Jump to content

புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

விடுதலைத்தீ

 

 

இந்த இறுவட்டும் ஊழியால் அழிந்துவிட்டது.

அத்துடன் என்னால் இதன் மூல அட்டையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 
 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 234
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

விண்ணேறிய வீரம்

 

 

 

விண்ணேறிய வீரம்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

விழ விழ எழுவோம்

 

 

 

விழ விழ எழுவோம்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

விழி நிமிர்த்திய வீரம்

 

 

 

 

விழி நிமிர்த்திய வீரம்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

விழித்திருப்போம்

 

 

 

விழித்திருப்போம்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

விழித்தெழுவோம்

 

 

 

முன் பக்கம்:

விழித்தெழுவோம்.jpg

 

 

பின் பக்கம்:

afca.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

விளக்கேற்றும் நேரம்

 

 

முன்பக்கம் & பின்பக்கம்

 

விளக்கேற்றும் நேரம்.jpg

 

vilakkeerrum neeram.jpeg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

வீரத்தின் விளைநிலம்

 

 

 

வீரத்தின் விளைநிலம்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

வீரத்தின் வேர்கள்

 

 

 

வீரத்தின் வேர்கள்.jpg

.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

வீரம் விளைந்த பூமி

 

 

 

வீரம் விளைந்த பூமி.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

வீழமாட்டோம்

 

 

 

இந்தியத் தமிழ்க் கவிஞரான திரு. வைரமுத்துவால் வெளியிடப்பட்ட "வீழமாட்டோம்" என்ற இறுவட்டையும் புலிகளால் அதே பெயரில், 2009 இற்கு முன்னர் வெளியிடப்பட்ட "வீழமாட்டோம்" என்ற இறுவட்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். 

இவ்விறுவட்டும் ஊழியால் அழிந்து போனது. இதனது அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

வெஞ்சமரின் வரிகள்

 

 

 

வெஞ்சமரின் வரிகள்.jpg

 

venjchamarin varikal.jpeg

 

 

 

 

நீளும் இசைவெளியில் 'வெஞ்சமரின் வரிகள்'

 

  • திறனாய்வு: அமரதாஸ்
  • மூலம்எரிமலை (மார்ச் 2003)
  • பக்கம்: 38-40

 

இசையும் மொழியும் மனிதனுக்கேயுரிய தனிப்பெரும் சொத்துக்கள். இவை, இல்லா உலகை மனிதனால் ஜீரணிக்க முடியாது. மொழியும் இசையும் முழுமனித இனத்திற்கேயுரிய தனிப் பண்புகள் என்று கூறுகின்றது 'த மியூசிக்கல் மைன்ட்' என்ற நூல். மொழியும், இசையும் மனிதனின் தொடர்பாடல் முறைகளுக்கு உயிர்நாடிகள். மொழியைப்போலவே இசையும் பேசக்கூடியது. இசை மொழி உணர்வுகளுடன் பேசுவது. இசை பேசும் போது மனிதனின் உணர்வுகள் கேட்கின்றன; உள்வாங்கிக் கொள்கின்றன.

இசையானது உணர்வுகளைச் சுண்டி இழுக்கக் கூடியது. அலைபாயும் மனதை ஆசுவாசப்படுத்தக் கூடியது. இசை குறிப்பிட்டதொரு மனநிலையை உருவாக்குகிறது அல்லது மாற்றுகிறது. 1930கள் மற்றும் 40களில் கிட்லருடைய வசீகரிக்கும் பேச்சை மக்கள் கேட்பதற்காக உணர்வைத் தட்டியெழுப்பும் அணிவகுப்பு இசையை 'நாஸிகள்' பயன்படுத்தினர் என்று சொல்லப்படுகிறது. இதிலிருந்து இசையின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம். இசை புதிது புதிதாக உணர்வுகளைக் கட்டமைத்துச் செல்லும் வித்தை.

இசையே ஒரு தனி மொழி. இது உலகெங்கும் எல்லாத்துறைகளிலும் ஊடுருவி வேலை செய்திருக்கிறது. இசையால் மனத்தை மயக்கமுடிகிறது. அதனால் நன்மையோ தீமையோ செய்யத் தூண்டுவிக்க முடிகிறது. சிலவகை இசையை சிறுபிள்ளைகள் கேட்டுக் கொண்டே இருந்தால், அது அவர்களது அறிவுப் புலமையையும் உணர்ச்சி ரீதியலான வளர்ச்சியையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. "நகர முடியாமல் தவிக்கும் நரம்புக் கோளாறுகளுடைய நோயாளிகள் மீதும் இசை ஏற்படுத்தும் தாக்கம் சில சமயங்களில் மலைக்க வைக்கிறது" என்று 'இசையும் மனமும்' என்ற நூலில் 'அந்தோனி ஸ்ரோ' கூறுகிறார்.

இசை தனிவலிமையால் ஏராளமான நன்மைகளை விளைவிக்கின்றது. இந்த இசையே வேறுவிதமாக தீமைகளுக்கு தூபம் போடவும் செய்கிறது. சுய உணர்வையும், பகுத்தறிவையும் இழந்து நுகர்வோரை ஒருவித போதை உணர்ச்சிகளுக்கு அடிமைகளாக்கவும் செய்கிறது. எனவே இசையைக் கையாள்பவர்களும் நுகர்வோரும் அதை அறிவுபூர்வமாகவும் அணுக வேண்டிய தேவை உணரப்படுகிறது.

உணர்ச்சிகளை வர்ணிக்க பல வாக்கியங்கள் தேவைப்படக்கூடும். ஆனால், இசையில் உணர்ச்சிகளை எளிமையாக ஓரிரு சுர அடுக்கிலேயே வெளிப்படுத்திவிட முடியும்.

தமிழரின் இசை முயற்சிகள் மிகவும் தொன்மையானவை.

தமிழ்மொழி பண்டைக்காலத்தில் இயல், இசை, நாடகம் என மூன்று வகைகளாக பாகுபாடு பெற்று வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. முதற்சங்கப் புலவரில் ஒருவராகிய அகத்தியரால் இயற்றப் பெற்ற அகத்தியத்திலேயே தமிழ் மூன்று வகைகளாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் இக்காலத்திலே முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை, இசைமரபு, இசைநுணுக்கம், பஞ்சபாரதீயம், இந்திரகாளியம் போன்ற இசைத்தமிழ் நூல்கள் எழுந்திருக்கின்றன. அவை மறைந்து போயின. எனினும் பண்டைக்கால இசைத்தமிழ் வளர்ச்சியை அறிய தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, உதயணன் காதை போன்ற நூல்களும் இடைக்கால நூல்களான தேவாரம், பெரியபுராணம் போன்ற நூல்களும் இன்று உதவும்.

இன்றைய கர்நாடக இசைக்கு தேவாரப் பண்ணிசையே ஆதிமூல வடிவமாக விளங்குகின்றதென இசை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இசையானது தமிழரின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கின்றது. பிறப்பிலிருந்து இறப்பு வரையான, வாழ்வின் பகுதிகளையெல்லாம் தாலாட்டிலிருந்து ஒப்பாரி வரையாக இசையால் நிறைத்து வந்த பாராம்பரியம் தமிழருடையது. இசைப்பாடல்களுக்கான தேவைகள் இன்றுவரை இருந்து வந்திருக்கின்றன. இனியும் இசைப்பாடல்களுக்கான தேவைகள் இருந்து கொண்டிருக்கும்.

வார்த்தைகளை அல்லது எண்ணங்களை உணர்ச்சிகளோடு சங்கமமாக்க இசை உதவுகிறது. பெரும்பாலும் இசைப்பாடல்களில் வார்த்தைகள் அவ்வளவு கருத்தாளம் மிக்கதாகவோ இலக்கியச் செறிவுள்ளதாகவோ அமைவதில்லை. பின்னணியில் பொருத்தமான இசை இசைந்து வருகையில் வார்த்தைகள் அல்லது எண்ணங்கள் கேட்போரின் உணர்வை எளிதாகவும் விரைவாகவும் கவர்ந்திழுத்து விடுகின்றன. இசையின் தன்மையிலேயே உணர்வு, செய்தி பெருமளவுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடுகின்றன.

இசைப்பாடல் எழுதுவதென்பது இலகுவான காரியமல்ல. இசைப்பாடல் அடிப்படையில் கேட்டல் ஊடகமாக புரியும்படியானதாகவும் உள்ளதால் கேட்கும்போதே எளிமையானதாகவும் சூழ்நிலை புலப்படும் படியாகவும் ஒத்திசைவுடனும் அழகியல் அம்சங்களுடனும் எழுதப்படவேண்டி இருக்கிறது. பாடலைக் கேட்கும்போதே அப்பாடலின் சூழ்நிலையும் மைய உணர்வும் எம்முள் விரியவேண்டும். இதைச் செய்வதில் இசைக்கு முக்கிய பங்குண்டு.

அகத்துள் ஊடுருவி படிமங்களை நிகழ்த்தக் கூடியதாக இசை இருக்கிறது. அதுவே ஒரு தனிமொழியாக இயங்கும் தன்மை கொண்டது. எனவே இசைப்பாடலில் வரிகளுக்கு அதிக முக்கியத்துவம்மில்லாது போகக்கூடிய நிலை தோன்றக்கூடும் விடுதலைப் போராட்ட சூழலில் வெளிப்படும் இசைப்பாடல்களில் வரிகளுக்கான முக்கியத்துவத்தைத் தவற விடுதல் நல்லதல்ல. வரிகளுக்கான விழிப்புணர்ச்சியை புதிய சிந்தனைகளை காலப்பதிவைச் செய்யவேண்டிய தேவை விடுதலைப் போராட்ட கால இசைப்பாடல்களுக்கு உண்டு.

இசையும் வரிகளும் இணைந்த இசைப்பாடல்கள் தமிழீழ விடுதலைப் போராட்ட சூழலில் அதிகம் வெளிப்பட்டிருக்கின்றன. இவை, தென்னிந்திய தமிழ் சினிமாப் பாடல்களின் தாக்கம் அதிகமுள்ள ஈழத்தமிழ்ச் சூழலில் புதிய வரவாக புரட்சிப்போக்காக அமைந்திருக்கின்றன. போராட்டச்சூழல் இந்தப் புதிய போக்கின் தேவையை அதிகமதிகம் கொண்டிருந்தது.

புதிய இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள்,பாடகர்கள், இசைக்கலைஞர்கள் தோன்றினர். இந்தப் போக்கில் போராளிகளும் பொதுமக்களும் கலந்திருந்தனர். பிரதானமான போராட்டசக்தியான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பல்வேறு பிரிவினரும் தனித்தனியாக இசைப்பேழைகளை உருவாக்கினர். தேவைகள் அதிக விளைச்சலை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றுள் கணிசமானவை வளர்ச்சி நிலையைக் காட்டுவன. அவற்றுள் பல காலப்பெறுமதி வாய்ந்தவையாயும் கலைத்தனமானவையாயும் வெற்றிபெற்ற படைப்புகளாகவும் நின்று நிலைக்கக் கூடியவை.

அண்மைக் காலத்தில் புதிய வரவாக தமிழீழ இசைக்குழுவின் அமைப்பாளர் எஸ்.பி.ஈஸ்வரநாதனின் இசையமைப்பில் மலையவனின் ஒலிப்பதிவில் 'வெஞ்சமரின் வரிகள்' என்ற இசைப்பேழை மாலதிபடையணியின் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. 2002.10.10 அன்று 2ம் வெப். மாலதி நினைவு நாள் மற்றும் தமிழீழப் பெண்கள் எழுச்சிநாள் நிகழ்வில் அது வெளியிடப்பட்டது.

"எல்லை கடந்துவரும் பகைவருக்கு அருகிலேயே எப்போதும் இருக்கும் எங்களின் ஓய்வேயற்ற களவாழ்வு வித்தியாசமானது. உறவுகளை நினைவுகளில் சுமந்தவாறு நெருப்பெரியும் நிலமெங்கும் உலவும் எங்களின் ஆன்மாவின் குரலாகவே இந்தப் பாடல்களை நாங்கள் உருவாக்கினோம். தென்றலையும் தீயாய் மாற்றும் ஆற்றல் மிக்க எங்கள் பெருந்தலைவர் பிரபாகரனின் விழிகளே எங்களின் ஊற்றுவாயாக இருக்கின்றது. களத்திலேயே வாழும் எங்களிடம் தலைவர் காட்டும் தாயன்பு ஈடிணை அற்றது. எங்களின் ஒவ்வொரு அசைவும் அவரின் ஆற்றலால் நெறிப்படுத்தப்படுகின்றது. தலைவரின் நினைவோடு தாய்மண்ணின் கனவைச் சுமந்து களமெங்கும் நடக்கின்ற நாங்கள் இதுவரை வெற்றிச் செய்திகளாகவே எங்கள் செவிகளை வந்தடைந்தோம். இப்போது விடுதலைப் பாடல்களாக வருகிறோம்" என்ற அறிமுக உரையுடன் தொடங்கி ஒன்பது பாடல்களைத் தாங்கி வந்துள்ளது இந்த இசைப்பேழை.

ஏற்கனவே விடுதலைப்புலிகள் மகளிர் படையணியினர் 1993இல் 'விழித்தெழுவோம்' என்ற பெயரிலும் 1995இல் 'நெருப்பு நிலவுகள்' என்ற பெயரிலும் 2000 இல் 'சூரியப்புதல்விகள்' என்ற பெயரிலும் இசைப்பேழைகளை வெளியிட்டுள்ளனர். மகளிர் படையணிகளில் ஒரு படையணியான மாலதி படையணி இப்போது 'வெஞ்சமரின் வரிகள்' என்ற பெயரில் 2002 இல் ஒரு இசைப்பேழையை உருவாக்கி வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இம்முயற்சிகள் விடுதலைப் போராட்டத்தில் பெண்போராளிகளின் தீவிர ஈடுபாட்டையும், பங்களிப்பையும் ஆர்வத்தையும் புலப்படுத்துகின்றன.

இனி, 'வெஞ்சமரின் வரிகள்' இசைப்பேழைபற்றி ரசனைத்தளத்தில் எழுந்த சில கருத்துக்களை சுருக்கமாக முன்வைக்கலாம். மாலதி படையணி, போராட்டப் பாதையில் எதிர்கொண்ட சவால்களையும், அனுபவங்களையும், சாதனைகளையும் 'வெஞ்சமரின் வரிகள்' இசைப்பேழைவாயிலாக பதிவு செய்யும் முயற்சியில் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இசைப்பேழையினது 1ஆவது பாடலாக "மாலதி என்னும் எம் போரணி..." என்ற பாடல் உள்ளது. படையணிப் போராளிகள் படையணிபற்றிப் பாடுவதான பாடல் இது. 2ஆவது பாடலான "காவலரண் மீது காவலிருக்கின்ற..." என்ற பாடல் பெண் போராளியின் தகப்பன் அவளைப் பற்றிப் பெருமிதமாகப் பாடுவதாக அமைந்திருக்கிறது.

வரிகளுக்கேற்ப மெட்டும் இசையும் கையாளப்பட்டிருக்கிறது. 3ஆவது பாடலான "தென்றல் தீயாய் மாறும் காலம்..." என்ற பாடல் போராளிகள் தமது தலைவனின் கருத்துக்களை முன்வைத்துப் பாடும் பாடலாக வித்தியாசமான பாடல் எழுத்து முயற்சியாக இருக்கிறது. 4ஆவது பாடலான "மின்னல் இடி மழை கொண்டதோர்..." என்ற பாடல் புரட்சிப் பெண் எனும் படிமத்தை அதன் பரிமானங்களைச் சுட்டும் பாடலாகத் தோன்றுகிறது.

இசைப்பேழையினது 5ஆவது பாடலான "தோளின் சுமைகளில் பங்கேற்று..." என்ற பாடல் பெண் போராளிகளின் போராட்டப் பங்களிப்பை வெளிப்படுத்தி பெருமிதமாக ஆண் போராளிகள் பாடும் பாடலாக அமைந்துள்ளது. பொருத்தமான மெட்டும் இசையும் கையாளப்பட்டிருக்கிறது.6ஆவது பாடலான "கோப்பாய் வெளிக்காற்றில்..." என்ற பாடல் மாலதி பற்றியும் மாலதி படையணிபற்றியும் பெண்போராளி பாடுவதாக அமைந்துள்ளது. 7ஆவது பாடலான "இருளின் திசைகள் புலரும் வரையும்..." என்ற பாடல் மாலதி படையணியின் எழுச்சிப்பாடலாக அமைந்துள்ளது. வீறார்ந்த மெட்டும், இசையும் பொருத்தமாகக் கையாளப்பட்டிருக்கின்றன. பாடும்குரல் ஆண்குரலாக அமைந்திருப்பது பொருத்தமற்றுத் தெரிகிறது. பெண்கள் படையணியின் எழுச்சிப்பாடலுக்கு பெண்குரலே அதிகம் பொருத்தமாய் இருந்திருக்கும். 8ஆவது பாடலான "கல்லறைகள் உங்களுக்காய்..." என்ற பாடல் வீரச்சாவடைந்த போராளிகளுக்கானதாய் அவர்களின் உயர்வை, தியாகத்தைப் பதிவு செய்வதாக அமைந்திருக்கிறது. வரிகளுக்கேற்ற அமைதியான மெட்டும், இசையும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 9ஆவது பாடலான "வெல்லும் தலைவன் விழியில்..." என்ற பாடல் மாலதி படையணிப் போராளிகள் பாடுவதாக உள்ளது. இதன் மெட்டு கர்நாடக சங்கீத பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. மெட்டு நல்லதாகவே உள்ளது. ஆனால் பாடல் வரிகளின் உணர்வுகளுக்குப் பொருந்தாமல் ஒத்திசையாமல் நர்த்தகிப்பதாகவே படுகிறது.

பெருமளவு நிறைவாக பாடல்களுக்கேற்ற மெட்டும், இசையும், குரலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவே உணர முடிகிறது. சில பாடகர்கள் பாடும்போது குரலில் அநாவசியமான பாவங்களைக் காட்டுகிறார்கள் போலிருக்கிறது.'வெஞ்சமரின் வரிகள்' இசைப்பேழையை முழுதாகக் கேட்டு முடித்ததும் நல்ல பாடகர்களும், பாடலாசிரியர்களும், இசைக்கலைஞர்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை கொள்ள முடிகிறது.

சில பாடல்களின் வரிகள் உணர்வு பூர்வமானவையாகவும் கவித்துவமாகவும் அமைந்திருக்கின்றன. சில பாடல்கள் ஒத்திசையாத வரிகளாலும் வலிந்து புகுந்த வார்த்தைகளாலும் இடறுப்படுவதாகத் தோன்றுகிறது. மெட்டமைப்பிலும் இசையிலும் சில சறுக்கல்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பாடல்களின் இசைக்கோர்ப்பில் இசையமைப்பாளரின் திறமை பளிச்சிடுகிறது.

ஒவ்வொரு பாடல்களுக்கும் இடையில் உள்ள இடை வெளிகளில் பாடலாசிரியர், பாடியோர், இசைக்கலைஞர்கள் ஆகியோரது விபரங்களைச் சேர்த்திருக்கலாம். இப்படிச் செய்வதனூடாக அவர்களது பங்களிப்பை கௌரவிக்க முடியும். அவர்களது பங்களிப்பும் முயற்சியும் பொருத்தமாகவும் சரியாகவும் பதிவு செய்யப்படவேண்டியது அவசியம். இல்லையேல் எந்தப் பாடலை யார் எழுதினார் அல்லது பாடினார் என்று தெரியாமலேயே போய்விடும். இசைப்பேழையின் இறுதியில் பொதுவாகப் பெயர் விபரங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றனவெனினும் தனித்தனியாக இனங்காட்டப்படவில்லை. இந்த இனங்காட்டலை இனிமேலாவது இசைப்பேழைகளை உருவாக்குவோர் செய்வது நல்லது.

இந்தியாவில் திரைப்படங்களிலேயே அதிக இசைப்பாடல்கள் வருகின்றன. திரைப்பாடல்களுக்கு அப்பால் இசைப்பாடல்கள், இசைக்கோலங்கள் 'அல்பங்களாகவும்' வெளிவருகின்றன. அவை பெருமளவுக்கு வெகுசன ஆதரவினையும் பெறுகின்றன.

ஈழத்தமிழரின் இசைப்பாடல்களும், இசைக்கோலங்களும் அதிக அளவில் 'அல்பங்கள்' ஆக்கப்பட்டு வெகுசனங்களிடையே எடுத்துச் செல்லப்பட வேண்டும். அவற்றை மேலைநாடுகளிலோ இந்தியாவிலோ அவ்வப்போது நிகழ்த்தப்படும் இசை அபத்தங்களுக்கு மாற்றாக ஆற்றுப்படுத்த வேண்டும்.

இசைப்பாடல் என்பது ஒரு கூட்டுக்கலை. பாடகரின் குரல் வளமும், இசையமைப்பாளரின் மெட்டும், இசையும், பாடலாசிரியரின் வரிகளும் ஒத்திசைந்து வளரும்போதுதான் ஒரு நல்ல இசைபாடல் கிடைக்கிறது. இசைப்பாடலின் வெவ்வேறு கூறுகளில் ஈடுபடுவோரது தேர்ச்சியும், பிரக்ஞையும் ஆழமாகும்போது விநோதமான, வினைத்திறன்மிக்க, வித்தியாசமான ஒத்திசைவுகள் நிகழும், நவீன இசைவழி நீளும்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

வெல்லும் வரை செல்வோம்

 

 

 

வெல்லும் வரை செல்வோம்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

வெற்றி நிச்சயம்

 

 

 

வெற்றி நிச்சயம்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

வெற்றி நிச்சயம் - 1

 

 

https://songs.tamilmurasam.com/norway-3/

 

வெற்றி நிச்சயம்.jpeg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

வெற்றி நிச்சயம் - 2

 

 

 

verri nichchayam 2.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

வெற்றிக் காற்று

 

 

 

 

 

verrik kaaru.jpg

 

verri kaarru.jpeg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

வெற்றிமுரசு

 

 

 

வெற்றிமுரசு.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

வேங்கைகளின் விடுதலை வேதங்கள்

 

 

இது தமிழீழத்திலிருந்து வெளியான இரண்டாவது வெளியீடாகும். இதற்கு எழுதப்பட்ட ஓர் பாடலில் தலைவர் விரும்பியது போல சில வரிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மாவீரர் துயிலமில்லத்தில் பாடுவதற்கான "துயிலுமில்லப் பாடலாக" வெளிவந்தது.

இந்த இறுவெட்டின் மேல் 2009இற்குப் பிறகு நடைமுறையரசின் "புலிகளின் குரல்" நிறுவனத்தின் பெயரால் வணிகம் செய்யும் இவ் வலைத்தளம் தன்னிடம் கிடைக்கப்பெற்ற இவ்விறுவட்டினை நாசமாக்கியுள்ளது; இதனது அட்டையின் மேல் தன் நிறுவனத்தின் முத்திரையை பொறித்தது மட்டுமின்றி, ஒவ்வொரு பாடல்களிற்கும் நடுவில் 'www.pulikalinkural.com' என்ற ஒலியை ஒலிக்கவிட்டு அப்பாடல்களை உடனடியாக மீளப் பாவிக்கேலாத நிலமைக்கு ஆக்கியுள்ளது. இருப்பினும் அவ்வொலியை நீக்க இயலும்.  

இந்து போன்ற புலி வியாபாரிகளால் தான் எம்மினம் இன்று இந்நிலைக்கு ஆளாகியுள்ளது.

 

வேங்கைகளின் விடுதலை வேதங்கள்.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

வேரில் விழுந்த மழை

 

 

 

வேரில் விழுந்த மழை.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

வேர் விடும் வீரம்/ வல்லமை தரும் மாவீரம்

 

 

இவ்விரு பெயரிலும் வெளிவந்த இறுவட்டிலிருந்த பல பாடல்கள் தான் புலிகளால் இறுதியாக இசையமைக்கப்பட்ட பாடல்களாகும். அவை முறையாக ஒரு இறுவட்டாக்கப்பட்டு தகுந்த வெளியீட்டு நிகழ்வினூடு வெளியிடப்பட முன்னரே இறுதிப் போரின் கடைசிக் கட்டம் நடந்தமையால் அவை புலிகளால் வெளியிடப்படவில்லை. எம்மவர்களின் அழிவிற்குப் பின்னர் - தமிழீழ ஆதரவாளர்களால் இப்பாடல்கள் மீட்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர், அவை வெளிநாட்டிற்கு கொண்டுவரப்பட்டு இங்கிருந்து இரு பெயர்களில் வெளியாகின. இதற்குள் உள்ள "கண்ணுக்குள்ளே வைத்துக் காத்திடும் வீரரை" என்ற பாடல் 2009இற்கு முன்னரே புலிகளால் தனிப்பாடலாக வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

இவை தமிழீழ நடைமுறையரசின் நேரடி அலுவல்சார் வெளியீடுகள் இல்லாமையாலும் இவ்விறுவட்டுகளின் பெயர்கள் தமிழீழ நடைமுறையரசால் வழங்கப்படமாயாலும் நான் இவற்றின் அட்டைகளை இங்கே இணைக்கவில்லை.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

ஜீவ கானங்கள்

 

 

கீழுள்ளதே மூல அட்டையாகும். இதைத் தவிர வணிக நோக்கிலான அட்டைகளும் இதற்குண்டு.

jeeva kaanagkal.jpeg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இறுவட்டு அட்டைகள்

ஜீவ ராகங்கள்

 

 

 

மூல அட்டை:

jeevarakangkal's first album cover.png

 

 

இரண்டாவது அட்டை:

ஜீவ ராகங்கள்.jpg

 

 

 

 

"ஜீவ ராகங்கள்" - ஒரு கலாவதானியின் விமர்சனப் பார்வை

 

திறனாய்வு: 
மூலம்: எரிமலை ஜனவரி 1991
பக்கம்: 21-23

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் கலாச்சாரப் பிரிவின் பிரெஞ்சுக் கிளையினரால் வெளியிடப்பட்ட ஜீவராகங்கள் பாடல் ஒலியிழை நாடா பற்றிய விமர்சனம்.

ஜீவராகங்கள் ஜீவனுடைய ராகமேதான்! பொழுது சாயும் நேரம், கடற்கரையில் போராளிகள் எதிரியை முறியடிக்க அவனின் வரவு நோக்கிக் காத்திருக்கின்றார்கள். பாதுகாப்பு உறையில் தோன்றுகின்ற காட்சியே முதலில் எம் கண்களில் ஒரு கவிதை எழுதுகின்றது.

துயர்படவும், துடித்து மாளவும், அடிபடவும், குண்டு துளைத்தோர் கோரம் காணவும், அழுது துயர் தோய்ந்து சாகவுமோ மனிதன் பிறந்தான்! எம்மை ஒத்த ஜீவன்கள், எம் வாழ்வுக்காய் போராடுவதையும், மண்ணை மீட்கப் போரில் சாவதையும், அந்நிய தேசத்தில் நாம் அகதிகளாய் துயருறுவதையும், மண்ணுக்காய் ஆற்ற எமக்கு கடமை ஒன்றிருப்பதையும் நினைவூட்டுவதாய் பாடல்கள் அமைந்துள்ளன.

ஏக்கங்களையும், நம்பிக்கைகளையும் சுமந்துகொண்டு புதியதொரு உலகத்திற்குச் செல்லும் உணர்வு, பாடல்களைக் கேட்கும் போது ஏற்படுகின்றது. அம் மனயாத்திரை எம்மையறியாமல் இயல்பாகவே நடைபெறுகின்றது. இதிலுள்ள பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போம். "கண்ணோடு ஒரு கனவு" என்று தொடங்குகின்ற பாடலில் "செம்புழுதித் தரைகளெல்லாம் செந்நீர் குளிக்கிறதே" என்று ஒலிக்கின்ற பாடல்வரி புழுதி அளைந்து ஓடி ஆடிய தரைகளில் இன்று ஒரு விடுதலைப் போர் நடக்கின்றது என்பதைக் காட்டி நிற்கின்றது. அதே பாடலில் "செந்தமிழ் மண் நிலை எண்ண கண்ணோரம் கரைகிறதே!" என்று வருகின்றது. தாய்மண் பிரிவின் வலியை நொந்து அனுபவிக்கின்றார் அக் கவிஞர். கேட்கிற எம் கண்களை குளமாக்குகிறது அக் கவிதை.

"எங்கள் தேசம் எங்களுக்கே உரிமை" என்ற பாடல் எமது தேச விடுதலைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்; அதற்காகப் பாடுபட வேண்டும் என கவிஞர் வலியுறுத்துகிறார். விடுதலை என்பது பெற்றுத் தருவதல்ல; போராடி இரத்தம் சிந்திப் பெறுவது என்பதை வலியுறுத்தும் வகையில் இப்பாடல் அமைகிறது.

"மனிதன் என்றொருவன் அடிமையாகலாமா?" என்ற பாடலில் வரும் "அடிமை நிலை இதுவேண்டாம்; என்றும் சுதந்திரம் சுதந்திரம்" என்ற வரிகள் ஒரு தந்தையார் தன் குழந்தைக்கு சொல்வது போல் ஒலிக்கின்றன.

"புதிய சரிதம் எழுதவே" என்று தொடங்குகிற பாடலைப் பார்ப்போம். இந்திய இராணுவம் 1987 ல் எமது தேசியத் தலைவரை நயமாக அழைத்துச் சென்று பின்னர் அசோகா ஹொட்டலில் சிறைவைத்திருந்த போது மக்கள் நாட்டில் திரண்டெழுந்தார்கள். இந்திய இராணுவத்தை மறியல் செய்தார்கள். தலைவரை விடும்படி போராடினார்கள். இந்த நிதர்சனத்தைக் கவிஞன் தன் பார்வையில் மிக நேர்த்தியாக எளிமையாகப் பாடுகிறான்.

"காவலனைக் காக்கும் மக்கள் மலைகளல்லவோ!

மாமனிதன் பிரபா ஈழத்தலைவனல்லவோ!

பெரும் புயலை சிறையில் பூட்டி அடைக்க முடியுமா?"

தெம்மாங்கு இசைத் தன்மையில் பாடப்படும் "உலகமெங்கும் வாழும் தமிழர்களே" என்ற பாடல் உலகத் தமிழர்களின் கடமை எது என்று வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது.

மேலும் அந்தப் பாடலில் "எங்கள் பலம் நம்பித்தானே எம் இளைஞர் களம் போனார்" என்று கவிஞர் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். நாங்கள் எமது போராட்டத்தை உலக நாடுகளை நம்பித் தொடங்கவில்லை. எம் உரிமையை வென்றெடுக்க நாம் தான் போராட வேண்டும். தூங்கிக் கிடக்கும் எம் சகோதரர்களுக்கு உரிமையோடு கவிஞர் உரைக்கிறார். "கொள்கைகள் சமத்துவம் அத்தனையும் செயற்படுமே".

அந்தக் கவிஞனின் எதிர்பார்ப்பின் சிறப்பம்சமாகவும், உறுதியோடும், நம்பிக்கையோடும் உச்சாடனமாகிறது அப்பாடல் வரி.

"ஏன் இந்த மௌனமோ?" என்று தொடங்குகிற பாடலில் "அன்பே" எனப் போராளியை விளித்து, "நீ மகிழ்வான தூக்கம் கொள்கிறாயா?" எனக் கேட்டு நிற்கிற போது அத்துணை நெருக்கம், ஐக்கியமான உறவு விடுதலைப் புலிகளுக்கும் மக்களுக்கும் இடையே நிலவுவதைக் காட்டி நிற்கிறது.

"நாம் பிறந்த நமது மண் எங்களதே" என்ற பாடலில் எமது மண்ணில் எம்மை யார் அடிமைப்படுத்துவது? காற்று, வானம், பூமி யாவும் மக்களுக்கே என்று மார்புதட்டி வீரமாய் முழக்கமிடுகிறார்.

மனித நேயம், விடுதலை, வீரம், தாய்மண் என்ற பொருள்களில் எழுதப்பட்ட பாடல்கள் என்றும் சிறப்பானவையே.

அடுத்து இசை தொடர்பாகப் பார்ப்போமாகில் நல்ல இசையொன்றை கேட்கின்ற திருப்தியிருக்கிறது. ஈழத்து இசைத்துறையில் முன்னேற்றகரமான ஒரு பாய்ச்சலை இசை அமைப்பாளர் செய்திருக்கிறார்.

"தொலைந்த வாழ்க்கையை எண்ணித் தங்கை கண்ணீர் வடிக்கிறாள்" இங்கே பாடகர் அத்துணை துயரோடு பாடுகிறார். அத்தனை வாத்திய கலைஞர்களின் விரல்களும் சோக நெருடல் கொள்கின்றன.

மேற்கத்தைய இசைக் கருவிகளை மிக நுட்பமாக கீழத்தேய இசை வாத்தியங்களின் இசைக்கு இணையாக வாசிக்கச் செய்திருக்கிறார்கள். இதனால் இயல்பான மண்ணில் உறவுகளில் இருந்து விலகி சற்று ஆடம்பரமாக அமைந்திருக்கிறது. ஜீவராகங்கள் ஒலி இழை நாடாவில் உள்ள பாடல்களை நாம் இசைத் தன்மையில் தரம்பிரித்துப் பார்க்கையில், கர்நாடக இசைத்தன்மையோடு "ஏன் இந்த மௌனமோ" என்ற பாடலும், தெம்மாங்குப் பாடல் இசைத்தன்மையோடு "உலகமெங்கும் வாழும் தமிழர்களே" என்ற பாடலும், போர்ப்பாடல் இசைத்தன்மையோடு "நாம் பிறந்த நமது மண் எங்களதே", "எங்கள் தேசம் எங்களுக்கே உரிமை" என்ற இரு பாடல்களும், மெல்லிசைப் பாடல்களாக ஏனையவையும் விளங்குகின்றன.

பாடல்களின் இடையே அமையும் இசை (INTERLUDE) பாடலின் கருத்தை வலியுறுத்துவதைப் போல் அமைந்திருக்கின்றது. பாடல்களின் வரியை ஆமோதிப்பது போலவும், அடுத்து என்னவென்று வினாவுவது போலவும், தேவையான இடங்களில் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. இடை இசையை திறம்பட உய்த்து அனுபவித்து இசையமைப்பாளர் இசை அமைத்துள்ளார்.

பாடல்கள் சோகமாகப் பாடும் போதும் சரி, வீரமாகப் பாடும் போதும் சரி பாடல்கள் வெளிப்படுத்துகின்ற உணர்ச்சியோடு இடை இசை ஒத்துழைத்து நிற்கிறது. கேட்போர் உள்ளங்களில் பாடல் தாங்கியிருக்கின்ற கருத்தை அல்லது செய்தியை பதிய வைப்பதற்கு இசை உதவி உள்ளது.

"கள்ளுக் கொட்டில் பக்கம் போகாதே

காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன்"

என்ற ஈழத்துப் பாடல் நல்ல கருத்தைக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கு இசையமைப்பாளர் இசை அமைத்திருக்கின்ற தன்மை அப்பாடலை கள்ளுக் குடித்தவன் ஆட்டம் போட உவப்பாய் அமைத்துவிட்டிருக்கிறது. எனவே பாடல்கள் நல்ல பொருத்தமான இசையோடு இழைந்து வரும்போதே அது தாங்கி வருகின்ற விடயத்தை நேர்த்தியாக கேட்போர் மனதில் உறைய வைக்கும்.

"நாம் பிறந்த நமது மண் எங்களதே" எனத் தொடங்குகிற பாடல் மண்மணத்தை உணர்த்துவதாய் இசையில் வர்ணங்களைச் சேர்த்துள்ளார் இசையமைப்பாளர். எனினும் அப்பாடல் முழுநிறைவோடு போர் ஆக்ரோஷ வெளிப்பாட்டைத் தந்துவிடவில்லை.

திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதைப் படம்பிடிப்பது போல் எழுதப்பட்ட பாடலுக்கு உயிர்ப்பூட்டல் போல் இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். "ஏன் இந்த மௌனமோ அன்பே ஆனந்த சயனமோ" என்ற பாடலில் "திலீபனே!" என்கிற போது மக்களுக்காக வாழ்ந்து எரிந்து கொண்டிருக்கின்ற தீபத்தின் அசைவு தெரிகின்றது. அந்த இதயத்தின் ஒலிப்பும் கேட்கிறது.

"ஒரு தோழன் வயற்காட்டில் பிணமாகலாம்" என்ற பாடல் வரியைப் பாடுபவர்களும் சரி, இசைக்கலைஞர்களும் சரி அப்படியே ஒரு கணம் மௌனித்துப் போனார்கள். பிரபஞ்சம் கூட ஒரு கணம் நின்று போனதாக இசையமைப்பாளர் உணர வைத்து விடுகிறார். இப்படி சில பாடல்களில் இசையமைப்பின் சிறப்பையும், விசேட தன்மைகளையும் நாம் காணலாம்.

நன்றாக பயின்ற குரல்வளம் மிக்கவர்கள் பாடல்களை உணர்ச்சியோடு பாடியிருக்கிறார்கள். சொற்கள் விளங்க உச்சரிக்கப்பட்டுள்ளன.

பாடல்களை மெல்லிதாக ஒலிக்கவிட்டுக் கேட்கும் போது இசையில் சில இடங்களில் சமனிலையின்மை காணப்படுகின்றது. இப்படி சில குறைகளைக் கொண்டிருந்தாலும் ஜீவராகங்கள் காயம் பட்டுப் போன ஏராளமான ஜீவன்களின் இதய நரம்புகளை மீட்ட வல்லது. தாய் மண்ணின் பிரிவின் வலியை சதா தனித்து உணர்ந்தவர்கள் கூடியிருந்து உள்ளம் குமுறவும், உறுதி பெற்றெழுந்து வாழ்வை மீட்கவும் வழிகாட்டும்.

இதே போன்று மண்ணின் விடுதலை வேண்டி ஏராளமான பாடல்கள் எழ வேண்டும்.

விடுதலையை வென்றெடுக்க கலையும் இலக்கியமும் கூட ஒரு ஆயுதமாக திகழ்கின்றது என்பதை மனதில் கொண்டு அழுத்தம் கொடுத்து செயற்பட முன்வாருங்கள்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

 

இறுவட்டுக்களுக்கான அட்டைகளின் படிமங்கள் பதிவிடல் முடிவடைகிறது.

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பிரியமான தோழிக்கு [நண்பிக்கு]"     இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரத்தில், வெள்ளவத்தை என்ற குட்டி யாழ்ப்பாணத்தில், இனியா மற்றும் ஓவியா என்ற இரண்டு நெருங்கிய நண்பிகள் வாழ்ந்தனர். அவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே பிரிக்க முடியாதவர்களாக பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தனர், சிறு குழந்தை பருவத்தில் ஒன்றாக விளையாடியும், பின் ஆரம்ப பாடசாலையிலும் உயர் பாடசாலையிலும் ஒன்றாக கற்றனர். அவர்கள் இருவரும் தங்களுக்குள் உள்ள ஒவ்வொரு ரகசியத்தையும், கனவுகளையும், சாகசங்களையும் ஒன்றாக ஒளிவு மறைவு இன்றி பகிர்ந்து கொண்டனர். அவர்களின் பிணைப்பு பிரிக்க முடியாதது, அவர்கள் வெள்ளவத்தையின் இரட்டையர் என்று கூறும் அளவுக்கு அங்கு பிரபலமாக இருந்தனர்.   பறவைக்கு கூடு, மாட்டுக்குத் தொழுவம், சிலந்திக்கு வலை, மனிதனுக்கு நட்பு. அது இதயங்கள் இரண்டும் கலந்த ஆழமான உறவு! இயற்கைக் காற்று எந்த தடையும் இன்று சுவாசிக்கலாம். தாய் பிள்ளை, கணவன் மனைவி என்ற உறவுகளுக்கு ஈடாக கருதப்படும் மற்றும் ஒரு உறவு தான் நட்பு அல்லது நண்பர்கள். அதற்கு இந்த இனியாவும் ஓவியாவும் நல்லதொரு சான்றாகும். "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு" என்கிறார் வள்ளுவர். சங்ககாலம் முதல் இன்று வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள் ஆகும். நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய பாக்கியம் ஆகும். அந்த பாக்கியம் கொண்டவர்கள் தான் இந்த இனியா ஓவியா என்றால் மிகையாகாது!   இனியா ஒரு கலகலப்பான மற்றும் உற்சாகமான பெண்ணாக, மற்றவர்களையும் சிரிக்க வைக்கும் புன்னகையையும் கொண்டு இருந்தார், அதே நேரத்தில் ஓவியா கனிவான இதயத்துடன் அமைதியான இருப்பைக் கொண்டிருந்தார். அவர்கள் எப்போதும் துன்பத்திலும் இன்பத்திலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர், தங்கள் தங்கள் முயற்சிகளில், படிப்புகளில் ஒருவரையொருவர் ஆதரித்ததுடன் தேவைப்படும் போதெல்லாம் ஒருவருக்கு ஒருவர் உதவியும் செய்தனர்.   “கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாகும் நட்பாரும் இல்” (நாலடியார் 215)   கொம்பிலே பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் உதிரும் வரை குவியாதிருத்தல் போல, முதல் நாள் உள்ளம் மகிழ்ந்து விரும்பியது போலவே முடிவு வரையில் மகிழ்ந்து விரும்பியிருப்பது நட்புடைமையாகும்” என்று நட்பின் பெருமையின் படி இனியா ஓவியா வெள்ளவத்தையை கலக்கிய இரு அழகிய மலர்கள் என்று கூட கூறலாம். இந்த அவர்களின் நட்பு, இனம், மதம், சமயம், மொழி, நாடு என்ற எல்லாத் தடைகளையும் தாண்டி உள்ளப்புணர்ச்சி கொண்டு பழகும் உறவாகும்.   ஒரு வெயில் நாளில், அவர்கள் தங்களுக்குப் பிடித்த வெள்ளவத்தை கடற்கரை ஓரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தின் நிழலின் கீழ் அமர்ந்திருந்தபோது, ஓவியாவின் கண்களில் ஒரு மின்னல் ஏற்பட்டது போல, இனியா சடுதியாக எதோ ஒன்றை தன் கைப்பையில் இருந்து எடுத்து திரும்பினார். அழகாகச் சுற்றப்பட்ட அந்த பொட்டலத்தை தன் இரு கைகளாலும் பிடித்து "அன்புள்ள பிரியமான தோழிக்கு, ஓவியாவுக்கு," என்று ஒரு ஒளிரும் புன்னகையுடன், ஓவியாவிடம் கொடுத்தாள்.   கவனமாகப் பொட்டலத்தைப் பிரித்த ஓவியாவின் கண்களில் ஆர்வம் மிளிர்ந்தது. ஆனால் உள்ளே, அவள் ஒரு குறிப்பு புத்தகத்தை மட்டுமே கண்டாள், அதன் பக்கங்கள் காலியாகவும், ஒன்றும் எழுதாமலும் இருந்தன. அது அவளை ஆச்சிரியத்திலும் அதே நேரம் வெறும் தாள்களைக் கொண்ட பரிசைக் கண்டு ஓவியாவின் மனம் வெதும்பியது.   இனியா ஓவியா வெதும்பியது கண்டதும், தன் பரிசுவின் நோக்கம் என்ன என்று உடனடியாக விளக்கினார், "இந்தப் குறிப்பு புத்தகம் சாதாரணப் தாள்கள் அல்ல, என் பிரியமான தோழியே. இது நமது கனவுகள், அபிலாஷைகள் மற்றும் சாகசங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு புத்தகம். நமது ஆழ்ந்த எண்ணங்கள் மற்றும் நேசத்துக்குரிய நினைவுகளைப் படம்பிடித்து ஒருவருக்கொருவர் எழுதுவோம். அது எங்கள் நட்பின் பொக்கிஷம் என்றும் இருக்கும்" என்று கூறி முடித்தாள்.   "இந்த நட்பை நாங்கள் முறிக்க மாட்டோம் என் வலிமையே உடைந்தாலும் உன் நட்பை உடையவிட மாட்டேன் என்னுடைய வெற்றி உன்னுடைய வெற்றி உன் தோல்வி என்னுடைய தோல்வி கேள் இதை என் நண்பனே உன் துக்கம் என் துக்கம் என் உயிர் உன் உயிர் (போன்றது) அப்படிப்பட்டது நம்முடைய நட்பு உயிருடன்கூட விளையாடுவேன் உனக்காக எதிர்கொள்வேன் உலகத்தின் அனைத்து எதிர்ப்பையும் மற்றவர்களுக்கு நாம் இருவராகத் தோன்றலாம் ஆனால் நாம் இருவர் அல்ல நமக்குள் பிரிவோ சினமோ இல்லை" [படம் தளபதி. பாடல் வரிகள் வாலி.]   அதை கேட்டு மகிழ்ச்சியில் மூழ்கிய ஓவியா, இனியாவை இறுகத் தழுவினாள். அவர்கள் இருவரும் தம் நேரத்தை வீணடிக்கவில்லை, உடனடியாக குறிப்பு புத்தகத்தின் வெற்று பக்கங்களில் தங்கள் இதயங்களை பிழிந்து எடுத்து ஊற்றத் தொடங்கினர். உலகத்தை ஆராய்வது, நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவது மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்துவது போன்ற அவர்களின் கனவுகளைப் பற்றி அவர்கள் இருவரும் மாறி மாறி எழுதினார்கள்.   காலப்போக்கில், இருவரும் தம் தம் பெற்றோர்களின் ஏற்பாட்டில் திருமணம் செய்து, ஓவியா தன் கணவருடன் லண்டன் நிரந்தரமாக போய்விட்டார். ஆனால் இனியா வெள்ளவத்தையிலேயே தங்கி, அங்கேயே வேறு ஒரு வீட்டில் தன் கணவருடன் தனிக்குடித்தனம் போய்விட்டார். என்றாலும் ஓவியா லண்டனுக்கு போகமுன்பு, முன்னையது போலவே, ஒரு குறிப்பு புத்தகம் வாங்கி, இனியாவுக்கு கொடுத்து விட்டுத்தான் போனார். அதில் இனியா தொடரவேண்டும் என்ற வேண்டுகோளுடன்.   இப்ப ஓவியா லண்டனில் இருந்தாலும் , அந்த குறிப்பு புத்தகம் அவளின் நிலையான இன்னும் ஒரு துணையாக மாறியது. இனியாவும் ஓவியாவும் தம் தம் குறிப்பு புத்தகங்களில் வெற்றிகள், சவால்கள் மற்றும் இடையில் அனுபவித்த, கண்ட அனைத்தையும் சிரிப்பு மற்றும் கண்ணீரின் மூலம் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் உடல் ரீதியாக இப்ப பிரிந்திருந்தாலும் அவர்களை இணைக்கும் எழுத்து வார்த்தைகளில் ஆறுதல் கண்டனர்.   ஆண்டுகள் பறந்தன, இரண்டு நண்பர்களும் வயதாகினர். அவர்களின் கனவுகள் மற்றும் பொறுப்புகளைத் தொடர வாழ்க்கை அவர்களை தனி பாதையில் அழைத்துச் சென்றது. ஆயினும்கூட, அவர்கள் உருவாக்கிய பிணைப்பு பிரிக்க முடியாததாக இருந்தது, நேசத்துக்குரிய குறிப்பு புத்தக தாள்களால் அது தொடர்ந்து தொகுக்கப் பட்டுக் கொண்டே இருந்தது.   ஒரு நாள், ஓவியா பழைய சாமான்களுக்கு மத்தியில் மறைத்து வைத்திருந்த குறிப்பு புத்தகத்தின் தாள்களில் தடுமாறினாள். அவளுக்கு நினைவுகள் வெள்ளமாகத் திரும்பியது, அவள் இனியாவை எவ்வளவு தவறவிட்டாள் என்பதை உணர்ந்தாள். தன் அன்பான தோழியுடன் மீண்டும் ஒரு முறையாவது இணைய வேண்டும் என்று முடிவு செய்தாள்.   நடுங்கும் கைகளுடன் ஓவியா, இனியாவுக்கு ஒரு இதயப்பூர்வமான கடிதத்தை வரைந்தார். அவளுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பழக்கமான அந்த தாள்களில் கொட்டினாள். தனது வெற்றிகள் மற்றும் சவால்கள், தான் சந்தித்த மனிதர்கள் மற்றும் அவள் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் பற்றிய கதைகளைப் பக்கம் பக்கமாக வடித்தாள். அதை பிரதியெடுத்து "பிரியமான தோழிக்கு" என்ற தலைப்புடன் இ மெயில் இல் அணுப்பினாள்.   நாட்கள் வாரங்களாக மாறியது, ஓவியா பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தாள். பின்னர், ஒரு அழகிய மாலை பொழுது , மின்னஞ்சலில் இனியா விடமிருந்து ஒரு கடிதம் வந்தது. தன் அருமை தோழி எழுதிய வார்த்தைகளை படித்த சாராவின் கண்களில் கண்ணீர் பெருகியது. இனியா புற்றுநோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டு, எந்தநேரமும் தன் உலக வாழ்வை முடிக்கும் நிலையில் இருப்பதாய் அறிந்தாள்.   ஏக்கத்தால் துக்கத்தால் நிரப்பப்பட்ட ஓவியா மூன்று மாத லீவில், இனியாவுடன் மீண்டும் இணைய முடிவு செய்தாள். அவர்கள் இருவரும் அந்த பழைய வெள்ளவத்தையின் பெரிய மரத்தின் கீழ் அவர்களுக்கு பிடித்த இடத்தில் தொடர்ந்து சந்தித்தனர், அவர்கள் தாம் தாம் பகிர்ந்துகொண்ட , தம் பயணக் குறிப்புகளை ஆளுக்கு ஆள் நினைவுகூர்ந்தபோது அவர்களின் சிரிப்பு காற்றில் எதிரொலித்தது. கடலின் அலைகளின் ஓசையையும் அது வென்றது.   அந்த நாளிலிருந்து, இனியாவும் ஓவியாவும் தங்கள் நட்பை ஒரு முன்னுரிமையாக மாற்ற சபதம் செய்தனர், தூரம் அல்லது கடந்து செல்லும் ஆண்டுகள் எதுவாக இருந்தாலும் சரி. அவர்களின் அன்பு, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத நட்பின் அடையாளமாக இந்த குறிப்பு புத்தகம் என்றும் இருக்க வேண்டும் என்று இருவரும் நினைத்தனர்.   ஆனால், ஓவியா லண்டன் திரும்பி, ஒரு சில கிழமையில் "பிரியமான தோழிக்கு" என்ற குறிப்புடன் இனியாவின் குறிப்பு புத்தகம் தபால் மூலம் அவளுக்கு வந்தது. அதனுடன் இருந்த செய்தி அவளை அப்படியே அதிர செய்து விட்டது. இன்னும் சில ஆண்டுகள் ஆவது இனியா இருப்பாள் என்று நினைத்தவளுக்கு இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஓ .. அப்படியே கதறிவிட்டாள்.   பிரியமான, அன்பான தோழி, இந்த மண்ணை விட்டு போனாலும் அவர்களின் கதை மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • கவி அருணாசலம், நீங்கள்.. சுமந்திரனுக்கு வெள்ளை அடிப்பது எமக்கும் தெரிகின்றது. அது உங்களது தனிப்பட்ட விடயம். அதைப்பற்றி நானும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால்... தமிழரசுகட்சியின் முன்னணி அரசியல்வாதி எனப்படுபவர், தனது முதல் பத்திரிகையை சிங்களவராகிய சஜித்துக்கு கொடுத்து அறிமுகம் செய்தது பற்றியதுதான் இங்கு பேசு பொருள். முதல் பத்திரிகையை, முதலில் கொடுக்க ஒரு தமிழறிஞர் கூட கிடைக்கவில்லையா...? என்பதுதான் எமது ஆதங்கம். புரிந்தால் சரி.
    • நல்ல வரிகள். இதை வாசித்ததன் பின்னர் பாவை விளக்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காவியமா இல்லை ஓவியமா..’ பாடலை ஒருதரம் கேட்டுப் பார்த்தேன் என்னாளும் அழியாத நிலையிலே காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவதுண்மை காதலே காலம் மாறினும் தேகம் அழியினும் கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
    • பனை ஏறும் தொழிலை இவ்வளவு விளக்கமாக வேறு யாரும் எழுதி நான் வாசித்ததில்லை. மிக அழகாக எழுதியிருக்கிறார்  Dr.T. கோபிசங்கர். ஒரு தொழிலைப் பற்றி விளக்கமாகச் சொல்லும் அதே வேளையில் கதயையும் மனதில் உறைக்கும் வகையில் சொல்லி முடித்திருக்கிறார்.  👏    
    • இவரின் தந்தை குமார் பொன்னம்பலமாகட்டும் தாத்தா ஜி.ஜி. பொன்னம்பலமாகட்டும் மேடைக்கு மேடை உங்கள் ‘பொன்னான வாக்குகளை’ எங்களுக்கு அளியுங்கள் என்றுதான் கேட்டுக் கொண்டார்கள். வாக்குகளை பொன்னுக்கு நிகராக அன்று மதித்தார்கள். இன்று குப்பைகளாக்குகிறார்கள். மக்களின் வாக்குகள் குப்பைகளா? இல்லை அரசியல்வாதிகள் குப்பைகளா? என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.