Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை சீருடைகள் தொடர்பில் வெளியான தகவல்

image
 

எதிர்வரும் காலங்களில் பாடசாலை சீருடைகளைத் தைத்து மாணவர்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், பாடசாலை சீருடைகளை தைப்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் துணிகளை பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகள் மற்றும் விரயத்தைக் குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 
  •  
  • கருத்துக்கள உறவுகள்

இது நடைமுறைச்சாத்தியமா?

ஒவ்வொரு பிள்ளை ஒவ்வொரு சைசில் இருக்கும். 

யார் அளவு எடுப்பார்கள்.

ஆசிரியர்கள்?

அளவு எடுத்து அதை துணி விநியோகிஸ்தருக்கு அனுப்பி…

அதை அவர் வெட்டி…

மாணவரிடம் வந்து சேர மாணவன் ஒரு சுற்று பெருத்திருப்பான்🤣.

கொஞ்சம் கொஞ்சமாக கம்போடியாவின் பொல்பொட் வகை பனிகுணங்களை ஜேவிபி காட்டத்தொடங்கிறது போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

இது நடைமுறைச்சாத்தியமா?

ஒவ்வொரு பிள்ளை ஒவ்வொரு சைசில் இருக்கும். 

யார் அளவு எடுப்பார்கள்.

ஆசிரியர்கள்?

அளவு எடுத்து அதை துணி விநியோகிஸ்தருக்கு அனுப்பி…

அதை அவர் வெட்டி…

மாணவரிடம் வந்து சேர மாணவன் ஒரு சுற்று பெருத்திருப்பான்🤣.

கொஞ்சம் கொஞ்சமாக கம்போடியாவின் பொல்பொட் வகை பனிகுணங்களை ஜேவிபி காட்டத்தொடங்கிறது போல தெரிகிறது.

நீங்கள் இங்கிலாந்தில் ஒவ்வொரு சட்டைக்கும் அளவெடுத்தா தைக்கின்றீர்கள்? உடைகள் விற்கும் கடைகளுக்கு போய் உங்கள் அளவுகளை பார்த்து உடைகள் வாங்குவதில்லையா? ஆசிய ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கான மனித உடைகளுக்கான அளவுகள் வித்தியாசப்படும். அதற்காக ஒவ்வொரு மனிதரும்  தனியாக அளவெடுத்து உடைகள் தைப்பது குறைவு.😎

அது சரி கோசான் நீங்கள் நான்கு சுவருக்குள் மாட்டுப்பட்டுப் போனியளோ? 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் இங்கிலாந்தில் ஒவ்வொரு சட்டைக்கும் அளவெடுத்தா தைக்கின்றீர்கள்? உடைகள் விற்கும் கடைகளுக்கு போய் உங்கள் அளவுகளை பார்த்து உடைகள் வாங்குவதில்லையா? ஆசிய ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கான மனித உடைகளுக்கான அளவுகள் வித்தியாசப்படும். அதற்காக ஒவ்வொரு மனிதரும்  தனியாக அளவெடுத்து உடைகள் தைப்பது குறைவு.😎

அது சரி கோசான் நீங்கள் நான்கு சுவருக்குள் மாட்டுப்பட்டுப் போனியளோ? 😂

அண்ணை,

இப்போ இருக்கிற சிஸ்டம் - குறித்த அளவு துணி எல்லோருக்கும் வழங்கப்படும். அதை அவர்கள் தேவைக்கேற்ப தைத்து போடுவார்கள். 

ஒரு பாடசாலையில் 100 மாணவர் என்றால். அதற்குரிய துணியை விநியோகஸ்தர் டிலிவர் பண்ணி விட்டு போய்கிட்டே இருப்பார். மாணவர்கள் இதை பெற்று வீட்டில் கொடுக்க, அங்கே அவர்களோ, அருகில் இருக்கும் டெயிலரோ தைப்பார்கள்.

இது மிகவும் வினைதிறானன முறை.

இதில் ஊழல் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அப்படி ஊழல் செய்தாலும் மிக இலகுவாக நிறுத்த முடியும்.

சரி நான் மேலே சொன்ன விதமாக அன்றி நீங்கள் சொன்ன கடைகளில் விற்கும் முறையை பின்பறினாலும்..

இனி சத்தோச போன்ற  கடைகளில் இதை போய் தகுந்த அளவுக்கு பெற்று கொள்ளலாம்? தனியார் கடைகளில் இப்படி பெற முடியாது ஏனினெல் அங்கே ஊழல் மீண்டும் எழும். கூடவே இலாபம் இல்லாமல் அவர்கள் இதை தம் கடையில் வைக்கப்போவதில்லை.

இல்லை என்றால் இதை விற்பதற்கு அரசு தனியார் கடைகளுக்கு காசு கொடுக்க வேண்டும்.

மேலும்…யாழ்மாவட்டத்தில் எத்தனை சத்தோசக உள்ளன?

அங்கே உள்ள பொருட்களின் தரம் என்ன?

அங்கே பொருட்களின் கையொருப்பு (stock) எப்படி இருக்கும் என நீங்கள் கேட்டறிந்தால் - இது ஏன் சரியான செயல் அல்ல என விளங்கும்.

ஒரு நெடுந்தீவு மாணவன் சீருடை வாங்க, பெற்றார் சகிதம் யாழ் டவுணுக்கு போக வேண்டும்.

முன்பு என்றால் துணி பாடசாலைக்கு வரும். அங்கேயே உள்ள டெயிலர் தைத்து கொடுப்பார்.

வெளிநாட்டை பற்றி சொல்லி இருந்தீர்கள்.

நாம் இங்கே கடைக்கு போய் உடுப்போ அல்லது எமது பிள்ளைகளின் சீருடையோ வாங்குவது முழுக்க முழுக்க சந்தை பொருளாதார அடிப்படையில். ஒரு வெள்ளை பள்ளிகூட சேர்ட் இலண்டனில் 5 பவுண்ஸ் எனில் ஸ்கொடலாந்தின் தீவு ஒன்றில் அது 8 பவுண்ஸ்சாக இருக்கும்.

ஆனால் இலங்கையில் சீருடைகளை அரசு மானியமாக கொடுக்கிறது. ஆகவே விலையை கூட்டி, விநியோகத்தை விரிவாக முடியாது.

அல்லது ஆமி பொலிஸ் போல அரசே விநியோகத்தை நடத்த வேண்டும். அப்படி என்றால் கல்வி திணைக்களம் இதற்கென ஒரு தனி யுனிட்டையே உருவாக்க வேணும். அதற்கு ஆள் அம்பு சேனை என பலமடங்கு செலவாகும்.

பிகு

சிலசமயம் சிறைக்குள் இருந்து பார்த்தால் வெளியில் இருப்பவர்கள் சிறையிருப்பது போல தோன்றுமாம்.

#நாலு சுவர்🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அண்ணை,

இப்போ இருக்கிற சிஸ்டம் - குறித்த அளவு துணி எல்லோருக்கும் வழங்கப்படும். அதை அவர்கள் தேவைக்கேற்ப தைத்து போடுவார்கள். 

ஒரு பாடசாலையில் 100 மாணவர் என்றால். அதற்குரிய துணியை விநியோகஸ்தர் டிலிவர் பண்ணி விட்டு போய்கிட்டே இருப்பார். மாணவர்கள் இதை பெற்று வீட்டில் கொடுக்க, அங்கே அவர்களோ, அருகில் இருக்கும் டெயிலரோ தைப்பார்கள்.

இது மிகவும் வினைதிறானன முறை.

இதில் ஊழல் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அப்படி ஊழல் செய்தாலும் மிக இலகுவாக நிறுத்த முடியும்.

சரி நான் மேலே சொன்ன விதமாக அன்றி நீங்கள் சொன்ன கடைகளில் விற்கும் முறையை பின்பறினாலும்..

இனி சத்தோச போன்ற  கடைகளில் இதை போய் தகுந்த அளவுக்கு பெற்று கொள்ளலாம்? தனியார் கடைகளில் இப்படி பெற முடியாது ஏனினெல் அங்கே ஊழல் மீண்டும் எழும். கூடவே இலாபம் இல்லாமல் அவர்கள் இதை தம் கடையில் வைக்கப்போவதில்லை.

இல்லை என்றால் இதை விற்பதற்கு அரசு தனியார் கடைகளுக்கு காசு கொடுக்க வேண்டும்.

மேலும்…யாழ்மாவட்டத்தில் எத்தனை சத்தோசக உள்ளன?

அங்கே உள்ள பொருட்களின் தரம் என்ன?

அங்கே பொருட்களின் கையொருப்பு (stock) எப்படி இருக்கும் என நீங்கள் கேட்டறிந்தால் - இது ஏன் சரியான செயல் அல்ல என விளங்கும்.

ஒரு நெடுந்தீவு மாணவன் சீருடை வாங்க, பெற்றார் சகிதம் யாழ் டவுணுக்கு போக வேண்டும்.

முன்பு என்றால் துணி பாடசாலைக்கு வரும். அங்கேயே உள்ள டெயிலர் தைத்து கொடுப்பார்.

வெளிநாட்டை பற்றி சொல்லி இருந்தீர்கள்.

நாம் இங்கே கடைக்கு போய் உடுப்போ அல்லது எமது பிள்ளைகளின் சீருடையோ வாங்குவது முழுக்க முழுக்க சந்தை பொருளாதார அடிப்படையில். ஒரு வெள்ளை பள்ளிகூட சேர்ட் இலண்டனில் 5 பவுண்ஸ் எனில் ஸ்கொடலாந்தின் தீவு ஒன்றில் அது 8 பவுண்ஸ்சாக இருக்கும்.

ஆனால் இலங்கையில் சீருடைகளை அரசு மானியமாக கொடுக்கிறது. ஆகவே விலையை கூட்டி, விநியோகத்தை விரிவாக முடியாது.

அல்லது ஆமி பொலிஸ் போல அரசே விநியோகத்தை நடத்த வேண்டும். அப்படி என்றால் கல்வி திணைக்களம் இதற்கென ஒரு தனி யுனிட்டையே உருவாக்க வேணும். அதற்கு ஆள் அம்பு சேனை என பலமடங்கு செலவாகும்.

பிகு

சிலசமயம் சிறைக்குள் இருந்து பார்த்தால் வெளியில் இருப்பவர்கள் சிறையிருப்பது போல தோன்றுமாம்.

#நாலு சுவர்🤣

ஓவ்வொரு பாடசாலை மூலம் அளவெடுக்கப்பட்டு அவர்களாலேயே குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பி தைத்துக் கொடுக்கப்படும்...இதன் மூலம் கூலி கொடுத்து தைக்க முடியாதவர்கள் பலன் அடைவர்...ஒவ்வொரு  மாணவருக்கும் ஒரே இடத்தில் தைக்கும் போது   நிறைய துணி மிச்சமாகும் 
 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஓவ்வொரு பாடசாலை மூலம் அளவெடுக்கப்பட்டு அவர்களாலேயே குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பி தைத்துக் கொடுக்கப்படும்...இதன் மூலம் கூலி கொடுத்து தைக்க முடியாதவர்கள் பலன் அடைவர்...ஒவ்வொரு  மாணவருக்கும் ஒரே இடத்தில் தைக்கும் போது   நிறைய துணி மிச்சமாகும் 
 

இந்த முறைதான் என நான் முன்பு நினைத்தேன் (என் முதலாம் பதிவு)… ஆனால் @குமாரசாமி அண்ணை அப்படி இல்லை என்கிறார்.

இந்த முறையும் வினை திறனானது அல்ல - ஏன் என்பதை என் முதல் கருத்தில் எழுதியுள்ளேன்.

 

12 hours ago, goshan_che said:

கொஞ்சம் கொஞ்சமாக கம்போடியாவின் பொல்பொட் வகை பனிகுணங்களை ஜேவிபி காட்டத்தொடங்கிறது போல தெரிகிறது.

ஜனவரி 1 முதல் - 12 வயதுக்கு கீழானவர்கள் விளம்பரத்தில் நடிக்க அடியோடு தடையாம்.

ஆபாசமாக உடுத்த கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை - ஒட்டு மொத்த தடை!

இனிமேல் பேபி ஷெரமி, பம்பர்ஸ் விளம்பரங்களில் எல்லாம் அனுர வைத்தான் நடிக்க வைக்க வேண்டும் 🤣.

https://colombotimes.lk/SRI-LANKA-BANS-CHILDREN-UNDER-12-IN-ADS.html

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இதன் மூலம் கூலி கொடுத்து தைக்க முடியாதவர்கள் பலன் அடைவர்..

இது ஏற்க கூடியதே ஆயினும், இதனால் மிகவும் ஏழ்மையில் உள்ள ஊர்களில் உள்ள டெயிலர்களின் வருமானம் பாதிக்கும்.

ஆனால் தைப்பதற்க்கான செலவை அரசு பெரிய நிறுவனங்களுக்கு (சீருடை சப்ளையர்) கொடுக்கும்.

இது ஏழை டெயிலரிடம் எடுத்து பணக்கார கம்பெனியிடம் கொடுக்கும் வேலை.

இதை விட தைப்பதற்குரிய காசை பெற்றாரிடம் வவுச்சர் முறையில் கொடுக்கலாம்.

மிக முக்கியமாக எல்லோருக்கும் ஏன் இலவசமாக கொடுக்க வேண்டும் ? இலங்கையில் கொழும்பில் 10 வீடு வாடகைக்கு விடும் செல்வந்தரின் பிள்ளையும் இலவசமாக சீருடை எடுக்கும். இதை means test அடிப்படையில் கொடுக்கலாம்.

ஏலவே மஹாபொல இப்படிதான் கொடுக்கப்படுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.