Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமூகப் போராளி சுப.உதயகுமாரன்

                          - சுப.சோமசுந்தரம்


                  "அணுசக்தியற்ற எதிர்காலம்" எனும் தலைப்பில் உலக அளவில் 1998 லிருந்து விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் மூன்று பிரிவுகளில் இவ்விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அணுசக்தி எதிர்ப்புப் போராட்டம், அணு சக்தியினால் ஏற்படும் அழிவுகள் பற்றிய அறிவினைப் பரப்புதல், அணுசக்திக்கு எதிரான தீர்வு எனும் பிரிவுகளே அவை. இவ்விருதுகள் ஜெர்மானியப் பத்திரிக்கையாளரும் திரைப்பட இயக்குனரும் சமூகப் போராளியுமான Claus Biegart ஆல் நிறுவப்பட்டன. நாம் குறிப்பிட்ட முதற்பிரிவில் 2025 க்கான விருதினைப் பெறுபவர் அணுசக்திக்கு எதிரான மகத்தான இந்தியப் போராளி சுப. உதயகுமாரன் ஆவார். ஐநாவின் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் மூன்றாவது அமர்வினையொட்டி மார்ச் 4 ஆம் தேதி நியூயார்க்கில் இவ்விருது வழங்கப்படவுள்ளது.
               இப்பதிவில் தலைவர்/தோழர் சுப. உதயகுமாரன் அவர்களின் படத்துடன் முதல்வர் ஸ்டாலினின் படத்தையும் கொண்டு வந்ததன் காரணமென்ன ? (படம் கட்டுரையின் கீழேயுள்ள முகநூல் இணைப்பில் உள்ளது). அதைச் சொல்லுமுன் என் அரசியல் நிலைபாட்டைச் சொல்வது அவசியமாகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர் இல்லையென்றாலும், கருப்புச் சட்டை அல்லது சிவப்புச் சட்டையை எடுத்து அணியும்போது உள்ளத்தில் பெருமிதம் மட்டுமல்ல, கர்வமே கொள்பவன் நான். வலதுசாரி இந்துத்துவப் பார்ப்பனிய அரசியல் இந்நாட்டில் முற்றிலுமாக ஒழித்துக் கட்டப்பட வேண்டிய ஒன்று என்று ஆணித்தரமாக நம்புகிறவன் நான். ஏனிந்தப் பீடிகை ? இப்பதிவில் சில இடதுசாரி, திராவிட அரசியல் கட்சிகளை நான் விமர்சித்தால், அதனை ஏதோ பாசிச சங்கிகளின் குரைத்தலுடன் ஒப்பீட்டு அளவில் கூடப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளவே !
                 சரி, இப்போது நாம் கையிலெடுத்த பொருளுக்கு வருவோம். முதல்வர் படத்தைப் போட்டது அவரிடம் பின்வரும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவே :
             ஐயா ! விளையாட்டு, இலக்கியம் முதலிய எந்தத் துறையிலும் உலக அளவில் சாதித்தவர்களைப் பாராட்ட தாங்கள் தவறுவதில்லை. இப்போது அணு உலைக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்காக உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார் தோழர் சுப.உதயகுமாரன். அவரை மனம் திறந்து பாராட்டி விடுங்களேன். இந்த ஜனநாயக அரசியலில் அந்தப் பாராட்டுதலுக்குத் தடை விதிக்கும் எந்த ஒரு வெங்காயத்தையும் தூக்கி எறியுங்களேன். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நிறுவிய பள்ளியில்தானே உங்களைப் போன்றோரும் என்னைப் போன்றோரும் அரசியல் பாடம் படித்தோம் ! அதிலும் குறிப்பாக நீங்கள் எனக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழும் மூத்த மாணவர் என்பதை நாங்கள் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. மற்ற துறைகளில் சாதித்தவர்களுக்குப் பாராட்டுதலோடு பொற்கிழியும் தருவீர்கள். ஆனால் போராளிகள் பணத்தைத் தம் பையை நிரப்ப ஏற்பதில்லை.
             உலகின் தலைசிறந்த போராளிகளில் ஒருவரான சுப.உதயகுமாரன் அவர்களை மிக அருகில் பார்க்கும் பெரும்பேறு வாய்க்கப் பெற்றவர்கள் நானும் என்னைப் போன்றோரும். உங்களுக்குக் கூட அந்த வாய்ப்பு அமையவில்லை முதல்வரே ! ஏதோ ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறி எப்போதோ சின்னா பின்னமாயிருக்கக் கூடிய போராட்டத்தை இறுதிவரை (சுமார் இரண்டரை ஆண்டுகள்) அமைதியாகக் கொண்டு சென்று அந்த மக்களைத் தம் அன்பினால் கட்டிப்போட்டவர் தோழர் உதயகுமாரன். அவர் மீதும் அவருடன் நின்ற போராளிகள் மீதும் ஏதோ தீவிரவாதிகள் மீது போடுவதைப் போல வழக்குகள் போடப்பட்டன. அவை அனைத்தும் பொய் வழக்குகள் என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் பதவியேற்ற பின் பல வழக்குகள் திரும்பப் பெறப்பட்டாலும், இன்னும் சில நிலுவையில் உள்ளன என்பது உங்கள் கவனத்திற்கு மீண்டும் மீண்டும் கொண்டுவரப்பட்டன. அத்தனை வழக்குகளையும் திரும்பப் பெறுவதையே சுப.உதயகுமாரனின் உலக அங்கீகாரத்திற்கான வெகுமதியாகத் தாருங்கள் முதல்வரே ! அவருக்கான அங்கீகாரம் என்பது அவருடன் நின்ற ஒட்டுமொத்தப் போராளிகளுக்குமான அங்கீகாரமாகக் கொள்ள வேண்டும். அவருடன் தோளோடு தோள் நின்ற புஷ்பராயன் மற்றும் பாதிரியார் மை.பா.ஜேசுராஜ் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள். சாமானியர்களின் பார்வையில் அவர்கள் தற்காலிகமாகப் பின்னடவைச் சந்தித்திருக்கலாம். வென்றால்தான் போராட்டம் என்றில்லை. மேலும், போராட்டங்கள் தோற்பதில்லை; எனவே போராளிகளும் தோற்பதில்லை.
             இந்த விண்ணப்பத்தை அடியேன் குடிமக்களில் ஒருவனாகவே உங்களிடம் வைக்கிறேன். மற்றபடி அவர்களின் சார்பாகக் கேட்க நான் தகுதியற்றவன். போராளிகள் இம்மாதிரியான இறைஞ்சுதலை விரும்புவார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஏனெனில் போராளிக்கான மெய்ப்பொருளில் நான் போராளி இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு போராட்டத்தின் அனுதாபியாக இருப்பதாலோ பாதிக்கப்பட்ட போராளிகளுக்காகக் கண்ணீர் வடிப்பதாலோ ஒருவன் போராளியாக முடியாது. அதற்கான தகுதி பெரிதினும் பெரிது.
             போராட்டமே வாழ்க்கையாக அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட, அவர்தம் (தனிப்பட்ட) வாழ்க்கையே போராட்டமாக மாறிவிடாமல் காத்து நிற்பது ஒரு நல்லரசின் கடமை. எங்களுக்காக மட்டுமல்லாமல் உங்களுக்கும் சேர்த்துதான் களத்தில் நின்றார்கள். இப்போது அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை உண்டு. அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். திரை கடலோடி திரவியம் தேடாவிட்டாலும் தமது மற்றும் தம் குடும்பத்தாரின் வயிற்றுப்பாட்டையாவது கவனிக்க வேண்டும். ஆவன செய்க !
             திராவிட இயக்கத்தாரின் பிரதிநிதியான முதல்வரிடம் முறையிட்டாயிற்று. இனி போகிற போக்கில் CPI, CPI(M)  ஆகிய இடதுசாரிக் கட்சியினரிடம் : தோழர்களே ! நீங்களும் விருது பெறும் சுப.உதயகுமாரனைப் பாராட்டலாம். ஜெய்தாப்பூரின் பிரஞ்சு அணு உலைதான் மக்களைக் கொல்லும் என்றில்லை; கூடங்குளத்தின் ரஷ்ய உலையும் மக்களைக் கொல்லும். சேகுவேராவை, பெரியாரைக் காலம் கடந்து ஏற்றது போல் சுப.உதயகுமாரனையும் காலம் கடந்துதான் ஏற்பீர்களா, என்ன ? "நாங்கள் ஏன் ஏற்க வேண்டும் ?" என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதில், "உதயகுமாரனும் அவரோடு நின்ற போராளிகளும் உங்கள் கட்சியினராக இல்லையென்றாலும் அவர்களும் இடதுசாரிகளே !"
             திராவிட இயக்க அரசியல் மற்றும் இடதுசாரி அரசியலில் உள்ளவர்கள்தாம் கண்ணுக்குத் தெரிகின்றனரா ? ஆமாம். மற்றவர்கள் பேசத்தக்க ஆட்களாக நம் கண்ணுக்குத்  தெரியவில்லை என்பது மட்டுமல்ல, அந்த மற்றவர்கள் கண்ணற்றவர்கள் என்பதுவும் நம் எண்ணம். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இந்த இரண்டில் எந்தவொன்றிலும் இல்லாதோரிடம் என்ன இழவு அரசியலைப் பேசுவது ?

https://www.facebook.com/share/p/1BNdYMdbb8/

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில்  உதயகுமாரன் அவர்களை அமெரிக்காவின் கைக்கூலி என்று எழுதப்பட்ட கட்டுரைகளை பார்த்திருக்கின்றேன். இடதுசாரிகளுக்கு அவரை ஏற்றுக் கொள்வது சற்றுச் சிரமம் தான்..............😌.

அமெரிக்காவிலிருந்து கூடங்குளம் வரை வந்து களத்தில் நின்று போராடிய உதயகுமாரின் போராட்டத்துடன், இன்று தினமும் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களை ஒப்பிட்டால், போராளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையேயான இடைவெளியின் ஆழம் தெரிகின்றது................

Edited by ரசோதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.