Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரிதிகம பிரதேச செயலகப் பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்பட்ட அரிசியை பனகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் எடுத்துச் சென்று கோழிகளுக்கு உணவளித்துள்ளார். மேற்படி அரிசியை சாப்பிட்ட 7 கோழிகள் உயிரிழந்ததாக உரிமையாளர் சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கோழிகளின் இறப்பு தொடர்பில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் இறப்புக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை, எனவே உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும், பரிசோதனை அறிக்கையை பெறவும் உத்தரவு பெறப்பட்டதாக பொது சுகாதார மருத்துவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/301509

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரிசியை உட்கொண்ட கோழிகள் இறந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை - ஆஷு மாரசிங்க

Published By: DIGITAL DESK 7  16 MAY, 2024 | 05:27 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் நிவாரணமாக வழங்கிய அரிசியை உட்கொண்ட கோழிகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை குழப்புவதற்கு எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுவரும் பொய் பிரசாரமாகும் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை  (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு அரசாங்கம் நிவாரணமாக 10கிலாே அரிசி பகிர்ந்தளித்து வருகிறது. அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை குழப்ப ஆரம்பத்தில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அரசாங்கம் வழங்கிய அரிசியை உட்கொண்ட 7 கோழிகள்  இறந்துள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொய் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்து வருகின்றனர்.

அரசாங்கம் வழங்கிய அரிசியை உட்கொண்டதால்தான் குறித்த கோழிகள் இறந்துள்ளதாக தெரிவிக்க எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. பொது சுகாதார பரிசோதகர்களும் இதனை உறுதிப்படுத்த வில்லை. அவ்வாறான நிலையில் இப்படிப்பட்ட பாரிய குற்றச்சாட்டு தெரிவிப்பது தொடர்பில் விசாணை மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் இந்த குற்றச்சாட்டை தெரிவித்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை குழப்புவதற்காக யாராவது குறித்த அரிசியுடன் வேறு உணவுப்பொருட்களை கோழிகளுக்கு கொடுத்து, அவற்றை இறக்கச் செய்துள்ளதா என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால் இது தொடர்பாக விசாரணை நடத்தி அதன் உண்மை தன்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆனால் அரசாங்கம் பகிர்ந்தளித்த அரிசியை உட்கொண்ட கோழிகள் இவ்வாறு இறந்துள்ளதாக எந்த முறைப்பாடும கிடைக்கவில்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியில் இருக்கும் சிலரே இவ்வாறான பொய் குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றனர். இவர்கள் என்ன குற்றச்சாட்டுக்களை தெரிவித்தாலும் அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் நிவாரண வேலைத்திட்டங்களை நிறுத்தப்போவதில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/183694

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.