Jump to content

விவாதத்துக்குரிய விடயங்கள்


இவ்வாறான விவாதம் நல்லது.  

12 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

அன்பின் யாழ் நண்பர்களுக்கு வணக்கம். இப்பகுதியில் நான் சில விவாதத்துக்குரிய விடயங்களை முன்வைத்து அது தொடர்பான கருத்துத்தேடலில் உள்நுழையவிரும்புகிறேன். தயவுசெய்து இவ்விவாதத்துக்கு தொடர்பற்ற எந்த விடயத்தையும் இப்பகுதியில் குறிக்கவேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு தோன்றும் சின்னவிடயத்தையும் தலைப்புடன் தொடர்புபட்டதாக இருப்பின் அவசியமாககுறிப்பிட மறக்கவேண்டாம்.

சரி இப்போது விவாததலைப்புக்கு வருகிறேன்.

எங்களுடைய ஊரின் பெயர்களை யாழ்ப்பாணத்தை Jaffna ஆகவும் பருத்தித்துறையை Point Pedro ஆகவும் மாற்றியெழுதிக் கொண்டிருக்கிறோமே இது சரியானதா? காந்தனை Kanthan என்று எழுதும் நாம் கந்தன் என்பதை எப்படி எழுதுவோம்?

இவ்விடயம் பற்றியும் இதுதொடர்பான விடயம் பற்றியும் மட்டும் கருத்துக்களை முன்வைப்பதன்மூலம் ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு அழைக்கிறேன். இத்தலைப்பு எளிமையாக விளக்குவதற்காக மட்டுமே கையாளப்பட்டுள்ளது என்பதையும் இதன் கருப்பொருட்தலைப்பை கீழே தருகின்றேன்.

தமிழிலுள்ள சொற்களை ஆங்கிலத்தில் மாற்றுகின்றபோது நாம் கையாண்டுகொண்டிருக்கின்ற மொழியாண்மை சரியானதா?

Link to comment
Share on other sites

நல்ல விடயம். ஆனால் எண்சாஸ்திரத்திற்கு ஏற்றவாறு பெயர் மாற்றுகின்றோமென்று சிலர் செய்யும் கோமாளித்தனங்களை எதில் சேர்ப்பது. உதாரணமாக எனக்குத் தெரிந்த ஒருவர் தன் மகளிற்கு வைத்த பெயர் மூகாம்பிகா அவர் அப்பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது Mugampga எனவே எழுதுவார். வாசிக்கும் போது பிரச்சினையல்லோ எனக்கேட்டேன். அவர் சொன்னார் பெயரை வாசிக்கும் போது Pயை Piயென வாசித்தால் சரியாம். எப்படியாக இருந்த தமிழ் இப்ப இப்படியாக போய்விட்டது. :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

உங்கள் இரண்டு பேருக்கும் பரியாரியார் தடியோடை வரப்போறார். :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது எண்ல்டா உண்மை...தாத்தா வயசுக்கு ஏற்ற போல நடக்கிறதே இல்லை....

numerology - இதனாலயே பல பிரச்சனைகள்...

Link to comment
Share on other sites

சின்னப்பு நான் அவதானித்து வாறன் நீர் கொஞ்சம் எல்லா கருத்துக்களத்திலும் குண்டக்கம் மண்டக்கமா கதைக்கிறியள்....

கதைக்கிற ஆட்களை திசை திருப்பிறியள்

நீங்கள் யாருக்கு வேலை செய்கிறள் அதை ஒருக்கால் சொல்லுறியளோ..

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

நான் உங்களில் கோபமாக இருக்கிறன்...

உங்களை மடடுமல்ல எல்லாரையும் கவனித்துக்கொண்டு இருக்கிறன்...

Link to comment
Share on other sites

தமிழன் என்று உணர்வு எப்பொழுது வருகின்றதோ அப்பொழுதுதான் எமது போராட்டத்தில் முழுமைபெற்றோம் என்று பொருள்.

நாங்கள் தமிழனாக எல்லோரும் மாறினாலே தமிழீழம் தானாக கிடைத்துவிடும்.

தமிழனாக தமிழுணர்வு வரவேண்டும்.

ஆங்கிலேயனைத்தவிர எந்த இனத்தவன் ஆங்கிலத்தில் கையொப்பம் இடுகின்றான்?

தமிழுணர்வு எல்லோருக்கும் வரவேண்டுமானால் துளித்துளியாக சிறுமாற்றங்கள் வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுனாமி, கோவிக்காதிங்கோ..அப்பு மப்புல பேசுது போல இருக்கு :mrgreen:

ப.தாத்த - துளிதுளியா எண்டா எப்ப தான் மாற்ற முடியும்..தடால் எண்டு மாற்ற வேண்டும்..

Link to comment
Share on other sites

தயவுசெய்து இவ்விவாதத்துக்கு தொடர்பற்ற எந்த விடயத்தையும் இப்பகுதியில் குறிக்கவேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு தோன்றும் சின்னவிடயத்தையும் தலைப்புடன் தொடர்புபட்டதாக இருப்பின் அவசியமாககுறிப்பிட மறக்கவேண்டாம்.
patiyaatiyaar கேட்டுக்கொண்டுது போல் தொடங்கப்பட்ட கருத்துடன் தொடர்புபட்ட கருத்துக்களை மட்டும் முன்வையுங்கள்.
Link to comment
Share on other sites

மன்னிக்கவும்

நான் சொன்னதை களப்பொறுப்பாளர் பிழையாக விளங்கி இருக்கிறார் போல இருக்கு....

நாங்கள் எவ்வளவு திருத்தம் சொன்னாலும் தங்களை எல்லாம் தமிழ் அறிஞர் என்று சொல்லித்திரிகிறவை தங்களைத் திருத்த மாட்டினம்....

அப்படி ஏதாவது உருப்படியாக கலந்தாலோசிக்க வேண்டும் என்றால் அவைகளை முதலில் இணையத்தளங்களைப்பார்க்க சொல்லி ஒரு எழுத்து மூல விண்ணப்பம் விடுவம் (யாழ் இணையத்தளம் சார்பில்)

அல்லது அவைகளையும் கலந்தாலோசிக்க களத்திலை பங்குபற்ற அழைப்பு விடுவம்

இதுகள் ஒன்றையும் செய்யாது நாங்கள் கொஞ்சப்பேர் வெறுவாய் சப்புவதாய் தான் முடியும்

முதலில் யாழ் இணையத்தளம் அவர்களுக்கு ஒரு திறந்த அழைப்பு விடவேண்டும்

அதற்குப்பிறகு களத்தில் கதைக்கிறதுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும்

இந்த இணையத்தில் பெரிய தமிழ் அறிஞர் என்று சொல்லப்படுகிறவர்களை பகிரங்க அழைப்பு விட வேண்டும்.......

Link to comment
Share on other sites

முதலில் அ, ஆ வேறுபாடுகளை எழுதும்போது( ஆங்கிலத்தில்) a, aa எழுதுவதை முக்கியமாக வொள்ளவேண்டும். காந்தன் கந்தன் இருவருடைய பெயர்களும் எழுதும்போது இம்முக்கியத்துவத்தை உணரலாம்.

இதுபோல தேவன் Thevan ஆகவும் தமிழ்நிலா Thamilnila என எழுதலே சிறப்பு. இதுபற்றிய உங்கள் கருத்தென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் - thamizh - இதில எப்படி zhவரும்? எனக்கு தமிழ் பாடசாலையில் இப்படிதான் சொல்லி தந்தவை..

Link to comment
Share on other sites

மன்னிக்கவும்

நான் சொன்னதை களப்பொறுப்பாளர் பிழையாக விளங்கி இருக்கிறார் போல இருக்கு....

நாங்கள் எவ்வளவு திருத்தம் சொன்னாலும் தங்களை எல்லாம் தமிழ் அறிஞர் என்று சொல்லித்திரிகிறவை தங்களைத் திருத்த மாட்டினம்....

அப்படி ஏதாவது உருப்படியாக கலந்தாலோசிக்க வேண்டும் என்றால் அவைகளை முதலில் இணையத்தளங்களைப்பார்க்க சொல்லி ஒரு எழுத்து மூல விண்ணப்பம் விடுவம் (யாழ் இணையத்தளம் சார்பில்)

அல்லது அவைகளையும் கலந்தாலோசிக்க களத்திலை பங்குபற்ற அழைப்பு விடுவம்

இதுகள் ஒன்றையும் செய்யாது நாங்கள் கொஞ்சப்பேர் வெறுவாய் சப்புவதாய் தான் முடியும்

முதலில் யாழ் இணையத்தளம் அவர்களுக்கு ஒரு திறந்த அழைப்பு விடவேண்டும்

அதற்குப்பிறகு களத்தில் கதைக்கிறதுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும்

இந்த இணையத்தில் பெரிய தமிழ் அறிஞர் என்று சொல்லப்படுகிறவர்களை பகிரங்க அழைப்பு விட வேண்டும்.......

சுனாமி உங்களுடைய கருத்தை வரவேற்கிறேன். அப்படி செய்வது பிரயோசனமானபோதும் அதற்குரிய வாய்ப்புவளங்கள் அல்லாதபோது ஒரு விடயம் பற்றி கருத்தாடுவதன் மூலம் பலரின் கருத்தை அறிந்து சரிபிழைகளை எடைபோடமுடியும் என்றால் அவ்வாறு செய்வதில் தவறில்லையென நினைக்கிறேன்.

யாழ் இணையத்தளம் போதியளவு வாசகர்களை கொண்டிருக்கிறது. இணையத்தில் ஏற்படுகின்ற சிறுமாற்றமும் பிரயோசனமானது. இதன்மூலமமும் செய்வதற்கு நிறைய இருக்கின்றது என்பதை என்னைப்போல நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

இதன் பயனபாடு யாரால் தொடங்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆங்கிலச்சொல்லிலாவது ழ கர ஒலிக்கு இப்படி ஏதாவது சொல் இருப்பதாக தெரியவில்லை.

தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்காவால் முதல் 8 வருக்கு 48 ஓட்டங்கள்தான் அடிக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் TV யை நிப்பாட்டிட்டு படுப்போம் என்று பார்த்தேன். ஆனால் அதன்பின் ஆரோன் ஜான்ஸின் சரவெட்டியாட்டம் அமெரிக்காவை வெல்ல வைத்தது. 
    • வர்த்தக பிரிவில் முதலிடம் யாழ்.இந்து மகளிர் மாணவி (மாதவன்) 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் மாணவியான கீர்த்திகா பத்மலோஜன் வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றி, 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியாக முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியாக 44வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி கருத்து தெரிவிக்கையில், எனது பாடசாலையிலும், தனியார் கல்வி நிலையங்களிலும் சிறப்பான கல்வி புகட்டப்பட்டது நானும் வீட்டில் சிறப்பாக கல்வி கற்றேன். ஆகையால் எனது இலக்கினை அடைய முடிந்தது. மேலும், எனது இந்த வெற்றிக்கு ஊக்கமளித்த அம்மா, அப்பா, பாடசாலை சமூகத்தினர், தனியார் கல்வி நிலையத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்காலத்தில் ஒரு சிறந்த சட்டத்தரணியாகி, வறுமைப்பட்ட எங்கள் மக்களுக்கு என்னால் இயன்ற சட்ட உதவிகளை வழங்குவேன் என்றார். இந்த வெற்றி குறித்து மாணவியின் தந்தை கருத்து தெரிவிக்கையில், தங்களது மகள் வணிகத்துறையில் கல்வி கற்பதற்கு விரும்பினார். அவரது விருப்பத்துக்கு ஏற்ப நாங்களும் ஒத்துழைத்தோம். ஆகையால் அவர் சாதனை புரிந்துள்ளார். ஏனைய பெற்றோர்களும், உங்களது பிள்ளைகள் எந்த துறைக்குள் சாதிக்க விரும்புகின்றதோ அந்தத் துறைக்குள் அவர்களை செல்ல விடுங்கள். அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். அப்படி இருந்தால் அவர்களும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றார்.(க)     https://newuthayan.com/article/மாவட்ட_ரீதியாக_முதலிடம்_யாழ்.இந்து_மகளிர்_மாணவி
    • ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை இர‌ண்டு விக்கேட் விழ‌  அமெரிக்கா ப‌ந்துக்கு ஏற்ற‌ போல் ர‌ன் அடிக்க‌  நான் நினைச்சேன் இவ‌ங்க‌ள் ஆப்பு வைக்க‌ போகின‌ம் என்று விளையாட்டு முடிஞ்சா பிற‌க்கு எழும்பி பார்க்க‌ அமெரிக்கா வெற்றி நான் இஸ்கோர‌ பார்ப்ப‌தும் தூங்குவ‌து விளையாட்டு நேர‌டியா பார்க்க‌ வில்லை.....................................
    • நான் பொது வேட்பாளருக்கு மாறானவன் adminJune 1, 2024   மக்களை உசுப்பேத்தி எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால் , அது நடக்காது. மக்கள் தங்களுக்கு எது சரி என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். சரியென்றால் ஏற்றுக் கொள்வார்கள் இல்லையென்றால் விலக்கி வைப்பார்கள் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி, வி கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நான் பொது வேட்பாளருக்கு மாறானவன். பொது வேட்பாளர் தேவையற்றது என அரசியல்வாதிகளுக்குள்ளேயே முதன் முதலில் எங்கட தரப்பில் இருந்து சொன்னவனும் நான் தான். அதாவது பொது வேட்பாளர் சாத்தியமில்லை என்றும் அதற்கான காரணங்களையும் நான் கூறியிருக்கிறேன். இப்பவும் சொல்கிறேன் பொது வேட்பாளர் யார் என்ற தெரிவிலேயே இந்த விடயம் முதலில் முடங்கும். கடந்த தேர்தலில் தேசியத்திற்கு விழுந்த வாக்கை எடுத்துப் பார்த்தால் அது புரியும். இப்ப மேலும் நாங்கள் பிளவுபட்டு இருக்கிற போது என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியம். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை ஐனாதிபதியாக்குவதற்குத் தான் இவர்கள் பொது வேட்பாளரை முன்வைத்தார்கள் என்ற அந்தக் கருத்தில் நான் உடன்படவில்லை. பொது வேட்பாளர் தொடர்பில், தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில் கட்சி ரீதியாக இதுவரையில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனாலும் கட்சி உறுப்பினர்கள் தனி தனிய இது பற்றி பேசி வருகிறார்கள். இந்த விடயம் தொடர்பில் சில தினங்களிற்கு முன்னர் இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழுவில் நாங்கள் பேசியிருந்தோம். கட்சி முடிவெடுக்காமல் இருக்கிற போது கட்சி என்று சொல்லி சில சில பேர்  தனித் தனியாகவும் பேசியிருக்கலாம். அப்படி பேசி இருப்பதாகத் தான் செய்திகளும் வருகிறது. எனினும் கட்சி முடிவெடுக்காமல் இருக்கிற போது அதற்கான நேரம் வரும் போது பார்த்துக் கொள்வோம். மேலும் இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சியை பணிய வைக்கலாம் என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். இவரை போல எத்தனையோ பேரை நாங்கள் கண்டிருக்கிறோம். ஒரு பாரம்பரிய கட்சிகயை பற்றி அப்படியெல்லாம் பேசுவதா? அதுமட்டுமல்ல யாழ்ப்பாண மக்களை உசுப்பேற்றி பணிய வைப்பதாகவும் கூறியிருக்கிறார். அப்படி உசுப்பேற்றி யாழ்ப்பாண மக்களை பணிய வைக்க முடியுமா? ஏதோ கதைக்க வேண்டும் என்பதற்க்காக எங்கள் கட்சியை பற்றி எதையாவது கதைத்துவிட்டு செல்வதா? மக்களை உசுப்பேத்தி எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால் அது நடக்காது என மேலும் தெரிவித்தார்.   https://globaltamilnews.net/2024/203678/
    • நடுத்தர வயதினரின் அரசியல்? - நிலாந்தன் அண்மையில்   மருத்துவ நிபுணரான ஒரு நண்பர் கேட்டார்“என்னுடைய பிள்ளை தான் ஏன் வெளிநாடு போகக்கூடாது என்று கேட்டால், அந்தப் பிள்ளைக்கு நீ ஏன் நாட்டிலேயே இருக்க வேண்டும் என்று நான் கூறுவதற்கு பொருத்தமான காரணம் ஏதும் உண்டா?” என்று. இந்தக் கேள்வி யாழ்ப்பாணத்தின் படித்த நடுத்தரவர்க்கப்  பெற்றோர் பலர் மத்தியில் உண்டு. இக்கேள்விக்குப் பொருத்தமான விடை எத்தனை தமிழ் அரசியல்வாதிகளிடம் உண்டு? பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஒரு புலப்பெயர்ச்சி அலை ஓடிக்கொண்டிருக்கிறது. சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஆயிரக்கணக்கானவர்கள் புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் மே 18ஐ முன்னிட்டு “தமிழ் மிரர்” பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் அற்புதமான ஒரு கார்ட்டூனை வரைந்திருந்தார். அதில் 2009 மே 18ஆம் திகதியன்று மகிந்த கட்டுநாயக்காவில் வந்திறங்கும் காட்சி ஒரு பெட்டிக்குள் வரையப்பட்டிருக்கிறது. மகிந்த விமான நிலையத்தில் இறங்கியதும் குனிந்து தரையைத் தொட்டு வணங்குகிறார். ஆனால் இப்பொழுது 15ஆண்டுகளின் பின், சிங்கள மக்கள் மத்தியில் இருந்து புலம்பெயர்வோர் உலகின் வெவ்வேறு  நாடுகளின் தலைநகரங்களில் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்கி அந்தந்த விமான நிலையங்களில் நிலத்தைத் தொட்டு முத்தமிடும் காட்சி மற்றொரு பெட்டிக்குள் வரையப்பட்டுள்ளது.   அதுதான் உண்மை. யுத்தத்தில் வென்றெடுத்த நாட்டைவிட்டு அதன் மக்களே வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். போர்க்காலத்தில் வெளியேறியது வேறு; பொருளாதார நெருக்கடி காரணமாக வெளியேறுவது வேறு. பொருளாதார நெருக்கடிக்குள், தாய் நாட்டிலேயே நின்று, கடுமையாக உழைத்து தன்னையும் தனது தேசத்தையும் நிமிர்த்த வேண்டும் என்று  ஓர் இளைய தலைமுறை ஏன் சிந்திக்கவில்லை? குறிப்பாக, தமிழ் மக்கள் மத்தியில் இம்முறை வெளியேறிக் கொண்டிருப்பது இளையோர் மட்டுமல்ல. அதிக தொகையில் படித்தவர்கள், பட்டதாரிகள்,  முகாமையாளர்கள், தொழில் முனைவோர், மருத்துவர்கள், தாதிதியர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்… என்று பல்வேறு வகைப்பட்ட துறைசார்ந்த நிபுணத்துவமுடையவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை கிடைத்த உத்தியோகப்பற்றற்ற புள்ளி விவரங்களின்படி, கனடாவுக்கும் லண்டனுக்கும் புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம் என்று கணக்கிடப்படுகிறது. இது தவிர வழமையாக குடும்பங்களின் மீளிணைவு என்ற அடிப்படையில் மணமக்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வெளியேறும்  பெரும்பாலானவர்கள்  தேர்தலில் வாக்களிக்கும் வயதுக்கு வந்தவர்கள். அதாவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவுசெய்யத் தேவையான வாக்காளர்கள்  ஏற்கனவே வெளியேறி விட்டார்கள் என்று கூறலாமா? “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று  பாடி, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்த ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்து அந்த மண்ணை விட்டுப்போனால் போதும் என்று கருதும் ஒரு மனோநிலை, ஏன் மேலெழுகின்றது? ஏனென்றால், தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் தலைமைகள் இல்லை. நம்பிக்கையூட்டும் முன்னுதாரணங்கள் குறைந்துவிட்டன. ஒருவர் மற்றவரை நம்பாத; ஒருவர் மற்றவரை சந்தேகிக்கின்ற; தான் ஒன்றும் செய்யாமல் இருந்து கொண்டு மற்றவரைக் குறைகூறுகின்ற; முன்னுக்குப் போகும் ஒருவரை யாரோ  பின்னுக்கிருந்து இயக்குகிறார்கள் என்று சந்தேகிக்கின்ற; அவநம்பிக்கை மிகுந்த ஒரு மக்கள் கூட்டமாக தமிழ்மக்கள் மாறி வருகிறார்களா? இந்த மண்ணிலேயே நின்றுபிடிப்போம், தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்று நம்பிக்கையூட்டக்கூடிய தலைவர்கள் எத்தனை பேர் உண்டு? ஒரு காலம் அரசியல் என்பது தியாகங்கள் செய்வது; அர்ப்பணிப்புகள் செய்வது; உயிரைக் கொடுத்துப் போராடுவது என்று இருந்த ஒரு சமூகத்தில், இப்பொழுது அரசியல் என்பது பெட்டி கைமாறுவது; யாரோடாவது “டீலுக்குப்” போவது; மதுச் சாலைகளுக்கான அனுமதிகளுக்கு விலை போவது… என்று மாறிவிட்டதா? தமிழ்மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ, அவர்களையே சந்தேகிக்கிறார்கள்.  அவர்களையே திட்டுகிறார்கள். கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனைச் சந்தித்தபோது, ஜனாதிபதி கூறிய ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ்மக்கள் மத்தியில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அரசியல் பேசுகிறார்கள். இளவயதினர் பொருளாதார விவகாரங்களில்தான் நாட்டமாக இருக்கிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். அது சரியா பிழையா என்பது தனியாகப் பார்க்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் அரசியல் சமூகத்தைக் குறித்த அவருடைய பார்வை அது. ஒரு காலம் தமிழ் இளையோர் தமது உயிர்களைத் துச்சமாக மதித்து அரசியலை முன்னெடுத்தார்கள். முழு உலகத்துக்கும் அபூர்வமான அனுபவமாக அந்தப் போராட்டம் அமைந்திருந்தது. அவ்வாறு மகத்தான தியாகங்களைச் செய்த ஒரு மக்கள் கூட்டம்,  மகத்தான பெருஞ்செயல்களைச் செய்த ஒரு  மக்கள் கூட்டம்,  சித்தர்களையும் சான்றோர்களையும் மேதைகளையும் நிபுணர்களையும் மகத்தான படைப்பாளிகளையும் உற்பத்தி செய்த ஒரு சமூகம், இன்று  அவிழ்த்து விட்ட பாக்கு மூட்டை போல சிதறிக் கொண்டு போகின்றதா? வடக்காய் கிழக்காய்; சாதியாய் சமயமாய்; கட்சிகளாய் குழுக்களாய்; ஊர்ச்  சங்கங்களுக்குள் எதிர் குழுக்களாய்; ஆலய பரிபாலன சபைகளுக்குள் எதிரெதிர் குழுக்களாய்; கட்சிகளுக்குள் அணிகளாய்ப் பிரிந்து நிற்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அரசியலிலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அரசியலிலும் தமிழ் மக்கள் இரண்டாகி நிற்கிறார்கள். தமிழ்மக்கள் அதிகளவு தாங்களே தங்களுக்குள் மோதிக் கொண்டிருக்கிறார்கள். மூத்த பெரிய கட்சி நீதிமன்றத்தில் நிற்கிறது. கோவில்களின் ஆலய பரிபாலன சபைகளும் நீதிமன்றத்தில் நிற்கின்றன. இவ்வாறு சிதறுண்டு சிறுமைப்பட்டுப் போயிருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தைப் பார்த்து உங்களுடைய  இளைய தலைமுறைக்கு அரசியலில் நாட்டம் குறைந்து விட்டது என்ற பொருள்பட ரணில் கூற வருகிறாரா? அவர் கூறிய மற்றொரு விடயம், தமிழ் பொது வேட்பாளருக்காக தமிழ் கட்சிகள் ஒன்றிணையப் போவதில்லை என்பது. தமிழ்ப் பொது வேட்பாளரின் விடயத்தில் குடிமக்கள் சமூகங்களுக்கு இடையே காணப்படும் அளவுக்கு ஐக்கியம் கட்சிகளுக்கு இடையே இல்லை என்பது உண்மைதான். தங்களுக்கு இடையே ஐக்கியப்பட முடியாத கட்சிகள் எப்படி மக்களை ஒரு தேசமாகத் திரட்ட முடியும்? கடந்த 15 ஆண்டுகால கட்சி அரசியலானது ஐக்கியத்தை கட்டியெழுப்பத் தவறிவிட்டது. குடிமக்கள் சமூகங்களின் தலையீட்டால்தான் ஓரளவுக்கு குறுகிய கால விவகார மைய ஐக்கியங்கள் சாத்தியமாகின. இப்பொழுதும் குடிமக்கள் சமூகங்கள்தான் கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுத் தமிழ் நிலைப்பாட்டை உருவாக்கி,அந்த அடிப்படையில் ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கி, அதற்கூடாக பொது வேட்பாளரை முன்னிறுத்த  முயற்சிக்கின்றன. தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர்,கட்சி கடந்த ஒருவர். சாதி சமயம் கடந்த ஒருவர். பிரதேச வேறுபாடுகளைக் கடந்த ஒருவர். தமிழ்மக்கள் மத்தியில் காணப்படும் எல்லா வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் கடந்து அவர் தமிழ் ஐக்கியத்தின் குறியீடாக நிற்பார் என்று குடிமக்கள் சமூகங்கள் கூறுகின்றன. தமிழ்ப்பொது வேட்பாளருக்காகத்  திரட்டப்படும் வாக்குகள் ஒரு தேசத்துக்கானவை. ஒரு தனி நபருக்கானவை அல்ல. அங்கு ஒரு தனிநபர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். ஆனால் அவர் எந்த ஒரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார். எந்த ஒரு சமயத்தையோ அல்லது சாதியையோ அல்லது பிராந்தியத்தையோ அவர் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது. தமிழ் மக்களை இப்பொழுது பிரித்து வைத்திருக்கும் எதனையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது. அவர் தமிழ்த் தேசிய ஐக்கியத்தின் குறியீடாக  நிற்க வேண்டும். அவர் ஒரு பிரமுகராகக்கூட இருக்கவேண்டும் என்று இல்லை. அவர் தமிழ் மக்களின் ஐக்கியத்தைப் பிரதிபலிப்பார். அல்லது தமிழ் மக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஓர் அடையாளம். அவ்வளவுதான். அவ்வாறு தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர் அந்தத் தேர்தல்மூலம் தனக்குக் கிடைக்கும் பிரபல்யத்தையும் பலத்தையும் எதிர்காலத்தில் கட்சித் தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற ஒர் உடன்படிக்கை அவரோடு எழுதப்பட வேண்டும் என்று சிவில் சமூகங்கள் எதிர்பார்க்கின்றன. எனவே ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படக்கூடிய ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் எனப்படுகின்றவர், தனக்காக வாக்குக் கேட்கப் போவதில்லை. ஒரு கட்சிக்காக வாக்குக் கேட்கப்போகவில்லை. தமிழ் ஐக்கியத்திற்காகத்தான் வாக்குக் கேட்பார். தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்காகத்தான் வாக்குக் கேட்பார். தமிழ் மக்கள் ஒரு தேசமாக  திரண்டுவிட்டார்கள் என்பதனை நிரூபிப்பதற்காக வாக்களிப்பது. அதாவது தமிழ் மக்கள் தங்களுக்குத்  தாங்களே வாக்களிப்பது. கடந்த 15 ஆண்டுகால தமிழ் வாக்களிப்புப் பாரம்பரியம் எனப்படுவது அரசியல்வாதிகள் தங்களுக்காக வாக்கச்சேர்க்கும் ஒரு பாரம்பரியம்தான். ஒவ்வொரு வேட்பாளரும் தனக்கென்று காசு செலவழித்து தனக்கென்று விசுவாசிகளை உருவாக்கி தனக்காக வாக்கு சேகரிக்கும் ஒரு கட்சி அரசியல் பாரம்பரியம். அதிலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின்கீழ் ஒரு கட்சிக்குள்ளேயே ஒரு வேட்பாளர் சக வேட்பாளரை போட்டியாளராகப்  பார்ப்பார். ஆனால் பொது வேட்பாளர் என்று வரும்பொழுது அங்கே ஒவ்வொரு அரசியல்வாதியும் தனக்காகவோ தனது கட்சிக்காகவோ வாக்குச்சேர்க்கப் போவதில்லை. அவர்கள் தேசத்துக்காக வாக்குச்சேர்க்க வேண்டியிருக்கும். தேசத்துக்காக தமது சொந்தக் காசை செலவழிக்க வேண்டியிருக்கும். தேசத்துக்காக தமது உழைப்பை முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.  தேசத்துக்காக அர்ப்பணித்து உழைக்க வேண்டியிருக்கும். அதாவது தேசத்துக்காக வாக்கு சேர்ப்பது. இது கடந்த 15ஆண்டுகளாகக் அருகி வரும் ஒரு போக்கு. இதைப் பலப்படுத்தினால் தமிழ் மிதவாத அரசியலில் நேர்மையானவர்கள், கண்ணியமானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அது தமிழரசியலை ஒரு புதிய தடத்தில் ஏற்றும். அதற்கான தொடக்கம்தான் தமிழ்ப்பொது வேட்பாளரை முன்னிறுத்தும் நோக்கத்தோடு கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் இணைந்த ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது. கட்சிகள் அதற்குத் தயாராக இருந்தால், குடிமக்கள் சமூகங்களின் வேலை இலகுவாகிவிடும். இந்த ஆண்டின் தொடக்கத்தில்  ஒரு கட்சிக்குள் நடந்த  தேர்தலின் பின் விளைவுகள் தமிழ்மக்கள் சிறுமைப்பட்டு விட்டார்கள் என்பதை நிரூபித்தது. அப்படிதான், இந்த ஆண்டின் இறுதியில் நடக்கக்கூடிய ஒரு தேர்தல் தமிழ் மக்கள் சிதறிப் பலங்குன்றிப் போயிருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கக் கூடாது. அது தமிழ்மக்கள் ஒரு தேசமாகத் திரண்டுவிட்டார்கள்  என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்குத் தமிழ்ப்  வேட்பாளரைத்தவிர வேறு தெரிவு உண்டா?     https://www.nillanthan.com/6774/
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.