Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறைமையைக் கூறி தமிழரின் உரிமையை அடியோடு ஒழிக்கவே முயல்கிறது அரசு - சம்பந்தன் எம்.பி

Featured Replies

'நாட்டின் இறைமையைப்பற்றிக் கூறிக்கொண்டு, தமிழ் மக்களின் உரிமையை அடியோடு ஒழிப்பதற்கு இந்த அரசு முயல்கின்றது. உண்மையான இறையையுள்ள அரசுக்கு இது உகந்ததல்ல. இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் சீற்றத்துடன் தெரிவித்தார் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயம் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:-

சர்வதேச சமவாயத்தில் உள்ள தனக்கு சமதாகமான விடயங்களை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு, ஏனைய விடயங்களான ஜனநாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றை ஒதுக்கித் தள்ள இந்த அரசு முற்படுகிறது.

சர்வதேச சமவாயத்தில் இந்த அரசு நேர்மையுடன் செயற்படவில்லை. கபடத்துடனேயே செயற்பட்டு வருகின்றது.

சர்வதேச சமவாயத்தில் சுயநிர்ணயம் போன்றவற்றிற்கு முக்கிய இடம் உண்டு. இப்போது இந்த சமவாயத்துடன் இணைந்திருக்கும் அரசு சுய நிர்ணயம் தொடர்பாகவும் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்.

இந்த விடயங்களில் அரசு சர்வதேச சமவாயத்தில் இருந்து நழுவிவிடவே பார்க்கின்றது. இந்தக் கபடத்தனம் சர்வதேச நாடுகளுக்கு நன்கு தெரியும்.

இந்த அரசிற்கு இறைமை என்று ஒன்று உள்ளது என்று இந்த அரசு கூறிக்கொண்டு அந்த இறைமையைக் கொண்டே தமிழ் மக்களை நசுக்க முற்படுகின்றது.

தமிழ் மக்களின் உரிமைகளை இவ்வாறு நசுக்குவதை ஒருபேர்தும் ஏற்றுக் கொள்ள முடியாது." என்றார்.

நன்றி : சுடர் ஒளி

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை அரசு ஏற்க மறுப்பதால் சுயாட்சியை நாடுகிறோம்- இரா. சம்பந்தன்

'தமிழர்களுக்கான உள்ளக சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள அரசு மறுத்து வருகிறது. இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளையும் பௌத்த ஆதிக்தத்துக்கு உட்படுத்த அது முயற்சிக்கிறனது. இதன் காரணமாகத்தான் நாங்கள் சுயாட்சி தேவையை வலுப்படுத்த வேண்டியள்ளது. அதனை அடைந்தே தீருவோம்.'

இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத்தலைவருமான இரா.சம்பந்தன் ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பரிடம் வலியுறுத்தியிருக்கின்றார்.

இலங்கைக்கான 5 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ள ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பரை நேற்று மாலை பௌத்த லோக மாவத்தையில் அமைந்துள்ள ஐ.நா. தூதரக அலுவலகத்தில சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் அமைப்பாளரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரக குரல் கொடுத்து வருபவருமான மனோ கணேசன், மேலக மக்கள் முன்னனிணின் செயலாளர் கலாநிதி ந. குமரகுருபரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சம்பந்தன் லூயிஸ் ஆர்பரிடம் மேலும் தெரிவித்ததாவது :-

வடக்கு கிழக்குப்பகுதிகளில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டிருக்கின்றனர். தமிழர் தாயகப் பிரதேசங்ளை அரசு பௌத்த சிங்கள நாடாகக் கட்டியெழுப்ப முயல்கின்றது.

எங்களுடைய தொகுதி நாடாளுமனற உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.

அத்துடன் மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியத்துக்ககாக குரல் கொடுத்தவர்களும் படுகொலை செய்யபட்டிருக்கின்றார்கள். எங்களுடைய தொகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு சேவை புரிய முடியாத நிலைமை எமக்கு உள்ளது.

அச்சுறுத்தலுக்குப் பயந்து நாடளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர். எமக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்ல. கடத்தல்கள், காணமல்ற் போதல்கள், கைதுகள் என தினம் தினம் நடைபெறுகின்றன. இவ்வாறு மனித உரிமைமீறல்கள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கின்றது.

இதனைத் தடுக்க நாங்கள் சர்வதேச சமூகத்தில் தான் தங்கியிருக்கிறோம். இதற்குரிய காத்திரமான றடவடிக்கையினை ஐ.நா.தான் எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்த அவர் தற்போதைய நிலைமைகள் குறித்தும் விளக்கினார்.

இதே வேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் லூயிஸ் ஆர்பரிடம் கூறியவை வருமாறு :-

நூற்றுக்கணக்கானோர் கடத்தப்பட்டும் காணமல் போயும் உள்ளனர்.

கொழும்பில் 19 பொலிஸ் நிலையங்கள் மற்றும வீதிக்கு வீதி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கினறன. கடத்தப்பட்டவர்களும் காணாமல் போனவர்களும் இதனைதக் கடந்தே கொண்டு செல்லப்பபட்டிருக்கின்றனா, கைதுகளும், படுகொலைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

நாட்டில் இடம் பெறும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் ஒன்றை அமைப்பது தொடர்பாக லூயிஸ் ஆர்பரிடம் மனோ கணேசன் வலியுறுத்தினார் என்று கூறப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மேலக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை செவிமடுத்த லூயிஸ் ஆர்பர் இலங்கையில ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒன்றை அமைப்பது தொடர்பான கோரிக்கைகள் எதுவும் அரசிடம் இருந்து தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவ்வாறான கோரிக்ககைள் கிடைககும் பட்சத்தில் அது தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் கூறினார், எனவும் தெரிவிக்கப்ட்டது.

நன்றி : சுடர் ஒளி

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு துணைபோவது அரசு. அப்படியிருக்க அரசு கண்காணிப்பகம் ஒன்றை நிறுவ விரும்புமா? அல்லது அதற்கு ஒப்புதல் வழங்குமா? ஆபர் அம்மையாரின் இந்த விஜயமும் தமிழருக்கெதிரான உலகநாடுகளின் கண்துடைப்பு நாடகமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.