Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Yogamani-Gallery-5-1400x600.jpeg
 
சாவகர் சேரியில் உலகத்தர சித்திரகூடம்
 
 

வலையில் பிடித்தது

ஜெகன் அருளையா

யாழ்ப்பாணத்தில் வதியும் நண்பர் ஜெகன் அருளையாவின் ஆங்கில முகநூற் பதிவொன்றின் தமிழாக்கம் இது. (நன்றி ஜெகன்)

வடக்கிற்கு வரும் உல்லாசப் பயணிகள் வெறுமனே கோட்டை, நல்லூர், ஐஸ் கிரீம் இத்தியாதிகளுடன் திரும்பி விடுவது சங்கடமாக இருக்கிறது. சிரமப்பட்டுத் தேடினால் இன்னும் பல விருந்துகள் புலன்களை அடையக் காத்துக்கொண்டிருக்கின்றன.

 

சாவகச்சேரியில் ஒரு சித்திரகூடம் இருக்கிறது. இதற்கு நான் முன்னரும் சென்றிருக்கிறேன். ரி.பி. ஹண்ட் ஆர்ட் கலரி (Tp Hunt Artgallery) என்ற பெயரில் இயங்கும் இச்சித்திரகூடத்தின் ஸ்தாபகரை இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறேன். யோகமணி என்ற நடுப்பெயரில் அழைக்கப்ப்டும் இவாஞ்செலீன் அலகரட்ணம் அமெரிக்காவில் வாழ்பவர் எனினும் வருடத்தின் கணிசமான காலத்தை இங்குதான் செலவழிக்கிறார். அவருடைய பூட்டனார் அருட்தந்தை தோமஸ் பீற்றர் ஹண்ட் அவர்களுடைய நினைவாக இச்சித்திரகூடத்தை சாவகச்சேரியில் நிறுவியிருக்கிறார். இங்கு சித்திரகூடம் (gallery), வரையகம் (studio), ஓவியப் பள்ளி ( art school) ஆகியன இயங்குகின்றன.

யோகமணி தனது முயற்சியால் கணிசமான ஓவியங்களைச் சேகரித்து காட்சிப்படுத்தி வருகிறார். இந்நிலையம் செயற்படுவதற்கான செலவிலும் பங்கேற்கிறார். நாடெங்குமுள்ள ஓவியர்கள் தமது ஓவியங்களை இக்கூடத்தில் காட்சிப்படுத்தி வருகிறார்கள். திறமையுள்ளவர்களும் திறமையற்றவர்களும், இளையவர்களும், முதியவர்களும் இங்கு வந்து சில் மணித்தியாலங்களை மகிழ்ச்சியுடன் கழிக்கிறார்கள்.

இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சித்திரங்கள் உலகத்தரம் வாய்ந்தவை. டொலரிலும் பவுண்டிலும் செலவு செய்யும் புலம் பெயர் தமிழருக்கு இவ்வோவியங்கள் நியாயமான விலையுள்ளதாகவே தெரிகிறது. கூடத்தின் பராமரிப்புக்கென அறவிடப்படும் 5% த்தைத் தவிர எஞ்சியது ஓவியர்களுக்கே போகிறது. நான் அதிகம் பேசவில்லை, மீதியை ஓவியங்களே பேசட்டும். இவற்றை நீங்கள் இனிமேல் அங்கு பார்க்க முடியாது. அது என்வீட்டுச் சுவர்களை இப்போது அலங்கரிக்கின்றன.

Yogamani-Gallery-1-141x250.jpeg
Yogamani-Gallery-2-141x250.jpeg
Yogamani-Gallery-3-141x250.jpeg
Yogamani-Gallery-4-141x250.jpeg
Yogamani-Gallery-5-444x250.jpeg
Yogamani-Gallery-6-444x250.jpeg
Yogamani-Gallery-7-141x250.jpeg
Yogamani-Gallery-8-444x250.jpeg
Yogamani-Gallery-9-444x250.jpeg

 

இச்சித்திரகூடத்தைத் தரிசிக்க விரும்புபவர்கள் நிலையத்துடன் தொடர்புகொண்டு முற்கூட்டியே பதிவுசெய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இருக்குமிடம் கூகிள் இடம் காட்டி: https://maps.app.goo.gl/k2reXaUCm9pRbmnDA

விலாசம்: No 27, Church Road, Chavakachcheri.

தொ.பே.::+94 74 313 6077 / +94 77 335 0281

மின்னஞ்சல்: huntartgallery18@gmail.com

https://marumoli.com/சாவகர்-சேரியில்-உலகத்தர/#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.