Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆணைக்குழுக்களை அமைத்து ஈஸ்டா் தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது – சரத் பொன்சேகா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆணைக்குழுக்களை அமைத்து ஈஸ்டா் தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது – சரத் பொன்சேகா

April 27, 2024
 

ஆணைக்குழுக்களை அமைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அதன்போது சரத் பொன்சேகா மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு 5 வருடங்களாகியுள்ளன. இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பேராயர் தனது வேதனையை வெளிப்படுத்தும் போது அவரை விமர்சிக்கின்றனர். அவ்வாறு நடக்கக் கூடாது. இதில் நீதி கிடைக்க வேண்டும். ஆணைக்குழுக்களை அமைத்து இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

பயங்கரவாதிகளை அவ்வாறான ஆணைக்குழுக்களால் அடையாளம் காண முடியாது. புலனாய்வு அதிகாரிகள் மற்றும் குற்றவியல் விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கே அதனை செய்ய வேண்டும். இது தொடர்பான பொறிமுறைகளும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கே தெரியும். அதன்படி அவர்களை அதற்கு நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவத்தில் பிரதான நபரான சஹரானுக்கு யார் சம்பளம் கொடுத்து வளர்த்துள்ளனர்.

அவரை உருவாக்கியவர்கள் யார்? சலே என்பவரே அவரை வளர்த்துள்ளார். 2014ஆம் ஆண்டிலேயே சஹரான் தொடர்பில் தகவல்கள் வெளியாகிய போதும் அவரை கைது செய்ய முடியாது போயுள்ளது. தமது கடமைகளை தவறியவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.

நாடு இந்த நிலைமைக்கு வர காரணமானவர்கள் யார்? பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். சம்பவத்திற்கு முன்னர் அது தொடர்பில் தகவல்கள் தெரிந்தும் அதனை தடுக்காது தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். எவ்வாறாயினும் எனக்கு அதிகாரம் கிடைக்குமாக இருந்தால் அந்த நபரை சட்டத்தின் முன்னால் கொண்டுவந்து தண்டனையை கொடுத்தே தீருவேன்” என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தாா்.

https://www.ilakku.org/ஆணைக்குழுக்களை-அமைத்து-ஈ/

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பக்கத்தில ஒரு அன்ரி கையை ஓங்கிறா…சந்தர்ப சாட்சிப்படி அவதான்🤣. சவுக்கு இதை வைத்து அனுதாபம் தேட முனைந்தாலும்…..பலருக்கு இவர் அந்த அப்பாவி பெண்ணின் மரணத்தில் பெட்டி வாங்கி கொண்டு ஆடிய நியாபகம்தான் மனதில் வந்து போகும்.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, பிபிசி சீனா செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சீனாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்கிறார். புதின் ஐந்தாவது முறை ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றபின்னர் இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். யுக்ரேன் மீது அவர் படையெடுப்பினைத் துவங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சீனா ரஷ்யாவுக்கு முக்கிய நட்பு நாடாக இருந்துவருகிறது. சீனா யுக்ரேன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போரைக் கண்டிக்க மறுத்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபத்திற்கு ஆளான ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறது. இன்று (வியாழன், மே 16) நடந்துவரும் இந்தச் சந்திப்பில் ஷி ஜின்பிங்-உடன் யுக்ரேன் போரைப் பற்றி பேசியதாக புதின் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல்-காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவது மிகவும் அவசரமான குறிக்கோள் என்று இரண்டு தலைவர்களும் தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும், புதின் இதற்கு மேலும் ஆதரவை எதிர்பார்க்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கான விலையைக் கொடுக்க சீனா தயாராக உள்ளதா? பட மூலாதாரம்,POOL படக்குறிப்பு,மே 16, வியாழன் அன்று புதின்-ஜின்பிங் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படம் சீனா-ரஷ்யா உறவு எப்படியிருக்கிறது? கடந்த வாரம் ஐந்தாவது முறை ரஷ்ய அதிபராகப் பதவியேற்ற பின்னர் புதின் தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்குச் சீனாவைத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. இந்த இருநாள் அரசுமுறைப் பயணம் அவர்களின் உறவு 'எப்போதும் இல்லாத உயர்ந்த நிலையை' எட்டியதால் வருகிறது என்று சீன அரசு ஊடகத்திடம் தெரிவித்தார். அவர் சீனத் தற்காப்புக் கலைகள் மற்றும் சீனத் தத்துவத்தின் மீது தனக்கிருக்கும் ஆர்வத்தைப் பற்றிப் பேசினார். மேலும் அவரது குடும்பத்தில் சிலர் சீனாவின் மாண்டரின் மொழியைக் கற்று வருவதாகவும் கூறினார். "இன்று நிலவிவரும் கடினமான சர்வதேசச் சூழ்நிலையில், எங்கள் உறவுகள் இன்னும் வலுவடைந்து வருகின்றன," என்று அவர் கூறினார். ஆனால் புதின் சீனாவுடனான தனது நட்பைப் பற்றித் தற்பெருமை பேசும் அதேசமயம், ஷி ஜின்பிங் கவலைப்படுவதற்குக் காரணங்களும் இருக்கலாம். ரஷ்யாவுடன் வணிக உறவுகளில் இருக்கும் பெய்ஜிங் மற்றும் ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட சீன வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக, புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் தற்போதுள்ள பொருளாதாரக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க உதவுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. சீனா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்கவில்லை என்றாலும், போருக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா நம்புகிறது. பெய்ஜிங்கிற்கு சமீபத்தில் பயணித்த அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன், பனிப்போருக்குப் பிறகு ஐரோப்பிய பாதுகாப்புக்கு 'பெரும் அச்சுறுத்தலைத் தூண்டுவது சீனா தான்' என்று பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஷி ஜின்பிங், புதின் மீது அதிக அழுத்தத்தை செலுத்துமாறு பலர் வலியுறுத்தி வருகின்றனர் ஆனால் யுக்ரேன் மீதான அதன் நிலைப்பாடு நடுநிலையானது என்று சீனா கூறி வருகிறது. மேலும் அது ரஷ்யாவிற்கு விற்கும் தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்கள் போர் தவிர்த்த வணிகரீதியான பயன்பாடுகளையும் கொண்டுள்ளதால் அவை விதிகளை மீறவில்லை என்கிறது. இருந்தபோதிலும், கடந்த வாரம் ஷி ஜின்பிங் பிரான்ஸுக்குச் சென்றிருந்த போதும் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. சீனாவுக்கு நற்பெயர் வாங்குவதற்காக ஃபிரான்சுக்குச் சென்றிருந்த அவரது நோக்கத்தை இது திசைதிருப்பியது. சீனா மீது சந்தேகம் தெரிவிப்பவர்களும், சீனா மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்களும் தங்களது வாதங்களை இன்னும் சத்தமாக முன்வைத்து வருகின்றனர். ஷி ஜின்பிங், புதின் மீது அதிக அழுத்தத்தை செலுத்துமாறு அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஐரோப்பிய ஒன்றியமும் சீனா மீது அதன் சொந்தத் தடைகளை விதிக்கப் பரிசீலித்து வருகிறது. அதேசமயம் சீனாவின் பொருளாதாரம் இப்போது மந்தமாக இருக்கிறது. தனது வர்த்தக பங்காளிகள் தன்மீது செலுத்தும் இந்த அழுத்தத்தை அதனால் தாங்கிக்கொள்ள முடியாது. உள்நாட்டில் தேவை பலவீனமாக இருப்பதால் வெளிநாட்டுச் சந்தைகள் சீனாவுக்கு அவசியமாகும். இவை அனைத்தும் ஷி ஜின்பிங்கை ஒரு சங்கடமான சூழ்நிலையில் தள்ளுகின்றன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனா, ரஷ்யாவுடனான தனது மூலோபாயக் கூட்டணியின் 'வரம்பற்ற தன்மையை' அவ்வளவு முக்கியமானதல்ல என்பதுபோலக் காட்டிக்கொள்கிறது 'வரம்புகள் இல்லாத நட்பு' என்னவானது? ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமிப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு, புதினும் ஷின்பிங்கும் இருநாட்டு ஒத்துழைப்பை ஆழப்படுத்த 'வரம்புகள் இல்லாத' கூட்டாண்மையை அறிவித்தனர். மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இரு நாடுகளுக்கும் இது அவசியமானதாக இருந்தது. அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கை மறுவடிவமைப்பதில் ரஷ்யா முக்குயப் பங்காற்றும் என்று சீனா கருதுகிறது. இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் செழித்து வருகிறது. 'பவர் ஆஃப் சைபீரியா' குழாய் வழியாக தொடர்ந்து வழங்கப்பட்டுவரும் எரிவாயு ஏற்றுமதி உட்பட மலிவான ரஷ்ய எரிசக்தி சீனாவிற்கு நன்மையாக உள்ளது. ஆயினும்கூட, யுக்ரேன் போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இந்தக் கூட்டணி அவ்வளவு 'வரம்புகள் இல்லாததாகத்' தோன்றவில்லை. ஒன்று, இந்த வார்த்தை இருநாட்டு அரச ஊடகங்களில் இருந்து கிட்டத்தட்ட மறைந்து விட்டது, என்று பிபிசி பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. சீனா, ரஷ்யாவுடனான தனது மூலோபாயக் கூட்டணியின் 'வரம்பற்ற தன்மையை' அவ்வளவு முக்கியமானதல்ல என்பதுபோலக் காட்டிக்கொள்கிறது, என்கிறார் 'கார்னகி எண்டோமென்ட்' சிந்தனைக் குழுவின் மூத்த ஆய்வாளரான ஜாவோ டோங். "மேற்கத்திய செல்வாக்கைக் குறைக்கும் இலக்கை சீனா ஆதரிக்கும் அதே வேளையில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல் உட்பட ரஷ்யாவின் சில தந்திரோபாயங்களுடன் சீனா உடன்படவில்லை. ரஷ்யாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினால் வரும் களங்கத்தை சீனா நன்கு அறிந்திருக்கிறது. உலக அரங்கில் தனது சட்டபூர்வமான தன்மையை மேம்படுத்துவதற்கான உத்திகளை அது தொடர்ந்து செம்மைப்படுத்தி வருகிறது," என்றார். சமீபத்தில் ஐரோப்பா சென்றிருந்த ஷி ஜின்பிங் "சீனா நெருக்கடியை உருவாக்கவில்லை, அதில் பங்கேற்கவும் இல்லை" என்று கூறினார். இதையே சீனா தனது சொந்த குடிமக்களுக்கும் சொல்லி வருகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பினைத் துவங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிறது ஷி ஜின்பிங் அமைதித் தூதுவரா? ஆனால் சீனாவின் இந்த நடுநிலை நிலைப்பாடு, யுக்ரேன் மீதான அனுதாபம் என்று அர்த்தப்படாது. சீனாவின் வெகுவாகத் தணிக்கை செய்யப்பட்ட ஊடகங்களிலிருந்து இது எளிதில் தெரியும். சீன அரசு ஊடகம் இன்னும் ரஷ்யாவின் படையெடுப்பை நியாயப்படுத்துகிறது. அதனை 'அமெரிக்க-ஆதரவு நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிராக ரஷ்யாவின் துரிதமான பதிலடி' என்று கூறுகிறது. ஆனால், சீனாவில் மாறுபட்ட குரல்களும் உள்ளன. சீனாவின் பொதுமக்களில் சிலர், ரஷ்யாவுடனான 'வரம்பற்ற உறவை' ஆதரிக்க எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறார்கள் என்பதில் விரிசல் தோன்றக்கூடும் என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது. ஃபுடான் பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வு மையத்தின் இயக்குநராக இருக்கும் ஃபெங் யுஜுன் சமீபத்தில் 'தி எகனாமிஸ்ட்' இதழில், 'ரஷ்யா யுக்ரேனில் தோல்வியடைவது உறுதி' என்று எழுதியிருந்தார். சீனாவில் இது ஒரு துணிச்சலான கருத்து. ஆனால், ஷி ஜின்பிங், தான் ஒரு அமைதித் தூதுவராக இருப்பதற்கான சமிக்ஞைகளைக் கொடுத்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம், மாஸ்கோவிற்கு அரசுமுறைப் பயணமாகச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, அவர் யுக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சீனா "எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறது" என்று கூறினார். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான தனது 12-அம்ச அமைதித் திட்டத்தையும் சீனா வெளியிட்டது. இருந்தும், புதின்-ஜின்பிங் சந்திப்பால், இந்தக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் வராது. ஆனால் மேற்கத்திய நாடுகள் சீனா-ரஷ்யா கூட்டணியால் பொறுமையிழந்து வருகின்றன. அமைதி காப்பாளராக இருக்கும் ஷி ஜின்பிங்கின் முயற்சிகள் இதுவரை பலிக்கவில்லை. முன்பு 'தோழன்' என்றும் 'அன்பான நண்பன்' என்றும் அவர் அழைத்த, சர்வதேச வெறுப்பைச் சம்பாதித்த ரஷ்யா போன்ற நாட்டோடு 'தோளோடு தோள்' நிற்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை அவர் சிந்திப்பார். https://www.bbc.com/tamil/articles/c0jkj9q95pgo
    • Colombo, May 16 (Daily Mirror) - State Minister of Small and Medium Enterprises Development, Prasanna Ranaweera, has been accused of assaulting a porter at the Bandaranaike International Airport (BIA).  The altercation occurred as the minister accompanied his wife, who was scheduled to travel overseas today. Sources told Daily Mirror that that the minister, along with his armed security personnel, attempted to enter the airport through the main entrance. However, airport security officers intervened, informing the minister that his security detail could not bring firearms into the airport. This prompted an alleged verbal outburst from Ranaweera, who reportedly threatened several security officers. The situation escalated when a porter assisting with the luggage of the minister's wife was allegedly assaulted. Witnesses claim the conflict arose after the porter objected to receiving only Rs. 750 instead of the standard Rs. 1,000 fee clearly posted at the airport.  In response, Ranaweera is said to have slapped the porter in the face before leaving the premises. https://www.dailymirror.lk/breaking-news/Prasanna-Ranaweera-assaults-porter-at-BIA/108-282744
    • காடெல்லாம் கஞ்சாவானால், அதில், கால் கிலோவை நான் இழுப்பேன்🤣 கை உடைந்து இந்த மாரி கட்டுப்போட்டால், கையை தூக்க கூடாது. அதுக்காகத்தான் இப்படி brace போடுவது.  இப்ப பலர் கேட்க்கும் கேள்வி என்னவென்றால்…இந்தளவு முறிவோடு சவுக்கு எப்படி டி சேர்ட் போட்டார்? வழமையா இந்த காயம் உள்ளோர் பட்டன் சேர்ட் போடுவதுதான் வழக்கம்.
    • தொடை நடுங்கி தமிழ்வின் ஏன் அரசியல்வாதி முகத்தை மறைக்கிறது? பெயர் வெளியிடவில்லை? பயமா? அல்லது வெட்டி ஒட்டிய ஊடகத்தில் இந்த விபரங்கள் கிடைக்கவில்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.