Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தும்புதடியினுள் போதைப்பொருளை மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட பெண் கைது

Published By: Vishnu

01 Jan, 2025 | 01:27 AM
image
 

(செ.சுபதர்ஷனி)

10 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் தும்புதடியினுள் மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை திங்கட்கிழமை (30) பார்வையிட சென்றிருந்த பெண் ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு தனது கணவரை பார்வையிட சென்ற பெண் உணவு மற்றும் பானங்களை கொண்டு சென்று வழங்கியுள்ளதுடன், சிறைச்சாலை வளாகத்தை சுத்தம் செய்வதற்கென கூறி பிளாஸ்டிக் தும்புத்தடி ஒன்றையும் கொண்டு வந்து சிறைக்கைதியிடம் வழங்க முற்பட்டுள்ளார். இதன்போது அங்கிருந்த அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தும்புத்தடியை பரிசோதித்த நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான போதைப்பொருள் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹெரோயின், ஐஸ், ஹசிஸ் மற்றும் ஹேஷ் ஆகிய போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் களுத்துறை வடக்குப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேகநபர் 35 வயதான பாணந்துறை அலுபோமுல்ல பகுதியை சேர்ந்தவராவார்.

மேலும் சிறைச்சாலையினுள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக போதைப்பொருளை கொண்டு வந்து வழங்க முற்பட்டுள்ளதாக சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இதேவேளை கைதான சந்தேகநபர் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

  •  
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

மேலும் சிறைச்சாலையினுள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக போதைப்பொருளை கொண்டு வந்து வழங்க முற்பட்டுள்ளதாக

சிறைச்சாலையில் விற்பனை கைதிகளுக்கு? பணம் எங்கிருந்து வரும்?     

  • கருத்துக்கள உறவுகள்

சிறைச்சாலையினுள் பணப் பரிமாற்றம் இராது என நினைக்கின்றேன்.
பொருளுக்கு உரிய பணம்… கைதிகளின் உறவினர், நண்பர்கள்  அல்லது  அவர்களின் எஜமானர்களால் சிறைக்கு வெளியே கொடுத்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சிறைச்சாலையினுள் பணப் பரிமாற்றம் இராது என நினைக்கின்றேன்.
பொருளுக்கு உரிய பணம்… கைதிகளின் உறவினர், நண்பர்கள்  அல்லது  அவர்களின் எஜமானர்களால் சிறைக்கு வெளியே கொடுத்து விடுவார்கள்.

சிறைச்சாலைகளில் ரிமாண்ட் கைதிகளுக்கு குடும்பத்தினர் பணம்கொடுக்கலாம். சிறைக்கடைகளில் அத்தியாவசப் பொருட்களை வாங்க முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, RishiK said:

சிறைச்சாலைகளில் ரிமாண்ட் கைதிகளுக்கு குடும்பத்தினர் பணம்கொடுக்கலாம். சிறைக்கடைகளில் அத்தியாவசப் பொருட்களை வாங்க முடியும். 

தகவலுக்கு நன்றி, ரிஷி. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.