Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

12 JUN, 2024 | 10:26 AM
image
 

யாழ்ப்பாணம் அனலைதீவிலிருந்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (10) கடற்றொழிலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமரசிங்கம் மற்றும் கேதீஸ்வரன் ஆகிய இருவரையே காணவில்லை. இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. காணாமல் போனோரை கடலில் தேடும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/185885

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். அனலைதீவில் காணாமற்போன கடற்றொழிலாளர்கள் தமிழகத்தில் மீட்பு

Published By: DIGITAL DESK 3

13 JUN, 2024 | 10:17 AM
image
 

யாழ்ப்பாணம் - அனலைதீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணமல்போன இருவரும் தமிழகத்தில் உயிருடன் கரையொதுங்கியுள்ளனர்.

அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ மற்றும் நாகலிங்கம் விஜயகுமார் ஆகிய இருவருமே படகு இயந்திரம் பழுதாகி தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியில் கரையொதுங்கியுள்ளனர்.

வேதாரண்யம் காவல் சரகம், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்திற்கு கிழக்கே சுமார் 2 நாட்டிகல் மைல் தொலைவில், வங்காள விரிகுடா கடலில், இரு மீனவர்களும் கரையொதுங்கியுள்ளனர்.

மீனவர்கள் இருவரையும், நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் ரமேஷ் (பொறுப்பு - வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழுமம்) விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

அனலைதீவில் இருந்து கடந்த திங்கட்கிழமை (10) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/185967

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை - உறவினர்களிடம் டக்ளஸ் தெரிவிப்பு

13 JUN, 2024 | 05:27 PM
image
 

காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அனலைதீவு கடற்பரப்பில் இருந்து கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி  திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்ற குறித்த இருவரும் கரை திரும்பாத காரணத்தினால் பதற்றம் ஏற்பட்டிருந்ததுடன், அனலைதீவு கடற்பரப்பெங்கும் கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்களால் தீவிர தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தேடப்பட்டுவந்த இருவரும் தமிழக கடற்பரப்பில் கரையொதுங்கிய தகவல் கிடைக்கப்பெற்றது.

இந்நிலையில் குறித்த இருவரது குடுப்பத்தினர் இன்று வியாழக்கிழமை (13) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இருவரையும் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், கடற்றொழில் அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

IMG-20240613-WA0013.jpg

IMG-20240613-WA0015.jpg

IMG-20240613-WA0019.jpg

IMG-20240613-WA0014.jpg

தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை - உறவினர்களிடம் டக்ளஸ் தெரிவிப்பு | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.