Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   26 SEP, 2024 | 01:44 PM

image

தமிழ் மக்கள் சொந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகள் போல உணர்வதற்கு காரணமான நீண்ட கால துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அர்த்தபூர்வமன நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கின்றோம் என உலகதமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள உலகதமிழர் பேரவை மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

சாதாரண பின்னணியில் ஆரம்பித்து தனது  அரசியல் வாழ்க்கை முழுவதும் சாதாரண பொதுமக்களின் நபராக விளங்கிய அனுரகுமார திசநாயக்கவின் அரசியல் பயணம் அவரது சாதனைகள் அனைத்து பின்னணியை சேர்ந்த இளைஞர்களும் பெரும் கனவு காணத்தூண்டும்.

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஹரிணி அமரசூரியவிற்கும் நாங்கள் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம், இலங்கையின் வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர்.

தேர்தலும் அதிகாரமாற்றமும் அமைதியான முறையில் இடம்பெற்றமை குறித்து திருப்தியடைகின்றோம், இதன் மூலம் பல உலகநாடுகள் பின்பற்றவேண்டிய முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது.

தேர்தல் பிரச்சாரம் பெருமளவிற்கு இனமத பேரினவாத கருத்துக்கள் அற்றதாக காணப்பட்டது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம், இது  எதிர்காலத்திற்கான முன்னுதாரணமாக விளங்கும் என எதிர்பார்க்கின்றோம் .

எந்த வித சந்தேகமும் இன்றி இலங்கை தனது வரலாற்றின் தீர்க்கமான தருணத்தில் உள்ளது, பொருளாதார நெருக்கடி மற்றும் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வேருன்றியிருக்கும் ஊழலும் மக்கள் அமைப்பு மாற்றத்தை விரும்புவதை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியும் முன்னெடுத்த பிரச்சாரம் மில்லியன் கணக்காண மக்களிடையே நன்கு எதிரொலித்துள்ளது.

எனினும் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களை கொண்டுவருவதில் தற்போதைய ஜனாதிபதி கடும் சவாலை எதிர்கொள்வார் என நாங்கள் கருதுகின்றோம்.

நாட்டின் அனைத்து குடிமகனும் சமூகமும் அதன் வளர்ச்சிப்பாதையில் சமபங்குதாரராக உணரும்போதுதான் உண்மையான மாற்றம் நிகழும் என உலகதமிழர் பேரவை உறுதியாக நம்புகின்றது.

புதிய ஜனாதிபதியும் அவரது கூட்டணி கட்சிகளும் அவர்கள் குறித்து சிறுபான்மை சமூகத்தினர் கொண்டுள்ள கணிசமான நம்பிக்கை பற்றாக்குறைக்கும் அச்சத்திற்கும் இன்னமும் தீர்வை காணவில்லை என்பது தேர்தல் முடிவுகள் மூலம் நன்கு தெரியவந்துள்ளது.

பல தசாப்தங்களாக இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சமத்துவம் நீதி மற்றும் நியாயமான பிரதிநிதித்துவம் தொடர்பில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ளதுடன் அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மூலம் தங்கள் மொழி இனஅடையாளங்களை இழப்பது குறித்து அச்சமடைந்துள்ளனர்.

உள்நாட்டு யுத்தத்தினதும் அதன் எச்சங்களினதும் தாக்கங்கள் தீர்வின்றி அந்த மக்களை அச்சுறுத்துகின்றன.

மேலும் பிராந்தியங்களிற்கான அர்த்தபூர்வமான அதிகார பகிர்விற்கான அவர்களது எதிர்பார்ப்புகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

தமிழ் மக்கள் சொந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகள் போல உணர்வதற்கு கருதுவதற்கு காரணமான நீண்ட கால துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அர்த்தபூர்வமன நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கின்றோம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரசமைப்பு வரைபினை விரைவாக முடிப்பதற்கும், உள்ளுராட்சி அமைப்புகள் மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுடன் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதற்கும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் உறுதியளித்துள்ளமை குறித்து நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

https://www.virakesari.lk/article/194832

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.