Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையானின் சகாவான அஸாத் மௌலானா தொடர்பில் வெளியான தகவல்

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உறுதியாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் (28.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக இலங்கை அரச புலனாய்வுத் துறையினர் திட்டமிட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்தியதாக 'செனல் 4' சுட்டிக்காட்டியிருந்தது.

அரசியல்வாதிகளின் கடமை

'செனல் 4' என்பது தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்த ஜக்கிய இராச்சியத்தின் ஒளிப்பரப்புக் கூட்டுத்தாபனம் என்பதோடு அது இதுவரை காலமும் இலங்கைக்கு எதிரான அணுகுமுறைகளையும் கடைப்பிடித்து வந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இராணுவம் தவிர கோட்டாபய இராஜபக்ச மீதும் செனல் 4 பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அவை இப்போது நமக்கு தேவையில்லை.

கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நாம் முன்வைத்தமைக்காக அவர் என்னையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவையும் அமைச்சரவையிலிருந்து துரத்தியதோடு அவர் எழுதிய புத்தகத்திலும் எங்களை சாடியிருந்தார். ஆகவே, அவரை காப்பாற்ற நாம் முன்வர மாட்டோம்.

எனினும், நாட்டினுடைய உளவுத்துறையினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அவர்களை காப்பாற்றுவது அந்நாட்டினுடைய அரசியல்வாதிகளின் கடமையாகும்.

பொய்யான குற்றச்சாட்டு

2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் சஹ்ரான் ஆகியோர் புத்தளத்தில் உள்ள சஹ்ரானின் வீட்டில் வைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டதாக அஸாத் மௌலானா எனப்படுபவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் குறித்த வீட்டை சோதனையிட்ட போது, வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையானின் சகாவான அஸாத் மௌலானா தொடர்பில் வெளியான தகவல் | Udaya Gammanpila On Channel 4 Easter Attack Video

இதன்போது, கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 2018ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலேயே இந்த வீடு கட்டப்பட்டதாக தெரியவந்தது.

எனவே, அரசப் புலனாய்வுத் துறையின் மீது அஸாத் மௌலானா முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என இதிலிருந்து தெரிய வருகின்றது” எனக் கூறியுள்ளார்.

https://tamilwin.com/article/udaya-gammanpila-on-channel-4-easter-attack-video-1730095618#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 வீடியோவில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படுபவர் யார்? விசாரணையை கோருகின்றார் உதயகம்மன்பில

image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த சனல்4 வீடியோவில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படும் நபர் யார் என்பது குறித்து அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சனல் 4இன் வீடியோ குறித்து விசாரணை செய்த விசேட குழுவின் அறிக்கையை இன்று செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

முன்னைய அரசாங்கம் நியமித்த ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற  நீதிபதி எஸ் ஐ இமாம் குழுவின் அறிக்கையை உதயகம்மன்பில வெளியிட்டுள்ளார்.

உதயகம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது,

அந்த வீடியோவில் மிக முக்கிய அதிகாரி என  குறிப்பிடப்படும் நபர் யார் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்கத்திற்கு நான் சவால் விடுக்கின்றேன்.

சனல் 4இன் வீடியோவில் புலனாய்வு அதிகாரிகளையும் இராணுவத்தினரையும் குற்றம்சாட்டும் நபர் தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி என்ற தோற்றத்தை உருவாக்குகின்றார், அந்த நபர் தற்போது அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கின்றார் - அரசாங்கம் தேசத்துரோகத்திற்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

https://www.virakesari.lk/article/197311

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.