Jump to content

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில் இன்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 JUN, 2024 | 07:26 AM
image
 

ஆர்.ராம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றையதினம் காலை 10மணிக்கு வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு மாவை.சோ.சேனாதிராஜா தலைமை தாங்கவுள்ளதோடு, தமிழரசுக்கட்சி முகங்கொடுத்த வழக்கின் சமகால நிலைமைரூபவ் தமிழ் பொதுவேட்பாளர் மற்றும் கட்சியின் பவள விழா சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/186168

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு ஆரம்பம்!

16 JUN, 2024 | 11:26 AM
image
 

தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (16) காலை 10 மணியளவில் ஆரம்பமானது.

கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி. தவராசா உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை விடயத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாகவும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.

IMG_20240616_100229.jpg

IMG_20240616_100111.jpg

IMG_20240616_095751.jpg

IMG_20240616_100722.jpg

 

IMG_20240616_101204.jpg

IMG_20240616_101230.jpg

IMG_20240616_101247.jpg

IMG_20240616_101324.jpg

IMG_20240616_101258.jpg

https://www.virakesari.lk/article/186180

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

 

16 JUN, 2024 | 11:26 AM
image
 

என்ன..எல்லோரும் கூடியிருக்கிறார்கள்!!!! வீட்டைக் கட்டப்போகிறார்களா இல்லை இரண்டாகப் பிரிக்கப் போகிறார்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, P.S.பிரபா said:

என்ன..எல்லோரும் கூடியிருக்கிறார்கள்!!!! வீட்டைக் கட்டப்போகிறார்களா இல்லை இரண்டாகப் பிரிக்கப் போகிறார்களா?

 

ஏற்கனவே பிரித்தாச்சே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிராளிகள் ஒரு நிலைப்பாட்டை பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்த தீர்மானம்! - சுமந்திரன்

16 JUN, 2024 | 05:27 PM
image

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (16) காலை இடம்பெற்றது.

அதன் பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

இன்றைய கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பான விளக்கம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. 

கடந்த தவணையில் எதிராளிகளாக பெயரிடப்பட்ட ஏழு பேருடன் கிளிநொச்சியை சேர்ந்த ஜீவராஜா என்பவர் தன்னையும் இணைத்துக்கொள்ளுமாறு விண்ணப்பம் செய்திருந்தார். 

அவரது விண்ணப்பம் தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் அந்த ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்காக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி அவகாசம் வழங்குமாறு தவணை கேட்டிருந்தார். நானும் அப்படி கேட்டிருக்கின்றேன். அதனையடுத்து எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதிக்கு வழக்கு அழைக்கப்படவுள்ளது.

அந்த வகையில், கடந்த தவணைக்கு முன்பாக கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கமைய வழக்கை முடிவுறுத்திக்கொள்வது தொடர்பாக நீதிமன்றிலே நான் கூறியிருக்கின்றேன். எதிராளிகள் அழைத்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பாக வழக்காளி தன் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என்ற காரணத்துக்காகவே கடந்த தவணை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதுபோன்ற சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும்போது அதில் பல படிமுறைகள் உள்ளது. அவற்றை கடந்த பின்னரே வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்படலாம். சாதாரணமாக இவ்வாறான வழக்கில் ஒரு வருடத்துக்கு பின்னரே முதலாவது விளக்கத்துக்கான திகதி குறிக்கப்படும். ஆனால், இந்த வழக்கில் வழக்கை முடிவுறுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக நாங்கள் குறுகிய தினத்தை கேட்டிருக்கின்றோம். 

அன்றைய தினம் வழக்காளி நீதிமன்றிலே தெரிவித்த விடயத்துடன், எதிராளிகள் ஏழு பேரும் அழைத்திருக்கின்ற ஆட்சேபனைகளின் அடிப்படையில் மூன்று வித்தியாசமான நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டது. 

குறிப்பாக, நானும் கட்சியின் பொதுச்செயலாளரும் நிர்வாக செயலாளரும் ஒரு நிலைப்பாட்டையும், மாவை சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் வேறொரு நிலைப்பாட்டையும் சிறிதரன், குகதாசன் ஆகியோர் இன்னொரு நிலைப்பாட்டையும் எடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதனால்  கட்சி ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்காத சூழ்நிலையில் நாங்கள் எப்படி எமது நிலைப்பாட்டை இதற்கு தெரியப்படுத்துவது என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். 

இருப்பினும், கட்சி தற்போது ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது. வழக்காளி கோரும் நிவாரணங்களை வழங்கி தெரிவுகளை மீள செய்வதற்கு நான் இணங்குகின்றேன் என்று சிறிதரன் கூறியிருந்தார். அதனை நீதிமன்றிலே நான் சொல்லியிருக்கின்றேன். 

இப்போது நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ள காரணத்தினால் நாங்கள் ஏழு பேரும் எட்டாவது எதிராளியான ரத்தின வடிவேலும் இணைந்து, வழக்கிலே எமது மறுமொழியை ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்காக வழக்காளியோடு இணக்கப்பாட்டுக்கு வருகிறோம் என்று கூறி வழக்கை முடிவுறுத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்காக வழக்காளியின் சட்டத்தரணியோடு நான் பேசியிருக்கின்றேன். ஏனையவர்களின் சட்டத்தரணிகளுடன் பேசி பொது நிலைப்பாட்டுக்கு இணங்கிக்கொள்வதுடன், எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி வவுனியாவில் மத்திய குழு மீண்டும் கூடி அந்த மறுமொழியின் வரைபை மத்திய செயற்குழுவுக்கு சமர்ப்பித்து அதன் அங்கீகாரத்தை பெறவேண்டும். 

அதனையடுத்த தவணையில் நீதிமன்றில் சமர்ப்பித்து, அதன் பின்னர் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரலாம் என்று தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/186213

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது வேட்பாளர் விடயம் : தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் முடிவெடுக்கப்படவில்லை - சுமந்திரன் 

16 JUN, 2024 | 08:33 PM
image
 

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் விடயத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் இன்றும் முடிவுகள் எடுக்கப்படவில்லையென எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை இடம்பெற்றது.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானம் எடுப்போம். தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்று இன்னமும் தெரியாது. அவர்களுடைய தேர்தல் அறிக்கைகள் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. அதன்பின்னர் தீர்மானிப்பதாகவே முடிவெடுத்திருந்தோம். 

அத்துடன் தங்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ள இருவர் தமிழரசுக்கட்சியின் தலைமைகாரியாலத்திற்கு வந்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். இது  ஒரு ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை.  நாங்கள் தொடர்ந்தும் இவ்வாறானவர்களுடன் பேசுவோம். ரணில் விக்கிரமசிங்க தன்னை வேட்பாளராக அறிவித்தால் அவரோடும் பேசுவோம். முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. 

ஆனால் இதுவரை அதிகாரபகிர்வு தொடர்பாக பொதுவெளியில் சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டிருந்த வேட்பாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு 13 ஆம் திருத்தத்தினை முழுமையாக அமுல் படுத்துவோம் என்று சொல்லத்தலைப்பட்டுள்ளனர்.

அது முழுமையான தீர்வுஅல்ல அதனை நாம் ஏற்கவில்லை ஆனால் அரசியலமைப்பில் உள்ளதையாவது அமுல்படுத்தவேண்டும் என்பதை நாம் சொல்லியிருக்கின்றோம். எனவே அந்த பேச்சுவார்த்தைகள் ஆராக்கியமாக இருந்தது. அவர்கள் சொன்னதை செய்வார்களா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கின்றது.

மும்முனைப்போட்டி ஒன்று ஏற்ப்படுமாக இருந்தால் தமிழ் பேசுகின்ற மக்களின் வாக்குப்பலம் பிரதானமாக இருக்கும். இதனை நாம் உதாசீனம் செய்யக்கூடாது. மிகவும் கவனமாக எமது பேரம்பேசுதலை நடத்தவேண்டும். சந்தர்ப்பத்தை சரியாக உபயோகப்படுத்தவேண்டும் என்ற கருத்தோடு நாங்கள்இருக்கின்றோம்.

தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக கடந்த மத்தியகுழு கூட்டத்திலேயே பலர் எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். எனவே இன்று அதைப்பற்றி பேசவில்லை. மக்களது கருத்துக்களையும் அறிந்து தனிப்பட்ட கருத்துக்களை சொல்வதற்கான சுயாதீனம்  அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன சிவாஜிலிங்கம் வழமையாகவே நிற்ப்பவர். பழக்கதோசத்தில் அவர் நிற்கலாம் அதில் எனக்கு பிரச்சனையில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/186218

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செய்திகள்   நாளேடு: உதயன் திகதி: 04/4/2006 பக்கம்: 1, 14   இராணுவத்தில் முஸ்லிம் படையணி தேவையற்ற ஏற்பாட்டு நடவடிக்கை: அகில இலங்கை முஸ்லிம் சபை தெரிவிப்பு "இலங்கை இராணுவத்தில் தனி முஸ்லிம் படையணி ஒன்றை தோற்றுவிக்க முனைவது தேவையற்ற ஒரு நடவடிக்கையாகும்." -இவ்வாறு அகில இலங்கை முஸ்லிம் சபை தெரிவித்துள்ளது என இணையத்தளம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. மேற்படி அமைப்பின் செயலர் எம்.எப். மொகைதீன் இந்தக் கருத்தை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்தவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது:-  எமது அகில இலங்கை முஸ்லிம் சபையானது மறைந்த சேர். ராசிக் பரீத்தினால், 1921ஆம் ஆண்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த அமைப்பில் முஸ்லிம் சமூகத்தின் பல்கலைக்கழக கல்விச் சமூகம், அரச மற்றும் தனியார்துறை தொழில் வல்லுநர்கள், வர்த்தகர்கள் அனைவரும் இணைந்து செயற்படுகின்றனர். எம்மைப் பொறுத்தவரை தனி முஸ்லிம் படையணி அமைக்கப்படுவது அவசியமற்ற ஒன்றெனவே கருதுகிறோம். கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காக இந்தப் படையணி அமைக்கப்படும் என்று அரசு கூறுகிறது. இது எதிர்காலத்தில் சாத்தியமான ஒருவிடயமல்ல. முஸ்லிம்கள் அனைத்து மாகாணங்களிலும் அனைத்து மதத்தவர்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர். எங்களுக்குத் தெரிந்தவரையில் எந்தவொரு நாட்டின் இராணுவத்திலும் தனி ஒரு இனத்துக்காக அல்லது சமூகத்துக்காக ஒரு படையணி உருவாக்கப்பட்டதாக வரலாறு இல்லை. இந்நிலையில் பல்லின கலாசாரம், பல்லின மதங்கள் உள்ள எமது நாட்டில் இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பானது இனங்களின் அடிப்படையில் இருக்கத்தேவையில்லை என்பதே எமது கருத்தாகும். எனவே, இவ்விடயத்தில் தாங்கள் கூடிய கவனம் செலுத்தி இந்த நடவடிக்கையை உடன் நிறுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் - எனத் தெரிவித்துள்ளார். (எ-க) ***** தொகுப்பாளர் குறிப்பு: இக்கடிதத்தின் ஆங்கில வடிவத்தை தமிழ்நெட்டில் வாசிக்குக (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=17661)  
    • தலைநகரின் நடைமுறையரசின் ஆட்புலத்தினுள் அத்துமீறி நுழைந்த இரு முஸ்லிம் ஊர்காவலர்கள் புலிகளால் 14/06/2006 கைதுசெய்யப்பட்டனர்.     உசாவலுக்குப் இன்னர் இருவரும் 22/03/2006 தமிழீழக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.                 பின்னர் 23/06/2006 மூதூர், சம்பூரில் வைத்து முஸ்லிம் நிகராளிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். வெள்ளைக்காரர்: இ.போ.க.ச. திருமலை பொறுப்பாளர் திரு. ஓவ் ஜான்சென்  
    • கிளி. நாச்சிக்குடாவில் தமிழ்பேசும் சிறார்களுக்கென திறக்கப்பட்ட முன்பள்ளி 21/03/2006     போரூட் அமைப்பின் நிதியுதவியுடன் திறந்துவைக்கப்பட்ட இக்கட்டிடத்திற்கான நிலத்தை இப்ராகிம் முகமது காசிம் என்பவர் அன்பளிப்பாக வழங்கினார். அவரே கல்வெட்டையும் திரைநீக்கம் செய்தார். நாடாவை போரூட் அமைப்பின் திட்ட முகாமையாளர் ஆறி எரிகசன் வெட்டித் திறந்துவைத்தார்.  
    • செய்திகள்   வலைத்தளம்: புதினம் திகதி: 28/03/2006 கொழுவி: https://www.puthinam.com/    கிழக்கில் உதயமாகிறது சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகபூர்வ "ஜிகாத்" குழு! சிறிலங்கா இராணுவத்தில் தனி முஸ்லிம் படையணியை உருவாக்க உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இது தொடர்பில் கூறியதாவது: இராணுவ முஸ்லிம் படையணியின் தேர்வுக்கான நேர்காணல் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. அம்பாறையில் எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் நாள் வரை இந்த நேர்காணல் நடைபெறும். இப்படையணியில் மொத்தம் 500 பேர் இணைக்கப்பட உள்ளனர் என்றார் சமரசிங்க. இது தொடர்பிலான விளம்பரம், சிறிலங்கா அரச ஊடகமான கடந்த ஞாயிறன்று சண்டே ஓப்சர்வரில் வெளியாகி இருந்தது. புதிதாகச் சேர்க்கப்பட உள்ளவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிமாகவும் 8 ஆம் வகுப்பு வரை படித்தவராகவும் இருக்க வேண்டும். ஒரு நபருக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாய். இதில் போக்குவரத்து, மருத்துவ சலுகைகள், தங்குமிடம் அனைத்தும் அடங்கும். கிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்களின் துணை இராணுவக் குழுவான ஜிகாத் குழு இயங்கி வருகிறது என்றும் இது பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வுத்துறை உதவியுடன் இயங்குவதாகவும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பிலான ஆதாரங்கள் உள்ளன என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் தற்போது குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் "இராணுவத்தில் முஸ்லிம் படையணி" என்பதும் இந்தப் படையணி கிழக்குப் பிரதேசத்தில் மட்டுமே இயங்கும் என்பதும் ஒரு உத்தியோகபூர்வமான ஜிகாத் குழுவை உருவாக்கும் நடவடிக்கையாகவே சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். சிறிலங்காவின் கிழக்குப் பிரதேசத்தில் இயங்கும் இந்த முஸ்லிம்கள் குழுக்களின் நீண்டகால செயற்பாடுகள் பற்றிய ஒரு தொகுப்பு: தீவிரவாத முஸ்லிம் இளைஞர்களை தொடக்கத்தில் இணைத்துக் கொண்டு தமிழர்கள் மீதான பாரிய படுகொலைகளை சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டது. இதற்கு வீரமுனை கிராமப் படுகொலையை உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வீரமுனை என்கிற தமிழ்க் கிரமாமமானது பல முஸ்லிம் கிராமங்களைச் சூழ்ந்து அமைந்தது. மட்டக்களப்பு நகரிலிருந்து 38 கிலோ மீற்றர் தென்மேற்கில் இக்கிராமம் உள்ளது. 1990 ஜூன் மாதம் 11 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையேயான யுத்தம் தொடங்கிய போது வீரமுனை கிராமம் 3 பாரிய படுகொலைகளைச் சந்திக்க நேர்ந்தது. ஜிகாத் அமைப்பு, சிறிலங்காவின் "ஊர்காவல்" படையினர், சிறிலங்கா அரசாங்கத்தினது இராணுவம், சிறப்பு அதிரடிப்படை ஆகியவை இந்தப் படுகொலைகளை நடத்தின. தமிழ்க் கிராமங்களில் யுத்த காலத்தில் படுகொலைகளையும் மனித உரிமைகளையும் மீறியதில் பாரிய பங்களிப்புச் செய்தது சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை. 1990 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாளன்று மேலே குறிப்பிட்டுள்ள குழுவினருடன் இணைந்து கொண்ட சிறிலங்கா இராணுவம் நூற்றுக்கணக்கான தமிழ் ஆண்களை வயது வேறுபாடின்றி சுற்றி வளைத்து கொண்டுவெட்டுவான் முகாமுக்குக் கொண்டு சென்றது. பின்னர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அனைவரையுமே படுகொலை செய்தனர். தொடர்ந்து இறந்தவர்களின் உடைமைகளையும் வீடுகளையும் எரித்து நாசப்படுத்தினர். அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் நாள் சிறப்பு அதிரடிப்படையினர், ஜிகாத் அமைப்பில் உள்ள முஸ்லிம்கள், ஊர்க்காவல் படையினர் வீரமுனை கிராமத்தைச் சுற்றிவளைத்தனர். முன்னைய பாரிய படுகொலைச் சம்பவங்களால் அச்சமடைந்த அம்மக்கள் சிந்தையாதிரை பிள்ளையார் ஆலயத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர். ஆனால் ஆலயத்துக்குள் உள்நுழைந்த முஸ்லிம் தீவிரவாத இளைஞர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், ஊர்காவல் படையினர் ஆலயத்திலேயே குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 56 பேரை படுகொலை செய்து வெறியாட்டம் நடத்தினர். இந்தப் படுகொலைகளால் வீரமுனை கிராமமே ஒட்டுமொத்தமாக வெளியேறி காரைதீவு அகதி முகாமுக்கு இடம்பெயர்ந்தது. 1993 ஆம் ஆண்டு இக்கிராமத்தினர் சிலர் வீரமுனை கிராமத்துக்குத் திரும்பினர். பெருமளவானோர் இன்னமும் அகதி முகாம்களிலே வசித்து வருகின்றனர். 1998 ஆம் ஆண்டு அம்பாறை அக்கரைப்பற்றில் பி.எல்.ஓ.என்ற முஸ்லிம் ஆயுதக் குழு உருவானது. இக்குழுவானது முஸ்லிம் பிரதேசங்களுக்குள் தமிழர்கள் உள்நுழவதைத் தடை செய்வதாக அறிவித்தது. இத்தகைய பெயரில் 1985, 1990 ஆண்டுகளில் தமிழர் விரோத சக்திகள் ஒரு குழுவை உருவாக்க முனைந்துள்ளனர். அக்குழுவினர் 1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 5 ஆம் நாள் வெளியிட்ட துண்டறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது நடவடிக்கைகளை முஸ்லிம் பகுதிகளில் கைவிட வேண்டும் என்று எச்சரித்தது. இருப்பினும் இக்குழுவின் பின்னணியில் சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவான சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை இருப்பதாக செய்திகள் வெளியாகின. 1999 ஆம் ஆண்டு அபுசாலி ஜூலியா (வயது 34) என்ற ஏறாவூர் தாமரைக்கேணியைச் சேர்ந்த பெண் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். திருமணமான வேறு ஒரு ஆணை விரும்பியதால் இஸ்லாமிய மதச் சட்டத்தை அப்பெண் மீறியதாகக் கூறி முஸ்லிம் ஆயுதக் குழுவினர் படுகொலை செய்தனர். அதன் பின்னர் சமாதானப் பேச்சுக்கள் நடைபெறத் தொடங்கிய 2002 ஆம் ஆண்டு சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார். சிறிலங்கா இராணுவத்தினரால் பாரிய படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிற ஊர்காவல் படையில் உள்ள 23 ஆயிரம் பேரினது எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்த விரிவாக்கம் நடைபெறும் என்றும் அறிவித்தார். கற்பிட்டியில் ஜூன் மாதம் 21 ஆம் நாள் ஊர்காவல்படையினர் முகாமில் ஜோன் அமரதுங்க பேசியதாவது: சிறிலங்கா காவல்துறையினரது கடமைகளை ஊர்காவல் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் காவல்துறையினரை விட குறைவான ஊதியம் பெறுகின்றனர். நாளாந்த ஊதியமே ஊர்காவல் படையினருக்கு வழங்கப்படுகிறது. அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஊர்காவல் படை கலைக்கப்படமாட்டாது. மாறாக அது வலுப்படுத்தப்படும் என்றார். இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஜூன் 23 ஆம் நாள் (2002) விடுதலைப் புலிகளின் மூதூர் அரசியல்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட அறிக்கையில், முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் செயற்பாட்டை ஒப்புக் கொண்டார். அவர் வெளியிட்ட அறிக்கை: கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான நல்லிணக்கச் சூழலைச் சீர்குலைக்கும் வகையில் சில சக்திகள் செயற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அமைதியை விரும்புகிற அனைத்து முஸ்லிம்களும் இத்தீவிரவாதக் குழுக்களின் செயற்திட்டங்களுக்குப் பலியாகாமல் அமைதிக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளின் அரசியல் அலுவலகம் மீதான இத்தாக்குதலையடுத்து தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய பதற்றம், மோதல் ஏற்பட்டது. அப்போது மக்கள் நடத்திய பாரிய அளவிலான பேரணியில் "ஒசாமா" குழு எனப்படுகிற முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரே இத்தாக்குதலுக்குக் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஒசாமா குழு என்றும் ஜிகாத் குழு என்றும் இயங்கி வந்த இக்குழுவை சிறிலங்கா இராணுவம் இயக்கியது. அதன் தலைவராக ஹக்கீம் என்பவர் செயற்பட்டு வந்தார். ஜூன் மாதம் 26ஆம் நாள் (2002) இல் பி.பி.சி. தமிழோசை நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த தமிழ் ஊடகவியலாளர் பி. சதாசிவானந்தத்தின் மூதூர் இல்லம் மீது மீண்டும் ஒசாமா அணி என்று தன்னை அழைத்துக் கொண்ட இந்த ஜிகாத் குழு தாக்குதல் நடத்தியது. சதாசிவானந்தம் நடத்திய ஆதரவற்ற சிறார் விடுதியையும் இந்த ஜிகாத் குழு தாக்கியது. மூதூரில் தொடர்ந்து நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில் 6 பேர் பலியாயினர். வன்முறைப் பகுதிகளை பார்வையிடச் சென்ற சிறிலங்கா உள்விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிய கதையாக ஒரு உண்மையையும் அவர் ஒப்புக் கொண்டார்.  அமைச்சராக இருந்த ஜோன் அமரதுங்க, கடந்த வாரம் (2002 ஜூன் 23 ஆம் நாள் தொடக்கம் 26ஆம் நாள் வரை) நடைபெற்ற தாக்குதல்களுக்குப் பின்னால் மறைமுகமாக ஒரு சக்தி இயங்குவதாக அரசாங்கம் நம்புகிறது என்று கூறினார். இந்தக் காலகட்டத்தில்தான் இத்தகைய தீவிரவாதக் குழுவினரைக் கொண்டு சிறிலங்காவின் உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவாக முஸ்லிம் ஊர்க்காவல் படை வலுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் படுகொலைகளையும் இந்த ஊர்காவல்படையினர் மேற்கொண்டனர். தீவிரவாத முஸ்லிம் இளைஞர்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபக்கம் தனது துணைப் படைகளில் இணைத்துக் கொண்டிருந்த நிலையில் - சர்வதேச அளவில் பயங்கரவாதச் செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கிற லஸ்கர் இ தொய்பா, சிறிலங்காவின் ஆசீர்வாதத்துடன் கிழக்கில் கால் பதித்தது. சிறிலங்காவின் கிழக்கில் ஜிகாத் குழுவாக அறியப்படுகிற இந்தக் குழு பாகிஸ்தானின் உதவியுடன்தான் இயங்கி வருவதாக கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்தியாவும் எச்சரித்திருந்தது. இந்தியாவின் "அவுட்லுக்" வார ஏட்டில் இது தொடர்பான கட்டுரையும் வெளியாகி இருந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் பி.ராமன், முஸ்லிம் ஜிகாத் குழு தொடர்பிலான தகவல்களை வெளியிட்டிருந்தார். அப்போது சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதுவராக ஓய்வு பெற்ற இராணுவ கேணல் பசீர் வாலி நியமிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அவரது நியமனத்தை நிராகரிக்குமாறு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் அதில் எழுதியிருந்தார். அவர் எழுதிய கட்டுரையின் விவரம்: இந்தியாவுக்கு எதிராக கொழும்பை பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நேரடியாக பயன்படுத்துவது தொடர்பில் எதுவித ஆதாரமும் இல்லை. இருந்தபோதும் சிறிலங்காவின் கிழக்கில் உள்ள முஸ்லிம்களை ஜிகாத் குழுவில் சேர்ப்பது தொடர்பாக லஸ்கர் இ தொய்பா அமைப்பு ஆர்வம் காட்டுகிறது. கிழக்கு மாகாண தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே தீவிரவாத உணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது. 2002 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் நடந்த இன வன்முறைகளுக்கு மத்தியில் "ஒசாமா படையணி" என்பது தீவிரமாகச் செயற்பட்டது. பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. யுடன் லஸ்கர் இ தொய்பா நெருங்கிய தொடர்புகொண்டது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இராஜதந்திர நிலையில் தனது இரு அதிகாரிகளை நியமனம் செய்திருந்தது. இது போன்ற செயற்பாடுகள் மூலம் கொழும்பை தளமாக பயன்படுத்த பாகிஸ்தான் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டமிடுவதாக தெரிகிறது. ஏனெனில் இந்தியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் செயற்பாடுகள் பல தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன. இவை தொடர்பிலான தரவுகளைச் சேகரிக்க கிழக்கில் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ. பயன்படுத்தலாம். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இந்திய உளவாளிகள் இரகசியமாக கராச்சி செல்வதற்காக கொழும்பு வழியை பயன்படுத்துகின்றனர். கொழும்பில் அத்தகைய நபர்களது கடவுச் சீட்டுகளில் சிறிலங்காவில் நுழைந்தமைக்கான பதிவுகளை சிறிலங்கா செய்வதில்லை என்றும் இராமன் தெரிவித்திருந்தார். "அவுட்லுக்" இதழ் வெளியிட்டிருந்த இக்கட்டுரையை 2004ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17 ஆம் நாளன்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு மறுத்திருந்தது. பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட மறுப்பறிக்கை: இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களை வெளிவிவகார அமைச்சு நிராகரிக்கிறது. இந்திய உளவு அமைப்பான றோவின் முன்னாள் செயற்பாட்டாளரால் தவறான தகவலை பரப்பும் உள்நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எதுவித ஆபத்தான சூழ்நிலை உணரப்பட்டாலும் பாகிஸ்தான் மீது பகைமையைத் தூண்டு வகையில் ஐ.எஸ்.ஐ. மீதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்று அந்த மறுப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானிலிருந்து இயங்குகிற காஸ்மீர் ஆயுதக் குழு லஸ்கர் இ தொய்பா. மர்கஸ் தாவா- வல்- இர்ஸாத் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் ஆயுதக் குழுதான் லஸ்கர் இ தொய்பா. இச்சூழலில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரலில் பொத்துவில் முஸ்லிம் பகுதியில் புத்தர் ஆலயம் அமைக்க பேரினவாத சக்திகள் முயற்சித்தன. இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இதைக் கண்டித்து ஏப்ரல் 12ஆம் நாள் (2005) கொழும்பில் சிங்கள பௌத்த தேசியவாதிகள், பௌத்த பிக்குகள் கண்டனப் பேரணி நடத்தினர். அந்தப் பேரணி முடிவில் புத்த சாசன அமைச்சுவிடம் சிங்களப் பேரினவாதிகள் கையளித்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாவது: பொத்துவில் பிரதேசத்தில் சட்டபூர்வமான பௌத்த மத செயற்பாடுகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், ஆயுதமேந்திய முஸ்லிம் தீவிரவாதிகளும் எதிர்க்கின்றனர். இந்த முஸ்லிம் ஆயுதக் குழுவினர் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டிய போதும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான் கல்முனையில் இரு சிறிலங்கா காவல்துறையினர் தாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேரணியை ஜாதிக ஹெல உறுமய நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜிகாத் குழுவின் தலைவராக குற்றம்சாட்டு வந்த அப்துல் சமது அப்துல் ஹக்கீம் என்ற மதுகர ஹக்கீம் (வயது 42) அடையாளம் தெரியாத நபர்களால் மூதூர் பளை நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவ நாளன்று மோட்டார் சைக்கிளில் தனது ஹலால் கடைக்குச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்தது. எப்போதும் அவருடன் இருக்கும் 6 பாதுகாப்புப் படையினர் சம்பவம் நடந்த போது உடனிருக்கவில்லை. கட்டைப்பறிச்சான் சிறிலங்கா இராணுவ முகாமிலிந்து 500 மீற்றர் தொலைவில் மூதூர் பிரதான வீதியில் ஹக்கீம் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜிகாத் குழுவினரிடையிலான உள்மோதல் அல்லது வர்த்தக மோதலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் அப்போது தெரிவித்திருந்தனர். 1985, 1990, 1995 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் பாரிய அளவில் நடைபெற்ற தமிழ், முஸ்லிம் வன்முறைகளில் தொடர்புபட்டவர் இந்த ஹக்கீம் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்களின் மீது ஜிகாத் குழு இயங்குகிறது என்று விடுதலைப் புலிகள் தரப்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டு அதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டன. இந்த அறிக்கையின் விவரங்களை கொழும்பு ஆங்கில நாளேடான "சண்டே லீடர்" பகிரங்கப்படுத்தியிருந்தது. ஜிகாத் குழுவின் செயற்பாடுகளுக்கு உதவியாக இருந்த திருகோணமலையில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் 22 ஆம் படையணியில் மேஜர் தரத்திலான அதிகாரி, புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன. சிறிலங்காவின் கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஊடாக ஜிகாத் குழுவினருக்கான ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டன என்பதையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்பதையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருந்தது. இருப்பினும் அமைச்சர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பாகிய பவ்ரெல் அமைப்பின் தலைவர் கிங்க்ஸ்லி றொட்ரிக்கோ, கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதற்கான காரணத்தை வெளியிட்ட போது கிழக்கில் முஸ்லிம்களின் ஆயுதக் குழு இயங்குகிறது என்ற உண்மையை வெளிப்படுத்தியிருந்தார். அவருக்கு எதிராக முஸ்லிம் குழுக்கள் போராட்டம் நடத்திய போதும் தான் ஜிகாத் குழு என்று சொல்லவில்லை சில ஆயுதக் குழுக்கள் இயங்குகிறது என்று மீண்டும் விளக்கமளித்தார். அண்மையில் முஸ்லிம் துணை இராணுவக் குழுவில் இணைய மறுத்த பல முஸ்லிம் இளைஞர்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு தாக்கி அச்சுறுத்தியிருந்தது. முஸ்லிம் பிரதேசங்களில் ஆயுதக் குழுக்கள் இயங்குவது தொடர்பான செய்திகள் தொடர்பில் முஸ்லிம் சமூகத் தலைவர்களுடன் விடுதலைப் புலிகள் நேரடியாக பேச்சுக்களையும் நடத்தியிருந்தனர். இருப்பினும் முஸ்லிம் தலைவர்கள் பகிரங்கமாக முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக்குழுவில் இணைவதற்கான சூழல் இருப்பதாக எச்சரித்து வந்தனர். அண்மையில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் முஜிபுர் ரகுமான் வெளியிட்ட அறிக்கையில், முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதமேந்துகிற உரிமை இருக்கிறது என்று அறிவித்திருந்தார். கிழக்கில் முஸ்லிம்களின் ஆயுத நடமாட்டத்தை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவும் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்தார். "அப்பிரதேசத்தில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் நடமாடலாம் ஆனால் அவர்கள் ஆயுதக் குழுவினரா? ஜிகாத் குழுவினரா என்பது எமக்குத் தெரியாது என்று பிரசாத் சமரசிங்க கூறியிருந்தார். சிறிலங்கா இராணுவமானது முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரை முதலில் ஊர்காவல் படையில் இணைத்து உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவாக செயற்படுத்தியது. சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் துணையுடன் ஜிகாத் குழுவை உருவாக்க அனுமதித்து தெற்காசிய பிராந்திய அமைதிச் சீர்குலைவுக்கு உடந்தையாக சிறிலங்கா செயற்பட்டு வருகிறது. இதனிடையே ஜெனீவா பேச்சுக்களில் இந்தக் குழுவினரை விடுதலைப் புலிகள் பகிரங்கப்படுத்தி சர்வதேச சமூகத்தின் முன்னர் ஆதாரங்களோடு அம்பலப்படுத்திவிட்டனர். இதனால் சர்வதேச சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்ற நடுக்கத்தில்- உத்தியோகப்பூர்வமான ஜிகாத் குழுவாக- "கிழக்குப் பிரதேச சிறிலங்கா இராணுவ முஸ்லிம் படையணி"யை உருவாக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகவே சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.   *****  
    • செய்திகள்   நாளேடு: உதயன் திகதி: 24/3/2006 பக்கம்: 1, 14   விடுதலைப் புலிகளால் கைதுசெய்யப்பட்ட இரண்டு முஸ்லிம் ஊர்காவலரும் விடுதலை : மூதூர், சம்பூரில் வைத்து ஒப்படைப்பு மூதூர்,மார்ச் 24  மூதூரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைதுசெய்யப்பட்ட இரு முஸ்லிம் ஊர்காவலர்கள் நேற்று முஸ்லிம் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மூதூர் கிழக்கு, சம்பூரிலுள்ள திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகத்தில் தோப்பூர் மற்றும் மூதூர் பள்ளிவாசல் சபைகளின் தலைவர்களிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் இருவரையும் திருமலை கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஒப்படைத்தார். கடந்த மார்ச் 14ஆம் திகதியன்று மது போதையில் இவர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஈச்சிலம்பற்று பகுதிக்குள் உள்நுழைந்ததையடுத்து கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம்களின் ஜிகாத் குழு, கருணா குழு ஆகியன பற்றி பல உண்மைத் தகவல்களை இந்த இரு ஊர்காவலர்கள் வெளியிட்டனர். இந்த நிலையில் முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையேயான நல்லுறவை வளர்த்தெடுக்கும் வகையிலும், புரிந்துணர்வை உருவாக்கும் வகையிலும் இரண்டு ஊர்காவலர்களையும் புலிகள் விடுவித்து அவர்களை முஸ்லிம் பிரதிநிதிகளிடம் கையளித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.  (க- 3) ***** தொகுப்பாளர் குறிப்பு: இச்செய்தியின் ஆங்கில வடிவத்தை தமிழ்நெட்டில் வாசிக்குக (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=17549)   ஒப்படைக்கப்பட்ட போது நிழற்படத்திற்கு அனைவரும் ஒன்றாக பொதிக்கின்றனர். இவர்களுடன் இ.போ.க.ச. திருமலை பொறுப்பாளர் திரு. ஓவ் ஜான்செனும் நிற்பதைக் காண்க. படிமப்புரவு: தமிழ்நெற்
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.