Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டமும், சர்வதேச மனித உரிமைக் கோட்பாடுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டமும், சர்வதேச மனித உரிமைக் கோட்பாடுகளும்

-நா.யோகேந்திரநாதன்

இப்பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து இது சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்துடன் முரண்படுகிறதா என்பதைப் பரிசீலனை செய்ய சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் உயர்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்

படவுள்ளது. குறிப்பாக சமூக அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்பாட்டில் காணப்படும் தேசிய இன மத உரிமைகளுக்கெதிராக எந்த ஒரு தனிமனிதனோ, அமைப்போ ஒடுக்கு முறைகளையோ தடைகளையோ வன்முறைகளையோ மேற்கொள்ள முடியாது என்ற விதி சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்தின் சில விதிகளுக்கு ஏற்புடையதா எனப்

பரிசீலனை செய்யப்படவுள்ளது.

அதற்கென உச்சநீதிமன்ற நீதியரசர்களாகிய நிஹால் ஜெயசிங்க, என்.ஈ.திசநாயக்கா ஜெனகாத் பாலபட்டபெண்டி ஆகியோரைக் கொண்ட ஒரு அமர்வு பரிசீலனை செய்யவுள்ளது. இது மிகக் குறுகிய நாட்களுக்குள் தமது முடிவை சபாநாயகரிற்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சமூக அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை 1966ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்திற்கமைய 1976 மார்ச் 26 முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான பிரகடனம் சிறீலங்காவின் அரசியல் அமைப்புடன் முரண்படுகிறதா என்பதை உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டிய அளவுக்கு சிறீ

லங்கா அரசியலமைப்புச் சட்டம் மனித உரிமைகள் விவகாரத்தில் பெரும் பலவீனங்களைக் கொண்டிருக்கிறதா? என்ற கேள்வி இங்கு எழவே செய்கிறது. ஒரு ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் நாட்டில் மனித உரிமைகள் தொடர்பான அக்கறை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமே பலவீனமாக இருக்கும் போது அதுவொரு ஜனநாயக நாடு என்று கருதப்பட முடியுமா?

ஆனால், எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு ஏற்பவே அதன் ஒவ்வொரு அரசியல் பொருளாதார இராணுவ நகர்வுகள் அமையும். அப்படி அமையாது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு வெளியேயோ, விரோதமாகவோ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது அவற்றைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உண்டு. அவ்வளவு வலிமை ஒரு ஜனநாயக நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உண்டு.

எனினும் சிறீலங்காவின் அரசியலமைப்பின் தோற்றம் முதற்கொண்டு நிலைத்திருப்பு வரை இதற்கெனச் சில பிரத்தியேகத் தன்மைகள் உண்டு. அதாவது ஜனநாயகப் போர்வைக்குள்ளேயே நின்று ஜனநாயக உரிமைகளை மறுக்கும். அம்மறுப்புக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கும் ஒரு முரண் கொண்டதாக இது அமைந்துள்ளது.

1978ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையில் ஐக்கிய தேசியகட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது இவ்வரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கு அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டாலும் இதன் நிறைவேற்றுக்குப் பின்னால் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் சர்வாதிகார கரம் இருந்தது. அதாவது 1977ல் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரிடம் திகதியிடப்படாத பதவி விலகல் கடிதங்கள் வாங்கப்பட்டன. ஏதாவது நடந்தால் அவர் தானாகவே பதவி விலகியவர்களாவர். இப்படியான ஒரு சர்வாதிகாரச் சூழ்நிலையிலேயே இந்த அரசியலமைப்புச் சட்டம் 1978ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.

அது மட்டுமன்றி இவ்வரசியல் அமைப்புச்சட்டம் பெரும்பான்மையான மக்கள் விரும்பினாலும் கூடமாற்ற முடியாத பலபூட்டுகளை விதியாகக் கொண்டுள்ளது. அதாவது இந்த அரசியலமைப்புச் சட்டம் மூன்றில் இரண்டு பங்கிற்கு அதிகமான வாக்குகளாலேயே மாற்றப்பட முடியும். ஆனால் இவ்வரசியலமைப்புக்கு உட்பட்டு நடத்தப்படும் தேர்தல், விகிதாசாரத் தேர்தல் முறையிலேயே நடத்தப்படும். இவ்விகிதாசாரத் தேர்தல் மூலம் எந்தவொரு கட்சியுமே எவ்வளவு ஆதரவு பெற்ற போதிலும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆசனங்களைப் பெறமுடியாது.

எந்தவொரு தொகுதியிலும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறாத ஜாதிக ஹெல உறுமய மொத்த வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் கடந்த தேர்தலில் ஒன்பது ஆசனங்களைப் பெற்றதும், எந்தவொரு தொகுதியிலும் பெரும்பான்மை இல்லாதது மட்டுமன்றி இரண்டு தொகுதிகள் தவிர்ந்த ஏனைய தொகுதிகளில் கட்டுப்பணத்தைக் கூட இழந்த ஈ.பி.டி.பி ஒரு ஆசனத்தைப் பெற்றமையும் இங்கு கவனத்தில் எடுக்கலாம்.

இவ்வகையில் ஒரு முறையற்ற விதத்தில் அமுலுக்கு வந்த இந்த அரசியலமைப்புச் சட்டம், தான் கொண்டிருக்கும் தந்திரமான விதிகள் மூலம் ஆட்சிகள் மாறிய போதும் அசையாது நிலை பெற்றுள்ளது. 1995ல் திருமதி சந்திரிக்கா 11 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக வந்த போதும் அரசியலமைப்பின் ஒரு சிறு விதியைக் கூட மாற்றமுடியவில்லை.

ஆனால் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்பாகவும் இனப்பிரச்சினையை சமாதான வழிகளில் தீர்ப்பதற்கெதிரான சிறீலங்கா அரசின் போர் முனைப்பின் மேலும் சர்வதேச அழுத்தங்கள் ஏற்படுத்தப்படும் போது, சிங்கள அதிகார பீடத்தினர் இந்த அரசியலமைப்புச் சட்டங்களுக்குள் புகுந்து தப்பித்து விடுவதுண்டு.

சுனாமி நிவாரணப் பொதுக்கட்டமைப்பு அமைப்பதற்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களின் பேரில் ஏற்பாடுகள் சந்திரிகா அரசால் மேற்கொள்ளப்பட்டது. அப்படியானதொரு அமைப்பு சிறீலங்கா அரசியலமைப்

பின் படி செல்லுபடியாகாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து அவ்வமைப்பு சிறீலங்கா அரசால் கைவிடப்பட்டது. அந்ததீர்ப்பின் பின் சர்வதேசமும் மௌனமானது. அதன் மூலம் சந்திரிகா அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுக்கான கடைசி முயற்சியும் சிதறடிக்கப்பட்டது.

இதேபோன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணம் தமிழர் தாயகப் பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரே மாகாண சபைக்குள் கொண்டு வரப்பட்டது. இருபது வருடங்களாக இயங்கி

வந்த ஒரே மாகாணசபை கடந்த வருடம் வழங்கப்பட்ட ஒரு உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இது இனப்பிரச்ச¤னைக்கான சமாதான பூர்வமான தீர்வு முயற்சியை மேலும் பலபடிகள் பின்தள்ளி விட்டது. இப்படியான தமிழ் மக்கள் விரோத நடவடிக்ககைகளுக்காகவும், ஒடுக்கு முறையைச் சட்டபூர்வமாகத் தொடரவும் எவ்வாறு அரசியலமைப்புச் சட்டமும் உச்சநீதிமன்றமும் பாவிக்கப்பட்டதோ அப்படியான ஒருசதி நடவடிக்கையே இப்போதும் மேற்கொள்ளப்படப் போவதாகக் கருத வேண்டியுள்ளது.

அதாவது இன்று சிறீலங்காவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், காணாமற் போதல்கள் தொடர்பாகவும் மனித உரிமை நிறுவனங்கள் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றன. அதுமட்டுமன்றி பலவிதங்களிலும் சிறீலங்கா ஒரு பாதுகாப்பற்ற நாடு என்ற அபிப்பிராயங்களும் பல முனைகளில் வெளிப்பட்டு வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ஐ.நா.வின் 62வது கூட்டத் தொடரில் சிறீலங்கா பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

நேரடியாகவே இக்கூட்டத் தொடரில் சிறீலங்காவின் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் எவ்வித நடவடிக்கைகள் எடுக்கப்படாத போதும் சிறீலங்காவில் இடம்பெறும் சம்பவங்கள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என்ற அறிவிப்பானது சிறீலங்காவை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை எனவும், பயங்கரவாதத்

திற்கு எதிரான போராட்டமே நடக்கிறது எனவும் கருத்துப்பட ஐ.நா.வில் நிகழ்த்திய உரையை சர்வதேச அளவில் நம்ப வைக்கவேண்டிய தேவையும் எழுந்துள்ளது.

இப்படியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே பொதுமக்களின் சமூக அரசியல் தொடர்பான உடன்படிக்கையின் கீழ் 18 பேர் கொண்ட ஒரு மனித உரிமைகள் தொடர்பான ஆணைக்குழு அமைப்பதற்கான ஒரு அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சரவையும் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் தான் சிறீலங்காவின் ஜனாதிபதி இக்குழு அமைக்கப்படுவது சிறீலங்கா அரசியலமைப்புக்கு உடன்பாடானதா என்பதை முடிவு செய்ய உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். சுனாமி நிவாரணக் கட்டமைப்பு, வடக்கு - கிழக்கு இணைப்பு என்பவற்றிற்கு உச்ச மன்றத்தீர்ப்பின் மூலம் ஏற்பட்ட கதி இந்த ஆணைக்குழுவுக்கும் ஏற்படுத்தப்படும் என்றே பல

ராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே இப்படியரு ஆணைக்குழு தொடர்பான பிரேரணை முன் வைக்கப்பட்டதும், அது நிராகரிக்கப்படும் பழியை அரசியலமைப்புச் சட்டத்தின் தலையில் போட்டுத் தப்புவதே அரசின் தந்திரம் எனவும் நம்பப்படுகிறது. எப்படியிருப்பினும் இன்று நடைமுறையிலுள்ள சிறீலங்காவின் அரசியல் சட்டம் அமுலில் இருக்கும் வரை தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகள் தடுத்து நிறுத்தப்பட முடியாது என்பதும், தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகள் சமாதான வழிகளில் நிறைவேற்றப்பட முடியாது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படும் என்பதும் நிச்சயம்.

- ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.