Jump to content

அனுதாபிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அனுதாபிகள்
---------------------
ஒரு மனிதனுக்கு
இன்னொரு மனிதன்
அனுதாபம் என்றார்
 
இன்னொரு மனிதனும் 
அதையே சொன்னார்
 
இப்படியே
இன்னொன்று இன்னொன்று என 
அனுதாபங்கள்
இலையுதிர் கால பழுத்த இலைகள் போல
இடைவெளி இல்லாமல்
விழுந்து கொண்டிருந்தன
 
சலித்துப் போன
அந்த ஒரு மனிதன்
ஒளித்துக் கொள்ள இடம் தேடினான்
 
இன்னும் 
ஒளித்துக் கொள்ள
தேவை வராதவர்கள்
இன்னொரு இடம் தேடினர்
அவர்களின் அனுதாபங்களை சொல்ல
 
அனுதாபங்கள்
உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது
அதைச் சொல்லும் மனிதர்களை.
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தமுறை முடிவுகள் மிகச் சிக்கலானதாக இருக்கும்.கலந்து கொள்வேன்.
    • இது நடந்தேறுவது இலங்கையிலா தமிழ்நாட்டிலா.. அப்படி இன வாதம் பேசுவதால் தவறு என்கிறீர்களா...  தவறு என்றால் ஏன்...  என்பதில்லை என இங்கேயே வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன்...  இப்பொழுது நாடார்கள் வியாபாரம் செய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றனர்...  தேவர்கள் ஜல்லி கட்டில் கவனம் செலுத்துவதிலும், கணினி வேலையிலும் ஈடுப்பட்டு வருகின்றனர்...  பள்ளர்கள் பறையர்கள் தமிழர்களின் ஈமைச் சடங்கை இன்று வரை செய்து வருகின்றனர்...  முற் காலத்தில் நான்கும் போர் குடிகள், பள்ளர்கள் பறையர்கள் போரில் கலந்து கொள்ளாமல் இருப்பினும் மற்ற பிரதேசங்களில் இருந்து போர் புரிய வரும் பொழுது ஊடுருவல் களை தடுக்க போர் புரிவர்...  இதில் கணிசமானவர்கள் இட ஒதுக்கீட்டின் படியும், அரசியல் வாதிகளின் தேவைகளை செய்து ரயில் நிலைய வாகன இடத்தில் வேலை செய்வதும், தொட்டி வேலைகளையும் செய்கின்றனர் தேவர்கள் உட்பட...  இதை இனம் காணாமல் தமிழர் உரிமைகளை பெறுவது சாத்தியமில்லை...  தமிழர்களை பல நூறு ஆண்டுகளாகவே, மலையாளிகளும், தெலுங்கர் களும், கன்னடர்களும் தமிழர்களுக்கு பெண்களை திருமணம் செய்து கொடுத்தும், பெண்களை எடுத்தும் தன் சுய சாதியை மறைத்து, மதங்களை மறைத்து, ஏன் நாங்கள் "தமிழர்கள் என்ற போர்வையிலேயே இதை செய்கின்றனர்"...  அட்டை பூச்சுகள் வலி தெரியாமல் ரத்தம் உரிவது போல் தமிழர்களின் தனித்துவத்தை பாலை திரிப்பது போல் திரிக்கின்றனர்...  உதாரணம் அண்ணா, கருணாநிதி, MGR, ஜெயலலிதா, ஸ்டாலின், உதயநிதி, இன்ப நிதி...  இதை நாம் பெருந்தன்மை கொண்டு ஆண் சாதி பெண் சாதி பொன்ற ராமசாமி கருத்துகளை ஏற்றுக் கொண்டு தமிழன் சொன்னா என்ன எவன் சொன்னா என்ன நல்லது தானே சொல்கிறான் என ஏற்றுக் கொண்டு தமிழ் நாட்டை விட்டு அகதிகள் போல வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து "அகதி" என்ற பெயர் வாங்கி கொண்டு மற்ற நாட்டவர்களிடர்க்கிடையில் உரிமை புரியாமல் நடை பிணமாக அலைவோம்... இப்பொழுது இந்தி திணிப்பில் கல்வியின் மூலம் திணிக்க வேலை படு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது...
    • மக்கள் படையின் பிரிவொன்றின் போராளிகள் ஒருவர் சுற்றுக்காவல் போகிறார்கள் கிளிநொச்சி  01/07/2006      
    • கடைசிவரை இருந்து பார்த்டதெழுத வேண்டியது தான். இது இரகசியம்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.