகும் அந்த பசிப்பட்டினியின் குறியீடே இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’. இப்போது பேசும் பொருளாக மாறியுள்ள இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தமிழீழ நடைமுறை அரசின் (DeFacto State) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கடைசி உறுப்பினரின் இறுதி மூச்சுவரை வழங்கப்பட்டது.போர் நடைபெறும் பகுதியில் நிற்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டியது அந்த போரை முன்னெடுக்கும் அரசின் பொறுப்பு. மருத்துவமனைகள் மீதும், மக்கள் அதிகம் இருந்த பகுதிகள் மீதும் கொத்துக்குண்டுகளைப் போட்டு கொன்ற சிங்களப் பேரினவாத அரசு இந்த சர்வதேச விதிமுறையை மட்டும் எப்படி கடைப்பிடிக்கும் ?. மக்களிடம் இருந்த உணவுக் களஞ்சியங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்த சிங்கள அரசின் திட்டமிட்ட செயல்பாட்டால், பட்டினிச்சாவில் தவித்த மக்களை காப்பாற்றியது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வழங்கிய இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தான். சாவின் விளிம்பில் நின்று இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு மக்களின் பட்டினியை போக்க மாத்தளன் பகுதியில் தயாரித்து வழங்கத் தொடங்கிய கஞ்சி, முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆனந்தபுரத்தில் பீரங்கி டாங்கிகளால் தகர்க்கப்பட்ட தென்னைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, பிடுங்கப்பட்ட தேங்காய்கள், தமிழீழ போராட்ட இயக்கத்திடம் இருந்த அரிசி, காடுகளில் சேகரிக்கப்பட்ட விறகு, ஆங்காங்கே கிடைத்த ஊற்று தண்ணீர் இவற்றால் தயாரிக்கப்பட்ட கஞ்சிதான் அது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கஞ்சி வழங்கப்பட்டது. பசிப்பட்டினியால் தமது மக்கள் சாகக்கூடாது என்பது அந்தப் போராட்ட இயக்கத் தலைவனின் அதியுச்சக் கட்டளையாக இருந்தது.சிங்கள ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டு அதிகாலை 2 மணியளவில் தயாரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும். அதன்மூலம் தயாரிக்கப்படும் கஞ்சி, 8 மணிக்கு முன்னதாக மக்களுக்கும், ஐ.நா. அலுவலர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன. மனித நேயமற்ற தாக்குதல்கள், இறுக்கமான பொருளாதாரத் தடைகளுக்கு இடையிலும் மக்களில் ஒருவர்கூட பட்டினியால் சாகக்கூடாதென தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பணியாற்றியது. உலகில் நடைபெற்ற எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில், மக்களின் உணவை கொள்ளையடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், த.வி.பு இனவிடுதலைப் போர் நடவடிக்கைகளில் மட்டும்தான் போராளிகள் மக்களுடன் இணைந்து தமக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்டனர். மக்களை காப்பாற்ற தமது உயிரைத் துறந்தனர். பேரிடர் இடப்பெயர்வின் யூதர்கள் அருந்திய ஓர் உணவை “பாஸ் ஓவர்” என இன்றும் வழக்கமாக நடைமுறையிலுள்ளதைப் போல ஈழத்தமிழர்களின் பொடியன்கள் தயாரித்து தந்த அமிழ்தான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வரலாற்றில் நிலைபெறும். முள்ளிவாய்க்காலினை பொது பண்பாட்டுக் குறிப்பாக மாற்றும். சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் பங்களிப்பையும், ஐ.நாவின் கள்ள மெளனத்தையும் தீவிரக் கேள்விக்குள்ளாக்குகிற தமிழர்களின் எதிர்ப்புக் குறியீடாக வருங்காலத்தில் மாறும் என்பது உறுதி.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்காலில்-அவர/
    • டுபாயில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா பெறுமதியான நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள பிரிவினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் உரிய தீர்வையை செலுத்தாது 1,083 நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுதவிர, குறித்த இருவரும் தம்வசம் வைத்திருந்த 200 பென்ட்ரைவ்களும் மீட்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/301907
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.