Jump to content

கடற்புலிகளின் படைய நடவடிக்கை - பழிவாங்கல் 1 & 2


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

‘புவியியல் ரீதியாகத் தமிழீழத்தின் நிலப்பரப்பு கடலோடு ஒன்றிப் போயுள்ளது’. இது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் கடலின் முக்கியத்துவம் தொடர்பாகக் கதைக்கின்ற போதெல்லாம் அடிக்கடி கூறுகின்ற வசனம். விடுதலைப் புலிகளினுடைய வளர்ச்சிக்கு கடற்போக்குவரத்து என்பது மிகவும் இன்றியமையாததாகவே இருந்தது. விடுதலைப்புலிகளின் கடற்போக்குவரத்தை முடக்கிவிடுவதில் விடுதலைப்புலிகளினுடைய ஆயதப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து அந்த ஆயுதப்போராட்டம் முடிவுறும் நாட்கள் வரையிலும் இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் கடும் பிரயத்தனத்தனங்களில் இறங்கியிருந்தன. ஆனாலும் இத்தகைய சவால்களுக்கு முகம் கொடுத்து எதிர்ப்பட்ட தடைகளையும் தாண்டி எத்தனையோ உயிர்விலைகளைக் கொடுத்து அன்று தமிழ்நாட்டை ஆட்சி செய்த சோழப் பேரரசன் வைத்திருந்த கடற்படைக்கு ஒப்பான கடற்படையொன்றைக் கட்டி வளர்த்திருந்ததார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்.

விடுதலைப்புலிகளின் கடற்படையாகிய கடற்புலிகள் படையணி வெளியே தெரிந்துவாய் உள்ளே அறிந்ததுவாய் எத்தனையோ அரியபெரிய சாதனைகளை நிலைநிறுத்தி விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்திருந்தது. விடுதலைப்போராட்டத்திற்குத் தேவையான மூலாதாரங்களையும் வளங்களையும் கடல்கடந்த தேசங்களிலிருந்து சர்வதேசக் கடல்வழியாக தாயக்திற்கு கொண்டு வருவதில் கடற்புலிகள் படையணி பிரதான கதாபாத்திரத்தை வகித்துக்கொண்டது. இந்த நடவடிக்கைகளின் போது கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் செய்த உயரிய தியாகங்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவைகளாகும்.

2006ம் ஆண்டில் நடுப்பகுதியில் நோர்வே அரசின் அனுசரணையுடன் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த புரிந்துணர்வு உடன்படிக்கை செயலிழக்கத் தொடங்கியிருந்தது. இந்தச் சூழ்நிலையிலேயே கடற்புலிகளின் கடற்போக்குவரத்தை முடக்கி அதற்கு ஊடாக விடுதலைப்புலிகள் அமைப்பை ஒழித்து விடுவதில் கங்கணம் கட்டி நின்றது இலங்கை அரசு.

இதன் முதற்கட்டமாக இரண்டு ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் கொள்வனவு செய்த இலங்கை கடற்படையினர் இந்த ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களை வடபகுதிக் கடற்பரப்பில் முழுநேரக் கடற்கண்காணிப்பில் ஈடுபடுத்தியது. இந்தக் காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளும் அரச படைகளிடம் விழத் தொடங்கியிருந்தன. வுழமையாக கடற்புலிகள் முல்லைத் தீவுக்கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட கடல் விநியோக நடவடிக்கை இலங்கை கடற்படையினரின் தீவிர கடற்கண்காணிப்பினால் தடைப்பட்டுப்போனது. இதன் அடுத்த கட்டமாகவே கடற்புலிகள் விடுதலைப் போராட்டத்திற்கு தேவையான மூலாதாரங்களைத் தாயகத்திற்கு கொண்டுவரும் நோக்கோடு மன்னார் மாவட்டத்திலுள்ள அரிப்பு-சிலாவத்துறைப் பகுதிகளைத் தளமாக வைத்துக்கொண்டு மட்டுப்படுத்தப்பட்டளவிலான கடல்வழி விநியோகத்தினை மேற்கொண்டனர். இந்தக் கடல் நடவடிக்கையின் போதும் இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் பல்வேறுபட்ட இடையூறுகளை விளைவித்தன. இத்தகைய சவால்களுக்கெல்லாம் முகம் கொடுத்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கான மூலவளங்களை தாயகக்கரையில் கொண்டு வந்து சேர்த்தார்கள் கடற்புலிகள். இந்த உயரிய நடவடிக்கைகளின் போது இலங்கை கடற்படையினருடன் சமரிட்டு கடற்புலிப்போராளிகள் பலர் கடலன்னையோடு கலந்து விட்டதுவும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது கட்டமாகவே சர்வதேசக் கடற்பரப்பில் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற கடற்புலிகளின் கப்பல்களை தாக்கி அழிக்கின்ற நடவடிக்கைகளில் இறங்கியது இலங்கை அரசு. கடற்புலிகளின் கப்பல்கள் சர்வதேசக் கடற்பரப்பில் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவை பயணிக்கின்ற கடற்பாதைகள் தொடர்பாகவும் இந்தியாவும் மேற்குலக நாடுகளும் புலனாய்வு ரீதியாக சகல தரவுகளையும் திரட்டி இலங்கை அரசிற்கு கொடுத்திருந்தது.

இந்தத் தரவுகளையெல்லாம் அடிப்படையாக வைத்து இலங்கை கடற்பரப்பினர் 16.09.2006 அன்று அம்பாந்தோட்டைக்கு நேராகவுள்ள சர்வதேசக் கடல் எல்லையில் முதலாவது நாடகத்தை அரங்கேற்றினர். கடல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகளின் கப்பல் இலங்கை கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டு தாக்கியழிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் லெப் கேணல் ஸ்ரீபன், லெப் கேணல் அந்தணன், லெப் கேணல் விதுசன் உட்பட இன்னும் சில கடற்புலிகள் கடலன்னையின் மடியில் காவியமானார்கள்.
இரண்டாவது நாடகத்தை தேவேந்திரமுனைக்கு அப்பாலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் அரங்கேற்றியிருந்தனர் இலங்கை கடற்படையினர். அதாவது 28.02.2007 அன்று தேவேந்திரமுனைக்கு அப்பால் பயணித்துக்கொண்டிருந்த கடற்புலிகளின் கப்பலை வழிமறித்த இலங்கை கடற்படையினர் அதைத் தாக்கி மூழ்கடித்தனர். இந்தச் சம்பவத்தின் போது லெப். கேணல் இளமுருகன் உட்பட பதினைந்து கடற்புலிகள் கடலன்னையின் மடியில் காவியமானார்கள்.

இரண்டாவது சம்பவம் நடந்து சரியாக பதினாறு நாட்கள் கழிந்து 16.03.2007 சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் மற்றுமொரு கப்பல் இலங்கை கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் போது ஒன்பது கடற்புலிகள் கடலன்னையின் மடியில் காவியமானார்கள்.

LTTE.sea-tigers.jpg

மூன்றாவது சம்பவம் இடம்பெற்று ஆறு மாதகால இடைவெளியின் பின்னர் 10.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் இரண்டு கப்பல்கள் ஒரே சந்தர்ப்பத்தில் இலங்கை கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இதற்கு மறுநாளான 11.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் இன்னுமோர் கப்பல் இலங்கை கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இந்த மூன்று கப்பல் சம்பவங்களிலுமாக லெப். கேணல் சோபிதன் லெப். கேணல் செண்பகச்செல்வன், லெப். கேணல் வீமன் உட்பட முப்பதிற்கும் மேற்பட்ட கடற்புலிகள் கடலோடு கலந்து போனார்கள்.
இந்தத் துயரச் சம்பவங்கள் இடம்பெற்று ஒரு மாதகாலம் நிறைவடைவதற்கு முன்னர் சரியாக இருபத்தாறு நாட்கள் கடந்த நிலையில் 07.10.2007 அன்று அவுஸ்ரேலியா நாட்டின் கடல் எல்லைக்கு அண்டியதாக சர்வதேச கடற்பரப்பில் கடற்புலிகளின் மற்றுமோர் கப்பல் இலங்கை கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டு தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் லெப் கேணல் கபிலன் உட்பட ஒன்பது கடற்புலிகள் கடலன்னையின் மடியை முத்தமிட்டார்கள்.

இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக கடற்புலிகளின் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுவும் இந்த சம்பவங்களின் கப்பல்கள் மூழ்கடிக்கப்படதுவும் இந்த சம்பவங்களின் போது நீண்டகால கடல் அனுபவம் வாய்ந்த அறுபத்தெட்டு கடலோடிகளின் வீரச்சாவு நிகழ்வும் கடற்புலிகளுக்கும் கடற்புலிகளின் விசேட தளபதி சூசை அவர்களுக்கும் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருந்தது. 2007ம் ஆண்டில் மட்டும் கடற்புலிகளின் ஆறு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு ஈடாக ஆறு பழிவாங்கல் தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டுமென்ற ஆக்ரோசமான உணர்வு கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களிடம் மேலோங்கியிருந்ததை அந்தக் காலகட்டங்களில் அவதானிக்க முடிந்தது.

2006ம் ஆண்டைப் பொறுத்தவரையில் கடற்புலிகள் பல கடற்சமர்களை மேற்கொண்டு குறிப்பிடக் கூடிய வெற்றிகளைக் குவித்திருந்தார்கள். அவற்றில் 2006 ஜனவரி மாத்தின் முற்பகுதியில் திருமலைக் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த டோறா கடற்கலம் வஞ்சியின்பன் ஆகியோர் மேற்கொண்ட கரும்புலித் தாக்குதலில் பத்து இலங்கை கடற்படையினருடன் டோறா மூழ்கடிப்பு 11.05.2006 அன்று வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரின் டோறா கடற்கலங்களின் தொடரணி மீது கடற்கரும்புலிகளான லெப். கேணல் கவியழகி, லெப் கேணல் சஞ்சனா, லெப் கேணல் அன்பு, மேஜர் மலர்நிலவன் ஆகியோர் மேற்கொண்ட கரும்புலித்தாக்குதலில் இரண்டு டோறா கடற்கலங்கள் மூழ்கடிப்பு, 16.10.2006 அன்று தென்னிலங்கையிலுள்ள காலித்துறைமுகத்தில் கடற்கரும்புலிகள் ஊடுருவிச் சென்று மேற்கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த கரும்புலித்தாக்குதலில் இலங்கை கடற்படையினரின் வீரயா கட்டளைக்கப்பல் உட்பட இன்னும் பல கடற்கலங்களும் அழிக்கப்பட்டன. இந்த இழப்புகளையெல்லாம் அன்றைய நாட்களில் இலங்கை அரசு மூடி மறைத்திருந்தது. அத்துடன் 09.11.2006 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரின் டோறா கடற்கலங்களின் தொடரணி மீது கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் மேற்கொண்ட தாக்குதலில் இலங்கை கடற்படையினரின் இரண்டு டோறா கடற்கலங்கள் மூழ்கடிப்பு என 2006 ம் ஆண்டில் கடற்புலிகள் ஈட்டிய வெற்றிகளை பட்டியலிட்டுக் குறிப்பிட முடியும்.

2007ம் ஆண்டில் கடற்புலிகள் மேற்கொண்ட கடற்சமர்கள் எவையும் அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. 26.12.2007 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரின் டோறா கடற்கலம் ஒன்றின் மீது கடற்கரும்புலி லெப் கேணல் சங்கரி தலைமையிலான நால்வர்’ அடங்கிய கடற்கரும்புலிகள் மேற்கொண்ட கரும்புலித் தாக்குதலில் அந்த டோறா கடற்கலம் மூழ்கடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. கடற் சண்டையைப் பொறுத்தமட்டில் பகல் சண்டைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது விமானத்தாக்குதல் ஆகும். நீண்ட நாட்களாக இலக்குக்காகக் காத்திருந்து அன்றைய தினம் காலை வேளையிலே அந்த இலக்கு கிடைத்ததால் விமான அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கினர் கடற்புலிகள். கட்டளை மையத்தில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசைக்கு அடுத்த நிலையிலான தளபதிப் பொறுப்பை நிர்வகித்துக்கொண்டிருந்த நரேன் அவர்கள் தாக்குதலை நெறிப்படுத்த வெற்றிகரமாக கடற்கரும்புலித்தாக்குதலை மேற்கொண்டு டோறாக் கடற்கலத்தை மூழ்கடித்துவிட்டு வெற்றிவாகையுடன் தளம் திரும்பிக்கொண்டிருந்தன. கடற்புலிகளின் சண்டைப் படகுகள். படகுக்கட்டளை அதிகாரி லெப். கேணல் நிலவனின் படகு கிராஞ்சிக் கடலில் கரை தட்டிய வேளை திடீரென வான்பரப்பிற்குள் நுழைந்த கிபிர் விமானங்கள் இந்தப் படகின் மீது தாக்குதலை மேற்கொண்டதில் படகுக் கட்டளை அதிகாரி லெப். கேணல் நிலவன் உட்பட பதினேழு கடற்புலிகள் ஒரே சந்தர்ப்பத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். ஆகவேதான் ஒரே சம்பவத்தில் இவ்வாறான பேரிழப்பு ஏற்பட்டதால் இந்த டோறா மூழ்கடிப்புச் சமர் வரலாற்றில் வெற்றிச் சமராகப் பதியப்படவில்லை.

t_aucw_06.jpg22.03.2008 அன்று முல்லைத்தீவு நாயாற்றுக் கடற்பரப்பில் வைத்து கடற்கரும்புலிகளான லெப். கேணல் அன்புமாறன்இ மேஜர் நிறஞ்சினி, மேஜர் கனிநிலா ஆகிய மூவர் அடங்கிய கரும்புலிப்படகு இலங்கை கடற்படையினரின் டோறாக்கலம் மீது மோதி அந்த டோறாக்கலம் நாயாற்றுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டது. இந்த தாக்குதலும் அன்றைய தினம் பகல்வேளையிலேயே இடம்பெற்றது. இத்தாக்குதல் ஒரு வித்தியாசமான கோணத்தில் நடைபெற்றது. அது என்னவென்றால் சண்டைப் படகு மட்டும் களத்தில் இறங்கி டோறாக்கலத்துடன் மோதியது. டோறாக்கலம் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. கரும்புலிகள் நாயாற்றுக்கடலில் வரலாற்றைப் படைத்தார்கள். இதுதான் அன்றைய தினத்தில் நடந்த சம்பவம். இந்த டோறா மூழ்கடிப்பு சம்பவமானது அன்றைய நாட்களில் இலங்கை கடற்படையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. குறிப்பாக கடலில் சண்டை எதுவும் இடம்பெறவில்லை. இந்த நடவடிக்கைக்கு ‘பழிவாங்கல்- 01′ என கடற்புலிகளால் பெயரிடப்பட்டது.

அடுத்ததாக ‘பழிவாங்கல் – 02′ நடவடிக்கை திருகோணமலை துறைமுகத்திலேயே மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. விடுதலைப்புலிகளின் கப்பல்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையினரால் சர்வதேசக் கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டபோது இந்த நடவடிக்கையில் நேரடியாகப் பங்கெடுத்த கடற்படையினருக்கு வழங்கல் பணி மேற்கொண்டதுதான் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான யு-520 துப்புக்காவிக் கப்பல். இந்த துருப்புக்காவிக்கப்பலை தகர்ததெறிவதே ‘பழிவாங்கல் – 02′ திட்டம். இந்த நடவடிக்கைக்கான வேவுத்தரவுகளை எடுத்து நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கென தாக்குதல் தளபதிகளான லெப். கேணல் கதிரவன் மற்றும் சீலன் ஆகிய இருவரும் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டார்கள். கப்பலைத் தகர்ப்பதற்கான கரும்புலித்தாக்குதலை மேற்கொள்வதற்கென கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவிலிருந்து லெப். கேணல் செம்பியவளவன், மேஜர் அற்புதன் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பயிற்சிகள் அனைத்தும் நீரடி நீச்சல்ப் பிரிவுப் பொறுப்பாளர் சின்னவன் அவர்களால் முல்லைத்தீவு – சிலாவத்தைப் பகுதியில் வைத்து வழங்கப்பட்டது. இந்த இரண்டு கரும்புலி மறவர்களும் கடுமையான பயிற்சிகளால் புடம்போடப்பட்டு ஒத்திகைப் பயிற்சிகளும் திருப்தியாக அமையவே இருவரும் தாக்குதலுக்காக திருகோணமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

 

திட்டமிட்டபடி தாக்குதல் தளபதிகளான லெப். கேணல் கதிரவன் மற்றும் சீலன் ஆகியோர் எடுத்த தரவுகளின் படி யு-520 துருப்புக்காவிக்கப்பலும் திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதுவும் உறுதி செய்யப்பட்டது. இந்த தாக்குதலுக்கென தேர்வு செய்யப்பட்ட செம்பியவளவனும் அற்புதனும் சிலிண்டரில் அடைக்கப்பட்ட ஒட்சிசன் உதவியுடன் வெடி குண்டுகளையும் உடம்பில் கட்டி கடலின் அடியால் நீந்திச் சென்று யு-520 துருப்புக்காவிக் கப்பலின் கீழ் அடிப்பகுதியில் வெடிகுண்டுகள் இரண்டையும் பொருத்தி வெடிக்க வைத்து கப்பலைத் தகர்த்தெறிவதுவே தாக்குதலினுடைய திட்டம்.

குறிப்பிட்ட தாக்குதலுக்கான திகதியும் குறிக்கப்பட்டது. 09.05.2008 அன்று இரவு தாக்குதலுக்கான ஏற்பாடுகள் திருகோணமலையில் யாரும் அறியாத இடமொன்றில் மிகவும் இரகசியமான முறையில் இவர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த நேரத்தில் செம்பியவளவனின் பெற்றோர் தென்னிலங்கையில் தங்கியிருந்தார்கள். தாக்குதலுக்குப் புறப்படுவதற்கு முன்னர் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசையுடன் செய்மதித் தொலைபேசியில் இரண்டு கரும்புலி வீரர்களும் கதைத்தார்கள். அப்போது செம்பியவளவன் ‘அம்மாவுடன் தொலைபேசியில் ஒருமுறை கதைக்கட்டா அண்ணை’ என்றார் அதற்கு சிறப்புத்தளபதி சூசை அவர்கள் தாக்குதலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் கதைக்கும்படி அனுமதி வழங்கினார். தாய்மண் விடிவிற்காக சாவிற்கு நேரம் குறித்த பின்னர் அந்த வீரனுக்கு தாயின் நினைவு வந்ததது தவறு இல்லைதானே. அனுமதியைப் பெற்றுக்கொண்டு அம்மா, அப்பா, அக்கா என எல்லோருடனும் அரைமணி நேரமாக தொலைபேசியில் கதைத்தான். இன்னும் சிறிது நேரத்தின் பின்னர் கடிலின் அடியில் வெடிக்கப்போகின்றேன் என்று தெரிந்தும் எந்தவித பதற்றமும் இல்லாமல் உறவுகளோடு கதைத்து முடித்தான்.

10.05.2008 அதிகாலை 3.00 மணி. வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு சிலிண்டரில் அடைக்கப்பட்ட ஒட்சிசன் உதவியுடன்ட அந்த இரண்டு கரும்புலி வீரர்களும் காரிருள் வேளையில் கடலில் அடியால் நீந்திச்சென்றனர். நீந்திச் சென்று குறித்த இலக்கான யு-520 துருப்புக்காவிக்கப்பலை இருள் வேளையிலும் இனங்கண்டு உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை கப்பலின் கீழான அடிப்பகுதியில் பெருத்தியதும் குண்டுகளை வெடிக்க வைத்தனர். யு-520 துருப்புக்காவிக்கப்பல் திருமலைத் துறைமுகத்தில் தகர்ந்தது. கடற்கரும்புலிகளான லெப் கேணல் செம்பியவளவன், மேஜர் அற்புதன் திருமலைக்கடலில் வரலாறானார்கள். வெற்றிச் செய்தி காற்றலையில் கலந்தது. பழிவாங்கல் – 02 வெற்றிகரமாக நிறைவேறியது.

2009 மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கு 2007ம் ஆண்டில் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுவே ஒட்டுமொத்த புலிகளின் தோல்விக்கு காரணமாக அமைச்ததெனவும் கூறலாம்

https://eelampakkam.blogspot.com/2012/03/blog-post_04.html

செங்கோ

Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to கடற்புலிகளின் படைய நடவடிக்கை - பழிவாங்கல் 1 & 2


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு, ஊட்டி வெலிங்டன் ராணுவ மையத்தில் கட்டபொம்மன் சிலை கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 16 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த கட்டுரை மீண்டும் பகிரப்படுகிறது) இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என அழைக்கப்படும் 1857 சிப்பாய் கலகத்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர்களில் முதன்மையானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த மாலிக்கபூர், 612 யானைகளையும், 20,000 குதிரைகளையும், 96000 மணங்கு பொன்னும், முத்தும், அணிகலன்களும் அடங்கிய பெட்டிகளையும் மதுரையிலிருந்து கொள்ளையடித்து சென்றார் என்று வரலாறு கூறுகிறது. "அப்படிப்பட்ட மாலிக்கபூரைக் கூட “கொள்ளைக்காரன் மாலிக்கபூர்” என யாரும் எழுதுவதில்லை, ஆனால் வெள்ளையர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி, ஆங்கிலேயர்கள் நடத்திய இறுதி விசாரணையில் கூட எவ்வித கொள்ளைக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத, வீரபாண்டிய கட்டபொம்மனை “கொள்ளைக்காரன்” என்று பழி சுமத்துகிறார்கள்”, என வேதனைப்படுகிறார் எழுத்தாளர் வே. மாணிக்கம். தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சி எனும் ஒரு சிறிய பாளையத்தை ஆண்ட பாளையக்காரர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன், ஆனால் இந்த சிறிய பாளையத்தை பல கட்ட போர்களுக்கு பிறகு தான் ஆங்கிலேய அரசால் முழுமையாக கைப்பற்ற முடிந்தது. ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு, அக்டோபர் 16, 1799 அன்று கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். படக்குறிப்பு, தூக்கிலிடப்படுவதற்கு முன்பு கட்டபொம்மன் இருந்த சிறைச்சாலை கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது ஏன்? “ஆங்கிலேய அரசுக்கு வரி கட்ட மறுத்தது, தனது படைவீரர்கள் உதவியோடு ஆங்கிலேய அரசுக்கு எதிராக புரட்சி செய்து பல ஆங்கிலேய சிப்பாய்களை கொன்றது, மற்ற பாளையக்காரர்களையும் அரசுக்கு எதிராக புரட்சி செய்ய தூண்டியது உட்பட பல காரணங்களுக்காக வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் கயத்தாரின் பழைய கோட்டைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் மேஜர் பானர்மேன் மற்றும் பாளையக்காரர்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்”, என 1881-இல் மதராஸ் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட, ராபர்ட் கால்டுவெல் எழுதிய 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கூட வீரபாண்டிய கட்டபொம்மன் சுதந்திரத்திற்காக போராடியவர் அல்ல, அவர் ஒரு கொள்ளைக்காரர் என சிலர் சொல்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இதைக் குறித்து அவ்வப்போது சர்ச்சைகளும் எழுவதும் உண்டு. இது குறித்து சில நூல்களும் தமிழில் வெளிவந்துள்ளன. இவ்வாறு சொல்லப்படுவதன் பின்னணி என்ன, வீரபாண்டிய கட்டபொம்மன் என்பவர் உண்மையில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியதால் தான் தூக்கிலிடப்பட்டாரா என தெரிந்து கொள்ள நெல்லையைச் சேர்ந்த எழுத்தாளர் வே. மாணிக்கத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். வே. மாணிக்கம், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கட்டபொம்மன் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். கட்டபொம்மன் கும்மிப்பாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் விவாத மேடை, வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு, தானாபதிப் பிள்ளை வரலாறு, கட்டபொம்மன் வரலாற்று உண்மைகள், ஊமத்துரை வரலாறு, போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். படக்குறிப்பு, கட்டபொம்மன் வழிபட்ட விக்ரகங்கள் கட்டபொம்மன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்னென்ன? கட்டபொம்மன் மீதான இறுதி விசாரணையின் போது வெள்ளையரால் நான்கு குற்றங்கள் சுமத்தப்பட்டன, வரி ஒழுங்காகக் கட்டவில்லை கலெக்டர் அழைத்த போது சந்திக்க மறுத்தார் சிவகிரியாரின் மகனுக்கு ஆதரவாகப் படைகள் அனுப்பினார் பானர்மேன் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டுச் சரணடையாமல் எதிர்த்து போரிட்டார். "அவர் மீது கொள்ளையடித்தார் என எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. ஆனாலும் கூட சிலர் வீரபாண்டிய கட்டபொம்மன் மீது தவறான குற்றச்சாட்டுகளை ஆதாரங்கள் ஏதுமின்றி முன் வைக்கிறார்கள்” எனக் கூறுகிறார் வே.மாணிக்கம். அவர் தொடர்ந்து பேசியது, “ஆங்கிலேய அதிகாரி மாக்ஸ்வெல் நில அளவை எனும் பெயரில் தன் பகுதிகளை எட்டையபுரத்தாருக்கு கொடுத்ததைக் கட்டபொம்மன் ஏற்கவில்லை. தன் தந்தையைப் போலவே வெள்ளையரை எதிர்த்து பல செயல்களில் ஈடுபட்டார், வரி கட்ட மறுத்தார். கலெக்டர் ஜாக்சன் பலமுறை கடிதம் எழுதியும் கட்டபொம்மன் அவரை சென்று பார்க்கவில்லை. இதனால் கோபமடைந்த ஜாக்சன், கட்டபொம்மனை கைது செய்ய உடனே படை அனுப்புமாறு கவர்னருக்கு கடிதம் எழுதினார். ஆனால் கவர்னரோ, கட்டபொம்மனை அழைத்து பேசுமாறு ஜாக்சனுக்கு ஆலோசனை வழங்கினார். எனவே சமரசம் பேச 15 நாட்களுக்குள் இராமநாதபுரம் வருமாறு கட்டபொம்மனுக்கு கடிதம் அனுப்பிவிட்டு குற்றாலம் சென்று விட்டார் கலெக்டர் ஜாக்ஸன். கடிதம் கண்டு தன்னைக் காண வரும் கட்டபொம்மனை ஆத்திரமூட்டி, ஊர் ஊராக அலைக்கழித்துச் சந்திக்க விடாமல் செய்துவிட்டால் அதையே காரணம் காட்டி பாளையக்காரர் பதவியிலிருந்து அவரை நீக்கிவிடலாம் என்பதே ஜாக்சன் திட்டம். இவ்வாறு குற்றாலம், சொக்கம்பட்டி, சிவகிரி, சேத்தூர் என ஒவ்வொரு ஊராக அலைக்கழிக்கப்பட்ட கட்டபொம்மன் இறுதியாக ஜாக்சனை இராமநாதபுரத்தில் சந்தித்தார்” என்றார்.   படக்குறிப்பு, பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே ஆங்கிலேய படை கட்டபொம்மன் ஜாக்சனை சந்தித்த போது நடந்த கலவரம் தொடர்ந்து பேசிய வே.மாணிக்கம், “இராமநாதபுரம் பேட்டி கட்டபொம்மனின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு. ஜாக்சனை சந்திக்க கட்டபொம்மன் சென்ற போது, அவர் மட்டுமே கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டார். அவரது தம்பிமார், மாப்பிள்ளைமார், மாமனார், மற்றும் படைகள் வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர். மூன்று மணிநேரம் தண்ணீர் கூட தராமல் அவரை காக்க வைக்கிறார்கள். மேலும் நிர்வாகத்தின் உத்தரவு வரும் வரை கோட்டைக்குள்ளேயே கட்டபொம்மன் தங்கியிருக்க வேண்டுமென சொல்லப்பட்டது. தன்னை சிறைப்படுத்த முயற்சி நடக்கிறது என்பதை உணர்ந்த கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறுகிறார். அப்போது அங்கு ஒரு கலவரம் நடைபெறுகிறது, அதில் லெப்டினன்ட் கிளார்க் எனும் ஆங்கிலேய அதிகாரி கட்டபொம்மனால் கொல்லப்படுகிறார்” எனக் குறிப்பிடுகிறார். இந்த நிகழ்வுகளுக்கு ஆதாரமாக கட்டபொம்மனின் இரு கடிதங்கள், ஆங்கிலேய அதிகாரி டேவிட்சனின் கடிதம், ஆங்கிலேய அரசு அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை ஆகியவை உள்ளன. இராமநாதபுரம் பேட்டியில் ஜாக்சன் நடந்து கொண்டது தவறு என கண்டுகொண்ட ஆங்கிலேய நிர்வாகம் அவரை பதவி நீக்கம் செய்து, லூசிங்டன் என்பவரை கலெக்டராக நியமித்தது. ('திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', 1881, ராபர்ட் கால்டுவெல், பக்கம்: 177-178). படக்குறிப்பு, பாஞ்சாலங்குறிச்சி போரில் இறந்த ஆங்கிலேய வீரர்களின் கல்லறைகள் இராமநாதபுர கடை வீதியை கொள்ளையிட்டாரா கட்டபொம்மன்? வே.மாணிக்கம் தொடர்ந்து பேசும்போது, “இராமநாதபுர பேட்டியில் நடந்த கலவரத்தோடு சேர்த்து, அதற்கு முன்னும் பின்னும் நடந்த விஷயங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். கலெக்டர் ஜாக்சனை சந்திக்க புறப்பட்டு வந்த கட்டபொம்மனும் அவரது வீரர்களும், பலநாட்கள் அலைக்கழிக்கப்பட்டு, இறுதியில் கட்டபொம்மன் அவமதிக்கப்படுகிறார். அவரது தம்பிமாரும், மாப்பிள்ளைமாரும் பேட்டி நடக்கும் முன்பே தாக்கப்பட்டனர். அவர்களது உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவை ஆங்கில வீரர்களால் ஏலம் போடப்பட்டன. அங்கு நடந்த மோதலில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் பலர் உயிர் துறந்தனர். முற்றுகையை உடைத்து வெளியே வந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கட்டபொம்மனின் படை வீரர்கள் கொதித்துப்போய் இருந்தனர். எனவே திரும்பி செல்லும் வழியில் இருந்த இராமநாதபுர கடை வீதியை படைவீரர்கள் அழித்தனர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான ஒரு செயலாகவே இதைப் பார்க்க வேண்டும்” எனக் கூறினார். இந்த சம்பவத்திற்கு பிறகு, ஆங்கிலேய அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, “இந்த கலகத்தில் கட்டபொம்மனை குறை சொல்வதற்கில்லை. தன்மான கௌரவத்திற்கு பங்கமேற்படும் போது, கோழையைப் போல அவர் நடந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறாகும். மேலும், தன் தலைவனுக்கு ஆபத்து ஏற்பட இருக்கும் சமயம் அவனுக்கு கட்டுப்பட்டு இருக்கும் பரிவாரங்கள் கைக்கட்டிச் சும்மா இருக்காது. உணர்ச்சி வசப்படத்தான் செய்யும்” என்று அறிக்கை கொடுத்தது. ('திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', 1881, ராபர்ட் கால்டுவெல், பக்கம்: 173-177). “இதே போல அருங்குளம், சுப்பலாபுரம் என எட்டயபுரத்தை சேர்ந்த இரண்டு கிராமங்கள் மற்றும் ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம் போன்ற இடங்களில் கட்டபொம்மன் கொள்ளையிட்டார் என கூறுகிறார்கள். ஆனால், நில அளவை என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் அந்த பகுதிகளை கட்டபொம்மனிடமிருந்து பறித்தனர், சினம் கொண்ட கட்டபொம்மன் அந்த பகுதிகளில் தனது ஆட்களைக் கொண்டு உழுது பயிரிட்டார். இவ்வாறு உழுது பயிரிட்டதை கொள்ளையடித்தார் என சிலர் திரித்து எழுதினார்கள்”.   படக்குறிப்பு, ஊமைத்துரை மற்றும் படை வீரர்கள் இருந்த சிறை கட்டபொம்மன் ஒரு தெலுங்கர் எனும் வாதம் ஏன் எழுகிறது? “கட்டபொம்மனை தெலுங்கன் என்று கூறி நம்மிடமிருந்து பிரிக்கிறார்கள். அவரது முன்னோர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் தான், ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் நம் தமிழ் மண்ணில் பிறந்தவர்” என்றும் வே. மாணிக்கம் கூறுகிறார். “அப்போதிருந்த தமிழ்நாட்டின் பாளையக்காரர்கள் பலர் இவரது தலைமையின் கீழ் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராட விரும்பினார்கள். கட்டபொம்மன், இனம், மொழி, சாதி வேறுபாடு பார்க்காத ஒரு பாளையக்காரராக இருந்ததால் தான் இது சாத்தியமானது. வீரபாண்டிய கட்டபொம்மனின் அவைப்புலவராக சங்கர மூர்த்தி எனும் தமிழ்ப்புலவரே இருந்துள்ளார். கட்டபொம்மன் குறித்து பல்வேறு கதைப்பாடல்கள் ஏட்டுச்சுவடிகளில் உள்ளன. கட்டபொம்மனுடனான பாஞ்சாலங்குறிச்சி போரில் கடுமையான சேதங்களை சந்தித்த மேஜர் பானர்மேன் கூட கட்டபொம்மனை “அஞ்சா நெஞ்சத்துடன் விளங்கினார்” என பாராட்டினார் (மேஜர் பானர்மேன் கவர்னருக்கு எழுதிய கடிதம்). எதிரிகளே வியந்து பாராட்டிய ஒரு மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், அவரைப் பற்றிய பொய்க் குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவிட்டு, உண்மையான வரலாற்றை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்” எனக் கூறுகிறார் எழுத்தாளர் வே.மாணிக்கம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cd178e2pwlko
    • கிளிநொச்சி பரந்தன் மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் அதன் பயனாளிகளிடம் இன்று (16) காலை கையளிக்கப்பட்டன. கிளிநொச்சி கண்டாவளை  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் சிவபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த 05 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்காக  நிர்மாணிக்கப்பட்ட வீடு, அதன் உரிமையாளரிடம் இன்று காலை 9 மணிக்கு கையளிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து, காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராமத்தில் இராணுவத்தில் பணியாற்றும் கணவன் - மனைவி மற்றும் அவர்களுடன் சேர்ந்து வாழும் மாற்றுத்திறனாளியான தாய், தந்தையரை உள்ளடக்கிய குடும்பத்துக்கான வீடொன்றும் வழங்கப்பட்டுள்ளது.  இதன்போது இராணுவ உயரதிகாரிகள், இராணுவ பதவி நிலை உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், வீடுகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள், பொதுமக்கள் என பலர் இணைந்திருந்தனர். https://www.virakesari.lk/article/196440
    • உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணை அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்தால் அவற்றை கையளிப்பேன் - உதயகம்மன்பில அரசாங்கம் பகிரங்கமாக வெளியிடுவதாக உறுதியளித்தால் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் தன்னிடமுள்ள இதுவரை வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் கையளிக்க தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். என்னிடமுள்ள அறிக்கையை பெற்றுக்கொண்ட பின்னர் அதனை அரசாங்கம் பகிரங்கப்படுத்தாவிட்டால் என்ன நடக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதியோ அமைச்சரவை பேச்சாளரோ நான் வழங்கும் அறிக்கைகளை வெளியிடுவோம் என உறுதியளிக்கும் வரை நான் அரசாங்கத்திடம் அவற்றை கையளிக்க தயாரில்லை என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நான் வேண்டுகோள் விடுத்தபடி ஏழுநாட்களிற்குள் அறிக்கைகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிட்டால் நான் அவற்றை இணையத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன், என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196441
    • பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கட்டுரை தகவல் எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத் பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத் 16 அக்டோபர் 2024, 09:43 GMT புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சில நாட்களாக முக்கிய சாலைகள் மற்றும் கட்டடங்கள் ஜொலித்து வருகின்றன. பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் மரங்களை வெட்டி சீரமைத்தல், சாலை விளக்குகள் அமைத்தல், ஓவியங்கள், மலர்கள் கொண்டு அலங்கரித்தல் போன்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மிகவும் பாதுகாப்பான பகுதியான நாடாளுமன்றத்திற்கு முன் பூக்களால் செய்யப்பட்ட மயில் போன்ற அழகிய மலர் அலங்காரங்கள் காணப்படுகின்றன. இந்த அலங்காரங்கள் எந்த ஒரு தேசிய விழாவிற்காகவும் அல்ல, இது ஒரு சர்வதேச கூட்டதிற்கு தயாராவதற்காக நடந்து வரும் ஏற்பாடுகள். இந்த வாரம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 23வது உச்சி மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமை தாங்குகிறார்.   இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வில் இரான் துணை அதிபர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். பார்வையாளராக மங்கோலியாவின் பிரதமரும், சிறப்பு விருந்தினராக துர்க்மெனிஸ்தான் வெளியுறவு அமைச்ரும் கலந்துகொள்கின்றனர். இந்த 2 நாள் மாநாட்டிற்காக இஸ்லாமாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அக்டோபர் 17 ஆம் தேதி வரை அந்நகரின் பாதுகாப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தின் இரட்டை நகரம் என்று அழைக்கப்படும் ராவல்பிண்டிக்கும் மூன்று நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நகரின் வணிக மையங்களும் நீதிமன்றங்களும் இந்த நேரத்தில் மூடப்பட்டு இருக்கும்.   ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்றால் என்ன? சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளால் 2001 ஆம் ஆண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டது. தற்போது கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் இரான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் இரண்டு பெரிய நாடுகளான சீனா மற்றும் இந்தியா இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் உலகின் மொத்த மக்கள் தொகையில் 40% கொண்ட அமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளது. 2005 முதல் 2017 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் இந்த அமைப்பில் பார்வையாளர் அந்தஸ்து பெற்றிருந்தது. 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முறையாக உறுப்பினராக இணைந்தது. இந்த அமைப்பு ரஷ்யா, சீனா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யூரேசிய(ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள்) பாதுகாப்பு அமைப்பாக தொடங்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டில், இந்த அமைப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தானைத் தொடர்ந்து பார்வையாளர் நாடாக இருந்த ஆப்கானிஸ்தானும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு, இரானுக்கும் இந்த அமைப்பின் முறையான உறுப்பினருக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு செயல்படுகின்றது. அதன் தொடக்கத்தில் இருந்து தற்போது நடந்த விரிவாக்கம் வரை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது, மேற்கத்திய நாடுகளின் அமைப்பான நேட்டோவிற்கு இணையான அமைப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உண்மையில் நேட்டோவைப் போல வலுப்பெற்றுவிட்டதா?   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இந்த கூட்டமைப்பின் 23வது உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார். எஸ்சிஓ அமைப்பு நேட்டோவுக்கு இணையாக வலுப்பெறுமா? சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளை உறுப்பினர்களாக கொண்டிருப்பதால், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஒரு பெரிய அமைப்பாக இருக்கின்றது. மேலும் இது உலகின் 40 சதவீத பரப்பளவைக் கொண்டுள்ளது. அதன் அமைப்பு நேட்டோவிலிருந்து வேறுபட்டது என்றும் அதன் போர்த்திறன் சற்று குறைவாக இருக்கிறது என்றும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது ஒரு நன்மைதான் என்றும் ஆய்வாளர் அமீர் ஜியா கூறுகிறார். "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நோக்கம் மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்புடன் போட்டியிடுவது அல்ல. ஆனால் அது அந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை குறைத்து சமநிலையை உருவாக்கும் ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்ற வாய்ப்பை வழங்க வேண்டும்", என்றும் அவர் தெரிவித்தார். உலகில் தற்போது பொருளாதார அல்லது பாதுகாப்பு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள பல அமைப்புகள் உள்ளன என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இதில் ஜி-7, ஜி-20, குவாட், நேட்டோ மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற பெரிய அமைப்புகளும் அடங்கும். ஜி-7 மற்றும் ஜி-20 ஆகியன அதன் உறுப்பு நாடுகளுக்கு இடையே பொருளாதார ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் அரசியல் ஒற்றுமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் பொருளாதார கூட்டமைப்புகள் ஆகும். ஆனால், நேட்டோ என்பது 32 நாடுகளின் ராணுவக் கூட்டணி ஆகும். அதன் உறுப்பு நாடுகளுக்கு இடையே கூட்டு பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு இயங்குகின்றது. இங்கு ஒரு உறுப்பு நாட்டின் மீதான தாக்குதல் அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படுகிறது. இரான் விவகாரங்கள் தொடர்பான சர்வதேச விவகார நிபுணரான சஹ்ரா ஜைதி போன்ற விமர்சகர்கள், இந்த கூட்டமைப்பை மேற்கத்திய நாடுகளின் நலன்களுக்கு மட்டுமே உதவும் ஒன்றாகவும், மேற்கத்திய செல்வாக்கைத் தக்கவைப்பதற்கான ஆயுதமாகவும் கருதுகின்றனர். மறுபுறம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நோக்கம் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது போன்றவற்றை சார்ந்தே உள்ளன. ஆனால் குறைவான ராணுவத்திறன் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள உள்நாட்டு பிரச்னைகள் ஆகியவை இந்த அமைப்பின் முக்கிய பலவீனங்களாகக் கருதப்படுகின்றன. இதனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அதன் நோக்கத்தில் தோல்வியடைந்துள்ளதா?   பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் இந்த படம் ஜூன் 2019 இல் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளதா? இந்த அமைப்பு அதன் நோக்கங்களையும் இலக்குகளையும் அடைந்ததா இல்லையா என்பது குறித்து விவாதங்கள் எழலாம். ஆனால், இதுபோன்ற அமைப்புகள் அல்லது கூட்டணிகள் இருப்பது ஒரு சாதகமான விஷயம் என்று ஆய்வாளர் அமீர் ஜியா கருதுகிறார். "ஆரம்பத்தில் பலவீனமாகத் தோன்றிய இந்த அமைப்பு, தற்போது வலுவடைந்து வருகிறது", என்று இரானில் இருந்து பிபிசியிடம் பேசிய ஆய்வாளர் சஹ்ரா ஜைதி கூறுகிறார். சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து உருவான நாடுகள் பல விஷயங்களில் பலவீனமாக இருந்தனர் என்று அவர் தெரிவித்தார். "அவர்களுக்கு ஆதரவு தேவைப்பட்டது. இந்த அமைப்பு உருவான போது, அந்த நாடுகள் இந்த அமைப்பிற்கு ஒத்துழைப்பை வழங்கினால் தாங்கள் சிறந்து விளங்க முடியும் என்றும் இது அந்நாட்டின் மீதான வெளிநாட்டு செல்வாக்கையும் அகற்றும் என்பதை உணர்ந்தனர்", என்றும் அவர் கூறினார். "மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது கிழக்கு நாடுகளின் இந்தக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் பலவீனமாக தோன்றினாலும் இப்போது அதன் பலம் ஓரளவு அதிகரித்திருக்கிறது. இரான் உறுப்பினரானதால் இந்த அமைப்பு வலுப்பெற்றுள்ளது". இது குறித்து பிபிசியிடம் பேசிய மூத்த இந்திய பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பல பிரச்னைகளை விவாதிப்பதற்கான முக்கிய தளமாக மாறியுள்ளது என்றார். "இது யூரேசியாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு அதன் பல நோக்கங்களை அடைய முடியவில்லை, இதற்கு ஒரே காரணம் குறிக்கோள்களும் இலக்குகளும் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருப்பதுதான்", என்று அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்லாமாபாத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள். இந்த மாநாட்டிற்கு முன்பு நகரை பாதுகாக்கும் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. “இது இருதரப்பு மோதல்களைத் தீர்ப்பதற்கான ஒரு மன்றமாக இல்லாவிட்டாலும், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சந்தித்து பொதுவான பிரச்னைகள் குறித்து விவாதிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள உச்சிமாநாடு உறுப்பு நாடுகள் கூடுவதற்கான ஒரு வாய்ப்பே தவிர வேறொன்றுமில்லை என்பது எனது கருத்து". "உச்சிமாநாட்டில் வழக்கமான நிகழ்ச்சிகளைத் தவிர பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், வருகை தரும் உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்துவார்", என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்கு மட்டுமே பாகிஸ்தானிற்கு பயணம் செய்வதாகவும், அந்நாட்டுடன் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப் போவதில்லை என்றும் அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் உருவாகும் கூட்டமைப்புகள் மிக மெதுவாகவே செயல்படும் என்கிறார் அமீர் ஜியா. “தற்போது உலகில் பல கூட்டமைப்புகள் உள்ளன, ஒரு நாடு ஒரே கூட்டமைப்பில் மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே நேரத்தில் பல கூட்டமைப்புகளிலும், சில நேரங்களில் எதிரான கருத்தியல்கள் கொண்ட கூட்டமைப்புகளிலும் உறுப்பினராக இருக்கலாம். உதாரணமாக, இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக உள்ளது மற்றும் அதில் உள்ள நாடுகளுக்கு எதிரான நாடுகளின் கூட்டமைப்பான குவாட்டிலும் உறுப்பினராக உள்ளது." என்று அவர் கூறுகிறார். உறுப்பு நாடுகளுக்கு இடையில் முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் அத்தகைய முரண்பாடுகளை ஒதுக்கி, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பிற்கு சாத்தியமான விஷயங்களை உறுப்பு நாடுகள் கருத்தில் கொள்வதே நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.   பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப் போவதில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஒத்துழைப்பிற்கான புதிய பாதை சர்வதேச அளவில் பல நாடுகள் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இந்த உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள ரஷ்யா மற்றும் இரான் போன்ற நாடுகள் சர்வதேச அளவில் நேரடியாகவோ அல்லது வேறு வகையிலோ மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில் இந்த உச்சி மாநாடு நடைபெறுவதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது மற்றும் இது ஒரு பெரிய மேடையாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த உச்சிமாநாட்டின் போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுமா? இந்த மாநாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக இரான் ஏதேனும் கடுமையான முன்மொழிவு செய்யுமா? ரஷ்யா - யுக்ரேன் போரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் ரஷ்யாவிற்கு முழு ஆதரவை தெரிவிக்குமா? என்ற கேள்விகள் எழுகின்றன. மிகப்பெரிய அல்லது வலுவான கருத்துகளை கூறுவது என்பது கடினம் என்று சுஹாசினி ஹைதர் கூறுகிறார். “பாகிஸ்தானில் கூடும் இந்த மன்றம், இந்த கூட்டமைப்பின் முக்கிய மாநாடாக இருக்காது. எனவே, இங்கு மிகப்பெரிய அல்லது வலுவான கருத்துகள் கூறப்படும் என்று நான் நினைக்கவில்லை" என்று அவர் கூறினார்.   ஆனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடான இரான், இந்த மாநாட்டில் அந்த பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை குறித்து தெளிவான கருத்தை தெரிவிக்கும் என்று நம்பப்படுகின்றது என்று ஆய்வாளர் சஹ்ரா ஜைதி கூறினார். கடந்த ஆண்டுதான் இரான் இந்த கூட்டமைப்பின் முறையான உறுப்பினரானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த மாநாட்டில் இரான் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் கலந்துகொள்ளும் வேளையில் இங்கு இரான் செல்வாக்கு செலுத்துவதை நிரூபிக்க முடியும் என்றும் சஹ்ரா ஜைதி கூறினார். இஸ்ரேலில் நடக்கும் போர் மற்றும் இரானில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து வலுவான கருத்துகள் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்படும் என்று இரான் நம்பி வருவதாகவும் அவர் கூறுகிறார். "இந்த கூட்டமைப்பில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் வெளிநாட்டு சக்திகளின் பிடியில் இருந்து கடினமான பொருளாதார சூழலை எதிர்கொள்ளும் நிலை இருக்கக் கூடாது என்று விரும்புகின்றன. பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் வலுவாக இருப்பது முக்கியம். இந்த கூட்டமைப்பு அதன் உறுப்பு நாடுகளை கைவிட்டுவிடாது என்பதும் முக்கியம். இரான் இதனை நம்புகின்றது" என்கிறார் அவர். "மத்திய கிழக்கு பகுதியில் மோசமடைந்து வரும் நிலைமை மற்றும் இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமீபத்திய பதற்றம் காரணமாக, இரான் இந்த மாநாட்டை விரும்புகின்றது. ஆனால் இந்த சந்திப்பில் இருந்து வலுவான கருத்துகள் தெரிவிப்பது என்பது கடினம் என்பதை ஆய்வாளர் அமீர் ஜியா புரிந்துகொண்டுள்ளார்", என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உலகில் ஒருபுறம் போர் நடந்து வரும் சூழலில், இந்த மாநாட்டினால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த முடியுமா?   பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஜூலை 2024 இல் அஸ்தானாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்படுமா? இந்த மாநாட்டின் முக்கிய சந்திப்பிற்கு பிறகு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் தலைவர்களுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் முக்கியமான இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று பாகிஸ்தான் வெளியுறவுததுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மறுபுறம், இருநாட்டு விவகாரங்கள் குறித்து பேசப் போவதில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனத்தில் இருதரப்பு விவகாரங்கள் குறித்த பேச்சுகள் குறித்து எந்த ஒரு விதிமுறையும் இல்லை என்றாலும், உறுப்பு நாடுகள் ஒருவருக்கொருவர் சந்தித்து பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். "சர்வதேச மாநாடுகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களின் சந்திப்பும் ஒரு காலத்தில் நடந்தது. அங்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சமீப ஆண்டுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரையொருவர் விமர்சிப்பதற்கான களமாக இந்த மாநாடு மாறிவிட்டதாக தெரிகின்றது", என்று சுஹாசினி ஹைதர் கூறினார். அமீர் ஜியா கூறுகையில், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு காரணமாக, இந்த சந்திப்பின் போது லேசான பதற்றம் இருக்கலாம், என்றார். “பயங்கரவாதம் என்று வரும்போது, இந்தியா பாகிஸ்தானை குற்றம்சாட்டும், பாகிஸ்தான் பலுசிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவை குற்றம்சாட்டும். தற்போது இந்த இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் எந்த ஒத்துழைப்பும் இல்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே அறையில் இருக்கும் போது , அங்கு லேசான பதற்றம் இருக்கும்", என்று அவர் கூறினார்.   “இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த பாகிஸ்தானுக்கு விருப்பம் இருக்கலாம், ஆனால் காஷ்மீர் விஷயத்தில், 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு இதுபோன்ற எந்த ஒப்பந்தமும் பாகிஸ்தானுக்கு இழப்பாக மாறிவிடும் நிலையும் உள்ளது. அதன் விளைவு பாகிஸ்தானின் அரசியலுக்கும் ராணுவத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தும்", என்று அமீர் ஜியா கூறுகிறார். இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது பற்றி சிந்திக்கும் முன், பாகிஸ்தான் தனது பொருளாதார மற்றும் அரசியல் நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார். சர்வதேச விவகாரங்கள் ஒரு டி20 போட்டி போல அல்ல, இந்த கூட்டமைப்புகள் மெதுவாகவே செயல்படுவதில் அமீர் ஜியா போன்ற ஆய்வாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் இரான் ஆய்வாளர் சஹ்ரா ஜைதி நடைமுறைக்கு தேவையுள்ள நடவடிக்கைகள் எடுப்பதே அவசியம் என்று கருதுகிறார். "உறுப்பு நாடுகள் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கவில்லை அல்லது ஒத்துழைக்காவிட்டால், மற்ற அமைப்புகளைப் போலவே இதுவும் பெயருக்கு மட்டுமே உள்ள ஒரு அமைப்பாக இருக்கும்", என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cm2ygxwkyk0o
    • சூரிய மின்கல யானைவேலி அமைக்கும் பணி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது.  காட்டுயானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் உலக வங்கியின் நிதி உதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் கீழ் இந்த சூரிய மின்கல யானைவேலி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  பூநகரி கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட செம்மன்குன்று பகுதியில் இந்த பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  இத்திட்டத்துக்கான பணிகள் வட மாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகின்றன.  கிளிநொச்சியில் பூநகரி, அக்கராஜன்குளம், முழங்காவில் கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட, தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.  இந்நிகழ்வில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி சாம்பசிவம் கேசிகா, பூநகரி கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.குணசீலன் உட்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/196419
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.