Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இட்டார் கெடுத்தார்

-------------------------------
வாகனத்தை சிவப்பு விளக்கில் நிற்பாட்டி விட்டு பக்கக் கண்ணாடி வழியே வெளியே பார்த்தால், 'தயவு செய்து உதவி செய்யுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.' என்று எழுதப்பட்ட மட்டைகளுடன் ஒருவர் அல்லது இருவர் வீதியின் ஓரத்தில் அமர்ந்திருப்பார்கள். இது எல்லா சமிக்ஞை விளக்குகளிலும் நடக்கும் ஒன்றல்ல. மிக அதிக வாகனங்கள் கடந்து போகும் சமிக்ஞை விளக்குகளையும், மிகக் குறைவான வாகனங்கள் கடந்து போய் வருமிடங்களையும் இவர்கள் தவிர்த்து விடுகின்றனர். சிலர் உதிரியான வேறு சில தகவல்களையும் தங்களின் விளம்பர மட்டையில் எழுதி வைத்திருப்பார்கள். உதாரணமாக, 'நான் ஒரு முன்னாள் போர் வீரன்....' என்ற வசனமும் இந்த மட்டைகளில் அடிக்கடி காணப்படும் ஒன்று. காலையிலிருந்து ஒரு எட்டு அல்லது பத்து மணித்தியாலங்கள் அங்கேயே இருப்பார்கள். ஒரு முழுநேர வேலை.
 
மழை என்றால் அங்கு இருக்கமாட்டார்கள். ஆனால் கடும் வெயில், கடும் குளிர் என்றாலும் அங்கே நிற்பார்கள். சில உடமைகளும் அவர்களை சுற்றி இருக்கும். ஒரு சைக்கிள், ஒரு பெட்டி அல்லது வாளி போன்றன. ஒரு சிலருடன் நாய் ஒன்றும் நிற்கும். அவர்களின் வளர்ப்பு நாயாகத்தான் இருக்கவேண்டும். இப்படியான ஒருவரை வாகனங்களை பதிவு செய்யும் அலுவலகம் ஒன்றில் ஒரு தடவை கண்டிருக்கின்றேன். அவரை அங்கு வரிசையில் அடையாளம் கண்டு கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும். அவரின் வளர்ப்பு நாயுடனேயே அங்கு வந்திருந்தார். இவர் ஏன் இங்கு வந்திருக்கின்றார் என்று எனக்கு சம்பந்தம் ஏதும் இல்லாத கேள்வி ஒன்றுக்கு சில கணங்கள் விடை தேடிக் கொண்டிருந்தேன்.
 
இங்கு ஒரு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வில் இவர்களை, இவர்களின் செயல்களை வெளிக் கொணர்ந்தார்கள். இவர்களில் பலர் ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்வதை அந்த நிகழ்வில் காட்டினார்கள். இதையே சில நண்பர்களும் எப்போதும், இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு பல காலம் முன்னிருந்தே, சொல்லிக் கொண்டிருந்தனர். இவர்கள் பகலில் பணத்தை சேகரித்து, இரவுகளில் கொண்டாட்டமாக இருப்பார்கள் என்று. இவர்களில் சிலரின் இரண்டாவது வாழ்க்கை வசதியானது என்று கூடச் சொல்லியிருக்கின்றனர். நண்பர்கள் ஆதாரம் எதுவும் இல்லாமல் வெறும் அனுமானமாகத் தான் சொன்னார்கள். இப்படி எங்களுக்கு நாங்களே மற்றவர்களில் தான் குறை, குற்றம் என்று சொல்லிக் கொள்வது எங்களின் குற்ற உணர்வைக் குறைக்கும் அல்லது முற்றாக இல்லாமல் செய்யும் ஒரு வழி.
 
குற்ற உணர்வுடன் வாழ்வது ஒரு மருந்தற்ற கொடிய நோயுடன் வாழ்வது போலவே.
 
ஆனாலும் நான் மாறவில்லை. ஏதோ கொடுத்துக் கொண்டேயிருந்தேன். ஒரு தடவை ஒரு பெண்ணும், ஒரு சிறு பிள்ளையும் மட்டையில் எழுதப்பட்ட செய்தியுடன் ஒரு சமிக்ஞையில் வீதியின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர். இது அவர்களின் ஒரு புது வழி, ஒரு புதிய நுட்பம் என்று ஏற்கனவே நாங்கள் எங்கள் வட்டத்தில் கதைத்திருந்தோம். ஒன்றும் கொடுக்கவே கூடாது, நீண்ட கால நோக்கில் இது எவ்வளவு தீன்மையை உண்டாக்கும் என்று ஆழமாக ஆரய்ந்தும் இருந்தோம். ஆனாலும், கண்ட அந்தக் கணத்தில், மனம் கேட்கவில்லை. மனம் புத்தியை வென்றது.
 
பின்னர் ஒரு நாள், பொழுது கருகிக் கொண்டிருந்த ஒரு செக்கல் நேரம், என் வீட்டருகே இருக்கும் சமிக்ஞை விளக்கில் வாகனத்தில் நின்று கொண்டிருந்தேன். அவர்களின் வேலையும் முடியும் நேரம் என்பதால், அங்கு மட்டையுடன் நின்றவர் எழும்பியே நின்றிருந்தார். வாகனத்தை நோக்கி வந்தார். அன்றைய நாளில் அவருடைய கடைசி வருமானம் நானாகத்தான் இருந்திருக்க வேண்டும்...... ஆனால், இந்த மனிதருக்கு சற்றுத் தள்ளி ஒரு பெண் மிகப் பெரிய வயிறும், நிச்சயமாக அதனுள் ஒன்றைச் சுமந்த படியே, ஒவ்வொரு வாகனமாக எட்டி எட்டி அவர் கையில் இருக்கும் பூங்கொத்தைக் காட்டி வேணுமா என்று கேட்டபடியே மிக மெதுவாக வந்து கொண்டிருந்தார். பத்து டாலர்கள் என்று அவர் சொன்னதும் கேட்டது. சிறிது தள்ளி ஒரு வாளி நிறைய பல பூங்கொத்துகள் இருந்தது.
 
அன்று அங்கு நான் வாகனத்தின் கண்ணாடியை இறக்கவே இல்லை. அதன் பிறகு மட்டையுடன் நிற்பவர் எவரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஆனாலும் அன்று நான் ஒரு பூங்கொத்து வாங்காமல் விட்டது தப்பு என்று இன்றும் மனம் சொல்லிக் கொண்டிருக்கின்றது.
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

அன்று அங்கு நான் வாகனத்தின் கண்ணாடியை இறக்கவே இல்லை. அதன் பிறகு மட்டையுடன் நிற்பவர் எவரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஆனாலும் அன்று நான் ஒரு பூங்கொத்து வாங்காமல் விட்டது தப்பு என்று இன்றும் மனம் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

ஏன் தப்பு?

பூங்கொத்தை வாங்கி வழியில் யாருக்காவது கொடுத்து வீட்டில் மாட்டுப்பட்டிருந்தால்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் தப்பு?

பூங்கொத்தை வாங்கி வழியில் யாருக்காவது கொடுத்து வீட்டில் மாட்டுப்பட்டிருந்தால்?

🤣......

ஒரு உழைப்பிற்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தான், அண்ணை.....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

வாகனத்தை சிவப்பு விளக்கில் நிற்பாட்டி விட்டு பக்கக் கண்ணாடி வழியே வெளியே பார்த்தால், 'தயவு செய்து உதவி செய்யுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.' என்று எழுதப்பட்ட மட்டைகளுடன் ஒருவர் அல்லது இருவர் வீதியின் ஓரத்தில் அமர்ந்திருப்பார்கள்.

சிலர் வந்து கேட்கும் போது சிகரட்டை ஊதியபடியே வந்து கேட்பார்கள்.

போதை மூஞ்சியில் வடியும்.

வாகனத்தால அடிக்கத் தான் மனம் வரும்.

இன்னும் சிலர் வாகனத்தை நிற்பாட்டினால் கையில் ஈரத்துணியுடன் ஓடிவந்து கண்ணாடியைத் துடைப்பார்கள்.

சிலவேளை உள்ளுக்கிருக்கிறவை அவதிப்பட்டு கண்ணாடியை மூடுவார்கள்.

வைப்பரைப் போடுவார்கள்.

வேண்டாம் வேண்டாம் என்று கைகளை அசைப்பார்கள்.

மீறி அவர்கள் துடைத்துவிட்டால் பணம் கொடுக்காவிட்டால் ஏதாவது செய்துவிடுவார்கள் என்று ஒன்றோ கூடவோ கொடுத்திட்டுப் போவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

 

இன்னும் சிலர் வாகனத்தை நிற்பாட்டினால் கையில் ஈரத்துணியுடன் ஓடிவந்து கண்ணாடியைத் துடைப்பார்கள்.

இப்படியும் சிலரைப் பார்த்திருக்கின்றேன்........ ஆனால் பல  கார்கள் கழுவும் இடங்களில் வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் போட்டிருப்பார்கள்....

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் இன்னொரு வகையினரும் இருக்கின்றனர். கடற்கரை போன்ற இடங்களில் நின்று பாட்டுப் பாடுவார்கள். சிலர் சித்திரம் வரைவார்கள். இங்கிருக்கும் Santa Monica Beach பிரபலமானது. ரொனால்ட் ரீகனின் இடம் என்றும் சொல்வார்கள். அந்தக் கடற்கரையில் எப்போதும் உள்ளூர் மற்றும் வெளியாட்களின் கூட்டம் இருக்கும். அங்கு நின்று சிலர் பாடுவார்கள். ஒரு சிலரின் பாடல்கள் அவ்வளவு தரமாக, மிக நன்றாக இருக்கும். ஹாலிவுட் என்று இங்கே சினிமாவில் வாய்ப்பு தேடி வந்து, சந்தர்ப்பம் அமையாமல் போனவர்கள் போல........ 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரசோதரன் said:

அன்று நான் ஒரு பூங்கொத்து வாங்காமல் விட்டது தப்பு என்று இன்றும் மனம் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

தப்பு அல்ல. தவறு.

தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்.

யேர்மனியில் சுரங்கப்பாதையில் நின்று ஒருவர் சில்லரைக் காசுகளுக்காக மவுத்தோக்கன் வாசித்துக் கொண்டிருந்தார். ஒரு தொலைக்காட்சி இசைப் போட்டியில் பங்கேற்கப் போய் முதல் பரிசான 100,000 யூரோக்களை அவர் பெற்றுக் கொண்டார். பல திறமையானவர்கள் சந்தர்ப்பங்களும் தளங்களும். கிடைக்காமல்  இன்றும் வீதிகளில் நிற்கிறார்கள்.

எல்லோருக்கும் எப்போதும் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முடிந்தால் கொடுக்கலாம். அதற்காக இப்படி வாழ்நாள் பூராவும் கலங்கிக் கொண்டு நின்றால், ‘ரொம்ப நல்லவண்டா’ என்று சொல்லத் தொடங்கி விடுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kavi arunasalam said:

யேர்மனியில் சுரங்கப்பாதையில் நின்று ஒருவர் சில்லரைக் காசுகளுக்காக மவுத்தோக்கன் வாசித்துக் கொண்டிருந்தார். ஒரு தொலைக்காட்சி இசைப் போட்டியில் பங்கேற்கப் போய் முதல் பரிசான 100,000 யூரோக்களை அவர் பெற்றுக் கொண்டார். பல திறமையானவர்கள் சந்தர்ப்பங்களும் தளங்களும். கிடைக்காமல்  இன்றும் வீதிகளில் நிற்கிறார்கள்.

 

👍............

கலைத்துறையில் வெளிச்சமும், அங்கீகாரமும் கிடைப்பது அரிதும், அதிர்ஷடமும் என்ற நிலை தான் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் இருக்கின்றது. 

'இளங்காத்து வீசுதே............' பாடலைப் பாடிய ஶ்ரீராம் அந்த வாய்ப்பைப் பெறுவதற்கு முன் எவ்வளவோ கஷ்டப்பட்டார் என்று இங்கு ஒருவர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆயிரக் கணக்கானோருக்கு கடைசி வரை எந்த வாய்ப்பும் கிடைக்காமலேயே போய் விடுகின்றது......😔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.