Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் கையிருப்பு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் கையிருப்பில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களில் 23 சதவீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசர காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாக அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/308411

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிப்புக் கோரினார் அமைச்சர் அலி ஷப்ரி

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று முதல் தினமும் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அருகில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல நாட்களாக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை,பெரும்பாலானோர் அதே இடத்தில் இரவை கழித்து வருகின்றனர்.

குடிவரவுத் திணைக்களம் வசம் வைத்திருக்கும் வெற்று கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், குடிவரவு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இவ்வாறு வரிசை உருவானது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படும் வரை ஒக்டோபர் மாதம் வரையில் இந்நிலை நீடிப்பதால் அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அந்த திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

https://thinakkural.lk/article/308524

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் நீண்ட வரிசை

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாக அறியக்கிடைக்கிறது.

கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களுக்கு முன்பாகவும் மக்கள் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

நாளாந்தம் 1,000 கடவுச்சீட்டுக்களை மாத்திரம் விநியோகிப்பதற்கு குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://thinakkural.lk/article/308611

  • கருத்துக்கள உறவுகள்

457249304_912441414254165_65103009704051

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%

மட்டுப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை: நீண்ட வரிசையில் பொதுமக்கள்!

கடவுச்சீட்டுவழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டமையினால் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் மக்கள் தொடர்ந்தும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டினை பெறுவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் கடந்த பல நாட்களாக மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்

குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது

இதனையடுத்து கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காக இணையவழி ஊடாக முன்கூட்டிபதிவு செய்யும் நடவடிக்கைகள் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து நாளாந்தம் 750 கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக மக்கள் பல நாட்கள் தொடர்ச்சியாக காத்திருந்து கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது

அந்த வகையில் இன்றைய தினமும் மக்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக வரிசையில் காத்திருந்ததனை அவதானிக்க முடிந்தது.

https://athavannews.com/2024/1397866

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் கடவுச்சீட்டுக்காக வரிசையில் நிற்பதற்கு ஜனாதிபதியின் பிழையான முகாமைத்துவமே காரணம் - முஜிபுர்

Published By: DIGITAL DESK 7   03 SEP, 2024 | 04:45 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கடவுச்சீட்டு விநியோகிக்கும் அதிகாரத்தை எந்த நிறுவனத்துக்கு வழங்குவது என ஜனாதிபதிக்கும் அவரது செயலாளருக்கும் இடையில் இருந்துவந்த முரண்பாடு காரணமாகவே கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கை பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறனர். ஜனாதிபதியின் முகாமைத்துவத்தை இதன் மூலம்  மக்களுக்கு அறிந்துகொள்ள முடியும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற வெளிநாட்டு தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்ததபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீது இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு முன்னால் கடந்த சில தினங்களாக மக்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள இரவு பகலாக வரிசையில் இருந்து வருகின்றனர். பிழையான முகாமைத்துவம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 2019இலும் இதுவே இடம்பெற்றது. பிழையான நபரை அதிகாரத்துக்கு காெண்டுவந்து, தவறான தீர்மானங்களை எடுத்ததால் நாடு வீழ்ச்சியடைந்தது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 2ஆயிரம் வரை கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. ஒருநாள் சேவை மூலம் வரையறை இல்லாமல் கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. கடவுச்சீட்டுகளின் காலாவதியாகும் திகதி குடிவரவு குடியகல்வு திணைக்கள ஆணையாளருக்கும் தெரியும்.

அப்படி இருந்தும் இதனை விநியோகிக்க ஏன் தாமதித்தார்கள். கையிருப்பில் ஒருதொகை கடவுச்சீட்டு இருக்கும்போதே இதனை விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது.

அத்துடன் கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைய பிரதான காரணமாக அமைந்திருப்பது, இதனை எந்த நிறுவனத்துக்கு வழக்குவதென்று, ஜனாதிபதிக்கும் அவரின் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடாகும்.

இவர்களின் இழுபறியால் சாதாரண மக்களை பாதிக்கப்பட்டு, இரவு பகலாக வரிசையில் இருந்து வருகின்றனர். ஜனாதிபதியுன் முகாமைத்துவத்தை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அதனால்  கடவுச்சீட்டுகளை சரியான முறையில்  விநியோகிக்க முடியாத ஆட்சியாளர்களை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவர மக்கள் ஒருபோதும்  தீர்மானிக்கப்போவதில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/192763

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுச்சீட்டு வரிசையை இல்லாமல் செய்ய அரசாங்கம் விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

Published By: DIGITAL DESK 7   04 SEP, 2024 | 05:37 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக ஏற்பட்டுள்ள வரிசையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக செயற்படுத்தக்கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் இந்த நிலைக்கு ஜனாதிபதி உட்பட அமைச்சரவை பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04)  விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கை தற்போதும் மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. 2023ஆம் ஆண்டும் மார்ச் மாதத்தில் இருந்து டிசம்பர் வரை குடிவரவு குடியகல்வு திணைக்களம் 83ஆயிரம் கடவுச்சீட்டுகளை விநியோகித்துள்ளது.

2024ஆம் ஆண்டு மாதத்துக்கு 60ஆயிரம் வரை கடவுச்சீட்டு விநியோகித்திருக்கிறது. அரசாங்கம் தற்போது விநியோகித்துவரும் சாதாரண கடவுச்சீட்டுக்கு பதிலாக இலத்திரணியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த முயற்சித்தாலும் அதனை இதுவரை அறிமுகப்படுத்த முடியாமல் போயிருக்கிறது.

அதேநேரம் இலத்திரணியல் கடவுச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தி விநியோகிக்கும் வரை, சாதாரண கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கையை குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதனை அவர்கள் செய்ய தவறி இருக்கின்றனர்.

அதற்கான வசதியை செய்துகொடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது.நாள் ஒன்றுக்கு 2ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் நிலையில் தற்போது 900 க்கும் குறைவாகவே விநியோகிக்கப்படுகிறது. அதனாலே கடவுச்சீட்டுக்காக பாரிய வரிசை ஏற்பட்டுள்ளது.

அத்துடன்  குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் கடவுச்சீட்டு 30ஆயிரம் வரையே தற்போது கைவசம் இருக்கிறது. அதனால் தூரப்பிரதேசங்களில் இருந்து வரும் மக்களும் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இலத்திரணியல் கடவுச்சீட்டு விநியோகிக்க அரசாங்கம் முறையான கேள்விக்கோரல் இன்றி மேற்கொண்டதால், அந்த நடவடிக்கையை முன்னெடுக்க குறித்த நிறுவனத்துக்கு முடியாது.

அதனால் அரசாங்கம் ஆரம்பமாக முறையான கேள்விக்கோரலுடன் இதனை செய்திருக்க வேண்டும் என்பதுடன் இந்த நடவடிக்கையை செயற்படுத்தும்வரை வழமையாக விநியோகிக்கும் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டும்.

அதேநேரம் கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு, கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள தேவையான கொள்வனவு கட்டளையை குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழங்காமல் இருந்துள்ளது. இதனால் அரசாங்கத்துக்கு ஒரு மாதத்துக்கு ஏற்படக்கூடிய நட்டம்  1100 மில்லியன் ரூபாவாகும். 

அரசாங்கம் இலத்திரணியல் கடவுச்சீட்டு முறையை முறையான கேள்விக்கோரலுடன் செயற்படுத்தாமல் முன்னெடுத்தது தவறு என்பதுடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் இலத்திரணியல் கடவுச்சீட்டும் இல்லை. சாதாரண கடவுச்சீட்டும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பில் விரைவான தீர்வொன்றை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/192849

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.