Jump to content

தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரித்தல் அவர்களுக்கான சுயாட்சி என்பவை தான் எமது நிலைப்பாடு - ரஜீவ்காந்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களிற்கான சுயாட்சி தீர்விற்காக மக்கள் போராட்ட முன்னணி போராடும் - - தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரித்தல் அவர்களுக்கான சுயாட்சி என்பவை தான் எமது நிலைப்பாடு.. -ரஜீவ்காந்

Published By: RAJEEBAN   24 JUL, 2024 | 05:33 PM

image
 

சுயாட்சியுடன் கூடிய , ஒற்றைய ஆட்சியை நிராகரிக்கின்ற, அலகுகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியோடு, மக்கள் போராட்ட முன்னணி இந்த அரசியல் களத்தில் குதித்திருக்கின்றது என தெரிவித்துள்ள  மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் சுயாட்சிக்காக தொடர்ந்தும் போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அரகலய போராட்ட குழுவான மக்கள் போராட்ட முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

வடக்குகிழக்கில் பிறந்து வளர்ந்து வடக்குகிழக்கினது ஒடுக்குமுறைகளை மிக மோசமாக சந்தித்தவன் என்ற வகையிலே எங்களது அரசியல் பிரச்சினைகள், இன்று வரை தீராமலிருக்கின்றது என்ற வருத்தம் இன்றுவரை எங்களிற்கு இருக்கின்றது.

rajivkanth_july_2024.jpg

குறிப்பாக இன்று கருப்பு ஜூலை தினம், 1983ம் ஆண்டு கொத்துகொத்தாக தமிழ் மக்கள் தலைநகரில் எந்தவித கரிசனையும் இல்லாமல், கொல்லப்பட்டிருந்தார்கள்.

இன்றுவரை எந்தவொரு பொறுப்புக்கூறலும் இல்லாத அந்த நிகழ்வு போல எத்தனை ஆயிரக்கணக்கான கொலைகளும், வன்முறைகளும், காணாமல்ஆக்கப்படுதலும், தமிழ் மக்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்த நேரத்தில் தென்னிலங்கையிலிருந்து எத்தனையோ கட்சிகள் வடக்குநோக்கி வருகின்றன, அவர்கள் தமிழ் மக்களிற்கு என்ன வேண்டும் என்ன கொடுக்கப்போகின்றோம் என்பது தொடர்பில் இங்கு ஒன்றை கூறிவிட்டு, தென்னிலங்கையில் அதற்கு மாற்றான வேறு ஒன்றை கூறுவார்கள் கூறுவார்கள்.

அங்கு இனவாதத்தையும் இங்கு வாக்குகளை பெறுவதற்கான யுக்தியையும் சிங்கள அரசியல்வாதிகள் தொடர்ந்து கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இந்த விடயத்தில், இந்தமாதிரி விடயங்களை தென்னிலங்கையிலும் தமிழ்மக்கள் மத்தியிலும் சரியான விடயங்களை தெரிவிக்ககூடிய  ஒரே கட்சியாக மக்கள் போராட்ட முன்னணி உருவெடுத்துள்ளது.

நான் நினைக்கின்றேன், வரலாற்றில் முதல் தடவையாக சுயாட்சியுடன் கூடிய, ஒற்றை ஆட்சியை நிராகரிக்கின்ற, அலகுகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியோடு, மக்கள் போராட்ட முன்னணி இந்த அரசியல் களத்தில் குதித்திருக்கின்றது. இது தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் மத்தியில் எப்படியான குழப்பங்களை ஏற்படுத்தும், நன்கறிந்தும் அவை எல்லாவற்றையும் தாண்டி, மக்கள் நலன்கருதி, ஒட்டுமொத்த நாடும் முன்னோக்கி செல்லவேண்டும், நீண்டகால பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்ற நோக்கில் மக்கள் போராட்ட முன்னணி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது.

குறிப்பாக தென்னிலங்கையில் இருக்ககூடிய பிரதான இரு சிங்கள இடது சாரி கட்சிகளும் வடக்குகிழக்கில் நீண்டகாலமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இடதுசாரி கட்சியும் இணைந்து இந்த கட்சியை உருவாக்கியுள்ளன.

குறிப்பாக சுயாட்சி அலகுகள் என்பது தமிழ் மக்கள் மிக நீண்டகாலமாக தீர்வு என்ற அடிப்படையில் எதனை கேட்டுக்கொண்டிருந்தார்களோ, அதனை எந்த வித பாரபட்சமும் இல்லாமல் அவர்களிற்கு ஒரு ஆட்சிமுறையை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

எழுத்து வடிவத்தில், மூன்றுமொழிகளிலும் முன்மொழியப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில கட்சிகள் மாறிமாறி கூறுவது போல இல்லாமல், தீர்க்கமாக உண்மையாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயத்தை நான் இன்று ஊடகங்களிற்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

நீங்கள் என்று ஆட்சிக்கு வரப்போகின்றீர்கள் இதெல்லாம் எப்போது நடக்கப்போகின்றது என்ற கேள்விகள் எல்லாம் மக்களிற்கு இருக்கலாம்.

நாங்கள் போராட்ட முன்னணி என்று நாங்கள் சுயாட்சி என்ற முடிவை எடுத்தோமோ அதற்காகவும் எங்கள் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதை நான் இங்குள்ள தமிழ் மக்களிற்கும் ஊடகவியலாளர்களிற்கும் தெளிவுபடுத்த ஆசைப்படுகின்றேன்.

குறிப்பாக வடக்குகிழக்கை பொறுத்தவரையில் சிங்களமயமாக்கல் திட்டமிடப்பட்டு மிக நீண்டகாலமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது, இதனை நிறுத்துவதற்கான முன்மொழிவுகளை மேற்கொண்டிருக்கின்றோம், இந்த அடிப்படையில் சிங்களமயமாக்கல் தடுத்துநிறுத்தப்படும்.

people_stru_alia.jpg_11.jpg

அதேபோல பௌத்தமயமாக்கல் தொல்பொருள் என்ற பெயரிலே குறிப்பாக இலங்கையின் வடக்குகிழக்கிலே  இடம்பெறுகின்றது. எந்தவிதமான தயவு தாட்சண்யம் இல்லாம் வடக்குகிழக்கு தமிழ் மக்களின்  அடையாளங்களிற்கு மேல் எத்தனையோ ஆயிரக்கணக்கான நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன, அந்த நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்படவேண்டும் அவை தமிழ் மக்களிற்குரிய நிலங்கள் எனவே தொல்பொருள் என்ற பெயரில் கைப்பற்றப்பட்ட அத்தனை நிலங்களையும் விடுவிக்கவேண்டும் என்ற கொள்கையையும் நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.

https://www.virakesari.lk/article/189289

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களது கோரிக்கைகள் பார்க்க நன்றாக உள்ளது.சிங்கள மக்கள் இவர்களை ஏற்றுக் கொள்வார்களா?

அடுத்த தேர்தலில் போட்டியிடுகிறார்களா?

இன்னொரு பசிபட்டினி வந்தால்த் தான் மக்கள் இவர்களை தேடுவார்களா?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.