Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Almost half the sea creatures have died since 1970: All you need to know -  India Today

சட்டவிரோத மீன்பிடித்தலால் ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் பாலூட்டிகளின் உயிர்கள் பெரும் ஆபத்தில் உள்ளன.

தற்போது சிலர் பொட்டம் ட்ரோலிங் போன்ற சட்டவிரோத யுக்திகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஆமைகள், டொல்பின்கள் போன்ற விலங்குகளின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மேற்கு கடற்கரை பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆமைகளின் உடல்களை வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Colossal Sea Creatures

இறந்த ஆமைகளில் பெரும்பாலனாவைக்கு சுவாசிப்பதில் சிரமம், ஷெல் வெடிப்பு மற்றும் காயங்களால் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு கால்நடை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதால் மீன்பிடித் துறையும் சுற்றுலாத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்படும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேற்குப் பிராந்திய கால்நடை வைத்தியர் சுஹதா ஜயவர்தன தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/306301

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத மீன்பிடியால் கடல் முலையூட்டிகள் அழிவு; வனஜீவராசிகள் திணைக்களம்

Published By: DIGITAL DESK 3   18 JUL, 2024 | 12:03 PM

image
 

நாட்டின் கடற்பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்படுவதால் ஆமைகள் மற்றும் டொல்பின்கள் போன்ற கடல்  முலையூட்டிகள் உயிரிழப்பதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் அனைத்து மீன்கள் உட்பட கடல் முலையூட்டிகள் இறக்கின்றன.

இந்நிலையில், மேற்கு கரையோரப் பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் 10 ஆமை சடலங்களை திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட ஆமைகளின் உடல்களில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவைகள் சுவாசிப்பதில் சிரமம், காயங்கள் மற்றும் செதில்கள் சேதமடைதல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக  வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி முறைகளினாால் கடல் ஆமைகள் அழிவது மட்டுமல்லாமல் டொல்பின்கள் போன்ற கடல் முலையூட்டிகளுக்கும் தீங்கு விளைவிக்கப்படுகிறது.

எனவே, கடல் முலையூட்டிகளை பாதுகாப்பதற்காக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் வனஜீவராசிகள் திணைக்களம்  பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/188744

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.