Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மாணவ மாணவியரின் கல்விக்கு ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் நிதி உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை மாணவ மாணவியரின் கல்விக்கு ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் நிதி உதவி

மதுரை மாவட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 21மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்காக ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மக்கள் அரங்கம் மூலம் நிதி சேகரிக்கப்பட்டு 2,10,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் உள்ள அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜெயா தொலைக்காட்சி செயற்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் முற்பகல் 11.00 மணிமுதல் 12.00 மணிவரை மக்கள் அரங்கம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் பல தரப்பட்ட தலைப்புக்களில் இருந்து விவாதங்கள் விவாதிப்பதுண்டு. அத்துடன் வலது குறைந்தோர் மற்றும் வறியவர்களுக்கு உதவுவதுடன், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் பின் தங்கியுள்ள கிராமங்களில் உள்ள தேவைகளையும் குறைபாடுகளையும் அறிந்து அவற்றை ஒளிப்பதிவு செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழி சமைத்து வருகிறது.

மக்கள் அரங்கம் நிகழ்ச்சியின் தேர்வு கடந்த வருடம் மதுரையில் இடம்பெற்ற போது அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் திரைப்பட இயக்குநர் விசு அவர்கள் நேர்முகத் தேர்வை நடாத்தியுள்ளார். அதன் போது மதுரை இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த மாணவ மாணவிகள் தங்களுக்கு உயர்கல்வியைத் தொடர பணவசதி இல்லாததால் உதவுமாறு விசு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களுடைய கோரிக்கைகளை ஆராய்ந்த இயக்குநர் விசு அவர்கள் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியின் ஊடாக நிதி திரட்டி 21 மாணவ மாணவியர்களுக்கும் கல்விக்கு உதவி வழங்கியுள்ளார். ஒருவருக்கு 10,000 ரூபா (பத்தாயிரம்) வீதம் 21 பேருக்கும் 2,10,000 (இந்தியப் பணம்)(30,000lk)வழங்கி அவர்களது கல்வியைத் தொடர உதவியுள்ளார். இதில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் பயனடைந்துள்ளனர். இந்நிகழ்வு நேற்று (2007.10.07) ஜெயா தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பப்பட்டது. இதன் மறு ஒளிபரப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12.10.2007) மாலை 5.00 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் இடம்பெறும்.

எமது நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து சென்று அங்கு அகதிகள் முகாமில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு தரப்பட்ட அமைப்புக்கள் தொண்டு நிறுவனங்கள் பல உதவிகள் வழங்கி ஆதரவளித்து வருகின்றன. பல கஷ்டங்களுக்கு மத்தியில் தமது கல்வியைத் கற்று வரும் மாணவ மாணவியரின் கோரிக்கையை செவிமடுத்து அவர்களின் கல்வியைத் தொடர நிதி உதவியை வழங்கிய தமிழகக் கருணை நெஞ்சங்களுக்கும், இயக்குநர் விசு அவர்களுக்கும் ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் எமது இணையத்தளம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசாட்சியில் இருந்தபோது ஈழத்தமிழர்கள் கல்விபயிலத் தடைவிதித்தவர்கள் இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். இதைப் பாராட்டும் நம்மவர்கள்............. சரி யாருக்காவது கிடைத்துவிட்டுப் போகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஜெயலலிதா அரசு 1991 - 1996 காலப்பகுதியில் ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் புதிதாக பல்கலைக்கழகத்தில் சேர தடை விதித்தது. பிறகு கலைஞரின் அரசு பதவியேற்றபோது ஈழத்தமிழர்கள் கல்வி கற்க அனுமதி வழங்கியது. என்றாலும் தற்பொழுது விசுவின் ஜெயத்தொலைக்காட்சி அரட்டை அரங்கத்தினால் ஈழத்தமிழ் மாணவர்கள் சிலருக்கு உதவி கிடைத்திருக்கிறது. விசுவுக்கும் ,ஜெயத்தொலைக் காட்சிக்கும் நன்றிகள்.

அப்போது பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் ஆனாலும் இதற்கு அவர்கள் சொன்ன காரணம். எங்கள்ஆட்கள்(மருத்துவம்பொறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.