Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழரின் பூர்வீகத் தேசிய உரிமையை புரிந்து கொள்வதற்கு முயலுங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-10-12

தமிழரின் பூர்வீகத் தேசிய உரிமையை புரிந்து கொள்வதற்கு முயலுங்கள்!

முக்கியமான ஒரு கால கட்டத்தில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதுவர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் இலங்கைக்கு விஜயம் செய் திருக்கின்றார். மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெறும் யாழ். குடாநாட்டுக்கு இன்று விஜயம் செய்யும் அவர், மனித உரிமை மீறல்களினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்புகளின் அவலங்களை இன்று நேரில் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய தரப்புகள் தமக்கு நேர்ந்த கொடூரங்களை கொடுமைகளை அவலங்களை ஆர்பர் அம்மையாருக்கு எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி, சுதந்திரமாக, சுயாதீனமாக, மனந்திறந்து எடுத்துரைப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது இன்றைய சந்திப்பின்போதுதான் தெரியவரும்.

எனினும், இச்சந்தர்ப்பத்தில் யாழ். குடாநாட்டு நிலைமை குறித்து, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் ஓரிரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்த கருத்துகள், ஆர்பர் அம்மையார் தமது கவனத்தில் எடுக்கவும், இவ்விவகாரத்துக்குரிய தீர்மானத்தை அவர் எடுப்பதற்கு உதவவும் பொருத்தமானவை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

கொழும்பில் ஒரு பொது நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமெரிக்கத் தூதுவர் இந்த முக்கிய கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

""கட்டாயக் கடத்தல்களும், காணாமற்போகச் செய்தலும் தலைநகர் கொழும்பில் இப்போது குறைந்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனாலும் தலைநகருக்கு வெளியில் குறிப்பாக யாழ். குடாநாட்டில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. யாழ்ப்பாணத்தில் மனித உரிமை மீறல்கள் எல்லை மீறி இடம்பெறுகின்றன. சட்டவிரோதமான முறையில் ஆட்கள் அங்கு படுகொலை செய்யப்படுகின்றமை அங்கு தினசரி விவகாரமாகி விட்டது. இது குறித்து அமெரிக்கா ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளது.

""ஊடகவியலாளர்கள் குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றமை கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்குப் பெரும் சவாலாக வந்துள்ளது.

""மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இத்தகைய மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாத வகையில் விசேட சட்ட விலக்களிப்பு வசதிகளை சம்பந்தப்பட்டோருக்கு அரசு வழங்கியிருக்கின்றது என்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, தண்டிப்பதன் மூலம் இத்தகைய மீறல்களை அரசினால் தடுத்து நிறுத்த முடியும்.'' என்று அமெரிக்கத் தூதுவர் தெட்டத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்.

மனித உரிமை மீறல்கள் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் யாழ். குடாநாட்டில், வெளியிடங்களுக்கான தரைவழிப்பாதை அடைக்கப்பட்ட நிலையில் பாரிய இராணுவப் பிரசன்னத்துக்கு நடுவில் சுமார் ஐந்து லட்சம் தமிழ் மக்கள் திறந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலையில் அவல வாழ்வு வாழ்கின்றார்கள். இதனால் அவர்களின் உளவுரம் தகர்ந்து, அவர்கள் மனநிலைப் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சிறைக்குள் சிக்குண்டவர்கள் மத்தியில் பூதம் புகுந்து அட்டகாசம் புரிவதுபோல அரச பின்புல ஆதரவோடு ஆட்கடத்தல்களும், படுகொலைகளும் கர்ண கொடூரமாகத் தொடர்கின்றன. நீதித்துறையினர் கூட இந்த அட்டகாசக் கும்பல்களிடமிருந்து தப்பமுடியாது என்று கூறுமளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கின்றது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் தலைநகர் கொழும்பில் பணிக்கு சமுகம் தந்த சமயம் மர்மமான முறை யில் காணாமற்போய் பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதுவர் நேரில் வந்து தங்களின் அவல நிலையை நேரில் பார்வையிட வேண்டும் எனக்கோரி, வெலிக்கடை மற்றும் நியூ மகசின் சிறைச்சாலையில் உண்ணா விரதப் போராட்டத்தில் தமிழ்க் கைதிகள் குதித்திருந்த சமயத்தில் அவர்கள் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றனர்.

இந்தச் சம்பவங்கள் எல்லாம் இலங்கையில் ஈழத் தமிழரின் பேரவல நிலைமை குறித்துத் தீர்க்கமான முடிவுகளை ஆர்பர் அம்மையார் எடுப்பதற்கு உதவும் என எதிர்பார்க்கலாம்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பற்றிய முடிவை எடுப்பதற்கு இலங்கை அரசின் சட்டங்களையும், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச ஏற்பாடுகள், ஒழுங்கு முறைகள், விதிகள் போன்றவற்றையும் மட்டும் ஐ.நா. மனித உரிமைகள் தூதுவர் கவனத்தில் கொண்டால் போதுமானதல்ல.

அதற்கு அப்பால், இந்த இலங்கைத் தீவில் சரித்திர காலத்துக்கு முன்பிருந்தே வசித்து வரும் பூர்வீகத் தேசிய இனம் என்ற ரீதியில் இலங்கைத் தமிழர்களுக்கு வழக்காறு அடிப்படையாக வரும் அடிப்படை உரிமைகளையும், அவை மீறப்படும் முறைமைகளையும் கூட அவர் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

பூர்வீகத் தேசிய இனம் என்ற முறையில் தமிழர்களுக்கு உள்ள சுயநிர்ணய உரிமையை மறுத்து, அவர்களது தாயகத்தை அரசியல், நிர்வாக, புவியியல், பௌதீக வழிகளில் துண்டாடி, அதனை பௌத்த சிங்களப் பிரதேச மயமாக்கும் உரிமைப்பறிப்பும் இலங்கைத் தீவில் அரங்கேறுவதை அவர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பௌத்த சிங்களப் பேரினவாதப் பின்புலத் தளத்திலே தொடர்ந்து ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த இனவழிப்பு இன ஒடுக்குமுறை போக்கை ஆர்பர் அம்மையார் செம்மையாகப் புரிந்து கொள்வாராயின், தமிழர் தாயகத்தில் மோசமாகக் கட்டவிழும் மனித உரிமை மீறல்களின் சூத்திரதாரிகள் யார் என்பதையும் அவர் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.

வன்முறைப் புயலாக வீசும் இந்த மனித உரிமை மீறல் செயற்பாடுகளின் நோக்கம் இலக்கு தமிழர்களின் ஆயுதப் போராட்ட சக்தியான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பது மட்டுமல்ல, அந்த இயக்கம் எந்தச் சிறுபான்மை இனத்துக்கு மத்தியில் இருந்து முகிழ்ந்ததோ, அந்தச் சிறுபான்மை இனத்தையே அடியோடு அழித்து, அதன் தனித்துவமான இனத்துவ அடையாளங்களைச் சிதைப்பதும் கூடவாகும்.

இந்தப் பேரினவாத அரசியல் காழ்ப்புணர்வுப் போக்கை ஆர்பர் அம்மையார் உணர்ந்து கொள்வாராயின், இலங்கையில் மோசமாக இடம்பெறும் மனித உரிமை மீறல்களின் காத்திரத்தை சூத்திரத்தை அவர் இலகுவாகப் புரிந்து கொள்வது அப்படி ஒன்றும் கஷ்டமான விடயமாக இருக்காது.

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.