Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாத ஒழிப்பு மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்!

Featured Replies

பயங்கரவாத்தை எதிர்ப்பதற்கான சர்வதேச மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகின்றது. வெளிவிவகார அமைச்சர் ரோஹிதா தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நடைபெறும் இம் மாநாட்டில் அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பங்களதேஷ், பெல்ஜியம், சீனா, செக்கஸ்லோவோக்கியா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இஸ்ரேல், மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சவுதி அரேபியா, வியட்னாம், அமெரிக்கா, உட்பட 19 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித இதனை நேற்றுத் தெரிவித்தார்.

"பயங்கரவாதம், ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்படட்ட அரசுகளுக்கு ஒரு சவால்" என்ற தலைப்பிலேயே இந்த சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் ரோஹித்த ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் போது மேலும் கூறியவை வருமாறு :-

ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசுக்கு ஒரு சாவால் எனும் கருப் பொருளில் பயங்கரவாத்தை எதிர் கொள்வதற்கானதொரு சர்வதேச மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச மாகாநாட்டு மண்டபத்தில் நாளை 2007ஒக்.18ம் திகதி (இன்று) இடம் பெறவுள்ளது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் லக்ஷ்மன் கதிர்காமன் சர்வதேச தொடர்புகளுக்கும் உபாய ஆய்வுகளுக்கமான நிலையத்திலனால் இந் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நிலையத்தின் பிரான்ஸ் பிரச்சசனைகளுக்கான கற்கையில் பணிப்பாளராக சேவையாற்றிய ஜெரட் சலியன்ட் பிரதான உரையை வழங்குவார். இந்நிகழ்வின் ஆரம்ப வைபவத்துக்ககு பயங்கரவாத விவகாரங்களைப் பற்றி பரிசீலனை செய்யும் பிரபல பிரான்ஸ் நீதிபதி ஜீன் லூயிஸ் பேகெரியும் கலந்து கொள்ளவுள்ளார்.

மூன்று தினங்களாக இடம் பெறவுள்ள இம் மாநாட்டில் வெவ்வேறு தலைப்புகளில் பல தொடர் கூட்டங்களும் இடம் பெறவுள்ளன. பயங்கரவாதம் சம்பந்தமாக சர்வதேச மற்றும் பிராந்தியங்களின் பதில், உள்நாட்டில் பயங்கரவாதத்தின் பரிமாணம், பயங்கரவாதிகளின் நிதித் திரட்டல், சமூக பொருளாதார ரீதியிலான பங்கரவாதத்தின் செலவு மற்றும் ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் பங்களிப்பு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின் எல்லைக்குள் போராளிகளை மாற்று வழிக்குக் கொண்டு வரக் கூடிய சாத்தியக்கூறுகள் போன்ற விடயங்கள் இதில் கலந்தாலோசிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் அனுபவம் மற்றும் பிரபலம் மிக்க பேச்சாளர்கள் பலர் சிறப்புரை நிகழ்த்வுள்ளனர் என்றார்.

அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பங்களதேஷ், பெல்ஜியம், சீனா, செக்கஸ்லோவோக்கியா, பிரான்ஸ, ஜேர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இஸ்ரேல், மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சவுதி அரேபியா, வியட்னாம், அமெரிக்கா ஆகிய நாடுகள் இம் மகாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளன.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன தலைமையில் இம் மாநாடடில் இறுதியம்சமாக ஒரு குழு கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு சகல பிரதான பேச்சாளர்களும் சமுகமளிக்கவுள்ளனர், என்றார்.

கருணாவை ஏன் அழைக்கவில்லை?

ஆயுதம் ஏந்திப் போராட்டம் நடத்தியவர்களை ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ளச் செய்வதே இந்த மாநாட்டின் நோக்கம் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

"ஆனந்தசங்கரி இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். கருணாவும் அரச பாதுகாப்புடன் இருக்கின்றார். கருணாவையும் இந்த மாநாட்டிற்கு அழைதிருக்கலாம் அல்லவா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

கருணாவை அழைத்தால் இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் ஏனைய பிரதிநிரதிகளின் பாதுகாப்பிற்கு சிக்கல் ஏற்படும் என்று பதில் அளித்தார் அமைச்சர்.

"ஏன் சிக்கல ஏற்படும், ஆனந்தசங்கரியும் முன்பு புலிகளின் ஆதரவுடன் வந்தவர்தான். அவரை அழைப்பதற்கு மட்டும் பாதுகாப்புச் சிக்கல் ஏற்படாதா?" எனத் திருப்பிக் கேட்டோம்.

"ஆனந்தசங்கரிக்கும் கருணாவுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. உதாரணமாக இன்று நடைபெறும் செய்தியாளர் மாநாடடுக்கு கருணாவை அழைத்திருந்தால் இங்கு பெரும் இராணுவப் பட்டாளமே குவிக்கப்ட்டிருக்கும். அதனால் நீங்கள் அமைச்சர் ரோஹிதவின் செய்தியாளர் மாநாட்டில் இராணுவக் கெடுபிடி அதிகமாக் ககாணப்பட்டது என்று எழுதுவீர்கள்" என அமைச்சர் கூறினார்.

"நீங்கள் சொல்வது சரிதான். கருணா அரச பாதுகாப்புடன் தானே இருக்கின்றார். அவர் இப்போது எங்கே இருக்கின்றார் என்று கூறமுடியுமா?" என்று கேட்க, "கருணா எங்கே இருக்கின்றார் என்பது எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் எந்தத் தொடர்புகளையும் வைத்துக் கொண்டதும் இல்லை". என்று பதிலளித்தார் அமைச்சர்.

நன்றி சுடர் ஒளி

அது சரி உலக அரச பயங்கரவாத ஒழிப்பு மாநாடு எப்பொது எங்கு ஆரம்பிக்கலாம்?

கருணா கொம்மான் தானே என்றைக்கோ சனநாய்அக வழிக்கு வந்துவிட்டார் பிறகு அவரை எதற்கு?

பயங்கரவாதிகளின் நாட்டில் ஒழிப்பதுக்கு மாநாடா வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயங்கரவாதிகளின் நாட்டில் ஒழிப்பதுக்கு மாநாடா வாழ்த்துக்கள்

இதனை நகைச்சுவைப் பகுதியில் பிரசுரியுங்கள். அதுதான் பொருத்தமான இடம் ஹிஹிஹிஹிஹிஹ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.