Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 AUG, 2024 | 11:09 AM
image

டி.பி.எஸ். ஜெயராஜ் 

ரணில் விக்கிரமசிங்க முதலில் பிரதமராகவும் பிறகு ஜனாதிபதியாகவும் அதிகாரத்துக்கு வந்த நேரம் தொடக்கம்  எதிரிகளும்  விமர்சகர்களும் அவரைப்பற்றி பல தவறான கதைகளை கட்டிவிடுவதில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு அஞ்சுகிறார் என்பதும்  அவர் வழமைக்கு மாறான நடவடிக்கைகள் மூலமாக தேர்தலைப்   த்திவைப்பார் என்பதும் அந்த்கதைகளில் ஒன்று.

இந்த போலிக்கதை தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் திகதியை வர்த்தமானியில் வெளியிட்டபோது அம்பலமானது. விக்கிரமசிங்கவே ஒரு சுயேச்சை வேட்பாளராக முதலில் தனது கட்டுப்பணத்தையும் செலுத்தினார். இந்த உண்மை  முகங்கொடுக்க இயலாத அவரது எதிரிகள் தற்போது "பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு முன்னர் அவர் எதையாவது செய்வார்" என்று கூறி ஆறுதல் அடைகிறார்கள்.

இன்னொரு தவறான கதை ரணிலுக்கும் ராஜபக்சாக்களுக்கும் இடையிலான உறவைப் பற்றியது. ரணில் முதலில் பிரதமராகவும் பிறகு பதில் ஜனாதிபதியாகவும் அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார் என்பது நிச்சயமாக உண்மை. கோட்டா பதவியைத் துறந்த பிறகு பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 134 பேரினால் ஜனாதிபதியாக தெரிவானார். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்கள். ரணிலின் அமைச்சரவையின் மிகவும் பெரும் எண்ணிக்கையான உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களே. பிரதானமாக தாமரை மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவின் விளைவாகவே பட்ஜெட்டுகளும் சட்டமூலங்களும் சபையில் நிறைவேறின.

ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவில் தங்கியிருப்பவராக கருதப்பட்ட போதிலும், ஜனாதிபதி விக்கிரமசிங்க எப்போதும் தனது எண்ணப்படி செயற்படுபவராகவே இருந்துவருகிறார். ராஜபக்சாக்களுடன் சுமுகமான உறவுகளை பேணியதுடன் அவர்களின் வேண்டுகோள்களில் சிலவற்றுக்கு விட்டுக்கொடுத்த அதேவேளை, அவர்களிடம் இருந்து ரணில்  மிகவும  உறுதியாக சுதந்திரமானவராகவே இருந்துவந்தார்.

இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து விக்கிரமசிங்க  ராஜபக்சாக்களிடம் இருந்து சுதந்திரமான பொருளாதார பொருளாதார கொள்கை ஒன்றை வகுத்துச் செயற்பட்டார். அவரின் பொருளாதார நடவடிக்கைகளில் பலவற்றை ராஜபக்சாக்கள் விரும்பவில்லை. ஆனால், அவர்கள் தயக்கத்துடன் ஒத்துப்போனார்கள். ராஜபக்சாக்களுக்கு ரணில் எந்தளவுக்கு தேவையோ அதேயளவுக்கு ரணிலுக்கு ராஜபக்சாக்கள் தேவைப்பட்டதே இதற்கு காரணமாகும்.

'ரணில் ராஜபக்ச' 

உண்மைநிலை இவ்வாறிருந்த போதிலும்  எதிரிகள் அவரை ராஜபக்சாக்களின் ஒரு உருவாக்கம், பொம்மை அல்லது கையாள் என்று தொடர்ச்சியாக தாக்கிப்பேசினர். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் உருவாக்கப்பட்ட ' ரணில் ராஜபக்ச' என்ற பதத்தை அருவருக்கத்தக்க அளவுக்கு பலரும் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தனர்.

விக்கிரமசிங்க ராஜபக்சாக்களுடன் அணிசேர்ந்து நிற்கிறார் என்ற அரசியல் மாயை ஐக்கிய மக்கள் சக்தியின் பிடிக்குள் தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு சஜித் பிரேமதாசவின் கைகளில் ஒரு வலிமையான கருவியாக இருந்து வந்திருக்கிறது. தவறாக உருவகிக்கப்பட்ட ரணில் - ராஜபக்ச இணைப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தாய்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன்  மீண்டும் இணைவதை தடுக்கும் இரு பிரதான காரணங்களில் ஒன்று ஒன்றாகும். ரணில் பொதுஜன பெரமுனவின் அனுசரணையிலான ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படப்போகிறார் என்று அவர்களுக்கு கூறப்பட்டது.

தங்களது தாய்க்கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மீண்டும் ஐக்கியப்பட  தயங்குவதற்கு இரண்டாவது காரணம் 2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு மகத்தான ஒரு வெற்றி கிடைக்கப்போகிறது என்று எதிர்வு கூறும் புதிரான ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பாகும்.

ராஜபக்சாக்களுடனான ரணிலின் உறவுமுறை பற்றிய தவறான கதை அண்மைய நிகழ்வுகளினால் தற்போது  நிர்மூலம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் எனது கட்டுரையில் விரிவாக கூறப்பட்டதைப் போன்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளிப்பதில்லை என்று பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு தீர்மானித்திருக்கிறது.

தங்களது சொந்தத்தில் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கு பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் அந்த கட்சிக்கும் ரணிலுக்கும் இடையிலான பிளவை மேலும் உறுதிப் படுத்தியிருக்கிறது. நீண்டநாட்களாக முன்னெடுக்கப்பட்டு  வந்த பொய்ப் பிரசாரங்கள் நிர்மூலம் செய்யப்பட்டு  விட்டன . ஆனால் இதை ஜீரணிக்க முடியாத ரணில் விரோத சக்திகள் இருக்கின்றன. அதனாால் இவையெல்லாம் ஒரு நாடகம் என்றும் மிக விரைவில் ராஜபக்சாக்களும் ரணிலும் மீண்டும் இணைவார்கள் என்று இந்த பிரிவினர் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

பொதுஜன வேட்பாளர் 

இந்த அபத்தப் பிரசாரம் கூட உண்மையான கள நிலைவரங்களினால் இப்போது மறுதலிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வாரம் எனது கட்டுரையில் கூறியதைப் போன்று, விக்கிரமசிங்கவை ஆதரி்காமல் கட்சியின் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு பொதுஜன பெரமுன எடுத்த உத்தியோகபூர்வ தீர்மானம் தாமரை மொட்டை  மீது மிகவும் கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உட்பட நூறுக்கும் அதிகமான பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உத்தரவையும் மீறி ரணிலுக்கு ஆதரலளிப்பதற்கு உறுதி பூண்டிருக்கிறார்கள். மேலும் பொதுஜன பெரமுனவின் பல மாவட்ட குழுக்களும் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றன.

பொதுஜன பெரமுனவின  ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் மூலமாக நிலைவரம் மேலும் குழப்பமான மாறியிருக்கிறது. கசீனோ உரிமையாளரும் பெரிய தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நியமிக்கப்படவிருந்த போதிலும், இறுதி நேரத்தில் தனிப்பட்ட காரணங்களைக் கூறி அவர் பின்வாங்கிவிட்டார். அதற்கு பிறகு  மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பொதுஜன பெரமுனவின  ஜனாதிபதி வேட்பாளராக முறைப்படி நியமிக்கப்பட்டார்.

நாமல் ராஜபக்சவின் பிரவேசத்தை அடுத்து 2024 ஜனாதிபதி தேர்தலின் களநிலைவரத்தின் அரசியல் சமநிலை மாறத் தொடங்கியிருக்கிறது. ஜனாதிபதி விக்கிரமசிங்க அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களையும் ஊடக நிறுவனங்களின் உயரதிகாரிகளையும் சந்தித்தபோது அவரிடம் பல கேள்விகள் தொடுக்கப்பட்டன.' தமிழன் ' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜா பின்வரும் கேள்வியை ஜனாதிபதியிடம் கேட்டார்.

கேள்வி - தம்மிக்க பெரேரா ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொண்டதையடுத்து ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டிருக்கிறார். பெரும்பாலான பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் உங்களை ஆதரிக்கும் நிலையில் நாமல் ராஜபக்சவிடம் இருந்து ஒரு வலிமையான சவாலை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? 

 ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒரு கணம்  யோசித்துவிட்டு பின்வருமாறு பதிலளித்தார்.

"போட்டி எத்தகைய தன்மையானதாக இருக்கும் என்று என்னால்  எதிர்வு கூறமுடியாது. ஒரு போட்டியில் ஈடுபடுவது அல்ல,  நாட்டை எவ்வாறு எம்மால் முன்னேற்ற முன்னேற்றலாம் என்பதை மக்களுக்கு காட்டுவதும் மக்களுக்கு எனது கொள்கைளை முன்வைப்பதுமே  எனது இலக்கு. எனது நோக்கை நீங்கள் இணங்கிக் கொண்டால் எனக்கு வாக்களிக்கலாம். மற்றையவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி என்பது பற்றி நான் கவனம் செலுத்தவில்லை. நாமல் வரவிரும்பினால்  எனக்கு ஆட்சேபனை இல்லை. உண்மையில் அவர் தனது செய்தியை தெளிவாகக் கூறவேண்டும்.

"நாமல் ராஜபக்சவும் பொதுஜன பெரமுனவும் பாராளுமனனறத்தில் நடைபெற்ற ஜனாதிபநி தெரிவில் என்னை ஆதரித்தார்கள். அதற்காக நான்  அவர்களுக்கு  நன்றியுடையவனாக இரு்கிறேன். கடந்த இரு வருடங்களாக என்னுடன் சேர்ந்து பணியாற்ற  அவர்கள் இணங்கினார்கள். அந்த காலகட்டம் இப்போது கடந்துவிட்டது.

"ஒரு வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது ஒரு வேட்பாளரை நியமிப்பதா என்பது தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை  தீர்மானிப்பது இப்போது அவரைப் பொறுத்தது. தனது யோசனைகளை நாட்டுக்கு முன்வைப்பது அவரது பொறுப்பு.

"இது எனது தனிப்பட்ட போட்டியல்ல. தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பது மக்களைப் பொறுத்தது. அவர்கள் விரும்பினால் எனது செயற்திட்டத்தை ஆதரித்து அதன்படி எனக்கு வாக்களிக்கலாம். அல்லது இன்னொரு வேட்பாளரை ஆதரிக்கலாம்."

சினேகபூர்வ முரண்பாடுகள்

ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் பதில் நழுவல் தன்மை வாய்ந்ததாக தோன்றினாலும் கூட 2022ஆம் ஆண்டில் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டு பொருளாதார நெருக்கடியின் சவாலை ஏற்றுக்கொண்டதில் உள்ள அவரின் அரசியல் தத்துவத்தின் உட்கருத்தை பிரதிபலிக்கிறது. ரணிலின் கருத்துக் கோணத்தில் பொதுஜன பெலமுனவுடன் அவருக்கு  இருக்கும் வேறுபாடுகள் சினேகபூர்வமானவையும் குறைந்தளவு முரண்பாடுகளைக் கொண்டவையுமாகும்.

கடந்த இரு வருடங்களில் ரணிலின் ஜனாதிபதி பதவி உண்மையில்  பொதுஜன பெரமுனவுடனான ஒரு கூட்டுப் பங்காண்மையாகும். ரணிலுடன் மோதல் தன்மையான போக்கு ஒன்றைக் கடைப்பிடிப்பதற்கு பதிலாக அவரின் சாதனையில் தங்களுக்கும் பங்கிருக்கிறது உரிமைகொண்டாடி அவருக்கு ஆதரவாக நடந்துகொண்டிருந்தால் அது பொதுஜன பெரமுனவின் நலன்களுக்கு உகந்ததாக இருந்திருக்கும். நாமலின் நடவடிக்கைகளில் தவறானவை என்று தான் கருதுகின்றவைக்காக அவரை தனது பதிலில்  சற்று கடிந்துகொண்ட ரணில் நேரடியாக விமர்சிப்பதை சாதுரியமாக தவிர்த்துக்கொண்டார்.

பொதுவில் பொதுஜன பெரமுனவுக்கும் குறிப்பாக நாமல் ராஜபக்சவுக்கு முக்கியமானவையாக இருப்பவை வேறு விடயங்களாகும். தாஙகள் அலட்சியப்படுத்தப்பட்டதால் ராஜபக்சாக்கள் சீற்றமடைந்தனர். முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டும், தினேஷ் குணவர்தனவுக்கு பதிலாக நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும், எதிர்கால அரசாங்கம் ஒன்றில் தாமரை மொட்டு கட்சிக்கு அமமைச்சுப் பதவிகளில் பெரும்பங்கை வழங்க வேண்டும் என்பன போன்ற தக்களின் கோராக்கைகளுக்கு இணங்கவில்லை என்பதால் ரணில் மீது பசிலுக்கும் நாமலுக்கும் கடுமையான எரிச்சல்.

ஜனாதிபதி தொடர்பில் புதிய யதார்த்தநிலையை எதிர்நோக்கியபோது ராஜபக்சாக்கள் கடுமையான கோபமடைந்தனர். அமைச்சர்கள், இராஜாங்க  அமைச்சர்கள் உட்பட பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உயர் தலைமைத்துவத்தை அலட்சியம் செய்துகொண்டு  ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.

பரிதாபமான நிலைவரம்

இப்போது பொதுஜன பெரமுனவின் கட்சிக் கட்மைப்பின் பல மாவட்ட குழுக்களும் ரணிலுக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கி்ன்றன. ராஜபக்சாக்கள் தாங்கள் தாபித்த கட்சிக்குள் கட்டமைப்பு அதிகாரத்தை மாத்திரம் தக்கவைத்துக் கொண்டிருக்கிற அளவுக்கு அவர்கள் ஒரு பரிதாப நிலையில் இருக்கிறார்கள்.  உறுப்பினர்களில் கணிசமான ஒரு பிரிவினர் ரணிலின் பக்கத்துக்கு சென்று விட்டதால் கட்சியின் செயற்பாட்டு அதிகாரம் கடுமையாக அரித்தெடுக்கப்பட்டுவிட்டது.

அதனால் நாமல் ராஜபக்ச எதிர்நோக்கும் சவால் விசித்திரமான ஒன்று. அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறப் போவதில்லை. தனது குடும்பத்தின் தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கே கூடுதலான அளவுக்கு மககள் ஆதரவு இருக்கிறது என்றும் ரணில் ஆதரவாளர்களாக மாறி துரோகம் செய்துவிட்ட பாராளுமன்ற உறுபாபினர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்றும் காட்டுவதே நாமலின் குறிக்கோள்.

அதனால் பொதுஜன பெரமுவில் இருந்து பிரிந்து  விக்கிரமசிங்கவின் பக்கத்துக்கு சென்றவர்களினால்  திரட்டப்படக்கூடிய வாக்குகள் தாமரை மொட்டினால் பெறக்கூடிய வாக்குகளை விடவும் பெருமளவுக்கு குறைந்ததாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு நிலை ஏற்படுமானால் ரணில் தோல்வியடையும் நிலை உருவாகும். ஆனால் அது குறித்து  ராஜபக்சாக்கள் கவலைப்படுவா்கள் என்று தோன்றவில்லை. ராஜபக்சாக்களை பொதுத்தவரை நாமல் வெற்றிபெறுவதை விடவும் ரணில் தோற்றுப்போவதே மிகவும் முக்கியமானது.  

"சஜித் ராஜபக்ச"

விக்கிரமசிங்க மீதான வெறுப்பு இப்போது நாமல் ராஜபக்சவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் பொதுவானதாக இருக்கிறது. இரு்முனானாள் பிரதமர்களளினதும் ஜனாதிபதிகளினதும் இரு மகன்கள் தங்களது சொந்த வெற்றிகளையும் விட ரணிலின் தோல்வியில் குதூகலிப்பார்கள்.  சஜித்துக்கும் நாமலுக்கும் ஓத்த நலன்கள் இல்லாவிட்டாலும் கூட இது விடயத்தில் அவர்களுக்கு இடையிலான நலன்கள் சங்கமிக்கின்றன. இந்த  பின்னணியில் " சஜித் ராஜபக்ச " என்ற பதம்  பிரபல்யமாகிறது.

சஜித் பிரேமதாசவுக்கும் நாமல் ராஜபக்சவும்கும் இடையிலான ஒரு  அரசியல் " புரிந்துணர்வு " பற்றிய பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. விக்கிரமசிங்கவை " ரணில் ராஜபக்ச " என்று குறிப்பிட்டதைப் போன்று பிரேமதாச " சஜித் ராஜபக்ச " என்று குறிப்பிடப்படுகின்றார். இந்த முழுப்பிரசாரமும் ரணில் ஆதரவு இயந்திரத்தின் ஒரு  புத்தாக்கமாக தோன்றுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி  கொல்லப்பட்டபோது கறுப்பின தலைவரான மல்கம் எக்ஸ் " கோழிக்குஞ்சுகள் கூரையில் ஏறிக் கூவுவதற்கு வந்துவிட்டன "    என்று கூறினார். ரணிலுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களினால் உருவாக்கப்பட்ட தவறான கதை இப்போது திரும்பிவந்து அவர்களைத் தாக்குகின்ற  தற்போதைய பின்புலத்தில் அந்த பிரபல்யமான கூற்று நினைவுக்கு வருகிறது. ரணில் ராஜபக்ச தேய்ந்து சஜித் ராஜபக்ச உரத்துப் பேசப்படுகிறார். ஒருவருக்கு ஒரு சூழ்நிலையில் பொருத்தமாக அமைவது இன்னெருவருக்கு வேறு ஒரு சூழ்நிலையில் பொருத்தமாக இருக்கும்.

தம்மிக்க பெரேரா

தொழிலதிபர் தம்மிக்க பெரேராவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாராகப்போகிறார் பேசப்பட்டது.ரணிலுக்கும் ராஜபக்சாக்களுக்கும் இடையில் கசப்புணர்வு ஏற்படத்தொடங்கிய நேரத்தில் இருந்து பொதுஜன பெரமுன வேட்பாளராக தம்மிக்க பெரேராவை நியமிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.  பசிலும் நாமலும் தம்மிக்க பெரேராவை விரும்பினர்.  அவர் இணங்கவில்லையானால் தான் களத்தில் இறங்கத் தயாராக இருப்பதாக நாமல் கூறினார். 

பொதுஜன பெரமுனவின் ஜூலை 29 அரசியல் குழு கூட்டத்துக்கு பிறகு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. தம்மிக்க பெரேராவே கட்சியின் தெரிவாக இருப்பார் வெளிப்படையாக தெரிந்தது. பொதுஜன பெரமுனவின் வாக்குகளுக்கு புறம்பாக தம்மிக்க தனது சொந்தத்தில் பெருமளவு வாக்குகளை திரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தம்மிக்க தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி துரிதமாக ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். சுவரொட்டிகள் அச்சிடப்பட்டன. பிரசார கீதமும் இயற்றப்பட்டது. பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தான் நியமிக்கப்படும் அறிவிப்பு ஆகஸ்ட் 6  நெலும் பொக்குணவில் வைத்து செய்யப்படவேண்டும் என்று  சோதிடரின் ஆலோசனையின் பிரகாரம் தம்மிக்க விரும்பினார். முன்னதாக அந்த அறிவிப்பு ஆகஸ்ட் 7 செய்யப்படவேண்டும் என்று பொதுஜன பெரமுன விரும்பியது.

திடீரென்று எல்லாமே மாறியது.  தனிப்பட்ட காரணங்களுக்காக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தன்னால் இயலாமல் இருப்பதாக தம்மிக்க பெரேரா பொதுஜன பெரமுனவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். என்ன நடந்தது என்பதைப் பற்றி பெருமளவு ஊகங்கள் கிளம்பின. அவரின் மனமாற்றத்துக்கு சாத்தியமான பல காரணங்கள் குறித்து பொதுவெளியில் பேசப்பட்டன.

ஒரு மருத்துவ அவசரநிலை காரணமாக பெரேராவின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாவும் அவரின் மனமாற்றத்துக்கு அதுவே காரணம் என்றும் கூறப்பட்டது. அவர் போட்டியிடுவதை மனைவியும் பிள்ளைகளும் கடுமையாக ஆட்சேபித்ததாகவும் கூட கூறப்பட்டது.

தம்மிக்கவின் வர்த்தக நலன்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை முன்னெடுக்கவேணடும் என்று வர்த்தக கூட்டாளிகள் கூறிய கடுமையான  ஆலோசனை அவர்  பின்வாங்கியதற்கு  சாத்தியமான காரணமாக இருக்கக்கூடும். பொதுஜன பெரமுனவின் முக்கியமான உறுப்பினர்கள் பெருமளவில் கட்சியை விட்டு வெளியேறியதால் தம்மிக்க கலங்கிப் போய்விட்டார் அவருக்கு நெருக்கமான சில வட்டாரங்கள் அபிப்பிராயப்பட்டன. பலவீனப்பட்டுவிட்ட பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு இல்லை என்று பயந்து அவர் பின்வாங்கிவிட்டார்.

நாமல் ராஜபக்சவின் பிரவேசம்

காரணம் எதுவாக இருந்தாலும், தம்மிக்க பெரேராவின் வெளியேற்றம் நாமல் ராஜபக்சவின் பிரவேசத்துக்கு வழிவகுத்தது. அவர் இப்போது பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர். விக்கிரமசிங்க மீதான வெறுப்பு அவரை எதிர்ப்பதில் நாமல் மீது பெருமளவுக்கு செல்வாக்கு செலுத்தியிருக்கிறது என்கிற அதேவேளை மெதமுலான முடிக்குரிய இளவரசருக்கு இன்னொரு காரணமும் ஊக்கத்தைக் கொடுக்கிறது.

பொதுஜன பெரமுன வலிமையான ஒரு அரசியல் சக்தியாக தொடர்ந்தும் இருக்கவேண்டுமாக இருந்தால் கட்சி 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நாமல் மெய்யாகவே நம்புகிறார். விக்கிரமசிங்கவை பொதுஜன பெரமுன ஆதரித்தால் கட்சிக்கும் தனக்கும் அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகும் என்று அவர் உணர்ந்தார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவேண்டியது இப்போது நாமல் ராஜபக்சவின் விதியாகிப் போய்விட்டது.அது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம் ஆகஸ்ட் 7 ஒரு சுபநேரத்தில் செய்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் மிகவும் எளிமையான முறையில் அந்த வரலாற்று முக்கியத்துவ நிகழ்வு நடந்தது.

சாகர காரியவாசத்துடன் கைகுலுக்கிய நாமல் தந்தையார் மகிந்த மற்றும் சிறிய தந்தையார் பசில் முன்னிலையிலும் தாழ்பணிந்து அவர்களது ஆசீர்வாதங்களை (முத்தங்களை) பெற்றுக் கொண்டார். அதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி உறுப்பினர்கள் நாமலைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். நாமலின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது.

அந்த நிகழ்வில் நாமலின் பெரிய தந்தையார் சமாலும் இன்னொரு சிறிய தந்தையார் கோட்டாபயவும் கலந்துகொள்ளவில்லை. அதேவேளை அவரின் மைத்துனர் நிபுன ரணவக்க நிகழ்வில் காணப்பட்டார். நாமலின் ஒன்றுவிட்ட சகோதரர்  மொனராகலை பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சஷீந்திர ராஜபக்ச  அங்கு வரவில்லை. நாமலின் தாயார் சிராந்தியும் சகோதரர்கள் யோஷிதவும் றோஹிதவும் கூட அங்கு காணப்படவில்லை.

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் வருகை தராமல் இருந்தது குறித்து பலவிதமான கதைகள் கூறப்படுகின்றன. பெரிய தந்தையார் சமால் ராஜபக்சவும் சகோதரர்கள் யோஷிதவும் றோஹிதவும் பொதுஜன பெரமுன ஜனாதிபதி விக்கிரமசிங்கவை ஆதரிக்கவேண்டும் என்று விரும்பியதாகவும் அவர் மீதான நாமலின் பகைமையானால் அவர்கள் குழப்பத்துக்கு உள்ளாகியிருப்தாகவும் கூறப்படுகின்றது. ஆனால் அந்த நிகழ்வு ஒரு குடும்ப விவகாரமாக அல்லாமல் கட்சி விவகாரமாகவே அமையவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் என்று நாமலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின. எதுவாக இருந்தாலும் தஙமகளுக்குள் என்னதான் சச்சரவுகள் இருந்தாலும் ”“வெளியாருக்கு" எதிராக ராஜபகசாக்கள் எப்போதும் நெருக்கமாக அணி சேர்ந்து விடுவார்கள் என்பது நன்கு தெரிந்ததே.

வரலாற்றின் குப்பைக்கூடை

இந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றிபெற முடியாது என்பது நாமல் ராஜபக்சவுக்கு தெரியும். ஆனால் கணிசமான வாக்குகளைப் பெற்று ராஜபக்சாக்கள இன்னமும் வரலாற்றின் கூப்பைக்கூடைக்குள் வீசப்படவில்லை என்று உலகிற்கு காட்ட வேண்டும் என்பதே அவரது நோக்கம். தனது தந்தையார் முதுமையடைந்து சுகவீனமுற்றிருக்கின்ற போதிலும் அவரது வசீகரமும் செல்வாக்கும் இன்னமும் சுருங்கிவிடவில்லை என்று  காட்ட நாமல் விரும்புகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக பொதுஜன முக்கியஸ்தர்களின் வெளியேற்றம் கட்சியை பலிவீனப்படுத்திவிடவில்லை என்றும் அது இன்னமும் மக்கள் மத்தியில் வலுவுடைய ஒரு  சக்தியாக இருக்கிறது என்றும் காட்டுவதற்கு நாமல் விரும்புகிறார்.

ஒரு பருமளவு வாக்குகளை திரட்டுவதில் நாமல் வெற்றி பெறுவாரேயானால், பொதுஜன பெரமுனவுக்குள் தனது தலைமைத்துவ நிலையை அவர் வலுப்படுத்துவதற்கு அது உதவும்.  பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினர்களில்  பெரும்பாலானவர்கள் ரணில் பக்கம் சென்றுவிட்டதால் இனிமேல்  நாமலின் அதிகாரம் பெருமளவுக்கு மேம்படுத்தப்படும்.

ஜனாதிபதி தன்னால் பெறப்படக்கூடிய வாக்குகளை ஒரு தளமாகக் கொண்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நாமல் கட்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி ஒரு பெரும் எண்ணிக்கையான ஆசனங்களைை பெறக்கூடியதாகவும் இருக்கும். அது அவர் கூட்டரசாங்கம் ஒன்றின் பிரதமராக அல்லது எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் கூடும். பிறகு 2029 ஜனாதிபதி தேர்தலில் நாமல் போட்டியிட்டு வெற்றி பெறவும் உதவலாம்.

உண்மையில் அவர்களின் திட்டப்படி  நடந்தால் எல்லாமே நன்றாக இருக்கும். ஆனால் எலியும் மனிதர்களும் சிறந்த திட்டங்கள் அடிக்கடி குழம்பிப்பிப் போய்விடுகின்றன என்று ஸ்கொட்லாந்து கவிஞர் றொபேர்ட் பேர்ண்ஸ் கூறியது நினைவுக்கு வருகிறது. 2024 ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச பரிதாபத்துக்குரிய வகையில் வாக்குகளை எடுத்தால் என்ன நடக்கும்?  இதிகாசத்தில் வரும் பீனிக்ஸ் பறவை போன்று சாம்பலில் இருந்து மீண்டும் எழுவதற்கு ரணிலின் துணிச்சலும் மீண்டெழும் ஆற்றலும் நாமலுக்கு இருக்கிறதா?

https://www.virakesari.lk/article/190870

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் சிங்களத்துக்குச் சாமரம் வீசும் விசுவாசியின் ரணில் ஆதரவுப் பரப்புரைக் கட்டுரை. நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன. ஆகக் குறைந்தது ''சஜித் ராஜபக்ச'' என்ற தலைப்பின்கீழ் வரும் பத்தியில் நான்காவது வரியைக் கட்டாயம் திருத்த வேண்டும். 

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.