Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7   25 DEC, 2024 | 11:29 PM

image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பிரதான ஒரு அம்சமாக கச்சத்தீவு காணப்படுகிறது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இவ்விடயத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது. இந்தியாவின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய தேவை கிடையாதென முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் இந்தியாவின் திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் ஒன்றை அண்மையில் நிறைவேற்றியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கச்சத்தீவு விவகாரத்தை இந்திய அரசாங்கம் அரசியல் பிரச்சாரத்துக்காகவே பயன்படுத்திக் கொள்கிறது. இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று சட்ட விரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. இந்திய மீனவர்கள் தான் இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து கடல் வளத்தையும், மீள் வளத்தையும் நாசம் செய்கிறார்கள்.

இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்பதை தடுப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் இந்திய அரசாங்கம் மந்த கதியில் தான் செயற்படுகிறது.

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இவ்விடயம் குறித்து இந்தியாவுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டிய அவசியம் கிடையாது. இலங்கை இவ்விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவிப்பதும் பிற்காலத்தில் பல நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு காரணியாக அமையும்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பிரதான அம்சமாக கச்சத்தீவு காணப்படுகிறது. இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக விதிக்கப்படும் சகல நிபந்தனைகளுக்கும் அடிபணிய வேண்டிய அவசியம் கிடையாது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் பல விடயங்களை உணர்த்தியுள்ளது.

அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்ற நிலையில் அதன் அம்சங்களின் பிரதான ஒன்றாக கருதப்படும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக இந்தியாவுக்கு வாக்குறுதியளித்துள்ளமை தவறானதொரு செயற்பாடாகும்.

புதிய அரசியலமைப்பு ஊடாக சமஷ்டியாட்சி முறைமையின் அம்சங்களை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. எக்காரணிகளுக்காகவும் சமஸ்டியாட்சி முறைமையை உருவாக்க இடமளிக்க போவதில்லை என்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/202155

  • கருத்துக்கள உறவுகள்

Relax, தமிழ் மீனவருக்காக இந்தியா கதைக்க வரமாட்டுது. 

  • கருத்துக்கள உறவுகள்

வீரசேகரா ..வீரம் பேச....வீம்பு செய்யும் இசுடாலின்...கன்னிமொழியின்  250 மில்லியன் அலைகற்றைகாசில் தேயிலைத்தோட்டம் இலங்கையில் இருக்கு என்பதை மறந்து விட்டாரோ...அல்லது ஒன்றுக்குள்  ஒன்றாஆ..

  • கருத்துக்கள உறவுகள்

அசப்பில வெண்ணிற ஆடை மூர்த்திபோல இருக்கும் இந்தாளை பாத்தா சிரிக்குறதா அழுறதா தெரியல.

சரி அரசாங்கத்துக்கு இந்தியாவுக்கெதிரான ஆலோசனை எல்லாம் வழ்ங்கினீர்களே, நீங்கள் ஆட்சியிலிருக்கும்போது இதெயெல்லாம் நடைமுறைப்படுத்தினீர்களா?

நீங்க மட்டுமல்ல, இந்தியாவை சுற்றியிருக்கும் நேபாளம், பூட்டான், பங்களாதேஸ் மியன்மார்,மற்றும் கடல்ரீதியாக எல்லையை கொண்ட மாலைதீவு உட்பட்ட குட்டிநாடுகள் ஒருபோதும் இந்தியாவை மீறி எதுவும் செய்யமுடியாது , அப்படி செய்தால் இந்தியா தன் வழிக்கு இவர்களை கொண்டுவர என்ன செய்ய வேண்டுமோ அதெல்லாம் ஈவிரக்கமின்றி செய்யும்.

மாலைதீவு அண்மையில் முயற்சித்தது, பின்னர் வாலை சுருட்டிக்கொண்டது. இந்த சிறிய நாடுகளெல்லாம் இந்தியாவை எதிர்த்து சுயமாக இயங்கவேண்டுமென்றால் , ஒன்று பொருளாதாரம், இல்லையேல் ஆயுதபலம் இந்தியாவைவிட அதிகமாகவோ அல்லது சமநிலையிலோ கொண்டிருக்கவேண்டும். ஆனால் அது அது ஒருபோதும் சாத்தியமில்லை.

நம்மை பொறுத்தவரை சிங்களவன் விஷ தேள் என்றால் இந்தியா ராஜநாகம் , இரண்டுமே நமக்கு ஒத்துவராது, ஆனால் இந்த இரண்டும் முட்டிக்கொள்வதை வேடிக்கை பார்ப்பது  அதன் முடிவை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது ஒத்துவரும்.

அரசியல் பொருளாதாரம் அதிமீறிய கடன்,பாதுகாப்பு, வீதிகள் தண்டவாளங்கள்   என்று அனைத்திலும் இந்தியாவின் காலடியில் கிடந்து சேவகம் செய்யும் இலங்கை  எழுந்து நின்று வாலாட்டினால் அதை நசுக்கியே கொன்றுவிடும் இந்திய காட்டுயானை.

நம்மை பொறுத்தவரை சிங்கள எகத்தாளத்தை எவன் நசுக்கினாலும் மகிழ்ச்சி. ஒருவேளை சிங்களவன் ஆசைப்படி இந்தியா இலங்கையிடம் தோற்றுப்போனால் அதுவும்  மகிழ்ச்சிதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.