Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திறந்த வெளிச்சிறைச்சாலையில் சிக்குண்டுள்ளோம் - பாதுகாப்பற்றவர்களாக உணர்கின்றோம் வீதியில் நடமாடவும் பயமாக உள்ளது - டியாகோகார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கை தமிழர்கள்

Published By: RAJEEBAN    07 JUN, 2024 | 03:22 PM

image

By Alice Cuddy & Swaminathan Natarajan, BBC News

டியாகோ கார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு பிரிட்டிஸ் அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகள் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பற்றவர்களாக உணர்வதாக பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.

இலங்கையர்களில் ஒருவர் ருவாண்டாவை திறந்தவெளிசிறைச்சாலை என வர்ணித்துள்ளார்.

குடியேற்றவாசிகளை ருவாண்டாவிற்கு அனுப்புவதற்கான பிரிட்டிஸ் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து பிரிட்டனின் அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்ற நிலையில், அங்குள்ள நான்கு குடியேற்றவாசிகளை சந்திப்பதற்காக  பிபிசி ருவாண்டாவிற்கு சென்றுள்ளது.

இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையை சேர்ந்த சிறிய குழுவினர் டியோகோகார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

rwanda_tamil.jpg

எங்களிற்கு பல மருத்துவ தேவைகள் உள்ளன, கடந்த காலங்களில் நாங்கள் பாலியல் வன்முறை சித்திரவதைகளிற்கு உள்ளாகியுள்ளோம். இவற்றிற்கு எல்லாம் சிகிச்சை தேவைப்படுகின்றது, ஆனால் ருவாண்டாவில் அது கிடைக்கவில்லை  என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொருவருக்கும் வாராந்தம் 50 டொலர் பெறுமதியான உணவினையும் ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் வழங்குகின்றனர்.

எனினும் பிரிட்டனிற்கும் ருவாண்டாவிற்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் அவர்கள் தொழில்புரிய முடியாது.

இலங்கையர்கள் நால்வரும் தாங்கள் வீதிகளில் துன்புறுத்தல்கள் பாலியல் தொந்தரவுகள் போன்றவற்றை  அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர்.

அவர்கள் தாங்கள் வெளியில் செல்வதற்கு அச்சமடைந்துள்ளதாகவும் தங்களை தாங்களே சிறைவைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் பிரிட்டன் தாங்கள் வாழ்வதற்கு நிரந்தரமான இடமொன்றை கண்டுபிடிப்பதற்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

டியாகோகார்சியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை தற்கொலை செய்ய முயன்ற இலங்கை தமிழர்களே ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இராணுவமருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ள அவர்கள் தலைநகர்  கிஹாலியின் புறநகர் பகுதியில் உள்ள  தொடர்மாடியில் வசிக்கின்றனர், அவர்களின்  வாடகையை பிரிட்டன் செலுத்துகின்றது.

ருவாண்டாவில் இவர்களின் சட்ட அந்தஸ்த்து பிரிட்டனிலிருந்து அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களின் சட்ட அந்தஸ்த்திலிருந்து வேறுபட்டது என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

 

rwanda_die.jpg

மிகவும் பாதிக்கப்படக்கூடிய அகதிகளுக்கான பாதுகாப்பை வழங்குவதற்கான ருவாண்டாவின் திறன் குறித்த அவர்களது எதிர்மறையான அனுபவங்கள் தீவிரமான கவலைகளை எழுப்புகின்றன என இரண்டு இலங்கையர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

தனது நாட்டின் மருத்துவ துறை மீது முழுமையான நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ள ருவாண்டாவின்  அதிகாரியொருவர் இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகள் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து வெளியிட்ட அச்சத்தை ஏனையவர்கள் எவரும் வெளியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ருவாண்டாவிற்கு  அனுப்பப்பட்ட நால்வரும் பிரிட்டனிற்கு செல்வதற்கு முயற்சிக்கவில்லை, மாறாக அவர்கள் டியாகோகார்சியாவில் புகலிடக்கோரிக்கையை முன்வைத்தனர் - இங்கு அமெரிக்கா- பிரிட்டனின் இரகசிய இராணுவதளம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2021 ஒக்டோபர் மாதம் அந்த தீவிற்கு சென்ற இலங்கையர்களில் இவர்களும் அடங்குகின்றனர்.

தாங்கள் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி ஓடுவதாகவும் கனடாவிற்கு செல்ல முயல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தங்கள் சொந்த நாட்டில் - இலங்கையில் தாங்கள் பாலியல்வன்முறை சித்திரவதைக்கு உள்ளானதாக நாங்கள் ருவாண்டாவில் சந்தித்த இலங்கையர்கள் நால்வரும் தெரிவித்தனர். 15 வருடத்திற்கு முன்னர் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளுடன் கடந்த காலங்களில் தொடர்பை பேணியதால் சிலர் இந்த மனித உரிமை மீறல்களை அனுபவித்துள்ளனர்.

மிகவும் அமைதியான வீதியில் இரண்டு படுக்கை அறைகளை கொண்ட தொடர்மாடியில் தங்கியுள்ள அழகு(பெயர்மாற்றப்பட்டுள்ளது) தான் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் தனது தனிமையும் எதிர்காலத்தை பற்றி நிச்சயமின்மையும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன என குறிப்பிடுகின்றார்.

எங்களுக்கு இங்கு உரிய மருத்துவசிகிச்சைகள் கிடைக்கவில்லை நாங்கள் மனோநல பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளோம், என தெரிவிக்கும் 23 வயது அழகு நாங்கள் எங்கள் பிரச்சினைகள் குறித்து மருத்துவர்களிடம் தெரிவித்தால் அவர்கள் எங்களிற்கு உதவக்கூடிய நிலையில் இல்லை எனவும்  குறிப்பிடுகின்றார்.

ருவாண்டாவின் மருத்துவபணியாளர்கள் எங்களிடம் சீற்றத்துடன் நடந்துகொண்டனர் சத்தமிட்டனர் என அவர் தெரிவிக்கின்றார்.

rwanda_cap.jpg

ஒருமுறை தற்கொலை செய்ய முயன்றவேளை தன்னை கைதுசெய்த அவர்கள் தன்னை மீண்டும் டியாகோகார்சியாவிற்கு அனுப்பபோவதாக எச்சரித்ததாக தெரிவித்தார்.

அவருடன் அந்த தொடர்மாடியில் தங்கியுள்ள 26வயது மயூரா தான் உளநலஆற்றுகையை நிறுத்திவிட்டதாக தெரிவிக்கின்றார்.எனக்கு உரிய மருந்துகள் கிடைப்பதில் நல்ல முறையில் உரையாட முடிவதில்லை இதன் காரணமாக நான் மருத்துவமனைக்கு செல்லவிரும்பவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

rwanda_tamil33.jpg

https://www.virakesari.lk/article/185537

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.