Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்க சர்வதேசத்தின் மீது பயங்கரவாதப் பூச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-10-03

அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்க சர்வதேசத்தின் மீது பயங்கரவாதப் பூச்சு

"குற்றமுள்ள மனம் குறுகுறுக்கும்' அதனையே வெளிப்படுத்துகின்றது வெளிநாட்டுப் பிரமுகர்களின் இலங்கை விஜயம் தொடர் பான ஜே.வி.பியின் சீற்றம்.

ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதி களை இலங்கைக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். வந்தால் உண்மைகள் அம்பலமாகிவிடும். சிறுபான்மையினருக்கு எதிரான பேரினவாத அரசின் ஒடுக்குமுறை வெட்டவெளிச்சமாகி விடும் என்றெல்லாம் அஞ்சுகின்றது தென்னிலங்கை பௌத்த சிங்கள மேலாண்மை அதிகாரம்.

அதனால்தான் இந்த வெளிநாட்டுப் பிரமுகர்களின் விஜயங் களுக்கு எதிராகச் சீறுகிறது ஜே.வி.பி.

இலங்கைக்கு வந்து உண்மைகளை நேரில் கண்டறிந்து, சர்வ தேசப் பிரமுகர்கள் நிஜத்தை நிதர்சனத்தை அம்பலப்படுத்துவது ஜே.வி.பி. போன்ற தென்னிலங்கைப் பேரினவாத ஒடுக்கு முறை சக்திகளுக்கு வேம்பாய்க் கசக்கின்றது.

ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை உண்மைகளை அம் பலப்படுத்த முயல்வதால் அவை பிரிவினைவாதப் புலிகளின் கையாட்கள் அல்லது புலிகளின் நோக்கத்தை நிறைவு செய்யும் இலக்குடன் செயற்படும் சக்திகள் என்று அர்த்தம் கற்பிக்கின் றது முலாம் பூசுகின்றது ஜே.வி.பி.

இந்த சர்வதேச சக்திகள் இலங்கைத் தீவின் நற்பெயரை கீர்த்தியை கெடுக்கும் நோக்குடனேயே இலங்கைக்கு வருகின்றன என்றும் கூறியிருக்கின்றார் ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் பிரசாரச் செயலாளருமான விமல் வீரவன்ஸ.

ஐ.நா. அதிகாரிகள், தூதுவர்கள் இலங்கை வரவும், சுற்றிப் பார்க்க வும் அழைப்பு விடுத்து, வரவேற்று, அவர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுக்கின்றது அரசு. பின்னர் அவர்கள் நாட்டுக்கும் அரசுக்கும் எதிராக "அள்ளி வைக்கும்' அறிக்கைகளை வெளியிடும் போது அரசு முழிக்கின்றது. அவர்களை வரவிடுவான் ஏன், பின் வாங்கிக் கட்டுவான் ஏன் என்றும் ஜே.வி.பி. கேட்கிறது.

தனது நாட்டின் கள, யதார்த்த நிலைகளை நன்கு புரிந்த கட்சி ஜே.வி.பிதான். அதனால்தான் அக்கட்சியால்தான் தென்னிலங்கை மக்கள் மத்தியில் இலகுவாக இனவாதத்தை விதைத்து, குறுக்கு வழியில் தனது நாடாளுமன்றப் பலத்தை வளர்த்துக் கொள்ள முடிந்தது; முடிகின்றது.

அதேபோல, தனது நாட்டு அரச அதிகார பீடத்தின் ஒடுக்குமுறைப் போக்கை சிறுபான்மையினருக்கு எதிரான அடக்கு முறை களை நன்கு அக்கட்சி உணர்ந்து, நிதர்சனத்தைப் புரிந்து கொண்டிருப்பதால்தான், ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பொதுப் பிரதிநிதிகளை இலங்கைக்கு வர அனுமதித்து, இங்குள்ள பொட்டுக்கேடு அம்பலமாக இடமளிக்காதீர்கள் எனக் கூக்குரலிட்டுத் துடியாய்த்துடிக்கிறது.

"மடியில் கனமில்லையானால், வழியில் பயமில்லை' என் பார்கள். மோசமான மனித உரிமை மீறல்கள் உட்பட சிறுபான்மை யினருக்கு எதிரான கொடூர ஒடுக்குமுறைகளில் தென்னிலங்கையும், அதன் அரசியல் கட்டமைப்பும், அரச அதிகாரமும் ஈடுபட் டிருக்கவில்லையானால் அவற்றின் கை சுத்தமாக இருக்கு மானால் அவர்கள் சுத்தவாளிகள் என்றால் ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் உண்மைகளைக் கண்டறிய இலங்கைத் தீவுக்குள் நுழைவது குறித்து, அரசோ, தென்னிலங் கைத் தரப்போ குழம்பத் தேவையில்லையே.

அத்தோடு, பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாதிகளாகப் பட்டி யலிடப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளுக்காகத் தர்மத்துக் கும், நியாயத்துக்கும், தார்மீகத்துக்கும் அப்பால் போய் நின்று குரல் எழுப்பிச் செயற்படவேண்டிய எந்தத் தேவையும் அவ சியமும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கோ, சர்வதேச சமூகத்துக்கோ, ஐ.நாவுக்கோ கிடையாது.

ஆனால் அதேசமயம், தன்னை ஓர் இறைமையுள்ள சட்ட ரீதி யான அரசு என்று கூறிக்கொண்டு, மற்றொரு பூர்வீகத் தேசிய இனத்தின் சிறுபான்மை மக்களின் நியாயமான நீதியான அபிலாஷைகளை நசித்து, அடக்கி, ஒடுக்கி, அராஜகம் புரியும் பேரினவாத அரசு ஒன்றின் அட்டகாசங்களைப் பார்த்துக்கொண்டு சர்வதேச சமூகம், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை மட்டு மல்ல, தர்மம் நியாயம் புரிந்த எத்தரப்பும் கூட வாயடங்கி, சகித்திருக்க மாட்டாது.

அந்த நியாயத்தை நிதர்சனத்தை புரியாமல் பிதற்று கின்றது ஜே.வி.பி.

இலங்கைக்கு வரும் ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை, அவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு உதவும் நோக்கிலேயே இங்கு வருகின்றார்கள் என்று குற்றம் சுமத்தும் ஜே.வி.பிக்கும், ஐ.நாவின் அவசர மனிதநேயப் பணிகளுக்கான ஐ.நாவின் உதவிச் செயலாளரான ஜோன் ஹோம்ஸை "பயங் கரவாதி' எனச் சித்திரித்த அரசின் மூத்த அமைச்சரும் நாடாளுமன்றப் பிரதம கொறடாவுமான ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே யின் நிலைப்பாட்டுக்கும் இடையில் அதிக வேறுபாடுகள் இருப் பதாகத் தெரியவில்லை.

அரங்கேறும் அரச பயங்கரவாதம் அகிலம் எங்கும் அம்பலமாவதைத் தடுப்பதற்காகவே, சர்வதேசப் பிரதிநிதிகளுக்கு இப்படி "பயங்கரவாதிகளுடன் தொடர்பு' என்ற சாயம் பூசப்படுகின்றது.

""எங்கள் ஆட்சேபனையையும் மீறி ஒரு தடவை அலன் றொக்கை இலங்கை அரசு வரவேற்றது. அவர் இங்கு வந்து, பின் உலகம் முழுவதும் சென்று, அரசுப் படைகள் சிறுவர்களை யும் படைக்குச் சேர்க்கின்றன எனப் பிரசாரம் செய்தார். பின்னர் ஜோன் ஹோம்ஸ் வந்தார். தொண்டுப் பணியாளர்கள் பணி புரி வதற்கு உலகிலேயே மிக மோசமான இடம் இலங்கை என்று அவர் பிரசாரம் செய்தார். இலங்கையைத் துண்டாக்கும் தனது முயற்சிகளை சர்வதேச சமூகம் இன்னும் கைவிடவேயில்லை'' என்று பொருமுகின்றார் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ

அவருக்கு ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

""சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிரான அரச ஒடுக்கு முறைக் கொடூரமும், பேரினவாதப் பயங்கரவாதமும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் நிலைமை தொடருமானால், சர்வதேசம் இப்படி ஒவ்வொரு உண்மையாக வரிசையாக விடயங்களை வெளிக்கொணர்ந்தே தீரும். அது மட்டுமல்ல. இக்கொடூரங்கள் தொடரும்போது அடக்கப்படும் சிறுபான்மையினரான தமிழர்களின் பக்கத்து நியாயத்தை உணர்ந்து, இலங்கைத் தீவைத் துண்டாடித் தமிழர் தாயகத்தின் பிரிக்கவே முடியாத சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதே இவ்விவகாரத்தில் நியாயம் செய்வதற்கான ஒரே மாற்ற முடியாத மார்க்கம் என்ற நிலைக்கும் அது தள்ளப்படுவதும் தவிர்க்க முடியாததாகும்.

ஆகவே, இந்நிலைமை ஏற்படக் கூடாது என ஜே.வி.பி. உண் மையில் கருதுமானால், தென்னிலங்கை புரியும் கொடூரத்தை மறைத்து, சர்வதேச சமூகத்தைத் திட்டுவதை விட்டு விட்டு, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அவர்களின் நீதி நியாயமான அபிலாஷைகளின் அடிப்படையில் தீர்வு ஒன்றை வழங்குவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அது முன்வரவேண்டும். தவறின், சர்வதேச சமூகத்தின் மோசமான நெருக்குவாரத்தை ஜே.வி.பி. உள்ளிட்ட தென்னிலங்கை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.