Jump to content

ஆஸ்திரேலியா: சுய சிகிச்சை மூலம் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்ட மருத்துவர் எப்படி இருக்கிறார்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தனது சொந்த ஆராய்ச்சி மூலமாக புற்றுநோயை வென்ற மருத்துவர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டிஃப்பனி டர்ன்புல்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோய்க்கு (Glioblastoma) கடந்த ஆண்டு தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சிகிச்சை முறையின் மூலம் சிகிச்சை பெற்ற உலகின் முதல் நபர், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர், மருத்துவர் ரிச்சர்ட் ஸ்கோலியர். ஓராண்டுக்குப் பிறகு இப்போது புற்றுநோயில் இருந்து விடுபட்டுள்ளார் ரிச்சர்ட்.

புகழ்பெற்ற மருத்துவரான ரிச்சர்ட் ஸ்கோலியரின் பரிசோதனை முறையிலான சிகிச்சை என்பது மெலனோமா (Melanoma) குறித்த அவரது சொந்த ஆராய்ச்சி அடிப்படையில் செய்யப்பட்டது.

ரிச்சர்ட் ஸ்கோலியரின் மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோய் மிகவும் தீவிரமான ஒரு நோய். அதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் ஓராண்டுக்கும் குறைவாகவே உயிர் வாழ்கின்றனர்.

சமீபத்திய எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம், 57 வயதான ஸ்கோலியர், தனது உடலில் புதிதாக எந்தப் புற்றுநோய்க் கட்டியும் உருவாகவில்லை என்பதைத் தெரிந்துகொண்டதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று (மே 21) அறிவித்தார்.

"உண்மையைச் சொல்வதானால், இந்த ஸ்கேன் எடுக்கும்போது நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

 

மெலனோமா குறித்த ஆராய்ச்சி

தனது சொந்த ஆராய்ச்சி மூலமாக புற்றுநோயை வென்ற மருத்துவர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேராசிரியர் ஸ்கோலியர் ஆஸ்திரேலிய நாட்டின் மிகவும் மதிக்கப்படும் ஒரு மருத்துவர். அவருக்கும் அவரது சக ஊழியரும் தோழியுமான ஜார்ஜினா லாங்குக்கும் இந்த ஆண்டின் சிறந்த ஆஸ்திரேலியர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இருவரும் இணைந்து செய்த மெலனோமா குறித்த ஆய்வை அங்கீகரிக்கும் வகையில் இது வழங்கப்பட்டது.

மெலனோமா இன்ஸ்டிடியூட் ஆஸ்திரேலியாவின் இணை இயக்குநர்களாக இருக்கும் இந்த இருவரும், கடந்த பத்து ஆண்டுகளாக நோயெதிர்ப்பியல் சிகிச்சை குறித்த ஆய்வைச் செய்து வந்தனர்.

புற்றுநோய் செல்களை தாக்க உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயன்படுத்தும் முறைதான் நோயெதிர்ப்பியல் சிகிச்சை. சர்வதேச அளவில் பல மெலனோமா நோயாளிகள் இதனால் பயனடைந்துள்ளனர்.

பேராசிரியர் ஸ்கோலியரின் புற்றுநோய்க்கும் ஒரு மருந்தைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில், அந்த ஆராய்ச்சியைத் தான் பேராசிரியர் லாங், மருத்துவர்கள் குழுவுடன் சேர்ந்து, ஸ்கோலியருக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தினார்.

பேராசிரியர் லாங், இந்த மெலனோமா துறையில் ஒரு புகழ்பெற்ற மருத்துவ புற்றுநோயியல் நிபுணராக விளங்குபவர். புற்றுநோய்க் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்கு முன்பு, குறிப்பிட்ட மருந்துகளின் கலவையைப் பயன்படுத்தினால், நோய் எதிர்ப்பு சிகிச்சை சிறப்பாகச் செயல்படும் என்பதை அவரது குழுவினர் கண்டறிந்தனர். எனவே கடந்த ஆண்டு இந்த முறையில் சிகிச்சை பெற்ற உலகின் முதல் மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோயாளி பேராசிரியர் ஸ்கோலியர்தான்.

 

சிறப்பு தடுப்பூசி

தனது சொந்த ஆராய்ச்சி மூலமாக புற்றுநோயை வென்ற மருத்துவர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவரது புற்றுநோய் கட்டியின் குணாதிசயங்களுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்ட சிறப்பு தடுப்பூசி ஒன்று அவருக்குப் போடப்பட்டது. இது மருந்துகளின் புற்றுநோயைக் கண்டறியும் சக்தியை அதிகரிக்கிறது.

அவர் ஆண்டின் தொடக்கத்தை, கடினமான இரண்டு மாத சிகிச்சையில் செலவழித்தார். வலிப்பு, கல்லீரல் பிரச்னைகள் மற்றும் நிமோனியாவை கையாள்வதில் அந்த இரண்டு மாதங்கள் சென்றன. இப்போதுதான் ஆரோக்கியமாக இருப்பதாக பேராசிரியர் ஸ்கோலியர் கூறுகிறார்.

அவர் தனது வழக்கமான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிவிட்டார். 'வழக்கமான' என்றால் 15 கிமீ (9.3 மைல்) ஓட்டப்பயிற்சி.

"நிச்சயமாக என்னுடைய மூளை நரம்பு உயிரணுப் புற்றுநோய் முழுவதும் குணமாகிவிட்டது என்று அர்த்தம் இல்லை. ஆனால் புற்றுநோய்க் கட்டி திரும்பி வரவில்லை என்பதை அறிவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால் என் மனைவி கேட்டி மற்றும் மூன்று அற்புதமான குழந்தைகளுடன் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க இன்னும் சிறிது கால அவகாசம் கிடைத்திருக்கிறது," என்றார்.

தனது சொந்த ஆராய்ச்சி மூலமாக புற்றுநோயை வென்ற மருத்துவர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்பு படம்.

உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்படும் சுமார் 3,00,000 பேருக்கு உதவக்கூடிய ஒரு கண்டுபிடிப்பின் இறுதிக் கட்டத்தில் இருவரும் இருக்கிறார்கள்.

இந்த முறையில் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்று பேராசிரியர் ஸ்கோலியரும் பேராசிரியர் லாங்கும் கூறியுள்ளனர். ஆனால் இந்தச் சோதனை சிகிச்சையானது பேராசிரியர் ஸ்கோலியரின் ஆயுளை நீட்டிக்கும் மற்றும் விரைவில் மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளாக மாற்றப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

பேராசிரியர் ஸ்கோலியரின் சிகிச்சையின் முதல் வாரங்களின் முடிவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அறிவியல் ஆய்வறிக்கையை அவர்கள் தற்போது மதிப்பாய்வு செய்து வருகின்றனர். ஆனால் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட சிகிச்சை முறையை உருவாக்குவதற்கு இன்னும் அதிக காலம் தேவைப்படும் என பேராசிரியர் லாங் கூறுகிறார்.

"நாங்கள் முழு தரவுகளையும் சேகரித்துள்ளோம், இதன் மூலம் அடுத்த கட்டத்திற்கான அடித்தளத்தை உருவாக்குகிறோம். இதனால் அதிகமான மக்களுக்கு உதவ முடியும்," என்று அவர் கூறினார்.

மேலும், "நாங்கள் இன்னும் முழுமையான சிகிச்சையை எட்டவில்லை. நாங்கள் உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது என்னவென்றால், இந்த அறுவை சிகிச்சைக்கு முந்தைய, கூட்டு நோயெதிர்ப்பு சிகிச்சை வகை அணுகுமுறை அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு வேலை செய்கிறது என்பதை நிரூபிப்பதுதான்,” என பேராசிரியர் லாங் கூறுகிறார்.

 

‘புற்றுநோய்க் கட்டி மீண்டும் வராமல் இருக்க வேண்டும்’

தனது சொந்த ஆராய்ச்சி மூலமாக புற்றுநோயை வென்ற மருத்துவர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மருத்துவர் ரோஜர் ஸ்டுப். மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோய் சிகிச்சைக்கான தற்போதைய நெறிமுறைக்கு இவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிபிசியிடம் பேசிய அவர், “பேராசிரியர் ஸ்கோலியரின் சிகிச்சை சரியாகச் செயல்படுகிறதா என்பதை இப்போதே சொல்ல முடியாது,” என்று கூறியிருந்தார்.

"ஸ்கோலியரின் முந்தைய முடிவுகள் ‘ஊக்கமளிப்பதாக’ இருந்தாலும், மீண்டும் 12 அல்லது 18 மாதங்களுக்கு புற்றுநோய்க் கட்டி மீண்டும் வராமல் இருக்க வேண்டும், அப்போதுதான் முழுமையான மகிழ்ச்சியடைய முடியும்," என்று அவர் கூறினார்.

தனது சிகிச்சையால் உருவாக்கப்பட்ட தரவு குறித்து பெருமைப்படுவதாகவும், இந்தப் பரிசோதனையை ஆதரித்ததற்காக அவரது குடும்பத்தினருக்கும் அவரது மருத்துவக் குழுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பேராசிரியர் ஸ்கோலியர் கூறினார்.

"நான் பணிபுரியும் குழுவை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இந்தப் பாதையில் உள்ள ஆபத்தை அறிந்து அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்."

"நாங்கள் செல்லும் திசை சரியானதுதான் என்ற நம்பிக்கையை இது எனக்கு அளிக்கிறது,” என்கிறார் பேராசிரியர் ஸ்கோலியர்.

https://www.bbc.com/tamil/articles/cmlleyzkxpvo

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17 JUN, 2024 | 02:28 PM ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதன் மூலமே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதி திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.   கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.   இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சணாகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.      இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர், இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இன்று எந்த கட்சியுமே பலமான நிலையில் இல்லை. ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும்போது சக்திவாய்ந்த தலைவர் ஒருவரை இந்த நாட்டில் தேர்வுசெய்யமுடியும். யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்கு 51வீதமான வாக்குகள் தேவையாகவுள்ளது. அவ்வாறான வாக்குகளைப்பெறும் நிலையானது இன்றைய நிலையில் எந்த கட்சியனாலும் கடுமையான போட்டியாகவே இருக்கும். அதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைவரும் இன்றிணையும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/186267
    • ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மொத்த மதிப்பெண்ணை இனிமேல் பரீட்சையின் வினாத்தாள்களில் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (ஜூன் 16) தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், 1-6-10 முன்னோடித் திட்டங்களின் கீழ் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் தரம் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் பெற்ற கல்வியின் மூலம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இதை முறையாக மதிப்பிடுவது ஆசிரியரின் பொறுப்பு என்றும், பாடசாலை நிர்வாகத்தினர் ஆசிரியர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். புதிய உலகின் கல்விப் போக்குகளை மனதில் கொண்டு இந்தக் கல்வி முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார். நாத்தாண்டிய தம்மிஸ்ஸர வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடி தொழில்நுட்ப கட்டிடத்தை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 2500 அதிநவீன ‘ஸ்மார்ட் போர்டுகள்’ வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடசாகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, நட்பு ரீதியான கல்வி வாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒரே வலையமைப்பில் இணைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடர்பான ஆசிரியர் கையேடு பாட நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப சுற்றில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கணிதம், இரசாயனவியல், பௌதீகம், உயிரியல், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஊடகம் மற்றும் தொழிநுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/303970
    • உலகம் முழுவதும் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை ஹஜ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் பரந்து விரிந்த அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் (முதலாவது கிறிஸ்துவம்) ஆகும் . இந்நிலையில் இன்று ஹஜ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தேசியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது உள்ள உலக நடப்பின்படி இஸ்லாமிய மக்களைக்கொண்ட பாலஸ்தீன நாட்டின்மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் இதுவரை சுமார் 37,000 மக்கள் பலியாகியுள்ளனர். வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட மசூதிகளே காஸாவில் மிஞ்சுகின்றன. முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பண்டிகையாக இது அமைகிறது . தற்காலிகமாக தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவைத்துள்ளதால் சற்று ஆசுவாசப்பட அவர்களுக்கு கிடைத்துள்ள நேரம் இது. அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் வர உள்ள நிலையில் காஸா போர் நிறுத்தத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். இன்று ஹஜ் பண்டிகையை முன்னிட்டு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த போரின் கொடூரங்களை நிறுத்துவதற்கான சரியான மற்றும் சிறந்த வழி இதுதான். ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அப்பாவி மக்களும் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் இழந்து நிற்கும் அம்மக்களின் வலி மிகவும் ஆழமானது. 3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். இதற்கு ஹமாஸும், இஸ்ரேல் அரசும் உடன்பட்டு இந்த வன்முறை வெறியாட்டங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். இறைத்தூதர் இப்ராஹிம் கடவுளுக்காக தனது மகனையே தியாகம் செய்ய முன்வந்த இந்த ஹஜ் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/303943
    • இளைய தலைமுறையினரை தமிழ்மொழியின் பற்றாளர்களாக, உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும்; அருட்பணி அருட்செல்வன்! 17 JUN, 2024 | 02:25 PM ( எம்.நியூட்டன்) இளைய தலைமுறையினரை தமிழ்மொழியின் பற்றாளர்களாக உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும், தமிழர்கள் போரில்  தேற்றுப்போன இனம் என்று  கருதப்பட்டாலும் நாம் தோற்றுப்போன இனம் இல்லை என அருட்பணி அருட்செல்வன் தெரிவித்தார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொன்விழா வின் 17ஆவது சர்வதேச மாநாடு  அண்மையில்  யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்றது இந் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,   நான் தமிழன், எங்கள் மொழி தமிழ்மொழி, தமிழ் இனத்தவன் என்கின்ற மாபெரும் சமூகத்திலே நாங்கள் நீந்திக்கொண்டிருக்கின்றோம். தமிழ் என்று சொல்லும்போது மொழியின் தொன்மை, பண்பாட்டு சிறப்புகள் நாங்கள் ஏற்றுக்கொள்வதன் மூலம் நாங்கள் தமிழனாக இந்த உலகிலே  பூமி பந்தில் பிறந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம் . இங்கு பல மொழியியலாளர்கள், ஆராட்சியாளர்கள் கூட தமிழ் மொழியில் சிறப்பியல்புகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையிலே எம் இனம் தோற்றும் போன இனமாக பேரினிலே போராட்டத்திலே  அழிவுகளைச் சந்தித்து நாங்கள் ஒடுக்கப்பட்ட தோற்றுப்போன விழிம்பிலே இருக்கிற இனமாக பார்க்கப்பட்டாலும், கருதப்பட்டாலும் நாங்கள் பண்பாடு சார்ந்த வாழ்வியலில் தோற்றுப் போன மக்கள் இனம் இல்லை மொழியினுடைய விசாலமான செழுமை சார்ந்து தோற்றுப்போன இனம் இல்லை அதனால்  எங்களுக்கென்று கடமை பொறுப்பு இன்றும் அதிகமாகவே இருக்கின்றது.   எங்களுக்குள்  தமிழ் அறிஞர்கள் இருக்கின்றோம் , தமிழ் ஆராச்சியாளர்களாக இருக்கின்றோம் பெருமைக்குரிய விடையம் ஆனால் அதனையும் கடந்து எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் தமிழ் உணர்வு அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்.  அதுதான் இன்றைய  காலத்தின் தேவையாகவும் காலத்தின் அவசர அழைப்பாகவும் இருக்கின்றது தமிழன் என்று பேசலாம் ஆனால் தமிழர் உணர்வு  என்கின்ற அந்த உள் உணர்வு தீயாகப் பற்றி எரியவேண்டும் தமிழன் என்று  நாங்கள் பெரியளவில் பேசி தம்பட்டம் அடிக்கக முடியாத நிலைக்கு எங்களின் கைகள் கால்கள் கட்டப்பட்டுள்ளன.  ஆனாலும் ஏங்களின் உணர்வுகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது எங்களிடம் இருக்கின்ற அந்த தமிழ் எண்ணங்களை தமிழ் சார்ந்த விழுமியங்களை தமிழ் சார்ந்த பண்பாடுகளை நாகரீகங்களை யாராலும  அழித்து விடமுடியாது ஆகவே இந்த பண்பாடு சிந்திக்க தோன்றுகின்றது.   ஒரு கட்டத்திலே தமிழ் பண்பாடுகளை கட்டிக் காக்கின்ற பாதுகாவலர்களாக இருந்தாலும் எங்களுக்கு என்று  தமிழ் உணர்வாளர்கள்  இருக்கின்ற பண்பாடு இருக்கின்றது என்கின்ற எண்ணங்களில் இருந்து ஒரு போது விலக முடியாது .  எங்களின் பண்பாட்டை எண்ணெய்யும் தண்ணீராயும் கலக்கமுடியாதே அதே போன்று தாமரை இதழிலே விழுகின்ற தண்ணீர் துளி அதனனூடு சேர்ந்து கொள்ளாதோ ஓடும் புளியம் பழமும் போன்று இருப்பது போன்று நாங்கள் தனித்துவமான அதற்காககத்தான் நாங்கள் இந்தப் பண்பாட்டை எங்களின் தமிழ் மொழியின் சிறப்புக்களை நாங்கள் கண்டு பிடிக்க முனைவது போன்று இளைய தலைமுறையினரை    பற்றாளர்களாக உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும்  என்றார். https://www.virakesari.lk/article/186270
    • மேற்கின் அறிவிப்புக்கள் எல்லாம் உக்ரேனுக்கு எந்தப் பயனையும் கொடுக்கவில்லை  என்பது கண்கூடு.  இனிவரும் நாட்கள் உக்ரேனுக்கு இன்னும் மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் நாட்களாக வரப்போகின்றன என ஊகிக்கிறேன்.  புடினின் போர்நிறுத்த நிபந்தனை இதற்கட்டியங்கூறலாகவே தெரிகிறது. 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.