Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 SEP, 2024 | 05:11 PM
image

மாற்றத்திற்கான மாற்று வழி தொடர்பாக திறந்த உரையாடல் நாளை சனிக்கிழமை (28) வவுனியா வாடி வீட்டில்  இடம்பெற உள்ள நிலையில்  வடகிழக்கு  பகுதியில்  உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியலாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், அரசியல் ஆர்வலர்கள், குறிப்பாக மாற்றத்தை விரும்பும் இளையோர்கள் அனைவரையும் கருத்து பகிர்வில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.  

குறித்த விடயம் தொடர்பில்  இன்று வெள்ளிக்கிழமை (27)  அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,  

கடந்த பல தசாப்தமாக தொழில் முறை அரசியல் வாதிகளால் தமிழ்த்தேசிய அரசியலை விடுதலை அறவுணர்வின்றி தமிழ் மக்களின் நீண்ட கால இருப்பு பற்றிய தொலைநோக்கு சித்தாந்த மின்றி தேர்தல் வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு வலிமையான கோட்பாடின்றி கட்சி கட்டமைப்புகளிலும் மாற்றமின்றி அறிவார்ந்த அணுகுமுறை இன்றி தமது நலன் சார்ந்து தொடர்ந்து செயல்படுவதால் மக்கள் மத்தியிலே வெறுப்புணர்வு ஏற்பட்டு பல கூறுகளாக பிரிவடைந்துள்ளனர்.  

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் இரண்ட கமான செயல்பாடு அனைவரையும் விசனத்துக்கு உள்ளாக்கியது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு சிங்களத்திற்குள் கரைந்து விடும் ஆபத்து உண்டு. தமிழர் தேசம், தேசியம் வலு குன்றாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு.  

எனவே மாற்றத்திற்கான மாற்று வழி தொடர்பாக திறந்த உரையாடலுக்கு வடகிழக்கு   பகுதியிலுள்ள   பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியலாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், அரசியல் ஆர்வலர்கள், குறிப்பாக மாற்றத்தை விரும்பும் இளையோர்கள் அனைவரையும் கருத்து பகிர்விற்கு உரிமையுடன் அழைக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/194935

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் “மாற்றத்துக்கான மாற்றுவழி” கலந்துரையாடல்

28 SEP, 2024 | 04:26 PM
image

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “மாற்றத்துக்கான மாற்றுவழி” எனும் கருப்பொருளில் அரசியல் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று சனிக்கிழமை (28) நடைபெற்றது.   

தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன், சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், முன்னாள் மாகாண அமைச்சர் ப.டெனிஸ்வரன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

IMG_7849.jpg

IMG_7848.jpg

https://www.virakesari.lk/article/194994

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சியோடு இணைந்து பயணிக்க முடியாது - சிவகரன்

28 SEP, 2024 | 06:52 PM
image

சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முடியாது. மாறாக அவ்வாறு செயற்பட்டால் அது அரசியல் கட்சியாகவே மாறிவிடும் என்று தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.  

வவுனியாவில் இன்று  சனிக்கிழமை (28) தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மாற்றத்துக்கான மாற்றுவழி எனும் கருப்பொருளில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

தொடர்ந்து அவர் கூறுகையில்,    

இன்று சிவில் அமைப்புக்கள் மற்றும் சமூக மாற்றத்தை விரும்புபவர்களை பகிரங்கமாக அழைத்திருந்தோம். எந்தவித வேறுபாடுகளும் இன்றி ஆரோக்கியமான, வெளிப்படையான கலந்துரையாடல் நடைபெற்றது. அதன் பிரகாரம் தேர்தல் அரசியல் கடந்து ஏனைய விடயங்களை கையாளும் நோக்கில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.   

அக்குழுவானது ஏனைய மாவட்டங்களில் உள்ளவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்திக்கொண்டு தமிழ் மக்களின் அடிப்படை சார்ந்த விடயங்களை தேர்தல் அரசியலுக்கு அப்பால் முன்னெடுக்க வேண்டிய விடயங்களை ஆராய்ந்து முன்னோக்கி நகர்த்துவதற்கான செயற்பாட்டில் ஈடுபடும்.   

இக்குழுவானது எவ்வித அரசியல் விவகாரங்களிலும்  ஈடுபடாது. அரசியல் கட்சிகள் சார்ந்தோ அல்லது இணைந்தோ எந்த செயற்பாட்டையும் முன்னெடுப்பதற்கான தீர்மானம் எவையும் எடுக்கவில்லை.  

எதிர்வரும் வாரங்களில், பொதுக் கட்டமைப்புடன் கலந்துரையாடி நாங்கள் தொடர்ந்து, இணைந்து எவ்வாறு பயணிக்கலாம் என்ற நிகழ்ச்சி நிரலை வகுக்க வேண்டும் எனவும் தீர்மானித்துள்ளோம்.   

பொதுக்கட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தலுக்காக உருவாக்கப்பட்டு அரசியல் கட்சிகளுடன் இணைந்து பயணிக்கக்கூடியவர்களாக இருக்கிறது. சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முடியாது. மாறாக அவ்வாறு செயற்பட்டால் அது அரசியல் கட்சியாகவே மாறிவிடும். ஆகவே சிவில் அமைப்பின் தனித்துவம் இல்லாமல் போய்விடும். இப்போது தேர்தல் அரசியலில் உடன்படிக்கை செய்திருப்பதால் அவர்களும் அரசியல் கட்சிகளாகவே சமூக நிலையில் நோக்கப்படும்.  

நாங்கள் அவர்களோடு உரையாடத்தான் இருக்கின்றோம். எதிர்காலத்தில் அரசியலில் செயற்படுவார்களேயானால் அதற்கு நாம் சம்மதிக்கப்போவதில்லை.   

எந்தவிதமான குழப்பங்களும் விரிசல்களும் எங்களுக்குள் இல்லை. அவர்கள் அரசியல் விவகாரங்களுக்காக தேர்தலுக்காக முன்னெடுக்கிறார்கள்.   

கடந்த 10 வருடங்களாக இவ்விதமான கூட்டங்களை நடாத்திவந்திருக்கின்றோம் என்ற அடிப்படையிலேயே இதனை நாம் நடாத்தினோம்.  இது ஏட்டிக்குப் போட்டியாக தொடங்கப்படவில்லை. அவ்வாறான நோக்கமும் எமக்கில்லை. தேர்தல் அரசியலில் இந்த அமைப்பு எப்போதும் ஈடுபடாது என்றார்.

https://www.virakesari.lk/article/195011

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.