Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

21 NOV, 2024 | 10:25 AM

image
 

புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின்  கன்னி அமர்வு வைபவரீதியாக  ஆரம்பமான நிலையில், பத்தாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் ஜனாதிபதி பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு அறிவித்தார்.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல சபாநாயகராக  வாக்கெடுப்பின்றி நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர்.

இதையடுத்து, புதிய சபாநாயகருக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், புதிய சபாநாயகருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த்து தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், 

புதிதாக  பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவரை சபாநாயகராக நியமித்துள்ளதை வரவேற்கிறேன். மக்களாணைக்கு தலை வணங்குகிறேன் என்றார்.

இதன்போது கருத்தவெளியிட்ட சபாநாயகர் அசோக ரங்வெல, பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் சுயாதினத்தை முழுமையாக பாதுகாப்பேன். சகல உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பேன். அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/199292

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரதி சபாநாயகராக மொஹமட் ரிஸ்வி சாலி நியமனம்

image
 

பிரதி சபாநாயகராக மொஹமட் ரிஸ்வி சாலி  நியமிக்கப்பட்டுள்ளார்.

10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று வியாழக்கிழமை (21) ஆரம்பமாகியது. இதன்போது, பிரதி சபாநாயகர்  நியமிக்கப்பட்டார்.

புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/199293

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள தொழிற்சங்கவாதி - அசோக சப்புமல் ரன்வல

image
 

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சப்புமல் ரன்வல இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய இவரது பெயரை முன்மொழிந்தார், அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார்.

நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினர் ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல்தடவை.

மொரட்டுவ பல்கலைகழகத்தின் இரசாயனபொறியியலாளரான இவர் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வந்தார்.

பெட்ரோலிய பொதுத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பியகம உள்ளுராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ள இவர் மேல்மாகாண சபை உறுப்பினராக இரண்டு தடவை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/199315

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபாநாயகர் பாரபட்சமின்றி, வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வார் என நாம் நம்பிக்கை கொள்கிறோம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

"சபாநாயகர் பாரபட்சமின்றி, வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வார் என நாம் நம்பிக்கை கொள்கிறோம்" பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை, 10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்ட கலாநிதி அசோக சபுமல் ரன்வலவுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் உங்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.  சகல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், 225 உறுப்பினர்களும் பொதுமக்கள் சேவைக்காக அவர்கள் ஆற்ற வேண்டிய சேவைகளில் தங்கள் பங்கை சரியாகச் செய்வதற்கும் பக்கச்சார்பற்றவராகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்படுவது உங்களது பொறுப்பாகும்.

அதேபோல், புதிய சபாநாயகரின் பொறுப்பையும் கடமையையும் அரசியலமைப்பிற்கு உட்பட்டவாறு, சட்டப்பூர்வமாக நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் முன்கொண்டு செல்வதற்கு இயலுமை கிட்ட வேண்டும் என மனமான எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

https://www.virakesari.lk/article/199334

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.