Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊடக சுதந்திரசுட்டியில் இலங்கை 156வது இடத்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடக சுதந்திரசுட்டியில் இலங்கை 156வது இடத்தில்

வீரகேசரி இணையத்தளம்

எல்லையற்ற ஊடகவியலாளர் வெளியிட்ட உலக ஊடக சுதந்திர சுட்டி அறிக்கையில் இலங்கை 169 நாடுகளில் 156 வது இடத்தில் உள்ளது. 20 நாடுகள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் 7 நாடுகள் ஆசிய நாடுகள் பாகிஸ்தான்,இலங்கை,லாவோஸ்,விய

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து வெளியிடும் சுதந்திரம் பறிக்கப்படும் மோச நிலை

கருத்து வெளியிடும் சுதந்திரம், ஊடக சுதந்திரம் போன்றவை தொடர்பில் இலங்கைத் தேசத்தின் உண்மை நிலையை சர்வதேச மதிப்பீட்டு ஆய்வு ஒன்று அம்பலப்படுத்தியிருக்கின் றது.

ஊடக சுதந்திரத்திற்காக அயராது குரல் எழுப்பிவரும் சர்வதேச அமைப்பான பாரிஸை மையமாகக் கொண்டு இயங்குகின்ற "எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு' என்ற நிறுவனம் 169 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் பெறுபேறுகள் இலங்கையின் மோசமான நிலையை வெட்ட வெளிச்சமாக் கியிருக்கின்றன.

பத்திரிகைச்சுதந்திரம் மேன்மையான முதலாவது இடத் தில் இருப்பது பற்றிய பெருமை ஐஸ்லாந்துக்குக் கிடைத்திருக்கின்றது. கடைசி 169 ஆவது இடம் எரித்திரியாவுக்கு.

இலங்கை 156 ஆவது இடத்தில் பின்னிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. மோசமான பத்திரிகைச் சுதந்திரம் உள்ள நாடுகளின் வரிசையில் கடைசி இருபதுக்குள் இலங்கை நிறுத்தப்பட்டிருக்கின்றது.

ஈராக், பாலஸ்தீனப் பிரதேசங்கள், சோமாலியா, உஸ்பெஸ்கிஸ்தான், லாவோஸ், வியட்நாம், சீனா, பர்மா(மியன்மார்), கியூபா, ஈரான், துருக்மெனிஸ்தான், வடகொரியா, எரித்திரியா அகியவையே இவ்விடயத்தில் இலங்கைக்குப் பின்னால் நிற்பவை.

இந்த வரிசையில் கடந்த நான்கு ஆண்டு காலத்துக்குள் மோசமான வீழ்ச்சி நிலையை இலங்கை காட்டி வருவதும் அவதானிக்கத்தக்கது.

2004 ஆம் ஆண்டில் 110 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் 115 ஆம் இடத்துக்கு சரிந்தது.

ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அதி காரம் ஆரம்பமானதும் நாட்டின் ஊடக சுதந்திரம் சர்வதேச மட்டத்துடன் ஒப்பிடுகையில் பெரு வீழ்ச்சி கண்டது. கடந்த ஆண்டு 141 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்ட இலங்கை இந்த ஆண்டில் மேலும் கீழிறங்கி 156 ஆவது நிலைக்கு வந்திருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு ஊடக சுதந்திரத்துக்கு அளித்துவரும் உயர் நிலையின் "சீத்துவத்தை' இந்த மதிப்பீட்டு ஆய்வுகள் துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றன.

எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு இந்த மதிப்பீட்டு ஆய்வைப் பரந்தளவில் மேற்கொண்டது. கருத்துச் சுதந்திர வெளிப்பாட்டு உரிமை தொடர்பான பதினைந்து சர்வதேச அமைப்புகள் மற்றும் தனது செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், ஜூரிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என சுமார் 130 பிரதிநிதிகள் ஆகிய தரப்புகள் ஊடாக இந்த ஆய்வை அது மேற்கொண்டது என்பது கவனிக்கத்தக்கது.

இதேசமயம், இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை ஊடக சுதந்திரத்தை மதிக்குமாறு 32 சர்வதேச அமைப்புகள் ஒன்று கூடி வலியுறுத்தியிருக்கின்றன. உருகுவேயின் மொண்டிவிடியோ நகரில் "கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பற்றிய சர்வதேச கலந்துரையாடல்' மாநாடு இடம்பெற்றது. கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்காகப் போராடும் 32 சர்வதேச அமைப்புகள் இந்த மாநாட்டில் பங்குகொண்டு பல்வேறு நாடுகளிலும் ஊடக சுதந்திர நிலைமையை ஆராய்ந்தபின்னர் பொது அறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதிலேயே மேற்படி கோரிக்கை இலங்கைக்கு விடுக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கிடையில், இலங்கையில் ஊடக சுதந்திரம் மோசமாக நசுக்கப்பட்டு வருவதை அரசுத் தரப்பினாலும் அதிகாரிகளினாலும் உத்தியோகப்பற்றற்ற தணிக்கையும், ஊடகங்களுக்கு எதிரான அழுத்தமும் பிரயோகிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து சுட்டிக்காட்டிக் கண்டனம் தெரிவித்து வருகின்றது இலங்கையின் ஊடக சுதந்திரத்துக்கான காவல் அமைப்பான சுதந்திரஊடகஇயக்கம்.

கடைசியாக இரு பத்திரிகைப் புகைப்படப்பிடிப்பாளர்கள் இரா ணுவத்தினரால் கெடுபிடிக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் பிடித்த படங்கள் படையினரால் அழிக்கப்பட்டமையை சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.