Jump to content

தமிழ்ப் பிரதேசங்களில் புதிய ஜனாதிபதியை வாழ்த்தி வைபவங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஜனாதிபதி அநுரவிற்கு பொங்கல்

Published By: DIGITAL DESK 3   23 SEP, 2024 | 01:11 PM

image
 

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (23) பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பாக, ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

3__3_.jpg

3__6_.jpg

3__4_.jpg

3__1_.jpg

https://www.virakesari.lk/article/194598

Edited by ஏராளன்
தலைப்பில் திருத்தம்
Link to comment
Share on other sites

  • ஏராளன் changed the title to தமிழ்ப் பிரதேசங்களில் புதிய ஜனாதிபதியை வாழ்த்தி வைபவங்கள்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஜனாதிபதி அநுரகுமாரவின் வெற்றியை வவுனியாவில் கொண்டாடிய ஆதரவாளர்கள் 

23 SEP, 2024 | 02:51 PM
image
 

நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை (23) அவர் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டதையடுத்து, வவுனியாவில் கட்சி ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, வவுனியா இரட்டை பெரியகுளத்தில் கட்சி ஆதரவாளர்கள் பொது மக்களுக்கு பால் சோறு வழங்கி புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை கொண்டாடினர். 

IMG-20240923-WA0076.jpg

IMG-20240923-WA0075.jpg

IMG-20240923-WA0077.jpg

https://www.virakesari.lk/article/194609

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஜனாதிபதி அநுர பதவியேற்பு; மட்டு.மாவட்டத்தில் பல்வேறு வைபவங்கள் 

Published By: DIGITAL DESK 3   23 SEP, 2024 | 03:51 PM

image
 

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (23) பதவிப் பிரமாணம் செய்த வைபவத்தை யொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சமய தலைவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று குழு ஏற்பாடு செய்ததாக சாந்தி குளிர்பானம் வழங்கும் வைபவம் மட்டக்களப்பு நாவற்குடா பிரதான வீதி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது. 

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற வடிவத்தில் மாவட்ட நிறைவேற்றிச் செயற்குழு உறுப்பினர் என். சுசாகரன் உட்பட பல தேசிய மக்கள் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் பெரும் வரட்சியினால் மக்கள் அவதிப்படுகின்ற  சூழ்நிலையில் வீதியால் பயணிக்கும் பயணிகளுக்கு தேசிய மக்கள் சக்தியினர் குளிர்பானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/194624

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநுர குமார திசாநாயக்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்பு; மன்னாரில் வெற்றிக் கொண்டாட்டம்

Published By: DIGITAL DESK 3   23 SEP, 2024 | 04:30 PM

image
 

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று திங்கட்கிழமை  காலை (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், மன்னாரில் இன்று திங்கட்கிழமை (23) காலை 11.30 மணியளவில் ஆதரவாளர்களினால் வெற்றிக் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பஜார் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) மன்னார் மாவட்ட கிளையினால் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது பொங்கல் பொங்கி மக்களுக்கு வழங்கப்பட்டு தமது வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடினர்.

இதன்போது அவர் வாக்குறுதி வழங்கிய மன்னார் மாவட்டத்தில் உள்ள சில பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.

குறித்த நிகழ்வில் ஆதரவாளர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_0329.JPG

DSC_0323.JPG

DSC_0318.JPG

DSC_0299.JPG

https://www.virakesari.lk/article/194630

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.