Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 SEP, 2024 | 09:48 AM
image

ரொபட் அன்டனி 

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு நாளை 21ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி­ வரை நடை­பெ­ற­வுள்­ளது. 

நாடளாவிய ரீதியில் சுமார் 13 ஆயிரம் வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­பட்டுள்ள நிலையில்  இம்­முறை தேர்தல் வாக்­க­ளிப்பை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் நாடு முழுவதும் சுமார் 2 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்றனர்.

மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக எத்தனை ஆயிரம் பொலிஸாரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் மிகவும் அமைதியான முறையில் தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு இடாப்பு 

இம்முறை ஜனாதிபதித் தேர்­த­லா­னது 2024ஆம் ஆண்டின் வாக்­காளர் இடாப்­புக்கு அமைய நடை­பெ­ற­வுள்­ளது. தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்காக ஒரு கோடியே 71 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 354 பேர் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 

இந்நிலையில் இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு புதிதாக சுமார் 10 இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்­க­ளிப்பு இம்மாதம் 4ஆம், 5ஆம், 6ஆம் திக­தி­களில் நடை­பெ­ற்றன.  மேலும் கடந்த 12ஆம் திகதியும் தபால் மூலம் வாக்­க­ளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு நாடு முழு­வதும் 7 இலட்­சத்து 36 ஆயி­ரத்து 586 பேர் தகுதி பெற்­றிருந்தனர். அடுத்த 5 வரு­டங்­க­ளுக்கு இந்த நாட்டை ஆட்சி செய்யப் போகின்ற, தலை­வி­தியைத் தீர்­மா­னிப்பதற்காக மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்களிக்க செல்லுங்கள் 

வாக்காளர்கள் காலை வேளையிலேயே தமக்குரிய வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்களிப்பில் ஈடுபடலாம்.     தேர்தலை மிகவும் அமைதியாகவும் சுயாதீனமாகவும் நடத்த சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாக்காளர்களைப் பொறுத்தவரையில் முதலில் வாக்களிப்பதற்கு தயாராக வேண்டும்.

வாக்­காளர் இடாப்பில் பெயர் உள்­ளதா?

தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்கு மக்கள் முதலில் 2024 ஆம் ஆண்­டுக்­கான வாக்­காளர் இடாப்பில் தமது பெயர் இருக்­கின்­றதா என்­பதை பரீட்­சித்துப் பார்ப்பது அவசியம். அதனை தேர்தல் ஆணைக்­கு­ழுவின் இணை­­யத்­த­ளத்­துக்குள் பிர­வே­சித்து தேசிய அடை­யாள அட்டை இலக்­கத்தை சமர்ப்பிப்பதன் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.  அதுமட்டுமன்றி சகல வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் தேர்தல் திணைக்களத்தினால் அனுப்பப்பட்டுள்ளன. அந்த வாக்­காளர் அட்­டையில் மக்கள் வாக்­க­ளிக்க வேண்­டிய இடம் போன்ற விப­ரங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும்.  

தேசிய அடை­யாள அட்டை கட்­டாயம்

வாக்காளர்கள் வாக்­க­ளிக்க செல்லும் போது நிச்­ச­ய­மாக வாக்­காளர் அட்­டையை எடுத்துச் செல்­வது வாக்­க­ளிப்­ப­தற்கு இல­கு­வாக இருக்கும். அதே­நேரம் தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்கு தேசிய அடை­யாள அட்டை கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. எனவே மக்கள் மறக்காமல் அடையாள அட்டையை கொண்டு செல்வது அவசியமாகும். தேசிய அடை­யாள அட்­டை­யுடன் மேலும் பல ஆவ­ணங்கள் வாக்களிப்பதற்காக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

தேசிய அடை­யாள அட்டை, செல்­லு­ப­டி­யான கட­வுச்­சீட்டு, செல்­லு­ப­டி­யா­ன­ சா­ரதி அனு­ம­திப்­பத்­திரம், ஓய்­வூ­திய அடை­யாள அட்டை, முதி­யோர்­க­ளுக்­காக சமூ­க­ சேவை திணைக்­களம் வழங்­கு­கின்ற அடை­யாள அட்டை, மதத் தலை­வர்­க­ளுக்­கான ஆட்­ப­திவுத் திணைக்­க­ளத்­தினால் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்ள அடை­யாள அட்டை என்­ப­ன­வற்றை பயன்­ப­டுத்­தலாம். இவை எது­வுமே இல்­லா­விடின் தேர்தல் திணைக்­க­ளத்­தி­லி­ருந்துழ பெற்ற  தற்­கா­லிக அடை­யாள அட்­டையைப் பயன்படுத்தலாம். ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அடை­யாள அட்டை இல்­லா­விடில் வாக்­க­ளிக்க முடி­யாது என்­பதை கருத்தில் கொள்­வது முக்­கியம்.

வாக்­க­ளிப்­பது எவ்­வாறு?

ஜனாதிபதித் தேர்தலில் வாக்­க­ளிக்கும் போது மக்கள் மிகவும் கவ­ன­மாக வாக்­க­ளிக்க வேண்டும். வாக்­குச்­சீட்டில் வேட்­பா­ளர்­களின் பெயர்­களும் அவர்களது பெயர்­க­ளுக்கு முன்னே அவர்­க­ளுக்கு குறித்­தொ­துக்­கப்­பட்ட சின்­னமும் அதற்கு அருகில் வெற்றுப் பெட்­டியும் இருக்கும். வாக்­காளர் தான் வாக்­க­ளிக்க விரும்­பு­கின்ற ஒரு­வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்க முடியும். அவ்­வாறு வாக்­க­ளிக்கும் போது 1 என்ற இலக்­கத்தை வேட்­பா­ள­ருக்கு அரு­கி­லுள்ள பெட்­டியில் இட்­டு­வாக்­க­ளிக்க வேண்டும். அல்­லது புள்­ளடி இட்டும் வாக்­க­ளிக்­கலாம்.

மேலும் 38 வேட்­பா­ளர்­களின் பெயர்கள் வாக்குச் சீட்டில் இருப்­பதால் வாக்­காளர் தனது இரண்டாம் தெரி­வையும் மூன்றாம் தெரி­வையும் வெளிப்­ப­டுத்தும் வகையில் ஒன்­றுக்கும் மேற்­பட்ட வேட்­பா­ள­ருக்கு விருப்­பு­ வாக்­கு­க­ளையும் அளிக்­கலாம்.

அப்­ப­டி­யாயின் தனக்கு முத­லா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு 1 என்ற இலக்­கத்தில் வாக்­க­ளித்­து­விட்டு இரண்­டா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு 2 என்ற இலக்­கத்தில் வாக்­க­ளிக்­கலாம். மேலும் மூன்று வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்­டு­மாயின் முத­லா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு 1 என்றும் இரண்­டா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு 2 என்றும் மூன்­றா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு 3 என்றும் இலக்­கத்­தை­யிட்டு வாக்­க­ளிக்­கலாம்.

ஒன்­றுக்கும் மேற்­பட்ட வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்­க­ வேண்டுமென்றால் இலக்­கங்­க­ளையே (அரபு இலக்­க­வ­ரிசை) பயன்­ப­டுத்­த­வேண்டும்.  மாறாக முத­லா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு புள்­ள­டி­யிட்­டு­விட்டு இரண்­டா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு இலக்­கத்தை இட்டால் அந்­த­வாக்கு நிரா­க­ரிக்­கப்­படும். ஆனால் ஒரு­வ­ருக்கு மட்டும் வாக்­க­ளிக்­க­வேண்டும் என்றால் 1 என்ற இலக்­கத்தை இட்டும் வாக்­க­ளிக்­கலாம். புள்­ளடி இட்டும் வாக்­க­ளிக்­கலாம். ஒன்­றுக்கு மேற்­பட்ட வேட்­பா­ளர்­க­ளுக்கு விருப்­பு­வாக்கின் மூலம்­வாக்­க­ளிக்க முற்­பட்டால் 1, 2, 3 என்று இலக்­கத்­தைத்தான் பயன்­ப­டுத்­த­வேண்டும்.   இதுதான் ஜனா­தி­பதி தேர்தல் வாக்­க­ளிப்பு முறை­யாகும். 

nn.jpg

எப்­போது வாக்குகள் நிரா­க­ரிக்­கப்­படும்?

அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­யங்­களைத்தவிர வாக்­குச்­சீட்டில் வேறு எத­னையும் குறிப்­பிடக்கூடாது. அவ்­வாறு குறிப்­பிடும் பட்­சத்தில் அவை நிரா­க­ரிக்­கப்­பட்ட வாக்­கு­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­படும். மேலும் ஒரு வாக்­கா­ள­ருக்கு ஒன்று என்ற இலக்­கத்தை இட்டு வாக்­க­ளித்து விட்டு இன்­னு­மொரு வேட்­பா­ள­ருக்கு புள்­ள­டி­யிட்டால் அது நிரா­க­ரிக்­கப்­பட்டு விடும். 

அதே­போன்று ஒரு­வ­ருக்கு புள்­ளடி இட்டு விட்டு மற்­று­மொ­ரு­வ­ருக்கு இலக்­கத்தை இட்டு வாக்­க­ளித்தால் அந்த வாக்கும் நிரா­க­ரிக்­கப்­படும். எனவே வாக்­காளர் தமது வாக்கைப் பயன்­ப­டுத்தும் போது துல்­லி­ய­மாக வாக்­க­ளிக்க வேண்டும்.  விருப்பு வாக்குகளின்போது மூன்றுக்கு மேற்பட்டோருக்கு வாக்களித்தாலும் அந்த வாக்கும் நிராகரிக்கப்படும்.

 மேலும் இரண்டு அல்லது மூன்று என்ற இலக்கங்களை மட்டும் இட்டு வாக்களித்தாலும் நிராகரிக்கப்படும். அதாவது விருப்பு வாக்கை பயன்படுத்த வேண்டுமானால் முதலில் 1 என்ற இலக்கத்தை இடவேண்டும். 1 என்ற இலக்கத்தை இட்டு வாக்களிக்காமல் நேரடியாக 2 என்ற இலக்கத்தை இட்டு வாக்களித்தால் நிராகரிக்கப்படும்.  எனவே  இங்கு மிக விழிப்புடன் சரியான முறையில் வாக்களிப்பது அவசியம். 

வெற்­றி­ பெறும் வேட்­பாளர்

வாக்­க­ளிப்­புகள் முடிந்­ததும் வாக்­குகள் எண்­ணப்­பட்டு வெற்றி பெற்­றவர் தேர்தல் ஆணைக்­கு­ழு­வினால் அறி­விக்­கப்­ப­டுவார். அளிக்­கப்­ப­டு­கின்ற வாக்­கு­களில் நிரா­க­ரிக்­கப்­பட்ட வாக்­குகள் கழிக்­கப்­பட்டு செல்­லு­ப­டி­யான வாக்­கு­களில் 50 வீதத்­துக்கும் அதி­க­மான வாக்­கு­களை பெறு­கின்­றவர் ஜனா­தி­ப­தி­யாக அறி­விக்­கப்­ப­டுவார். ஒரு­வேளை எந்த வேட்­பா­ளரும் 50 வீத­மான வாக்­கு­களை பெறா­விடின் அதற்­கான அடுத்த கட்ட ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

தவறாது வாக்களியுங்கள் 

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தவறாமல் வாக்களிப்பது அவசியமாகும். மக்கள் இந்த ஜனநாயக செயற்பாட்டில் பங்­கெடுத்து தமது வாக்குகளை பயன்­படுத்த வேண்டும்.

அதாவது அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யப்போகின்ற தலை­­வரை தெரிவு செய்யும் ஜனநாயக செயற்­பாட்டில் மக்கள் தவறாமல் பங்கெடுப்பது தீர்க்க­மானதாக இருக்கின்றது.

இலங்கையில் கடந்த 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை கொண்டுவரப்பட்டது. பின்னர் 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பிலும் அந்த முறை உள்ளடக்கப்பட்டது. 1982, 1988, 1994, 1999, 2005, 2010, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் இதன்று முன்னர் ஜனாதிபதித் தேர்தல்கள் இலங்கையில் நடைபெற்றுள்ளன. அந்த வகையில் இம்முறை  நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பானது 9ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கானதாக அமைந்துள்ளது.

மக்கள் தேர்தலில் தவறாமல் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று அமைதியான சுயாதீனமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தலில் வாக்களிப்பதற்கு தேவையான ஆவணங்களை கொண்டு செல்வது அவசியம். நாட்டின் பல பகுதிகளிலும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். முக்கியமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இம்முறை தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தேர்தல் முடிந்த பின்னர் தமது அறிக்கைகளை வெளியிடுவார்கள். பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் என பல்வேறு தரப்பினரும் கண்காணிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் தமக்கு வேண்டிய தலைவரை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்கிறது. அந்த ஜனநாயக உரிமையை அமைதியான முறையில் வன்முறைகளுக்கு இடமளிக்காமல் மக்கள் பயன்படுத்த வேண்டும்.

https://www.virakesari.lk/article/194152

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.