Jump to content

இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில் இந்தி மொழி கற்பதற்கு 36 இலங்கை மாணவர்கள் தெரிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
26 JUL, 2024 | 05:25 PM
image
 

இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசின் கீழ் இந்தி மொழி கற்பதற்கு 36 இலங்கை மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சன்தோஷ் ஜா நேற்று (25) வியாழக்கிழமை மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட இருந்த நிலையில் இறுதியாக இலங்கை மாணவர்களுடன் உரையாடியுள்ளார்.

இதன்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கலாச்சாரம், மொழி, இலக்கியம் மற்றும் மத உறவுகளை மேம்படுத்துவதில் இந்தி மொழி மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பை எடுத்துக்காட்டியுள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆறு மாணவர்களும், சுவாமி விவேகானந்தா கலாச்சார நிலையத்திலிருந்து நான்கு மாணவர்களும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், அனுராதபுரத்தில் உள்ள ரஜரட்ட பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், மாத்தறை பல்கலைக்கழகக் கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்களும், ஜேதவனாராம பௌத்த மடாலயத்திலிருந்து மூன்று மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இந்தி மொழி மற்றும் இலக்கியம் மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகமாகத் தாக்கம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் உள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்படக் கிட்டத்தட்ட 100 கல்வி நிறுவனங்களில் இந்திய மொழி மற்றும் இலக்கியம் கற்பிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/189456

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

களனிப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆறு மாணவர்களும், சுவாமி விவேகானந்தா கலாச்சார நிலையத்திலிருந்து நான்கு மாணவர்களும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், அனுராதபுரத்தில் உள்ள ரஜரட்ட பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், மாத்தறை பல்கலைக்கழகக் கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்களும், ஜேதவனாராம பௌத்த மடாலயத்திலிருந்து மூன்று மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் இவர்களை றோவுக்கு உளவுபார்க்க வைக்க இலகுவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:
 

களனிப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆறு மாணவர்களும், சுவாமி விவேகானந்தா கலாச்சார நிலையத்திலிருந்து நான்கு மாணவர்களும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், அனுராதபுரத்தில் உள்ள ரஜரட்ட பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், மாத்தறை பல்கலைக்கழகக் கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்களும், ஜேதவனாராம பௌத்த மடாலயத்திலிருந்து மூன்று மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வட பகுதி பல்கலைகளிலிருந்து எவரும் தெரிவாக இல்லை போல....... இதற்கு விண்ணப்பிப்பதற்கு பாடசாலை உயர்தரத்தில் ஹிந்தி மொழியை ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும் அல்லது பல்கலையில் ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும் என்றிருக்கின்றது. யாழில் சில பாடசாலைகளில் ஹிந்தி ஒரு பாடமாக இருக்கின்றது என்று நினைக்கின்றேன்.

ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த ஒன்பது மாத பயிற்சி நல்ல ஒரு ஊக்கமாக அமையலாம். ஹிந்தி இந்திய மொழிகளில் ஒப்பீட்டளவில் புதிய மொழிகளில் ஒன்று. மூல மொழிகளிலிருந்து இது எதனை எடுத்திருக்கின்றது, எதனை தவிர்த்திருக்கின்றது என்பது கூட நல்ல ஒரு ஆராய்ச்சியாக இருக்கும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.