Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக வழங்கப்படும்  டிஜிட்டல் அடையாள அட்டைகள்!

புதிதாக வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகள்!

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன் அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்

மேலும் டிஜிட்டல் அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு சுமார் 20 பில்லியன் ரூபா செலவாகும் என்பதால், அதில் பாதியை இந்தியாவின் உதவி மூலம் பெற எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1416295

  • கருத்துக்கள உறவுகள்

Mobile phone app ஆகப் பாவிக்கக் கூடிய வகையில் இந்த அடையாள அட்டையை தயாரிக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள் எதற்கு? - மக்கள் போராட்ட இயக்கம் கேள்வி

14 JAN, 2025 | 07:35 PM
image

(நமது நிருபர்)

இந்திய நிறுவனம் மூலம் வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகளில் பொதுமக்களின் பயோமெற்றிக் விவரங்களை ஒருங்கிணைப்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்துமாறு மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியது.

மக்கள் போராட்ட இயக்கத்தின் நிர்வாக உறுப்பினர் வசந்த இதுதொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக பொதுமக்களின் பயோமெற்றிக் விவரங்கள் ஏன் பெறப்படுகின்றன என்பதற்கான விளக்கம் வெளியிடப்பட வேண்டும். 

டிஜிட்டல் அடையாள அட்டையானது தொழில்நுட்பம், பாதுகாப்பு அல்லது வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக வழங்கப்படுகின்றதென ஒருவர் நினைக்கலாம். 

ஆனால், அது அப்படியல்ல. அந்த விவரங்களைப் பெறுவதானது தனிமனித சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்காகவாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பயோமெற்றிக் விவரங்களுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்துவது குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ந்திருந்தாலும், அந்தந்த நாடுகளில் எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன. 

இந்த செயல்முறையின் போது ஒரு நபரின் மரபணு (டிஎன்ஏ), கைரேகைகள், குரல், காதுகளின் வடிவம், ஒருவர் நடக்கும் முறைமை, கையெழுத்து தொடர்பான தரவுகள் உட்பட பல்வேறு வகையான தரவுகளைப் பெறுவதற்கு குறித்த திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

அதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அரசாங்கத்தின் ஈடுபாட்டுடன், டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக இந்த விவரங்கள் அனைத்தையும் சேகரிக்க இந்தியாவுக்கு நாங்கள் அனுமதி வழங்குகிறோம் என்பதாகும். 

ஒரு இந்திய நிறுவனத்தின் சேவைகளைப் பெறுவதற்கான மேற்கூறிய முடிவு முந்தைய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாகும்.  

மேலும், இந்தியாவில் இதுபோன்ற கசிவுகள் ஏற்கனவே பதிவாகியுள்ள சூழலில், எமது நாட்டுத் தகவல்களும் கசியவிடப்படாது என்பதற்கு உறுதிப்பாடான நிலைமைகள் இல்லை என்றார்.

https://www.virakesari.lk/article/203815

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள் எதற்கு? - மக்கள் போராட்ட இயக்கம் கேள்வி

14 JAN, 2025 | 07:35 PM
image

(நமது நிருபர்)

இந்திய நிறுவனம் மூலம் வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகளில் பொதுமக்களின் பயோமெற்றிக் விவரங்களை ஒருங்கிணைப்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்துமாறு மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியது.

மக்கள் போராட்ட இயக்கத்தின் நிர்வாக உறுப்பினர் வசந்த இதுதொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக பொதுமக்களின் பயோமெற்றிக் விவரங்கள் ஏன் பெறப்படுகின்றன என்பதற்கான விளக்கம் வெளியிடப்பட வேண்டும். 

டிஜிட்டல் அடையாள அட்டையானது தொழில்நுட்பம், பாதுகாப்பு அல்லது வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக வழங்கப்படுகின்றதென ஒருவர் நினைக்கலாம். 

ஆனால், அது அப்படியல்ல. அந்த விவரங்களைப் பெறுவதானது தனிமனித சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்காகவாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பயோமெற்றிக் விவரங்களுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்துவது குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ந்திருந்தாலும், அந்தந்த நாடுகளில் எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன. 

இந்த செயல்முறையின் போது ஒரு நபரின் மரபணு (டிஎன்ஏ), கைரேகைகள், குரல், காதுகளின் வடிவம், ஒருவர் நடக்கும் முறைமை, கையெழுத்து தொடர்பான தரவுகள் உட்பட பல்வேறு வகையான தரவுகளைப் பெறுவதற்கு குறித்த திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

அதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அரசாங்கத்தின் ஈடுபாட்டுடன், டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக இந்த விவரங்கள் அனைத்தையும் சேகரிக்க இந்தியாவுக்கு நாங்கள் அனுமதி வழங்குகிறோம் என்பதாகும். 

ஒரு இந்திய நிறுவனத்தின் சேவைகளைப் பெறுவதற்கான மேற்கூறிய முடிவு முந்தைய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாகும்.  

மேலும், இந்தியாவில் இதுபோன்ற கசிவுகள் ஏற்கனவே பதிவாகியுள்ள சூழலில், எமது நாட்டுத் தகவல்களும் கசியவிடப்படாது என்பதற்கு உறுதிப்பாடான நிலைமைகள் இல்லை என்றார்.

https://www.virakesari.lk/article/203815

இலங்கை குடிவரவுத்துறை தம்மால் வீசாவை வழங்க முடியாது என வெளி நிறுவனத்திற்கு வேலையை அனுப்பினார்கள். பின்னர் அது பெரும் பிரச்சனையாகியது.

இலங்கை வளங்களை பயன்படுத்தி அடையாள அட்டையை சொந்தமாக உருவாக்க வசதி இல்லை என்றால் இலங்கையில் உள்ள இத்தனை இத்தனை பொறியியல் பீடங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள் எல்லாம் எதற்கு? அடையாள அட்டையை உருவாக்குவதற்கு இந்தியாவிடம் ஏன் கடன் வாங்க வேண்டும்? இதன் பின்னால் நின்று காசு அடிக்கும் கூட்டம் யாதோ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயம் said:

இலங்கை வளங்களை பயன்படுத்தி அடையாள அட்டையை சொந்தமாக உருவாக்க வசதி இல்லை என்றால் இலங்கையில் உள்ள இத்தனை இத்தனை பொறியியல் பீடங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள் எல்லாம் எதற்கு? அடையாள அட்டையை உருவாக்குவதற்கு இந்தியாவிடம் ஏன் கடன் வாங்க வேண்டும்? இதன் பின்னால் நின்று காசு அடிக்கும் கூட்டம் யாதோ?

நல்ல கேள்வி

6 hours ago, நியாயம் said:

இலங்கை குடிவரவுத்துறை தம்மால் வீசாவை வழங்க முடியாது என வெளி நிறுவனத்திற்கு வேலையை அனுப்பினார்கள். பின்னர் அது பெரும் பிரச்சனையாகியது.

தாங்கள் நன்றாகவே வீசாவை வழங்கி கொண்டிருந்துவிட்டு இப்படி இந்திய நிறுவனத்திற்கு கொடுத்தார்கள் 😟

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.