Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தோட்டத் தொழிலாளரின் வாழ்வில் மீண்டுமொரு அடிமைச்சாசனம் போராட்டம் என்கிறார் அமைச்சர் சந்திரசேகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டத் தொழிலாளரின் வாழ்வில் மீண்டுமொரு அடிமைச்சாசனம் போராட்டம் என்கிறார் அமைச்சர் சந்திரசேகரன்

வீரகேசரி நாளேடு

தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படைச் சம்பளத்தினை 200 ரூபாவாக அதிகரித்துள்ளதாகக் கூறி ஒப்பந்தத்தினை மேற்கொண்டதன் மூலம் தோட்டத் தொழிலாளரின் வாழ்வில் மீண்டுமொரு அடிமைச் சாசனம் எழுதப்பட்டுள்ளது. மூன்று தொழிற்சங்கங்கள் இந்த அடிமைச் சாசனத்தை எழுதியுள்ளன என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்கள் 300 ரூபா அடிப்படை சம்பளம் கோரி ஒரு வருடத்துக்கு முன்னர் போராட்டம் நடத்தினர். வாழ்க்கை செலவு மலைபோல் உயர்ந்துள்ள நிலையில் இன்று 200 ரூபாவாக சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறுவது வேடிக்கை. இதனை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி நாம் மீண்டும் போராடுவோம் என்றும் அவர் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

தோட்டத் தொழிலாளர்கள் 300 ரூபா சம்பள உயர்வு கோரி ஒரு வருடத்துக்கு முன்னரே போராடினார்கள். தற்போது கோதுமை மா, மண்ணெண்ணெய் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அடிப்படைச் சம்பளத்தினை 200 ரூபாவாக அதிரித்ததாக கூறுவது வேடிக்கையானது.

மாதாந்த சம்பளம் 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளி 25 நாட்களுக்கு வேலைக்குச் சென்றால் தான் 5 ஆயிரம் ரூபா பெற முடியும் இல்லையேல் அத்தொகையினை பெற முடியாது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஒரு ஒப்பந்தத்தினை மூன்று தொழிற்சங்கங்கள் மேற்கொண்டதன் மூலம் அடிமைச் சாசனத்தை மீண்டும் இவர்கள் எழுதியுள்ளனர். தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக இவர்கள் சாதனையாளர்கள் போல் கருத்து தெரிவிக்கின்றனர். கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகிவிட்டதாக அறிவித்த தொழிற்சங்கங்கள் மீண்டும் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களை சம்பள உயர்வு ஒப்பந்தத்தின் மூலம் தொழிற்சங்கங்கள் ஏமாற்றியுள்ளன. சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறி அவதார புருசர்களாக இவர்கள் பார்க்கின்றனர்.

ஒரு வருடத்துக்கு முன்னர் அடிப்படைச் சம்பளமாக 300 ரூபா வேண்டுமென போராடிய தொழிலாளர்களுக்கு தற்போது அடிப்படைச் சம்பளம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறுவது ஏமாற்று வித்தையாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

`2 வருடங்களுக்கு தோட்டத் தொழிலாளரை பொறிக்குள் சிக்கவைத்திருக்கும் புதிய ஒப்பந்தம்'

[14 - October - 2007]

தோட்டத் தொழிலாளர்களுக்கு 30 ரூபா சம்பளவுயர்வை ஏற்படுத்தி தொழிலாளர்களை திசை திருப்பும் முயற்சியினையே ஒரு சில தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் வெளிகாட்டுகின்றதென்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

அன்றாடம் அதிகரித்துச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை ஆராய்ந்து பார்க்காது இவ்வொப்பந்தம் செய்யப்பட்டுள்ளதென்பது தெட்டத்தெளிவாக விளங்குகின்றது.

வரவு- செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள இவ்வேளையில் தோட்டத் தொழிலாளர்களை முன்னெச்சரிக்கையாக அடக்கிவிடும் முயற்சிக்கே இவ்வொப்பந்தத்திற்கு சம்மந்தப்பட்டுள்ள தொழிற்சங்கங்கள் துணை போயிருக்கின்றன.

பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

`சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் நியதியை மீறிய தோட்டத் தொழிலாளர் சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம்'

[17 - October - 2007]

"இன்றைய காலகட்டத்தில் பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் சிந்தித்துச் செயலாற்றவேண்டிய ஒரு அவசியம் ஏற்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்களும் கூட எங்களுடன் இணைந்து இதுபற்றி மீளாய்வு செய்யலாம். எமது பிரதான நோக்கம் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நியாயமான சம்பளம் கிட்டவேண்டும் என்பதைத் தவிர வேறில்லை. அதன் காரணமாகவே அனைத்து மலையகத் தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்" என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெள்ளவத்தை குளோபல் டவரில் நடைபெறவிருக்கும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஊழியரதும், அவர்களது குடும்பத்தாரதும் அடிப்படைத் தேவைகள், நாட்டில் காணப்படும் பொதுவான தொழில்மட்டம், வாழ்க்கைச் செலவும் அதிலேற்படும் மாற்றங்களும், சமூகப்பாதுகாப்பின் மூலம் கிடைக்கும் நன்மைகள், ஏனைய சமூகக் குழுக்களினது சார்பளவான வாழ்க்கைத்தரம், பொருளாதாரக் காரணிகள் என்ற ஆறு விடயங்களும் தொழிலாளர்களின் சம்பளங்களை நிர்ணயிக்கும்போது கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்று சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO) கூறுகின்றது. எனவே, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பதில் தோட்டத் தொழிலினது உற்பத்தித்திறன், அதில் காணப்படும் தொழில் வாய்ப்புக்கள் என்பவற்றின் மீது அது ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கங்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது இன்றியமையாததாகும்.

இவை யாவற்றையும் கருத்தில் கொள்ளாது கடந்த 10 ஆம் திகதி அவசர அவசரமாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களே பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர். கடந்த வருடம் 34 ரூபாவிற்கு வாங்கிய மாவை இன்று 64 ரூபாவிற்கு வாங்குகின்றார்கள். 44 ரூபாவிற்கு வாங்கிய மண்ணெண்ணெயை இன்று 67 ரூபாவிற்கு வாங்குகின்றார்கள். 18 ரூபாவிற்கு வாங்கிய பாணை 38 ரூபாவிற்கு வாங்குகின்றார்கள். இந்த 30 ரூபா சம்பள உயர்வில் கூட 1 இறாத்தல் பாணை வாங்க முடியாமல் உள்ளது. கடந்த வருடம் 1000 ரூபாவுக்கு வாங்கிய உணவுப் பொருட்களுக்கு இன்று 2500 ரூபா தேவையாக உள்ளது. தோட்ட நிர்வாகிகள் ஏன் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தயக்கம் காட்டுகின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால், 1950 க்கு பின்னர் தேயிலை ஏற்றுமதியின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் அதிகரித்து வந்ததே தவிர, வீழ்ச்சி ஏற்படவில்லை. தேயிலை விலையை பொறுத்தவரை அண்மைக்காலமாக மிக சாதகமான நிலைவரமே காணப்படுகின்றது.

மேலும், இந்த சம்பள விடயத்தில் ஜனாதிபதியின் தலையீடானது உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக் கொள்வதில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதனை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்பதையும் அதனை நிவர்த்தி செய்வதற்கு அரசினது கட்டாயத் தலையீடு அவசியம் என்பதையும் அரசு உணர்ந்துள்ளதென்பதையும் எடுத்துக் காட்டுகின்றது,

ஒரு நாளில் ஒரே வகையான தொழிலினைப் புரியும் தொழிலாளர்களுக்கு ஒரே விதமான சம்பளம் வழங்கப்படல் வேண்டும் என்ற சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் நியதியை இக் கூட்டு ஒப்பந்தம் மீறியுள்ளது. அதாவது, வேலை செய்யும் நாட்களை காரணம் காட்டி ஒரே தொழிலைப் புரியும் தொழிலாளர்களுக்கிடையில 220 ரூபா அல்லது 290 என்ற வேறுபட்ட சம்பள நியமங்களை இக்கூட்டு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி 75 வீதத்திற்கு மேல் வேலை செய்யும் தொழிலாளர்களை விட ஒரு நாள் குறைவாக வேலையில் ஈடுபடும் ஒரு தொழிலாளி சராசரியாக 1500 ரூபாவை இழக்கவேண்டியேற்படும் என்றும் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார்.

http://www.thinakkural.com/news/2007/10/17...s_page38468.htm

எல்லா மலையக கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அதில் மனோ கணேசன் மட்டும் விதிவிலக்காணவர்[மேல்மாகாண மலையக மக்கள் முன்னணி]

சந்திர சேகரன் சரி தொண்டமான் சரி பதிவிகாக எதையும் செய்ய கூடியவர்கள் வன்னியில் தமிழ் ஒற்றுமை என கூட்டறிக்கை கொழும்பு வந்ததும் அரசாங்கத்தில் இணைவு இன்று மலையக மக்களை ஏமாற்றுதல் பாவம் மலையக மக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.