Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி

பிரேசிலில் உள்ள சீப்ரா நகரில், 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மதுபான விடுதியில், இரு ஆண்களுக்கிடையே ஒரு பயங்கரமான மோதல் ஏற்பட்டது. மோதலுக்கான காரணம் பணம். திருப்பித் தருகிறேன் என்று வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால்தான் அந்தச் சண்டையே தொடங்கியது. கடனாகக் பரிமாறப்பட்ட தொகை ஒன்றும் லட்சக்கணக்கானவை இல்லை. வெறும் 25 யூரோக்கள்தான்

கிவால்டோரைமுண்டோக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காததால் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் ரைமுண்டோ  துப்பாக்கியை எடுத்து  சுடும் அளவுக்குப் போய் விட்டதுகிவால்டோ இறந்து போனான். சம்பவம் நடந்த இடத்துக்கு பொலிஸ் வருவதற்கு முன் ரைமுண்டோ தப்பி ஓடி விட்டான்

கொலையாளி  ரைமுண்டோ இல்லாமல் நீண்ட வருடங்களாக நடந்த வழக்கு 2013இல் முடிவுக்கு வந்தது. ரைமுண்டோவுக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது. தண்டனை அனுபவிக்க மட்டும் ரைமுண்டோ இல்லை. அவனைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. அவன் இருக்கிறானா? இறந்து விட்டானா? என்ற செய்தி கூட  யாருக்கும் தெரியவில்லை.

கிவால்டோ இறக்கும் பொழுது அவனின் மகளான கிஸ்லேனுவுக்கு ஒன்பது வயது. தந்தையின் மரணம் அதுவும் அவர்  கொலை செய்யப்பட்டது கிஸ்லேனாவை பெரிதும் பாதித்திருந்தது. தனது தந்தையின் மரணம், தந்தையைக் கொன்றவன் தண்டனையில் இருந்து தப்பியது, அவன்  சுதந்திரமாக வாழ்வது  எல்லாமே அவளது மனதை எப்பொழுதும் உறுத்திக் கொண்டேயிருந்தன. அந்த உறுத்தல்களுக்கு மத்தியிலும் கிஸ்லேனா படித்து 2014இல்  சட்டத்தரணியானாள்.

IMG-7106.webp

சட்டத்தரணியாக இருந்தாலும் ரைமுண்டோவை எப்படியாவது கண்டு பிடித்து, அவனுக்கான தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளைத் துரத்திக் கொண்டே இருந்தது. பொலிஸ்துறையில் சேர்ந்து விட்டால் ஒருவேளை அது சாத்தியமாகலாம் என்று எண்ணியவள் அங்கே இணைந்து கொண்டாள். பயிற்சிகள் எல்லாம் முடித்து 2022இல் பொலிஸ் குற்றப் புலனாய்வாளராகக் கடமையாற்றத் தொடங்கினாள்.

தந்தையின் கொலை வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தேடி எடுத்துக் கொண்டாள். ரைமுண்டோ பற்றிய தேடலை ஆரம்பித்தாள். அவள் குற்றப் புலனாய்வாளராக இருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக  அவளுக்கு ரைமுண்டோ பற்றிய பல தகவல்கள் கிடைக்க ஆரம்பித்தன.

கடந்த புதன் கிழமை (25.09.2024) ஒரு கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ரைமுண்டோவை(60), கிஸ்லெய்ன் கைது செய்தாள். அவளது தந்தை கொலை செய்யப்பட்டபோது அவரின் வயது 36. தனது தந்தையைக் கொன்றவனை கைது செய்யும் கிஸ்லெய்னுக்கு தற்போது வயது 36.

IMG-7107.webp

"இன்று எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உள்ள உணர்வு என்னவென்றால்,ஒரு குற்றவாளிக்கான  நீதி வழங்கப்பட்டுள்ளது, இறுதியாக நாங்கள் எங்கள் அமைதியை ப் பெற்றிருக்கின்றோம்" என கிஸ்லெய்ன் பத்திரிகைகளுக்குத் தெரிவித்திருக்கிறாள்

இனி அவளுக்கான உறுத்தல் இல்லாமல் போகும். ஆனாலும் அவளின் தந்தையின் இழப்பு அவளிடம் இருந்து கொண்டே இருக்கும்.

https://www.facebook.com/reel/382733548229265

 

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

கண்முன் ஒரேயொரு இலக்கு அது தூய்மையானதாக இருக்கும் பட்சத்தில் அது கிடைத்தே தீரும். ........மகளின் தீவிரமான தேடலுக்கு பாராட்டுக்கள் . .......!  

பி . கு :  ரேமுன்டோவுக்கு இப்பொழுது வயது அண்ணளவாக 72 என்று வைத்துக்கொண்டாலும் இந்த வயதில் வெளியே இருந்து மனிதரோடும் நோய்களோடும் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதை விட சிறைக்குள்ளே நிம்மதியா "மணியடிச்சா ரொட்டி முடி முளைச்சா மொட்டை" என்று வாழப்போகிறார் . ......ஆகவே இந்த சிறைவாழ்க்கை அவருக்கு ஒரு வரம் என்றுதான் சொல்ல வேண்டும் . .......!   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.