Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காத்திருந்து வைத்த பொறியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-10-06

காத்திருந்து வைத்த பொறியா?

போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் வன்னிக்குச் செல்வதற்கு படையினர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தடை விதித்துவிட்டனர்.

ஐஸ்லாந்து ராஜதந்திரி ஒருவர், அரசாங்கத்தின் அனுமதியின்றி வன்னி செல்வதற்கு போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் உடந்தையாக இருந்தனர் என்பதே அரசாங்கம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு.

அதற்குத் துணையாக, ஓமந்தைச் சோதனை நிலையத்தில், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டபோது, அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். அதனாலேயே அவர்களைத் திருப்பி அனுப்ப நேர்ந்தது என்றும் இராணுவ அதிகாரிகள் ஒரு காரணத்தை முன்வைத்திருக்கின்றனர்.

இவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையானவையா, உறுதியானவையா என்பது கணக்கில் எடுக்கத்தக்கவை அல்ல.

இது முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்ட செயல் என்பதில் சந்தேகமில்லை. போர்நிறுத்தக் கண்காணிப்பாளருக்கு வன்னி செல்லத் தடை விதிப்பது அல்லது தடுப்பது என்பது அவர்களைத் தாமாகவே இங்கிருந்து வெளியேறச் செய்வதற்கான ஆழ்ந்து அகன்று திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று. அவர்களுக்கு விழுந்த கண்ணுக்குத் தெரியாத காயம், புலப்படாத அடி!

கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் வன்னிக்குச் சென்று வருகிறார்கள். இதுவரை அவர்கள் தமது அடையாள அட்டையை காண்பித்து ஓமந்தைச் சோதனைச் சாவடியைக் கடந்துசெல்ல வேண்டும் என்று விதிக்கப்பட்டதாகவோ அல்லது கேட்கப்பட்டதாகவோ தகவல் இல்லை. இப்போது மட்டும் அவர்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தமை, அவர்களை அகௌரவப்படுத்தி அவர்களது மனதை நோகடித்தமை, உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் உளரீதியாகப் பாதிப்புறச் செய்து, பணியில் சலிப்படைய வைத்து, வெறுத்து ஒதுங்கச் செய்வதற்கென திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்ட சூழ்ச்சி அன்றி வேறென்ன?

கண்காணிப்பாளர்களின் மனங்களை நோகடிக்கச் செய்து, குழுவைச் செயலிழக்கச் செய்யவேண்டும் என்று உள்ளூரத் "தேடுதல் வேட்டை' நடத்திய அரசுக்கு அதன் அதிகாரிகளுக்கு ஐஸ்லாந்து ராஜதந்திரியின் அனுமதி பெறாத வன்னி விஜயம் தக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அவ் வளவு தான்!

அதனால் அரச தரப்பில் இதுவரை தெரிவிக்கப்பட்ட காரணங்கள், இனிமேல் பூசி மெழுகப்பட இருக்கும் புறப் பரிசோதனைகள் எல்லாம் வெறும் சோடனைகளாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கண்காணிப்புக் குழு உறுப்பினர்களை அகௌரவப் படுத்துவதன் மூலம் அவர்களைச் சீண்டிப் பார்ப்பதன் ஊடாக அவர்களை இங்கிருந்து வெளியேற்றுவதற்கு மறைமுகமாக வும் நயவஞ்சகமாகவும் தீட்டப்பட்ட சதியே இது என்பதை, அரசு என்னதான் காரணத்தை முன்வைத்தாலும், நியாய சிந்தனையுள்ள எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏற்றுக் கொள்ளவும் இயலாது.

கண்காணிப்புக் குழுவைத் தனது பொறியில் வீழ்த்தி விட்டதாக அரசாங்கம் தனக்குள் உள்ளூர இறுமாப்புக்கொள் ளும் என்பதே உண்மையிலும் உண்மை. அதற்குக் கார ணங்கள் இல்லாமல் இல்லை.

இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வுதான் என்று மஹிந்த அரசாங்கம் கல்மேல் எழுத்துப் போல தமது கொள்கையாகப் பொறித்திருக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதாக அதற்கு வெளி முத்திரையும் குத்தியிருக்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவும் தென்னிலங்கை அரசியல் மேடைகளில் அறுத்து உறுத்து அதனையே முழங்கி வருகிறார்கள்! ஊடகங்களுக்கு வழங்கும் அவர்களின் செவ்விகளும் இராணுவத் தீர்வையே முதன்மைப்படுத்தி நிற்பது மிகத் துல்லியமாகத் தெரிகிறது.

ஆனால் வெளிநாட்டவரைத் திருப்திப்படுத்தி, அவர்களிடமிருந்து கைநிறையக் காசும் கடனும் பெறும் உள்நோக்கத்துடன் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டால், அரசாங்கம் அரசியல் தீர்வு முயற்சியைக் கைவிடும் என்று சொல்வது அல்லது நினைப்பது முழுத்தவறு என்று கூறிவருகிறார் ஜனாதிபதி மஹிந்த. உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் "புடம் போட்ட' அரசியல் தலைவராகியுள்ளார் அவர்!

ஆகையால், அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லாமல் கண்காணிப்புக் குழுவினர் ஓமந்தைச் சோதனைச் சாவடியில்வைத்து திருப்பி அனுப்பப்பட்டனர்; வன்னி செல்வதற்கு அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது என்ற அரச தரப்பின் சப்புக்கட்டைக் காரணங்களை நம்புவதற்கில்லை.

போர்நிறுத்த ஒப்பந்தம் போர்நிறுத்தம் இப்போது நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதனைக் கண்காணிப்பவர்களைச் சீண்டி, அவர்களை இங்கிருந்துவெளியேற்றி விடுவதற்கான சூக்குமமே வியாழனன்று விதிக்கப்பட்ட தடை.

போர் நிறுத்த ஒப்பந்தம் கைவிடப்பட வேண்டும் என்று மஹிந்தரின் கூட்ட?995;ிகளான ஜனதா விமுக்தி பெரமுனவும், ஜாதிக ஹெல உறுமயவும் அடித்தாளம் போடுகின்றன. அதேவேளை இப்போதைய புறச்சூழ்நி?94;ைக்கு ஏற்றவாறு ஒப்பந்தம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று அதில் ஒப்பமிட்ட பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சியும் பக்கவாத்தியம் வாசிக்கத் தொடங்கியுள்ளது. மங்களவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவும் இப்போது தனது பங்குக்கு கூக்குரல் போடத் தொடங்கியுள்ளது.

தனக்குச் சாதகமான, ஆதரவான இந்தத் தருணத்தை, சந்தர்ப்பத்தை தக்கவாறு பயன்படுத்தி, ஒப்பந்தத்தை முற்று முழுதாகச் செயலிழக்கச் செய்யும் குள்ள நரித்தந்திரமே போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களுக்கு ஓமந்தையில் விதிக்கப்பட்டுள்ள தடை சதி!

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தமக்கு இழைக்கப்பட்ட அகௌரவத்தையும் அவமதிப்பையும் எந்தக் கோணத்தில் பார்க்கப் போகிறார்கள், எவ்வாறு தமது உணர்வுகளையும் நடவடிக்கைகளையும் பிரதிபலிக்கப் போகின்றார்கள் என்பதுவே எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இன்று உள்ளது.

அவர்களின் முடிவு பாதகமான நிலையை உண்டாக்கிவிடக்கூடாது என்றே அரசியல் தீர்க்க தரிசனம் உள்ளவர்களும் நாட்டு நலனில் அக்கறையுள்ள சமாதான விரும்பிகளும் எதிர்பார்த்திருப்பர் என்று நம்பலாம்.

http://www.uthayan.com/

என்ன ஆட்டம் ஆடினாலும் நாடகம் என்பது இரண்டு பக்கத்திற்கும் உரியது போல்தான் தென்படுகிறது. நீ போவது போல் போ. நான் தடுப்பது போல் தடுக்கிறேன். என்றமாதிரியுள்ளது. இதுவரையும் எவரும் எதுவித கண்டன அறிக்கையையும் விடவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.