Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

வீரகேசரி நாளேடு

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 3 மீனவர்கள் படுகாயமடைந்தனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புஷ்பவனம் மீனவர் காலனியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (வயது 42), கிருஷ்ணப்பா (வயது 38), மதியழகன் (வயது 40) ஆகியோர் கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் மீன்பிடிக்க படகில் கடலுக்குள் சென்றனர். 13ஆம் திகதி இரவு மீனவர்கள் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் சிறிய கப்பலில் அப்பகுதிக்கு வந்தனர்.

அவர்கள் படகில் இருந்த 3 தமிழக மீனவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். அத்துடன் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் படகில் இருந்த வலை மற்றும் ஏனைய பொருட்களையும் கடலில் வீசி எறிந்துள்ளனர். பின்பு கிருஷ்ணப்பா, மதியழகன் ஆகியோரையும் அவர்கள் கட்டைகளால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் அவர்கள் படகில் வைத்திருந்த டீசலையும் கடலில் கொட்டி விட்டு தங்கள் கப்பலில் ஏறி சென்றுள்ளனர். இதனால் மீனவர்கள் படகை செலுத்த டீசல் இல்லாமல் இரவு முழுவதும் நடுக்கடலில் தவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் அவ்வழியே வந்த மீனவர்கள் படகில் இருந்து டீசலை பெற்று அவர்கள் கரைக்கு வந்து சேர்ந்துள்ளனர். இது குறித்து வேதாரண்யம் மீன்துறை ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மீனவர்கள் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியாளர் ஜவஹர், மீன்துறை கூடுதல் இயக்குநர் அபுல் காலம், வேதாரண்யம் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.