Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
07 OCT, 2024 | 03:05 PM
image

பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது தூய்மையான அரசியலை பேணுதல் வேண்டும். அத்துடன் சில நியாயமான கொள்கைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மார்ச் 12 இயக்கம் வலியுறுத்துகின்றது, என மார்ச் 12 இயக்கச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.       

யாழ். மாவட்டத்தில் மார்ச் 12 இயக்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கும் பவ்ரல் அமைப்பின் கள இணைப்பாளர் சசீஸ்காந்த் அவர்களுக்கும் இடையில் கே. கலாராஜ் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.  

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சில தகைமைகளையும் கொண்டிருக்க வேண்டும்.  

குறிப்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் - குற்றவியல் தவறுகளற்ற, இலஞ்ச ஊழலற்ற ஒருவராக இருத்தலுடன் மது, போதைப் பொருள், சூது, ஆகிய சமூக சீரழிவுமிக்க வியாபார நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்களாகவும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்காதவர்களாகவும் இருப்பது அவசியம்.  

சுற்றுச்சூழல் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பவர்களாகவோ, நாட்டுக்கு குந்தகம் விளைவித்த நிதிசார் ஒப்பந்தங்களின் பங்கு தாரராகவோ இருந்திருக்கக் கூடாது.    

வேட்பாளர்கள் நியமனம் பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்பு அல்லது தாக்கல் செய்த பின்னர் தாம் மார்ச் 12 இயக்கத்தின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வது பற்றி பகிரங்கமாக பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.     

அதாவது, தாம் கடந்த காலத்தில் மேற் குறிப்பிட்ட முறைகேடான செயல்களை செய்ததில்லை எனவும் அவ்வாறான செயல்களை ஊக்குவிக்கவோ அல்லது உடந்தையாகவோ இருக்கவில்லை .   

வருங்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவ்வாறான செயல்களை செய்யப்போவதில்லை.    

இவ்வாறான செயல்களை புரிவோருக்கு உடந்தையாகவோ ஊக்குவிப்பாளராகவோஇருக்கப்போவதில்லை பொதுமக்களுக்கு இந்த வேட்பாளர்கள் பகிரங்கமாக உறுதியளிக்க வேண்டும். ஆகிய கட்டாய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் இச் சந்திப்பில் சமூக அரசியல் சார் செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/195683

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 12 இயக்கமா? ஏன்... அந்தப் பெயராய் வைத்தார்கள் என்ற தகவல் தெரியுமா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

மார்ச் 12 இயக்கமா? ஏன்... அந்தப் பெயராய் வைத்தார்கள் என்ற தகவல் தெரியுமா.

இலங்கையில் நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மார்ச் 12 என்ற பெயரில் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இயக்கம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுவருகின்றன.
படக்குறிப்பு,இந்த இயக்கம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுவருகின்றன.

இந்தப் பிரகடனத்தை வலியுறுத்தியும், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நாடெங்கிலும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் செயற்பாட்டை மார்ச் 12 இயக்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

கடந்த மாதம் 25ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் செயற்பாட்டின் தொடர்ச்சியாக ஞாயிறன்று வடபகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்கள் பெறப்பட்டிருக்கின்றன.

பவ்ரல் என்ற சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு என்ற அமைப்பினால் இந்த மார்ச் 12 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri_lanka/2015/06/150628_march_12

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

இலங்கையில் நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மார்ச் 12 என்ற பெயரில் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இயக்கம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுவருகின்றன.

படக்குறிப்பு,இந்த இயக்கம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுவருகின்றன.

இந்தப் பிரகடனத்தை வலியுறுத்தியும், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நாடெங்கிலும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் செயற்பாட்டை மார்ச் 12 இயக்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

கடந்த மாதம் 25ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் செயற்பாட்டின் தொடர்ச்சியாக ஞாயிறன்று வடபகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்கள் பெறப்பட்டிருக்கின்றன.

பவ்ரல் என்ற சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு என்ற அமைப்பினால் இந்த மார்ச் 12 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri_lanka/2015/06/150628_march_12

தகவலுக்கு நன்றி ஏராளன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.