Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்ஜிபிடிகியு சமூகத்தினரையும்; பால்புதுமையினரின் உரிமைகளையும் ஊக்குவிக்கும் சட்ட மூலத்தினால் உள்ளுர் கலாச்சாரத்திற்கு ஆபத்து- அகில இலங்கை பௌத்தகாங்கிரஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

20 JUN, 2024 | 11:29 AM
image
 

எல்ஜிபிடிகியு சமூகத்தினரையும்; பால்புதுமையினரின் உரிமைகளையும் ஊக்குவிக்கும் சட்ட மூலத்தினால் உள்ளுர் கலாச்சாரத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என அகில இலங்கை பௌத்தகாங்கிரஸ் எச்சரித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  பெண்களை வலுப்படுத்தும் சட்டமூலத்தையும் பாலின சமத்துவ சட்டமூலத்தையும்  கடுமையாக விமர்சித்துள்ள அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் இந்த சட்டமூலம் எல்ஜிபிடிகியு சமூகத்தினரையும்; பால்புதுமையினரின் உரிமைகளையும் ஊக்குவிக்கும் உள்நாட்டு கலாச்சாரம் நெறிமுறைகள் விழுமியங்களை சமரசம் செய்யும் என தெரிவித்துள்ளது.

மேற்குலகில் கூட பிள்ளைகள் பால் மாற்றத்தில் ஈடுபடுவதை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என என அகில இலங்கை பௌத்தகாங்கிரஸின் தலைவர் சந்திரா நிமல் வகிஸ்ட தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு குடும்ப அடிப்படையிலான தாய்வழி சமூகம் என தெரிவித்துள்ள அவர் இந்த சட்டமூலங்கள் இலங்கையின் நெறிமுறைகள் மற்றும் விழுமியங்களை நிச்சயம் சமரசம் செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு பாலியல்நோக்குநிலையை கொண்டவர்கள் உள்ளனர் அவர்களின் சார்பில் தனிதனி சட்டங்களை கொண்டுவரக்கூடாது என தெரிவித்துள்ள அவர் எனினும் அனைவரையும் சமமமாக நடத்தவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலங்கை நடைமுறைப்படுத்தினால் அதன் காரணமாக கலாச்சார சட்ட குழப்பங்கள் ஏற்படும் இது இலங்கை ஜனாதிபதி அன்னிய கருத்துக்களை எம்மீது திணிக்க முயலக்கூடாது அவர் தன்னை இலங்கையராக பார்க்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/186539

தமிழர்களுக்கு எந்த தீர்வும் வழங்க கூடாது என்று எதிர்த்தும் நிற்கும் இதே பெளத்த சங்கங்கள், பீடங்கள் தான் பால்சமனிலை மற்றும், LGBTQ+ சமூகத்துக்கு சாதகமான சட்ட திருத்தங்களுக்கும் எதிராக நிற்கின்றது.

வலதுசாரிகள், நாசிகளின் கொள்கைகளை / ஹிட்லரை ஆதரிப்பவர்கள், மத அடிப்படைவாதிகள், மத சுதந்திரத்தை எதிர்ப்பவர்கள், இனவாதிகள், ஆச்சார பூபதிகள், சாதிமான்கள் எல்லாரும் ஒரே அணியில் தான் எப்போதும் ஒன்று சேர்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண் வலுவூட்டல் சட்டமூலம் : பெண் என்பதற்கான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை - சரத் வீரசேகர குற்றச்சாட்டு

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கலாச்சாரம் ஊடாக நாட்டை ஆக்கிரமிக்கும் முயற்சிகள் புதிய சட்டமூலங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது. பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்புக்கும், கலாச்சாரத்துக்கும் முரணானது. பெண் என்பது யார் என்பதற்கு போதுமான வரைவிலக்கணம்  சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை  என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர்  சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் தொடர்பில் பல பரிந்துகளை நாங்கள் முன்வைத்தோம் இருப்பினும் உரிய தரப்பினரால் அவை சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.இந்த சட்டமூலத்தில் பெண் என்பது யார்? என்பதற்கு முறையான வரைவிலக்கணம் குறிப்பிடப்படவில்லை. பிறப்பால் பெண் என்று அடையாளப்படுத்தப்பட்டவருக்கு மாத்திரமே பெண்ணுக்கான அந்தஸ்த்தை வழங்க முடியும். ஆணாகப் பிறந்து   மருத்துவச் சிகிச்சை ஊடாக பெண்ணாக   மாற்றமடைந்தவரை பெண்ணாகக் கருத முடியாது. ஆகவே சட்டமூலத்தில் பெண் என்பதற்கான வரைவிலக்கணம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

அத்துடன் திருமணம் என்பதற்கும் உரிய வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. ஆணாக பிறந்த ஒருவருக்கும்,பெண்ணாகப் பிறந்த ஒருவருக்கும் இடையில் நிகழும் திருமணம்  ஏற்றுக்கொள்ளப்படும்.ஆண்களுக்கு இடையிலான திருமணத்தையும்,பெண்களுக்கு இடையிலான திருமணத்தையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருமணமாக அங்கீகரிக்க முடியாது.

கர்ப்பிணி என்பது யார் என்பதும் வரைவிலக்கணப்படுத்தப்படவில்லை.பிறப்பால் பெண்ணாக பிறந்த ஒருவருக்கு மாத்திரமே கர்ப்பிணி என்ற உயரிய அந்தஸ்தை வழங்க முடியும்.இயற்கைக்கு முரணான செயற்பாடுகளுக்கு  ஒருபோதும் இடமளிக்க முடியாது.பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒருபோதும் மறுக்கவில்லை.இலங்கை தான் உலகில் முதல் பெண் பிரதமரை தோற்றுவித்தது.

ஆகவே நாட்டின் அரசியலமைப்பிலும்,பௌத்த மத கோட்பாடுகளிலும் பெண்களுக்கும்,ஆண்டுகளுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டுள்ளது.பெண் வலுவூட்டல் சட்டமூலத்தின் ஊடாக மறைமுகமாக கலாசாரத்துக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறும் ஏற்பாடுகள் காணப்படுகின்றன.

பால்நிலை சமத்துவம் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.அரசியலமைப்பின்  ஏற்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.இலங்கை வரலாற்று ரீதியில் பல ஆக்கிரமிப்புகளுக்கு முகம் கொடுத்துள்ளது.கலாச்சாரம் ஊடாக நாட்டை  ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள்  புதிய சட்டங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.69 இலட்ச மக்களாணைக்கு இது விரோதமானது நாங்கள் ஒருபோதும் இதற்கு இடமளிக்கமாட்டோம் என்றார்.

பெண் வலுவூட்டல் சட்டமூலம் : பெண் என்பதற்கான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை - சரத் வீரசேகர குற்றச்சாட்டு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

Published By: VISHNU

20 JUN, 2024 | 06:36 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)  

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.எதிரணியின் சுயாதீன உறுப்பினர்களான விமல் வீரவன்ச,கெவிந்து குமாரதுங்க, சந்திம வீரக்கொடி ஆகியோர் சட்டமூலத்தின் ஒருசில ஏற்பாடுகளுக்கு திருத்தங்களை முன்வைத்தனர்.ஆளும் தரப்பினர் உறுப்பினர் சரத் வீரசேகர திருத்தங்களுக்கு ஆதரவாகவே வாக்களித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற  பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம்  இரண்டாம் வாசிப்புக்காக விவாதத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சட்டமூலம் பெண்களை மாத்திரம் வரையறுத்ததாக அமைய வேண்டும் என்ற திருத்தத்தை முன்வைத்தார்.இந்த திருத்தம் மீதான விவாதம் இடம்பெற்றது. இதன்போது இந்த திருத்தத்துக்கு ஆதரவாக 05 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 09 மேலதிக வாக்குகளினால் கெவிந்து குமாரதுங்க முன்வைத்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த  சட்டத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்படும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமனம் குறித்து எதிரணியின்  சுயாதீன உறுப்பினர்  சந்திம வீரக்கொடி முன்வைத்த திருத்தத்தை ஏற்றுக்கொள்ள போவதில்லை என  மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்ட கருத்துக்கு எதிரணியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பெண்களின் நலனுக்காக முன்வைக்கப்படும் இந்த சட்டத்தில் பல குறைப்பாடுகள் இருப்பதை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே முன்வைக்கப்படும் திருத்தங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என பாராளுமன்ற பெண் ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே சபையில் வலியுறுத்தினார்.இதனை தொடர்ந்து முன்வைக்கப்பட்ட திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபை முதல் சுசில் பிரேமஜயந்த சபைக்கு அறிவித்தார்.

இதனை தொடர்ந்து சட்டமூலத்தின் ஏற்பாடுகள் தொடர்பில் எதிரணியின் உறுப்பினர்கள் முன்வைத்த திருத்தங்கள் வாத பிரதி வாதங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டன.இந்த சட்டமூலத்துக்கு அரசாங்கத்தின் சார்பில் சபை முதல்வர் புதிதாக பல திருத்தங்களை முன்வைத்தார்.அத்திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டன.

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.