Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 JUN, 2024 | 07:26 AM
image
 

ஆர்.ராம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றையதினம் காலை 10மணிக்கு வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு மாவை.சோ.சேனாதிராஜா தலைமை தாங்கவுள்ளதோடு, தமிழரசுக்கட்சி முகங்கொடுத்த வழக்கின் சமகால நிலைமைரூபவ் தமிழ் பொதுவேட்பாளர் மற்றும் கட்சியின் பவள விழா சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/186168

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு ஆரம்பம்!

16 JUN, 2024 | 11:26 AM
image
 

தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (16) காலை 10 மணியளவில் ஆரம்பமானது.

கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி. தவராசா உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை விடயத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாகவும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.

IMG_20240616_100229.jpg

IMG_20240616_100111.jpg

IMG_20240616_095751.jpg

IMG_20240616_100722.jpg

 

IMG_20240616_101204.jpg

IMG_20240616_101230.jpg

IMG_20240616_101247.jpg

IMG_20240616_101324.jpg

IMG_20240616_101258.jpg

https://www.virakesari.lk/article/186180

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

 

16 JUN, 2024 | 11:26 AM
image
 

என்ன..எல்லோரும் கூடியிருக்கிறார்கள்!!!! வீட்டைக் கட்டப்போகிறார்களா இல்லை இரண்டாகப் பிரிக்கப் போகிறார்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, P.S.பிரபா said:

என்ன..எல்லோரும் கூடியிருக்கிறார்கள்!!!! வீட்டைக் கட்டப்போகிறார்களா இல்லை இரண்டாகப் பிரிக்கப் போகிறார்களா?

 

ஏற்கனவே பிரித்தாச்சே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிராளிகள் ஒரு நிலைப்பாட்டை பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்த தீர்மானம்! - சுமந்திரன்

16 JUN, 2024 | 05:27 PM
image

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (16) காலை இடம்பெற்றது.

அதன் பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

இன்றைய கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பான விளக்கம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. 

கடந்த தவணையில் எதிராளிகளாக பெயரிடப்பட்ட ஏழு பேருடன் கிளிநொச்சியை சேர்ந்த ஜீவராஜா என்பவர் தன்னையும் இணைத்துக்கொள்ளுமாறு விண்ணப்பம் செய்திருந்தார். 

அவரது விண்ணப்பம் தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் அந்த ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்காக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி அவகாசம் வழங்குமாறு தவணை கேட்டிருந்தார். நானும் அப்படி கேட்டிருக்கின்றேன். அதனையடுத்து எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதிக்கு வழக்கு அழைக்கப்படவுள்ளது.

அந்த வகையில், கடந்த தவணைக்கு முன்பாக கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கமைய வழக்கை முடிவுறுத்திக்கொள்வது தொடர்பாக நீதிமன்றிலே நான் கூறியிருக்கின்றேன். எதிராளிகள் அழைத்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பாக வழக்காளி தன் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என்ற காரணத்துக்காகவே கடந்த தவணை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதுபோன்ற சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும்போது அதில் பல படிமுறைகள் உள்ளது. அவற்றை கடந்த பின்னரே வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்படலாம். சாதாரணமாக இவ்வாறான வழக்கில் ஒரு வருடத்துக்கு பின்னரே முதலாவது விளக்கத்துக்கான திகதி குறிக்கப்படும். ஆனால், இந்த வழக்கில் வழக்கை முடிவுறுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக நாங்கள் குறுகிய தினத்தை கேட்டிருக்கின்றோம். 

அன்றைய தினம் வழக்காளி நீதிமன்றிலே தெரிவித்த விடயத்துடன், எதிராளிகள் ஏழு பேரும் அழைத்திருக்கின்ற ஆட்சேபனைகளின் அடிப்படையில் மூன்று வித்தியாசமான நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டது. 

குறிப்பாக, நானும் கட்சியின் பொதுச்செயலாளரும் நிர்வாக செயலாளரும் ஒரு நிலைப்பாட்டையும், மாவை சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் வேறொரு நிலைப்பாட்டையும் சிறிதரன், குகதாசன் ஆகியோர் இன்னொரு நிலைப்பாட்டையும் எடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதனால்  கட்சி ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்காத சூழ்நிலையில் நாங்கள் எப்படி எமது நிலைப்பாட்டை இதற்கு தெரியப்படுத்துவது என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். 

இருப்பினும், கட்சி தற்போது ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது. வழக்காளி கோரும் நிவாரணங்களை வழங்கி தெரிவுகளை மீள செய்வதற்கு நான் இணங்குகின்றேன் என்று சிறிதரன் கூறியிருந்தார். அதனை நீதிமன்றிலே நான் சொல்லியிருக்கின்றேன். 

இப்போது நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ள காரணத்தினால் நாங்கள் ஏழு பேரும் எட்டாவது எதிராளியான ரத்தின வடிவேலும் இணைந்து, வழக்கிலே எமது மறுமொழியை ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்காக வழக்காளியோடு இணக்கப்பாட்டுக்கு வருகிறோம் என்று கூறி வழக்கை முடிவுறுத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்காக வழக்காளியின் சட்டத்தரணியோடு நான் பேசியிருக்கின்றேன். ஏனையவர்களின் சட்டத்தரணிகளுடன் பேசி பொது நிலைப்பாட்டுக்கு இணங்கிக்கொள்வதுடன், எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி வவுனியாவில் மத்திய குழு மீண்டும் கூடி அந்த மறுமொழியின் வரைபை மத்திய செயற்குழுவுக்கு சமர்ப்பித்து அதன் அங்கீகாரத்தை பெறவேண்டும். 

அதனையடுத்த தவணையில் நீதிமன்றில் சமர்ப்பித்து, அதன் பின்னர் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரலாம் என்று தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/186213

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொது வேட்பாளர் விடயம் : தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் முடிவெடுக்கப்படவில்லை - சுமந்திரன் 

16 JUN, 2024 | 08:33 PM
image
 

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் விடயத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் இன்றும் முடிவுகள் எடுக்கப்படவில்லையென எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை இடம்பெற்றது.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானம் எடுப்போம். தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்று இன்னமும் தெரியாது. அவர்களுடைய தேர்தல் அறிக்கைகள் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. அதன்பின்னர் தீர்மானிப்பதாகவே முடிவெடுத்திருந்தோம். 

அத்துடன் தங்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ள இருவர் தமிழரசுக்கட்சியின் தலைமைகாரியாலத்திற்கு வந்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். இது  ஒரு ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை.  நாங்கள் தொடர்ந்தும் இவ்வாறானவர்களுடன் பேசுவோம். ரணில் விக்கிரமசிங்க தன்னை வேட்பாளராக அறிவித்தால் அவரோடும் பேசுவோம். முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. 

ஆனால் இதுவரை அதிகாரபகிர்வு தொடர்பாக பொதுவெளியில் சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டிருந்த வேட்பாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு 13 ஆம் திருத்தத்தினை முழுமையாக அமுல் படுத்துவோம் என்று சொல்லத்தலைப்பட்டுள்ளனர்.

அது முழுமையான தீர்வுஅல்ல அதனை நாம் ஏற்கவில்லை ஆனால் அரசியலமைப்பில் உள்ளதையாவது அமுல்படுத்தவேண்டும் என்பதை நாம் சொல்லியிருக்கின்றோம். எனவே அந்த பேச்சுவார்த்தைகள் ஆராக்கியமாக இருந்தது. அவர்கள் சொன்னதை செய்வார்களா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கின்றது.

மும்முனைப்போட்டி ஒன்று ஏற்ப்படுமாக இருந்தால் தமிழ் பேசுகின்ற மக்களின் வாக்குப்பலம் பிரதானமாக இருக்கும். இதனை நாம் உதாசீனம் செய்யக்கூடாது. மிகவும் கவனமாக எமது பேரம்பேசுதலை நடத்தவேண்டும். சந்தர்ப்பத்தை சரியாக உபயோகப்படுத்தவேண்டும் என்ற கருத்தோடு நாங்கள்இருக்கின்றோம்.

தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக கடந்த மத்தியகுழு கூட்டத்திலேயே பலர் எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். எனவே இன்று அதைப்பற்றி பேசவில்லை. மக்களது கருத்துக்களையும் அறிந்து தனிப்பட்ட கருத்துக்களை சொல்வதற்கான சுயாதீனம்  அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன சிவாஜிலிங்கம் வழமையாகவே நிற்ப்பவர். பழக்கதோசத்தில் அவர் நிற்கலாம் அதில் எனக்கு பிரச்சனையில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/186218

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.