Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ திரையிடல்; நெரிசலில் தாய் உயிரிழப்பு, மகன் காயம்!

ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ திரையிடல்; நெரிசலில் தாய் உயிரிழப்பு, மகன் காயம்!

ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் புதன்கிழமை மாலை ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் சிறப்பு காட்சியை பார்க்கச் செனற் 35 வயதுடைய பெண்ணொருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மேலும், அவரது ஒன்பது வயதுடைய மகன் பலத்த காயமடைந்துள்ளதாக ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படத்தின் சிறப்பு காட்சிக்கா வருகை தந்திருந்த தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனைப் பார்க்க ஏராளமான மக்கள் கூட்டம் அலை மோதியமையினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திரையிடலுக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் வந்திருந்த நடிகரைக் காண ரசிகர்கள் குவிந்ததால் திரையரங்குக்கு வெளியே பரபரப்பு ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒருகட்டத்தில் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போன நிலையில், பொலிஸார் லத்தி அடி தாக்குதல் நடத்தியதால் பயங்கர நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கி ரேவதி என்ற 39 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

அத்துடன் அவரது மகன் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட திரையரங்க நிர்வாகம் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

https://athavannews.com/2024/1411159

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் அல்லு அர்ஜுன் கைது!

நடிகர் அல்லு அர்ஜுன் கைது!

புஷ்பா 2: தி ரூல் திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் பொலிஸார் கைது செய்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரையிடலின் போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அல்லு அர்ஜுன் தற்சமயம், சிக்கடப்பள்ளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் 5 அன்று புஷ்பா 2 திரையிடலுக்கு அல்லு அர்ஜுன் வரவிருந்தது குறித்து தெலுங்கானா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருவது முன்னதாகவே தெரிந்திருந்தால் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு ஏற்பட்ட உயிரிழப்பினை தவிர்த்திருக்க முடியும் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார்.

டிசம்பர் 4 அன்று சந்தியா திரையரங்கில் நடிகரைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியபோது இந்தச் சம்பவம் நடந்தது.

நெரிசலில் சிக்கய 39 வயதான ரேவதி என்ற பெண் மூச்சுத்திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார், அதே நேரத்தில் அவரது எட்டு வயது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பெண்ணின் குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழுவினர் மற்றும் திரையரங்க நிர்வாகம் மீது பொலிஸார் டிசம்பர் 5 ஆம் திகதி வழக்குப் பதிவு செய்தனர்.

இதேவ‍ேளை, தனது புஷ்பா 2: தி ரூல் இன் ஹைதராபாத் திரையரங்களின் முதல் காட்சியின் போது ஒரு பெண் இறந்தது தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக் கோரி, டிசம்பர் 12 அன்று அல்லு அர்ஜுன் தெலுங்கானா மேல் நீதிமன்றத்தை அணுகியமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1412153

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.